https://anchor.fm/dineshsdkkumar/episodes/--ed73ud - ஆடியோவில் கேட்க மேலே இருக்க லிங்க் க்ளிக் பண்ணுங்க
சென்னைல இருந்து கன்னியாகுமரிக்கு காசு செலவு பண்ணாம லிப்ட் கேட்டே போக முடியுமா? என்னடா கேக்கவே பைத்தியகார தனமா இருக்கே னு நினைக்கலாம்....ஆனா அது முடியும் னு நினைச்சி போன ஓர் பயணத்தின் மீது தீரா காதல் கொண்ட ஒரு டிராவலர் கதை தான் இது.
பயணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பல வகையான பயணங்களில் பலர் அறிந்திராத ஓர் வகையான பயணம் பற்றிய என் நினைவுகளே இந்த கட்டுரை.
படித்தது சென்னைக் கிறித்தவக் கல்லூரி, மன்னிக்கவும் வாழ்ந்தது. குழந்தை பருவம் முதலே பயணங்களே செல்லாத ஓர் பையன் தான் நான். கல்லூரியில் படிக்கும் காலத்தில்... கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரா ஒருத்தர கூட்டிட்டு வந்தாங்க... என்னடா சாதனை இந்த மனுசன் பண்ணிருக்காரு னு பார்த்த... இந்தியா முழுசா 180 நாட்கள் ஒத்த ரூபா செலவு பண்ணமா...கேரளா தமிழ்நாடு எல்லையில இருக்க அவரோட சொந்த ஊர்ல இருந்து டிராவல் பண்ணி இந்த மனுசன் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மகராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர், உத்திர பிரதேஷ், உத்திரகாண்ட், டெல்லி ல போய் அவரோட டிராவல அப்படி முடிச்சிருக்கார். எப்படினா? லிப்ட் கேட்டே போயிருக்கார் மனுசன். நல்லா இருக்கேனு அப்போ அத பார்த்து முடிவு பண்ணேன் நானும் அப்படி போகனும்னு...அந்த நொடி...ஆனா எப்போ போறதுனு முடிவு பண்ணல.
"Unplanned Trips are best because planned trips never happened". - இப்படி ஒரு வாக்கியம் பலர் வாட்சப் ஸ்டேடஸ்ல போட்டு பார்த்திருப்பீங்க இல்லனா யாராவது சொல்லி கேட்டு இருக்கலாம், கேக்கலனா இப்ப கேட்டுக்கோங்க.
என் டிபார்ட்மென்ட்ல படிச்ச ஒரு சீனியர் அக்காவுக்கு கல்யாணம். எங்க ? தூத்துக்குடில.
கூரியர்ல வீட்டுக்கு பத்திரிக்கை வந்துச்சி. அந்த அக்கா ... வாட்ஸ்சப்ல ஒரே அன்பு தொல்லை.... கல்யாணத்துக்கு வந்தே ஆகனும்டா தம்பினு... சரி கல்யாணத்துக்கு போவோம்னு முடிவு பண்ணி நாமா ஓர் தம்பிக்கிட்ட நம்பி... "டேய் நீயும் நானும் ராயல் என்பீல்ட்ல தூத்துக்குடிக்கு கல்யாணத்துக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டோம்"... அவனும் வரேனு சொல்லிட்டான்.
கூரியர்ல வீட்டுக்கு பத்திரிக்கை வந்துச்சி. அந்த அக்கா ... வாட்ஸ்சப்ல ஒரே அன்பு தொல்லை.... கல்யாணத்துக்கு வந்தே ஆகனும்டா தம்பினு... சரி கல்யாணத்துக்கு போவோம்னு முடிவு பண்ணி நாமா ஓர் தம்பிக்கிட்ட நம்பி... "டேய் நீயும் நானும் ராயல் என்பீல்ட்ல தூத்துக்குடிக்கு கல்யாணத்துக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டோம்"... அவனும் வரேனு சொல்லிட்டான்.
டிசம்பர் 27, 2018 காலையில தூத்துக்குடி பக்கம் சாயர்புரம்னு ஒரு ஊர்ல கல்யாணம்.
அப்போ தான் பிளான்ல ஓர் சேஞ்ச். நம்ம நம்புன தம்பி திடீர்ருனு... அண்ணா வீட்ல இந்த பிளான்னுக்கு ஓ.கே. சொல்லலனு சொல்லிட்டான். என்ன பண்றதுனு யோசிக்கும் போது தான் திடீர்னு ஒரு யோசனை நம்ம மனசுல தோனூச்சி. சரி...கல்யாணத்துக்கு போலாம்...அதுவும் தனியா போலாம்....அதுவும் காசு செலவு பண்ணாம போலாம்...அதுவும் லிப்ட் கேட்டே போலாம்...இப்படி ஒரு விபரித ஆசை வந்துச்சி.
வீட்ல அம்மா அப்பா கிட்ட கல்யாணத்து போறேன் சொல்லிட்டு ...ரெண்டு மூணு செட் ட்ரஸ் எடுத்துகிட்டு ...வீட்ல கிறிஸ்துமஸ்க்கு பக்கத்து வீட்டுக்காரங்க கொடுத்த கேக் முறுக்கு கொஞ்சம் எடுத்து பையில வச்சிட்டு ... அம்மா கல்யாணத்துக்கு போறேன் காசு கொடுமானு கேட்டு கொடுத்த 500 ரூபாய் வச்சிக்கிட்டு .... 27ஆம் தேதி காலையில நடக்க போற கல்யாணத்துக்கு.... 25ஆம் தேதி மாலை 6.08 மணிக்கு வீட்ல இருந்து கிளம்பிட்டேன்.
வீட்ல இருந்து 200 மீட்டர் நடந்து போய் மெயின் ரோட்ல லிப்ட் கேட்டு நிக்கறேன்.
முதல் லிப்ட் எங்க ஏரியால இருந்து வண்டலூர் கேளம்பாக்கம் மெயின் ரோடு வரைக்கும் வினோத்னு ஒரு பையன் லிப்ட் கொடுத்து பைக்ல கூட்டிட்டு போறான். அங்க போய் இறங்கி நெக்ஸ்ட் லிப்ட் தினகரன் னு ஒருத்தர் கேளம்பாக்கம் ஓ எம் ஆர் ரோட்டுக்கிட்ட இறக்கி விடுறார்.
முதல் லிப்ட் எங்க ஏரியால இருந்து வண்டலூர் கேளம்பாக்கம் மெயின் ரோடு வரைக்கும் வினோத்னு ஒரு பையன் லிப்ட் கொடுத்து பைக்ல கூட்டிட்டு போறான். அங்க போய் இறங்கி நெக்ஸ்ட் லிப்ட் தினகரன் னு ஒருத்தர் கேளம்பாக்கம் ஓ எம் ஆர் ரோட்டுக்கிட்ட இறக்கி விடுறார்.
நைட்டு ஸ்டே பாண்டிசேரி அப்படினு முடிவு பண்ணிதா ஈசிஆர் ரூட்ல போனேன். கேளம்பாக்கம் டவுன்ல நடந்து போய்ட்டு இருக்கும்போது வழியிலே ஓர் பிள்ளையார் கோயில பிரசாதம் வாங்கிட்டு இருந்தாங்க ஓர் கூட்டம். சரி! நாம போய் வாங்கி சாப்பிடலாம் னு போய் வாங்கி சாப்பிட்டேன். அன்னைக்கு ஸ்பேஷல் வெண் பொங்கல் சாக்கரை பொங்கல் கொஞ்சம் ஸ்வீட்ஸ்...காசு செலவு பண்ணமா போகனும்...அப்போ பசிக்கும்ல ...அதுக்கு தா கிடைக்கிற பிரசாதத்த கூட மிஸ் பண்ணக்கூடாது னு சாப்பிடேன்... கொஞ்ச தூரம் நடந்து போய் லிப்ட் கேக்கலாம் னு ஓர் பெட்ரோல் பங்க் ஓரமா நின்னு லிப்ட் கேட்டேன்.
அப்போ பிரபாகரன் னு ஒரு அண்ணா செங்கமால் ஒரு ஊர் வரைக்கும் லிப்ட் கொடுத்தார். அங்க போய் நின்னு நெக்ஸ்ட் யார் நமக்கு லிப்ட் கொடுப்பங்கனு இருக்கும் போது ஒரு வில்லங்கமான ஆளு லிப்ட் கொடுத்து திருப்போரூர் வரைக்கும் கூட்டிட்டு போனார். லிப்ட் கொடுத்தார்னு அவர் போட்ட மொக்கைகள் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு ஒரு வழியா திருப்போரூர் போய் சேர்ந்தேன்.
மணி ஏழரை. பதினைந்து நிமிசம் யாருமே லிப்ட் தரவே இல்ல. அப்போ அந்த அண்ணா வந்தார். பேரு சதீஷ். அலுவலக வேளையா போய்ட்டு மகாபலிபுரம் தாண்டி இருக்க ஒருத்தர் வீட்டுக்கு அவர் போய்ட்டு இருந்தார். போற வழியில அவர் எனக்கு லிப்ட் கொடுத்து ,என் டிரிப்ப பத்தி முழுசா கேட்டுட்டே போனார். அவர பத்தியும் பேசிட்டே போனார். அவர் நான் ஏர்டேல் ல வேலை பார்த்தப்போ கூட வேலை செய்த சுரேஷ் அண்ணா போல அச்சு அசல் இருந்தார்...
இந்த உலகத்துல யார்னே தெரியாதவங்க பாதுகாப்பு மேல மாத்தவங்க காட்ற அக்கறை இருக்கே அது சிலருக்கு மட்டுமே வாய்த்த குணம் போல.
அரை மணி நேர அவருடன் சென்ற பயணம் அந்த அண்ணா என் மேல அக்கறையா அவர் போற ஊருல இருந்து ரெண்டு கி.மீ. தாண்டி வந்து வெங்கப்பாக்கம் னு கல்பாக்கம் ஒரு ஜங்க்ஷன்ல என்ன இறக்கி விட்டுட்டு... பாத்திரமா போடா தம்பினு! சொன்னார்.
அடுத்த லிப்ட் அங்க இருந்து குட்டினு ஒருத்தர் பூந்தண்டலம் வரைக்கு கூட்டிட்டு போனார். அப்போ அவர் கேட்டார் எங்க போறனு? பாண்டிசேரி அப்டினு சொன்னதும், அவர் பஸ் ஸ்டாப்ல விட்டுறேன். நெறைய பஸ் வரும் ஏறி போ னு சொன்னார். நான் வேணாம் னு சொல்லி எது வரைக்கும் போறீங்களோ போங்க, வெளிச்சமா இருக்க இடத்துல என்ன இறக்கி விட்டுறங்க அப்டி சொன்னேன். அதுக்கு அவர் காசு இல்லையா தம்பி, நான் தரேன் பத்திரமா பஸ் ஏறி போனு பாக்கேட்ல இருந்து பணத்த எடுக்க, அண்ணா வேணாம் சொல்லிட்டு நான் இறங்கிட்டேன் அந்த இருள் சூழ்ந்த சாலையில்.
பின் குறிப்பு : அவர் ஒரு "குடி"மகன்.
பின் குறிப்பு : அவர் ஒரு "குடி"மகன்.
இப்படியே பூந்தண்டலம் ல இருந்து வயலூர் பாலாறு பாலம் வரைக்கும் பாலா னு ஒரு அண்ணாவும், அங்க இருந்து வேப்பானஞ்சேரி வரைக்கும் சரத் அண்ணாவும் அங்க இருந்து காத்தாங்காடு வரைக்கும் பரத் அண்ணாவும் லிப்ட் கொடுத்து கூட்டிட்டு போனாங்க.
மணி நைட்டு 9 ஆயிடுச்சு. ஆல் ரெடி யோசிச்ச மாறி பாண்டிசேரி ல ஸ்டே பண்ணிடலாம் னு நினைச்சிட்டே இன்னும் எத்தனை லிப்ட் புடிச்சி பாண்டி போய் சேர போறோமோ னு காத்தாங்காடு னு ஒரு ஊர்ல நின்னுட்டு இருந்தேன்.
அப்போ தா அந்த அண்ணா வந்தார். பேரு சுந்தர். கப்பலயே மாசக்கணக்குல வேலை பாக்குற பையன். லீவுக்கு சென்னையில இருந்து கடலூர்ல இருக்க அவர் வீட்டுக்கு பைக்குல போய்ட்டு இருந்தார். அந்த பெரிய மனசுக்காரர் லிப்ட் கொடுத்து அவர் வண்டியில ஏத்திக்கிட்டார்...நானும் அப்பாடா ...ஒரு வழியா லிப்ட் கிடைச்சிடுச்சு னு ஏறி உட்கார்ந்தேன்...100+ கி.மீ வேகத்துல புயல் மாறி பைக் பறந்து போக....
திடீர் னு குறுக்குல ஒரு மாடு வர ஓர் நிமிசம் அலறிடோம். அந்த அண்ணா உடனே பைக்கு ரோட் ஓரமா நிறுத்தி மைண்ட் ரிலக்ஸ் பண்ண ஒரு தம் போட்டார். பொறுமையாவே போலாம் னு முடிவு பண்ணி பாண்டிசேரி வரைக்கும் ஒரு மணி நேரம் அந்த அண்ணா கூட ட்ராவல் பண்ணி போனேன். பைபாஸ் ல கடலூர் போறவர... அண்ணா என்ன எம் ஜி ரோட்ல இருக்க வசந்த் & கோ கிட்ட ட்ராப் பண்ணிடுங்க அண்ணா னு கேட்டு அவர க்ரக்ட் பண்ணி அங்கயே போய் இறங்கிட்டேன். பாண்டிசேரி போன அப்போ டைம் நைட் 10:04 .
பாண்டிசேரில இருக்க ஒரு மாணவர்கள் தங்குற ஹாஸ்டல் ல என்னோட கல்லூரி நண்பரும் ஈழத்தமிழரான ஹிபா அவரோட நண்பர்கள் கோபால், விக்கி, தனபால் கூட கிறிஸ்மஸ் லீவ என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்க. நான் நைட் அவங்க கூட ஸ்டே பண்ணிக்கலாம் னு டிசைட் பண்ணிட்டு அவங்க இருக்க ப்ளேஸ்க்கு போனேன். அங்க பாண்டிசேரி பையன் தினேஷ் கூட இருந்தான்.
நான் பயணப்பட்டு வந்த கதைய எல்லாருகிட்டயும் சொல்லிட்டு இருந்தேன். அப்போ தினேஷ் சொன்னான் ...வாங்க அண்ணா... பாண்டிசேரி ல பேமஸ் ஆனா ஒரு கடைக்கு சாப்பிட போலாம் னு... பேட்டிட்டே செமினார் ஸ்கூல் பக்கம் இருக்க அந்த கடைக்கு கூப்பிட்டு போனான்... அங்க அப்படி என்ன ஸ்பெஷல் னு பார்த்த ...சிக்கன் மக்ரோனி னு ஒரு புட் ஐயிட்டம் ரொம்ப பேமஸ் னு சொன்னான் பாசக்கார தம்பி.
நாங்க போன நேரம் கடை பூட்டி இருந்துச்சி. என்ன இப்படி மொக்கயா போச்சினு... அங்க இருந்து தினேஷ் என்ன ஒரு தெருவோர பாஸ்ட் புட் கடைக்கு கூட்டிட்டு போய் நூடுல்ஸ் வாங்கி கொடுத்தான்...அத பார்சல் வாங்கிட்டு ரூம் க்கு போற வழியில பாதாம் பால் ஒன்னு தினேஷ் வாங்கி தந்தத திருப்தியா குடிச்சிட்டு அப்படியே பாண்டிசேரி வீதிகள் ல திரிஞ்சிட்டு இருந்தோம். ரூம் ல போயிட்டு வாங்கிட்டு வந்த நூடூல்ஸ் நல்ல சாப்பிட்டுட்டு லைட் ஒரு தூக்கம் போடலாம்னு முடிவு பண்ண...தினேஷ் சொன்னான் ... வாங்க ப்ரோ...நம்ம பீச்சுக்கு போலாம் னு கூப்பிட்டான்....சரி போவோம் னு , அவன் கூட வண்டில ஏறி போனோம். பாண்டிசேரி பீச்சுல நைட் டைம்ல வண்டி ஓட்ட தடா னு ஆல்ரெடி ஒருக்கா பாண்டி வந்ததால எனக்கு ஞாபகம். ஆனா நம்ம தினேஷ் என்ன பைக்ல பீச்சு ரோட்ல கூட்டிட்டு போனான். மனசுக்குல ஒரு டவுட் ...என்னடா நாம மட்டும் தா இப்படி இந்த பீச்சுல போறோம் னு யோசிக்கும் போது அந்த சம்பவம் நடந்துச்சி....அங்க ஒரு பெரிய போலீஸ் ரவுண்ட்ஸ் இருக்க ...பைக் மடக்கி நைட்ல பீச்சுல வண்டி ஓட்ட கூடாது...உனக்கு தெரியாதா? னு பைக் அண்டு தினேஷ் அ போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டாங்க.
காந்தி சிலைக்கு முன்னாடி தனியா... நானும் தினேஷ் வந்து கூட்டிட்டு போவானு வெயிட்டு பண்ணேன்...டைம் ஆக ஆக ...சரி நம்மலே நடந்து ஸ்டேஷன் போலாம்னு... அங்க இருந்த போலீஸ் கிட்ட அட்ரஸ் கேட்டு தனியா வொயிட் டவுன் ல நடு ராத்திரில நடந்து போனேன்.
நா போலீஸ் ஸ்டேஷன் போன அங்க அவன் எப்பயோ கிளம்பிட்டான் னு சொல்ல, நான் சரி ரூம் போலாம் னு கூகிள் ல நம்பி ரூம்க்கு போயிடேன். அங்க போய் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கும் போது தினேஷ் தம்பி வந்து ....அண்ணா, உங்கள தேடி நான் பீச்சுக்கு போனேன் னு சொன்னான்...சரி னு சொல்லிட்டு நைட் ரூம்ல யே படுத்து தூங்கிட்டேன் ஜூனியர்ஸ் கூட.
கரக்ட் டைம்க்கு கல்யாணத்துக்கு போக முடியுமா னு கூட தெரியாம ...சரி இன்னைக்கு நைட் நல்ல தூங்குவோம் ... நாளைக்கு என்ன ஆனாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்னு தூங்கிட்டேன்...நாளைக்கு என்ன நமக்கு நடக்குமோ னு நினைக்காம... காலம் நம்மல கூட்டிட்டு போற பாதையில எதிர்ப்பார்ப்புகள் இல்லாம...இந்த வாழ்க்கை நமக்கு தர அனுபவங்கள ரசிச்சி வாழ கத்துக்கணும்...அது தர அனுபவம் நமக்கு வேற லெவல் ஃபீல் தரும்....
மாட்டு வண்டில லிப்ட், லாரி ல சுரேஷ் அண்ணா கூட பயணப்பட்டு போய் ரோட்டு ஓரமா சமைச்சி சாப்பிட்டது...போலீஸ் னு தெரியாம லிப்ட் கேட்டு ..போலீஸ் கூட டராவல் பண்ணிப்போய்... போலீஸ் எனக்காக லிப்ட் கேட்டதுனு...
கரக்ட் டைம்க்கு கல்யாணத்துக்கு போக முடியுமா னு கூட தெரியாம ...சரி இன்னைக்கு நைட் நல்ல தூங்குவோம் ... நாளைக்கு என்ன ஆனாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்னு தூங்கிட்டேன்...நாளைக்கு என்ன நமக்கு நடக்குமோ னு நினைக்காம... காலம் நம்மல கூட்டிட்டு போற பாதையில எதிர்ப்பார்ப்புகள் இல்லாம...இந்த வாழ்க்கை நமக்கு தர அனுபவங்கள ரசிச்சி வாழ கத்துக்கணும்...அது தர அனுபவம் நமக்கு வேற லெவல் ஃபீல் தரும்....
மாட்டு வண்டில லிப்ட், லாரி ல சுரேஷ் அண்ணா கூட பயணப்பட்டு போய் ரோட்டு ஓரமா சமைச்சி சாப்பிட்டது...போலீஸ் னு தெரியாம லிப்ட் கேட்டு ..போலீஸ் கூட டராவல் பண்ணிப்போய்... போலீஸ் எனக்காக லிப்ட் கேட்டதுனு...
En Route to Kanyakumari ....
தொடரும்.....
தொடரும்.....