Monday, 9 September 2019

தன்னந்தனியே - பார்ட் டூ

“People don’t take trips, trips take people.”
– இந்த வாக்கியம் போல தான் என் பயணமும்.

எந்த நம்பிக்கையில் நான் வீட்டில் இருந்து இந்த பயணத்தை தொடங்கினேன் என்று எனக்கே தெரியாது. ஆனா என் மனசுக்குள்ள ஒரு நம்பிக்கை , யார் என்றே தெரியாத மனிதர்கள... நான் கண்டிப்பா இந்த பயணத்துல சந்திப்பேன் மட்டும் உள் மனசு சொல்லிச்சு... என்னா என்னோட பல பயணங்கள் ல நான் சந்திச்ச அனுபவத்துல இருந்து...எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்... காலம் போன போக்கில்... யார் என்றே முன்பின் அறியாத நபர்களின் உதவியோடு தன்னந்தனியே ...சென்னையிலே இருந்து பாண்டிசேரி வந்து ஒர் இரவை கடந்து அடுத்த நாளுக்கான பயணத்தை தொடங்கினான்.

டைம் மார்னிங் 7.30.

பாண்டிசேரி ல இருக்க நண்பர் ஹீபா வின் விடுதியில இருந்து லைட்டா ரிப்ரெஷ் ஆயிட்டு ... எந்த ப்ளானும் இல்லாமல் மறுபடியும் லிப்ட் கேட்டே போலாம் னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன்.
அப்போ தினேஷ் தம்பி சொன்னான், அண்ணா ! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நாம 9 மணிக்கு போய் பைக்க போலீஸ் ஸ்டேஷன் ல இருந்து எடுத்துகிட்டு ...நா உங்கள பாண்டிசேரி அவுட்டர்ல கூட்டிட்டு போய் விடுறேன் னு சொன்னான். நா சொன்னேன்...இல்லடா தம்பி ...நா போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் ...நான் லிப்ட் கேட்டு இப்பவே கிளம்புறேன் னு சொல்லிட்டு வெறும் வயிற்றோட கிளம்பினேன், அப்போ டைம் காலையில 8.19 . அப்போ தினேஷ் தம்பி ... சரி வாங்க அண்ணா னு... என்ன கூட்டிட்டு போய் நம்ம ஊரு ஆவின் பூத் மாறி... பாண்டிசேரி ஸ்பெஷல் பாண்லே பால் பூத் ல ஒரு காபி வாங்கி கொடுத்தான். நானும் காபி குடிச்சிட்டு தம்பி தினேஷ்க்கு நன்றி அப்புறம் டாடா சொல்லிட்டு கிளம்பிட்டேன் விழுப்புரம் நோக்கி.
டிராபிக் இருக்குற சிட்டிக்குள்ள இருந்து லிப்ட் கேட்டு போறது கொஞ்ச கஷ்டம் தான். ஏன்னா... நாம யாருக்கு லிப்ட் கேட்டு கைய போடுறோம் னு தெரியாம... யாருமே லிப்ட் தராம போயிடுவாங்க. எப்படியோ ஃபஸ்ட் லிப்ட் எம்.ஜி.ரோட்ல இருந்து நெல்லித்தோப்பு வரைக்கும் தயாளன் அண்ணா லிப்ட் கொடுத்து அந்த செகண்ட் டே டிராவல் ஓட லிப்ட் கவுண்ட ஸ்டாட் பண்ணி வச்சார். அப்படியே ஐஜி சிக்னல் டூ ரெட்டியார்பாளையம் தீனா அண்ணா கூடயும், அங்க இருந்து மூலக்குளம் வரைக்கும் சூர்யா அண்ணா கூடயும், அங்க இருந்து RAAK காலேஜ் வரைக்கும் கார்த்தி அண்ணா கிட்ட லிப்ட் கேட்டு போனேன்.

அங்க இருந்து சுல்தன்பேட் வரைக்கும் நடந்து வந்து ஒரு இடத்துல நின்னு நெக்ஸ்ட் லிப்ட் கேக்குறேன்.
அடுத்து குகன் அண்ணா லிப்ட் கொடுத்து கூட்டிட்டு போனார். எங்கடா போற ? னு கேட்டார். நான் சொன்னேன் ...விழுப்புரம் போய் அங்க இருந்து தூத்துக்குடி போகணும் அதுவும் லிப்ட் கேட்டுனு சொன்னேன். கொஞ்சம் என்ன சந்தேகமா பார்த்துட்டே கூட்டிட்டு போனார்... நான் பாண்டிசேரி வரைக்கும் வந்த கதைய  சொல்லிட்டு... அவர் கூட ட்ராவல் பண்ணி போய் கண்டமங்கலம் னு ஒரு ஊர்ல இறங்கிட்டேன்.
பாண்டிசேரி ல இருந்து விழுப்புரம் போற ரூட் ல நாம தமிழ்நாடுல இருக்கோம இல்ல பாண்டிசேரில இருக்கோம னு அடிக்கடி டவுட்...என்னா...திடீர் னு நாம பாண்டில இருக்குறத நேம் போட்ல காட்டும்...சடனா தமிழ்நாடு...மறுபடியும் பாண்டி ...இப்படி என்ன ரொம்பவே வித்தியாசமா இருக்கும் பாண்டி டூ விழுப்புரம் ரோட்ல நாம பண்ற ட்ரவல்.

எப்பட பாண்டிசேரி தமிழ்நாடு பார்டர் ரிச் ஆவோம் னு தெரியாம... கண்டமங்கலம் டூ திருவண்டார் கோவில் வரைக்கும் ஜெயக்குமார் அண்ணா கூடயும், அங்க இருந்து திருபுவணி வரைக்கும் பாரதி அண்ணா கூடயும், அங்க இருந்து மதகடிப்பட்டு வரைக்கும் சந்தோஷ் அண்ணா கூடயும், அங்க இருந்து தமிழ்நாடு புதுச்சேரி மதுதடுப்பு காவல் செக்போஸ்ட் வரைக்கும் இஸ்மாயில் அண்ணா கூட லிப்ட் கேட்டு எப்படியோ 9.58 க்கு ஸ்டேட் பார்டர் செக்போஸ்ட் கிட்ட வந்து சேர்ந்தேன்.
வெயில் வேற கொஞ்சம் கொஞ்சமா அதிகம் ஆக... பொறுமையா கொஞ்ச தூரம் நடந்தே பார்டர் க்ராஸ் பண்ணி வந்தேன். பேக் ல சரக்கு கடத்தறவனு... அப்படினு செக் பண்ணுவாங்களோ னு டவுட் ஓட பாண்டிச்சேரில இருந்து கம்பிளிட்டா தமிழ்நாட்டுக்குள்ள வந்தேன். பேக் முழுசா துணி மட்டும்தா இருந்துச்சி. நா பக்கா டீடோட்டலர் மக்களே.

மரியா ஜோசப் - கவர்மண்ட் ஸ்கூல் தலைமையாசிரியர். எனக்கு மாநில எல்லையில இருந்து விழுப்புரம் டவுன்ல இருக்க மாதா கோவில் வரைக்கும் 20 நிமிசம் எனக்கு 15 கி.மீ. லிப்ட் கொடுத்தார். அவர் கூட பயணப்பட்டு வந்த டைம்ல அவர் என்ன பத்தி,  என் டிராவல் பத்தி விரிவா கேட்டு கொஞ்சம் ஆச்சரியப்பட்டார் ...யார்டா இந்த விசித்திரமானவன் அப்படி னு யோசிச்சிட்டு பத்திரமா போக சொல்லி அட்வைஸ் பண்ணார்.
விழுப்புரம் டவுன் நா ரிச் ஆனா டைம் காலையில 10.21 மணி.
நம்ம இருக்க ஏரியால நமக்கு தெரிஞ்வங்க யாராவது இருக்காங்க லானு யோசிக்கும் போது தம்பி ஜோயல் ஞாபகம். சரி, தம்பி க்கு போன் பண்ணா...எங்க இருக்கிங்க னு கேட்டான்...நானும் நான் இருந்த லோகஷன் சொன்னதும்...தம்பி பத்து நிமிஷத்துல என்ன பார்க்க வந்தான்...சில நிமிடம் பேசிட்டு ...அண்ணா, அவசரமா ஒரு வேளை யா போறேன் னு சொல்லிட்டு தம்பி ஜோயல் கிளம்பிட்டான் டாடா சொல்லிட்டு...
நாம சரி நம்ம டிராவல் கண்டினியூ பண்ணலாம் னு ...பைபாஸ் இருக்க திசை ய நோக்கி விழுப்புரம் டவுன் ல நடந்து போனேன்.
அப்போ தான் அந்த வண்டி வந்துச்சி. இன்றைய காலத்து நகரவாசிகள் அனுபவிக்காத பயணம் என்றால் அது மாட்டு வண்டி பயணம் தான். கார், பைக் அதிகமா யூஸ் பண்ணாத காலக்கட்டத்தில் எல்லாரையும் இலவசமா ... குறிப்பா ஸ்கூல் போற பசங்களுக்கு லிப்ட் கொடுத்து கூட்டிட்டு போனாவங்க மாட்டு வண்டிகாரங்க தான். சென்னை ல இருந்து லிப்ட் கேட்டு போற பயணத்துல... நமக்கு லிப்ட் கிடைக்காத சுழல் அப்போ... மாட்டு வண்டி லிப்ட் கிடைச்சித்து . லிப்ட் கேட்டு போறதுக்கு முன்னோடியான மாட்டு வண்டில லிப்ட் கேட்டு போற இந்த பயணத்துல போலனா தப்பு ஆயிடுமே... மாட்டு வண்டி ஒட்டுற அண்ணா கிட்ட பர்மிசன் வாங்கி... விழுப்புரம் டவுன்ல இருக்க போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப் ல இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ஜம்முனு மாட்டு வண்டில பயணப்பட்டு போனேன். சின்ன பையனா இருக்கும் போது... எங்க ஊரு ஓடையில குளிச்சிட்டு... வீட்டுக்கு ஓடையில மண் எடுத்துட்டு போற மாட்டு வண்டில நம்ம ப்ரெண்ட்ஸ் கூட  போனது தா ஞாபகம் வந்துச்சி. நீங்க மாட்டு வண்டில போய்றீங்களா?
பழைய பஸ் ஸ்டாண்ட் ல இருந்து வழுதாரெட்டி வரைக்கும் மணி அண்ணா வும்,  அங்க இருந்து விழுப்புரம் அவுட்டர் பைபாஸ் ரோடு வரைக்கும் திருநாவுக்கரசர் அண்ணாவும் லிப்ட் கொடுத்து கூட்டிட்டு வந்தாங்க. ஒரு வழியா தூத்துக்குடி போற திருச்சி பைபாஸ் க்கு வந்துட்டோம் னு மனசுக்குள்ள சின்ன சந்தோஷம்.

மணி 11. லைட்ட வெயில் அடிக்க ஸ்டாட் ஆச்சு. அப்போ ரோட்ல அடுத்த கட்டமா என் பயணத்த தொடர லிப்ட் கேட்டு பைபாஸ் ல நின்னுட்டு இருக்கேன். ப்ரொப்சனல் கூரியர் குட்டி யானை வண்டி வந்துச்சி. சரி ...லிப்ட் கேட்டு பார்ப்போம் னு லிப்ட் கேட்டதும் அந்த வண்டி ஓட்டுற அண்ணா லிப்ட் கொடுத்து வண்டில ஏத்திக்கிட்டார். விழுப்புரத்துக்கு அடுத்த ஜானகிபுரத்துல வரைக்கும் பாபு அண்ணா லிப்ட் கொடுத்தார். அங்க இருந்து எங்கேயும் எப்போதும் படத்துல வர... அரசூர் வரைக்கும் பிரபாகரன் அண்ணா பைக்ல லிப்ட் கொடுத்து கூட்டிட்டு போனார்.
அரசூர் ல லிப்ட் கேட்டு நின்னுட்டு இருக்கும் போது... மறுபடியும் பாபு அண்ணா கூரியர் வண்டில லிப்ட் குடுத்து கூட்டிட்டு போனார். அப்போ ரோட் ஒரமா... கொய்யா பழக்கூடை யோட சில வயசான பாட்டிங்க லிப்ட் கேக்க,  அவங்களும் வண்டில ஏறிக்கிட்டாங்க. அரை மணி நேர பயணத்துல பாபு அண்ணா என்னை விருத்தாசலத்துக்கு முன்னாடி இருக்க செங்குறிச்சி டோல்கேட் வரைக்கும் லிப்ட் கொடுத்து இறக்கி விட்டார்.
டோல்கேட் தாண்டி அடுத்த லிப்ட் கேட்டு ரோட்ல இருக்க பெயர் பலகையின் நிழல் தரையில விழுற இடத்தில நின்னு... அடுத்த கட்டமா பயணத்த எப்படி டா போக போறோம் னு 15 நிமிசம் யோசிட்டு இருக்கும் போதுதான் அந்த லிப்ட் கிடைச்சித்து.
அவர் பெயர் சுரேஷ் அண்ணா. கரூர் பக்கம் காவேரி கரையில இருக்க ஒரு சின்ன ஊர் காட்டுப்புத்தூர் தான் அண்ணாவோட சொந்த ஊர். 20 வருசமா லாரி டிரைவர். ஆந்திரா ல இருக்க விசாகப்பட்டிணம் பக்கத்துல இருந்து... ரெண்டு நாள் நிம்மதியான துக்கத்த தியாகம் பண்ணி... 16 டன் புளி ய லோடு ஏத்திக்கிட்டு... திருநெல்வேலி மாவட்டத்தில இருக்க திசையான்விளை க்கு TN 28 P 3546 நம்பர் லாரில போய்ட்டு இருந்தார் அண்ணா. நா லிப்ட் கேட்கும் போது.... எனக்கு லிப்ட் தரவங்க என்கிட்ட எங்க போகணும் னு கேட்கும் போது... நான் அவங்க எங்க போறாங்க னு எதிர் கேள்வி கேட்டு... அந்த ஊர் நா போற வழியில இருக்கா னு தெரிஞ்சிப்பேன். அது மாறி சுரேஷ் அண்ணா கிட்ட எங்க போறீங்க னு கேட்ட... அப்போ அவர் திசையன்வவிளை னு சொன்னதும் மனசு பெரும் சந்தோஷம். ஏன்னா... நான் கல்யாணத்துக்கு போற சாயர்புரம் தாண்டி தான் என் கல்லூரி நண்பனும் ஹீபேரியன் கருத்தய்யா ஜாப்பீரின் ஊர் திசையன்விளை. எப்படியும் இந்த லாரியிலேயே அங்க போய்டலாம் னு ப்ளான் போட்டுட்டேன்.

25 லிப்ட் கேட்டு சென்னையில இருந்து விருத்தாசலம் பக்கத்துல இருக்க செங்குறிச்சி வரைக்கும் எப்படியே வந்துட்டோம். 26 வது லிப்ட் தா நம்ம சுரேஷ் அண்ணா. பழகுறத்துக்கு ரொம்பவே ஜாலி யான க்ரெக்டர் அண்ணா. நா பயணப்பட்டு வந்த கதை, யார் என்னோட இன்ஸ்பிரேஷன் இந்த பயணத்துக்கு னு எல்லாத்தையும் அவர்ட்ட சொல்லிட்டு அவர் கதைய கேட்டேன். லாரி ஓட்டுறது தா முழு நேர வேலை. முன்னாடில மாசம் புல்லா லோடு ஆர்டர் வருமாம். இப்போ மாசத்துக்கு ஒன்னு ரெண்டுதா வருதாம். ஒரு டிரிப் போய்ட்டு வந்தா 10000 ல இருந்து 15000 கிடைக்குமாம். உயிர் பாதுகாப்பு இல்லாத வேலை னு சொன்னார் அண்ணா.
காலையில பாண்டில நான் குடிச்ச காபி மட்டும் தா சாப்பிட்டது. கையிலே காசு இருந்தும் செலவு பண்ண கூடாது அப்படிங்குற வைராக்கியத்துல... எதுவும் சாப்பிடாம பசியோட தண்ணிய மட்டும் குடிச்சி வயித்த ஃபுல் பண்ணிட்டேன். அப்போ தான் பேக்ல பக்கத்து வீட்டுக்காரங்க கிறிஸ்மஸ் க்கு கொடுத்த முறுக்கு கேக் இருக்குற ஞாபகம் வந்துச்சி.. சாப்பிடுவோம் அத அப்படி னு எடுத்து கொஞ்சம் சுரேஷ் அண்ணா க்கு கொடுத்துட்டு நானும் சாப்பிட்டேன். அவரும் மர கிழங்கு ஒன்னு சாப்பிட கொடுத்தார். சரி... டைம் மதியம் 1.30 இருக்கும் போது சுரேஷ் அண்ணா சொன்னார் ...எதாவது ஓட்டல் ல லாரிய நிறுத்திட்டு சாப்பிடலாம் னு ...காசு செலவு பண்ண கூடாது அப்படிங்குற காரணத்தால நான் ஓட்டல் ல சாப்பிடல அண்ணா...எனக்கு பசிக்குல னு சொல்லிட்டேன். லாரில போய்ட்டே இருக்கும் போது திடீர் னு சுரேஷ் அண்ணா சொன்னார்... தம்பி எனக்கும் ரெண்டு நாளா ஹோட்டல் ல சாப்பிட்டு பசியே அடங்கல...நாம லாரியிலேயே சமைக்கலாம் னு சொன்னார்.
எனக்கு மனசு ல ஒரே குஷி ...நம்ம பசிய போக்க கடவுள் காட்டுன வழி னு நானும் ஓகே சொல்லிடேன்.
பெரம்பலூர் தாண்டி மெயின் ரோட்ல ஓரமா... லாரிய நிறுத்திட்டு சமைக்க தேவையான எல்லாத்தையும்... லாரியிலேயே எடுத்து வந்த பொருள்கள வச்சி சமைக்க ஸ்டாட் பண்ணார் அண்ணா. என்ன அண்ணா சமைக்க போறீங்க ? னு கேட்டதும்... தக்காளி சாதம் டா தம்பி னு சொல்லிட்டு...அரிசிய தண்ணில கழுவிட்டு ...தக்காளி, வெங்காயம் வெட்டிட்டு ...குக்கர்ல எங்க பசிய போக்க ஸ்டவ் ல வச்சி சமைக்க ஸ்டாட் பண்ணார். 20 நிமிசத்துல அருமையான தக்காளி சாதம் ரெடி.

சுடு ஆறட்டும் னு ஓரமா எடுத்து வச்சிட்டோம். போற வழியிலே ஒரு பத்து நிமிடம்... திருச்சிக்கு முன்னாடி ரெஸ்ட் எடுத்துட்டு எங்க வழியிலே போய்ட்டு இருந்தோம்.

திருச்சி தாண்டி ரோட்டு ஓரமா ஒரு பழைய பஸ் ஸ்டாப் ல... சாயந்தரம் நாலு மணிக்கு எங்க தக்காளி சாதத்த சாப்பிட எடுத்தோம். வேற லெவல் ல குக் ஆகி இருந்துச்சி சுரேஷ் அண்ணா கைப்பக்குவத்துல.

நாம வாழ்க்கையில எவ்வளவோ சாப்பாட சாப்பிடாம வேஸ்ட் பண்ணுவோம்...Dont waste food, someone is sleeping with empty stomach . ஆனா ஒரு வேளை சாப்பாடு கிடைக்காம... இந்த உலகத்துல எவ்வளவு பேரு கஷ்ட படுறாங்க அப்படிங்குறத ... நம்மா நினைச்சி பார்த்து கடவுளால் நாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவங்க அப்படிங்குறத நினைச்சி பார்க்கனும். காலையிலே இருந்து சாப்பிடமா இருந்த எனக்கு அந்த தக்காளி சாதம் தான் என் பசிக்கு அறுசுவை உணவு. வயிறு நெறைய சாப்பிட்டுட்டு கொஞ்சம் மிச்சம் இருந்த சாதத்த குக்கர் லயே வெச்சிட்டு எங்க பயணத்த தொடந்தோம்.

சுரேஷ் அண்ணா வோட லாரி ல டிரைவர் சீட் பின்னாடி படுக்கை இருந்துச்சி. பெரும்பாலும் எல்லா லாரிலயும் இந்த வசதி இருக்கும் டிரைவர் தூங்கறதுக்காக. நான் அதுல நல்லா படுத்துக்கிட்டேன் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க. பக்கத்துலயே சார்ஜ் போட ப்ளக் இருந்துச்சி ...சோ நோ ப்ராபளம் ஃபார் மொபைல் சார்ஜ் க்கு. மொபைல் ல கொஞ்ச நேரம் பப்ஜி கேம் விளையாடிட்டு இருந்தேன். லாரிய மணப்பாறை பக்கமா சுரேஷ் அண்ணா நிறுத்திட்டு குளிச்சிட்டு வர போய்ட்டார். நானும் லைட் ஆ தூக்கத்த போட்டேன்.


மதுரை க்கு முன்னாடி நம்ம கல்லூரி நண்பரும், இலக்கிய ஆர்வலர் புலவர் பாரத் ஆ மேலூர் ல போற வழியில பார்க்கலாம் னு ப்ளான் பண்ணி,  பார்க்க முடியாமலே மேலூர் தாண்டி லாரியிலேயே போய்டேன். மதுரைய நான் கடந்த பொழுது மணி இரவு 7 மணி. மதுரை தாண்டி ரோட்டு ஓர கடையிலே சுரேஷ் அண்ணா... மட்டன் ப்ரை வாங்கிட்டு வந்தார். கொஞ்சம் மீதம் இருந்த தக்காளி சோற நாங்க ரெண்டு பேரும் சேர் பண்ணி சாப்பிட்டோம் மட்டன் ப்ரை யோட. அப்போ தான் ப்ளான்ல ஸ்மால் சேஞ்ச். இன்னைக்கு நைட் ஸ்டே வ கோவில்பட்டி தாண்டி கழுகுமலை போற வழியில இருக்க என் கல்லூரி வகுப்பு தோழனும், நான் ரொம்ப மதிக்குற நண்பன் தாமஸியன் டேவிட் ஜோஸ்வா வீட்டுக்கு போய் நைட் ஸ்டே பண்ண ப்ளான் பண்ணேன். சரி னு அவனுக்கு இன்பார்ம் பண்ணிட்டு என் ட்ராவல தொடர்ந்தேன்.

சுரேஷ் அண்ணாக்கு மார்னிங் அஞ்சு மணிக்குள்ள... லோடு திசையன்விளை யிலே டெலிவரி பண்ணணும் னு சொன்னார்.  அதுக்கு நடுவுல சாத்தூர் தாண்டி ஒரு குட்டி தூக்கம் போட போறார் னு சொல்லிட்டு... என் கிட்ட ஒரு 12 மணிக்கு போன் பண்ணி ரிமைண்ட் பண்ண சொன்னார். 10 மணி நேர அவர்க்கூட, பயணப்பட்டு வந்து சாத்தூர் தாண்டி வச்சகாரப்பட்டி னு ஒரு ஊர் ல நைட் 10.01 க்கு என்ன இறக்கி விட்டார்.
ஒரு வேளை எனக்கு லிப்ட் கிடைக்கமா வழியில நான் இருந்தா என்ன ஏத்திக்கிறேன் னு சொன்னார். நானும் அவர்க்கு டாடா சொல்லிட்டு அடுத்த லிப்ட்க்கு வச்சகாரப்பட்டில நின்னுட்டு இருக்கேன். சுரேஷ் அண்ணா லிப்ட் கிடைக்கமா இருந்தா... நாம இப்போ எங்க இருப்போம் னு நினைச்சிட்டே இருந்தேன்.
“You never really travel alone. The world is full of friends waiting to get to know you!”
இந்த வாக்கியத்துக்கு தகுந்தாற் போல எனக்கு போற இடத்துல எல்லாமே நண்பர்கள் தா.
பத்து நிமிட காத்திருப்புக்கு அப்புறமா... நேஷனல் ஹைவேல எனக்கு கார்த்திக் அண்ணா அவரோட பைக்ல லிப்ட் கொடுத்து... முப்பது நிமிட பயணத்துல கோவில்பட்டி டவுன் ல என்ன கூட்டிட்டு போனார். அங்க இருந்து கோவில்பட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கண்ணன் அண்ணாவும் , அங்க இருந்து கோவில்பட்டி அவுட்டர் பைபாஸ் வரைக்கும் சந்தானகுமார் அண்ணா வும் கூட்டிடட்டு போனாங்க லிப்ட் கொடுத்து. அங்க இருந்து
என் நண்பன் வீடு இருக்க வாணரமுட்டிக்கு சுரேஷ் அண்ணா அவரோட குட்டி யானை வண்டில கூட்டிட்டு போனார்.
நான் என் நண்பன் டேவிட் வீட்டை அந்த இருள் சூழ்ந்த ஊர்ல கண்டுபிடிச்சு போய் சேரும் போது டிசம்பர் 26 தேதி நைட் 11.20. வீட்டுக்கு போனதும் நண்பன் சாப்பிட முறுக்கு, கேக் கொடுத்தான்.  நல்ல சாப்பிட்டுட்டு... கொஞ்ச நேரம் அவன் கூட பழைய கதை ... அப்புறம் வாழ்க்கை எப்படி போது னு பேசிட்டு இருந்தோம். சுரேஷ் அண்ணாக்கு போன் பண்ணி எழுப்பி விட்டேன். அப்படியே கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன் ... மறு நாள் சீக்கிரம் எழுந்து... மறுபடியும் லிப்ட் கேட்டு சாயர்புரம் போகணும் சீனியர் அக்கா கல்யாணத்துக்கு.
காலையிலே பாண்டிசேரில கிளம்புனது முதல் நண்பன் வீடு சேர்ந்தது வரை 446 கி.மீ பயணம் முழுவதும் சிறப்ப முடிஞ்சுது.

ஒருநாள் கட்டர்ஸ் ல உட்கார்ந்துட்டு இருக்கும் போது ஒரு தம்பி கேட்டான், எப்போ அண்ணா அடுத்த பார்ட் எழுத போறிங்க னு,  அது போல என் கல்லூரி ஜீனியர்ஸ் சீக்கிரம் எழுதுங்க னு சொன்னாங்க- அது மாறி பலர் தந்த தொடர் ரிக்வஸ்ட் தான் இந்த செகண்ட் பார்ட். நான் கல்யாணத்துக்கு போய் சேர்ந்த கதை, லிப்ட் கொடுத்தவர் என்கூட செல்பி எடுத்த கதை,  போலீஸ் கிட்ட லிப்ட் கேட்டு போனது, டவுன் பஸ் ல டிக்கெட் எடுக்கம ஃபீரியா போன கதைலா நெக்ஸ்ட் பார்ட் ல பாக்கலாம்.
“Traveling alone will be the scariest, most liberating, life changing experience of your life. Try it at least once!”
- தொடரும்.

ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown ...