Sunday, 22 December 2019

மும்பையில் ஒரு நாள்

மாணிக்கத்து க்கும்... ஆண்டானி க்கும்... "பாட்ஷா" சண்டை நடந்த ஊர்.

ஜெகதீஷ் ஸ்லீப்பர் செல்களை... "துப்பாக்கி" என்கவுண்டர் செய்து... மிக பெரிய பயங்கரவாத சதி திட்டத்தை முறியடித்த ஊர்.

"நாயகன்" சக்திவேல் நாயக்கர் பிழைப்பு தேடி ஓடி வந்து... டானாக உருவாகி வாழ்ந்த ஊர்.

தாராவியின் தலைவன் "காலா" கரிகாலன் வுக்கும் ஹரி தாதா வுக்கும்... நிலத்துக்கான அரசியல் சண்டை நடந்த ஊர்.

ஆதித்யாவும் தாராவும்... லிவிங் டூகெதர் வாழ்க்கையில் "ஓ கே கண்மணி" யாக வாழ்ந்த ஊர்.

ஏழை ராஜாவும் பணக்கார ரோஜா க்கும் "காதலர் தின"மாக காதல் மலர்ந்த ஊர்.

விஷ்வா பாய் "தலைவனாக" உருவான ஊர்.

வினாயக் மகாதேவ் "மங்காத்தா" ஆடிய ஊர்.

லிங்கு கத்துகிட்ட மொத்த வித்தையையும்... ராஜீ பாய்க்கு சொல்லி கொடுத்து "அஞ்சான்" என்பவனை உருவாக்கிய ஊர்.

ஜமால் மாலிக் "ஸ்லம்டாக் மில்லியனராக" ஆன ஊர்.

- இப்படி திரை மொழியில் மட்டுமே நான் பார்த்த, ரசித்த, வாழ்ந்த ஊருக்கு... ஒரு பயணம் போக வேண்டும் என மற்றவர்கள் போலவே ... எனக்கும் பல நாட்களாக ஆசை. அந்த ஆசை என் கல்லூரி நண்பர்கள் சென்ற கல்வி சுற்றுலா மூலமாக எனக்கும் நிறைவேறியது. நான் பம்பாய்... அதாவது இன்றைய மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான மும்பை சென்று... அங்கு எனக்கு கிடைக்க பெற்ற எதிர்பாராத அனுபவங்களே இந்த பயணக்கட்டுரை. 

“Travel…The Best Way To Be Lost And Found At The Same Time.” – Brenna Smith.

2018 ஆம் ஆண்டின் ஜனவரி மாத தொடக்கம். நான் படித்த சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் கணிதத்துறை மாணவர்கள்... கல்வி சுற்றுலாவிற்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே, லோனாவாலா மற்றும் மும்பை செல்வதாக... பயண திட்டத்தை வகுத்து இருந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டு தான்... நான் அதே டிபார்ட்மென்ட்ல என் பேச்சிலர் டிகிரி படிச்சு முடித்து இருந்தேன். சில காரணங்களால்... என் வகுப்பு மாணவர்களுடன் கல்வி சுற்றுலா... அந்த ஆண்டு செல்ல முடியவில்லை. என் சீனியர்ஸ், ஜூனியர்ஸ் செல்கிற இந்த பயணத்துல... அவங்க கூட போகனும் னு ஆசை.  ஆனா நான் அப்போ அந்த டிபார்ட்மெண்ட் ல படிக்காத காரணத்தால... அவங்க கூட போக முடியாத சூழல் எனக்கு. ஆனா மனசுக்குள்ள அவங்க கூட பயணப்பட்டே ஆகனும்... அப்படிங்குற ஆசை மட்டும் உறுதியா இருந்துச்சி. 
அப்போ தா அந்த ஐடியா தோனூச்சி. அவங்க கூட தான அபிஷியலா போக முடியாது. ஆனா அவங்க ட்ராவல் பண்ற... டிராயின்ல போக முடியும் னு... அவங்களோட டிரிப் ப்ளான் டிடயல்ஸ் வாங்கி... அதுக்கு ஏற்றது போல... என் ப்ளான நான் டிசைட் பண்ணேன். 
சென்னை டூ மும்பை... அப்புறம் மும்பை டூ சென்னை ரயில் டிக்கெட் அவங்க புக் பண்ணி இருந்த... அதே டிரயின்ல நானும் புக் பண்ணி... அவங்க கூட பயணப்படலாம் முடிவு பண்ணேன். இது யாருக்குமே தெரியாது... அந்த பயணம் போற என் நண்பர்களுக்கு .  பயணம் ஸ்டாட் ஆகுற நாளுக்கு முன்ன... ஒன் ஆர் டூ ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு... பயணம் போற அன்னைக்கு சர்பிரைஸ் அ... ட்ரெயின் ல நானும் அவங்க கூட பயணம் பண்ணி... அப்படியே தனியே எனக்குனு ஒரு சடன் பயணத் திட்டத்தோட... பயணத்தை தொடர்ந்தேன். சீரடி,  புனே, லோனாவாலா னு தனியாவே மொழி தெரியாத ஊர்கள்ல அலைஞ்சி திரிஞ்சி... கடைசியா என் கல்லூரி நண்பர்கள் டிரிப் ல கூடவே... லோனாவாலா பக்கம் இருக்க பூஷி டேம் அப்படிங்குற ஒரு இடத்துல இருந்து... அவங்க மும்பை போற பஸ் ல பேராசிரியர்கள் கிட்ட ஸ்பெஷல் பர்மிசன் வாங்கி ஏறி பயணப்பட்டேன்... அத ஃப்ரீ லிப்ட் னு கூட சொல்லலாம். மாலை நேரத்தில் நாங்க போன பஸ்... புனே மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சீறி பாய்ந்து போய்... கண்ட்லா சன்செட் வீயூ பாயிண்ட் ல நின்னுச்சி. அங்க சூரிய மறைவ பார்க்கறத்துக்கு வெயிட் பண்ண டைம்ல... நான் ஒரு ஒட்டக சவாரி போய் வந்தேன். அந்த சவாரி ஸ்பான்ஷர் என் சீனியர் ராம் அண்ணா. அப்புறம் என் ப்ரெண்ட்ஸ் கூடவே மும்பை மாநகரத்துக்குள்ள எண்டர் ஆனோம். அப்போ டைம் நைட் 10 மணிக்கு மேலே இருக்கும்.

“I Love The Feeling Of Being Anonymous In A City I’ve Never Been Before.”

மும்பை மாநகரம் எனக்கு புதுசு. எங்க டா நைட் ஸ்டே பண்றதுனு மனசுல ஒரு யோசனை. அப்போ தா தோனூச்சி... பக்கத்துல இருக்க ரயில்வே ஸ்டேஷன் போய் நம்ம மதுரை ஸ்டேஷன் ல இருக்க மாறி... சுத்தமா வெயிட்ங் ரூம் அண்ட் ரெஸ்ட் ரூம் இருந்தா... நம்ம பட்ஜெட் க்கு ப்ராப்ளம் வராதனு... என் நண்பர்கள் தங்கி இருந்த ஹோட்டல்க்கு ஆப்போஸிட் ல இருந்த மும்பையின் அடையாளங்கள் ஒன்றான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு போனேன். அப்போ தா அங்க அந்த டிஸ்ப்லே போட்டுல ஏசி டார்மெட்ரி தேர்ட்டு ப்ளார் னு இருந்துச்சி. அப்படியே அங்க நமக்கு ஒரு படுக்கைய புக் பண்ண... அங்க இருந்த கவுண்டர் போய் எனக்கு னு ஒரு படுக்கைய வெறும் 150 ரூபாய் புக் பண்ணிட்டு... இரவு நேரத்துல மும்பைய சுத்தி பாக்கலாம் னு கிளம்பிட்டேன். நைட் டின்னர் அந்த ரயில்வே ஸ்டேஷன் ல இருந்த ஓட்டல் ல சாப்பிட்டுட்டு, அங்க இருந்து என் கல்லூரி சீனியர்ஸ் சிலர கன்வின்ஸ் பண்ணி... அவங்களயும் என்னோட நைட் ரவுண்ட்ஸ் ல சேர்த்துகிட்டு... நாங்க மிட் நைட் ல நடந்தே போனோம் மும்பை வீதிகள்ல. நாங்க ரிசர்வ் பேங்க் போய்... அப்படியே அரபிக் கடலோரம் இருக்க கேட் வே இந்தியா,  தாஜ் ஹோட்டல் னு எல்லாத்தையும் நைட் வீயூ ல பார்த்துட்டு ரூம்க்கு திரும்பிட்டோம். 
மறுநாள் பொங்கல் பண்டிகை பிறந்தது. 

“Wherever You Go, Go With All Your Heart!” – Confucius.

காலையில நான் தங்கி இருந்த டார்மெட்ரில இருந்து எழுந்து... ரிப்ஃபெரெஷ் ஆயிட்டு... மும்பை ய சுற்றி பார்க்க கிளம்பிட்டேன். மார்னிங் ப்ரேக் பாஸ்ட் அதே ரயில்வே ஸ்டேஷன்ல சாப்பிட்டுட்டு ... கூகுள் ல எங்க போலாம் னு சர்ஜ் பண்ணி... எலிபெண்டா குகைக்கு பர்ஸ்ட் விசிட் போகணும் னு... ஸ்டேஷன் ல இருந்து பஸ் பிடிச்சி... கேட் வே ஆ இந்தியா போனேன் தனியா. அங்க இருந்து தா நாம டிக்கெட் எடுத்து பெரிய போட்ல... ஒரு மணி நேரம் கடல் பயணம் பண்ணா தான் அந்த தீவுக்கு போக முடியும். அங்க தா ட்விஸ்ட் . நமக்கு டிக்கெட் தர மாட்டேன் னு சொல்லிட்டாங்க. ஏன் டா னு கேட்டா ? இந்தியன்ஸ் சிங்கிள் அ அனுமதி இல்லனு சொன்னாங்க. அதுக்கு காரணம்... நம்ம பசங்க தனியா போய்... கடல் குதிச்சி தற்கொலை பண்ணிக்குறாங்களாம். அடேய்! நான் ஏன்டா சென்னையில இருந்து இங்க வந்து சூசைட் பண்ண போறேன்... டிக்கெட் குடுங்கடா... நான் அந்த தீவுக்கு போகணும் னு கேட்டா... கை எடுத்து கும்பிட்டு... நம்ம நேர்கொண்ட பார்வை அஜித் மாறி... ஸ்ட்ரிக்டா நோ மின்ஸ் நோ னு சொல்லிட்டார் டிக்கெட் கொடுக்கறவர்.

We must accept finite disappointment, but never lose infinite hope. - Martin Luther King Jr.

மார்னிங் இட்செல்ஃப் இவ்வளவு பெரிய மொக்கை வாங்கிட்டோம் னு... என் முயற்சியை மட்டும் கைவிடல. நமக்கு ஒன்னு வேணும் னு ஆசைப்பட்ட அதை அடைஞ்சே தீரணும். சோ...மாற்று வழிகள் என்னன்னு யோசிச்சி டிக்கெட் வாங்க களத்துல இறங்குனேன். டிக்கெட் வாங்க போறவங்க கிட்ட... எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கி தாங்க அப்படி னு கேட்டேன்...என் நிலைமை யை விளக்கி யாரால நான் பார்க்கிறேனோ எல்லார்கிட்டயும். அதுவும் ஆங்கிலத்தில். யாருமே ஹெல்ப் பண்ணல. ஒன்றரை மணி நேரமா அந்த கேட்வே ஆப் இந்தியா முன்னாடி நின்னுக்கிட்டு... ஒரு டிக்கெட் வாங்க போராடிட்டு இருந்தேன். குறிப்பா "ஐ எம் ஃப்ரம் சென்னை" னு சொன்னதுமே... நிறைய பேர் ரெஸ்பான்ஸ் பண்ணாமலே போட்டாங்க. அந்த இடத்துல கத்துக்கிட்டேன்... முயற்சி பண்றத மட்டும் விட்டு விடவே கூடாது அப்படினு. மணி ஒன்பதரை யை தாண்டி சூரியன் லைட் ஆ சூடு கொடுக்க ஸ்டாட் பண்ணுச்சி.

அப்போ தான் அவங்கள பார்த்தேன். குஜராத் மாநிலம் அகமதாபாத் ல இருக்க கான்வென்ட் ல... தலைமையாசிரியரா இருக்க கன்னியாஸ்திரி அவங்க. அவங்க கிட்ட போய்... என் நிலைமையை விளக்கி உதவி பண்ணுங்க அம்மா னு கேட்டதும்... அவங்க சொன்னாங்க தம்பி தமிழா ? அப்படினு கேட்டாங்க. ஆமா ஆமா னு சொல்லிட்டு... அவங்ககிட்ட என் சோக கதையை சொன்னேன். அவங்க தந்த அந்த ஆறுதல் வார்த்தைகள் ல அந்த தீவுக்கு போய்டுவேன் நம்பிக்கை வந்துச்சி. அவங்களுக்கு நம்ம தஞ்சாவூர் பக்கம் தா சொந்த ஊர். அவங்க ப்ரெண்ட்... இன்னொரு சிஸ்டர் மும்பை தானே ல நர்ஸ் ஆ சேவை செய்யறவங்க. ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ். அந்த நர்ஸ் சிஸ்டர் கூட பிறந்த தங்கை குடும்பமங்கள்... மும்பை சுற்றி பார்க்க வந்து இருக்காங்க. அவங்க ஒரு வேன் புக் பண்ணி... மும்பை அ சுற்றி பார்க்க  முதல் ஸ்பாட் அ... கேட்வே ஆப் இந்தியா பார்க்க வந்த இடத்துல தான்... எனக்கு உதவி பண்ணுங்க னு கேட்டு... அவங்கள நான் சந்திச்சேன். அவங்க ப்ளான்ல எலிபெண்டா கேவ்ஸ் இல்லவே இல்ல. ஆனா... அவங்கள கன்வின்ஸ் பண்ணி என் கூட அந்த தீவுக்கு போக ஓகே பண்ணிட்டேன். நாங்க குரூப் அ அங்க போக டிக்கெட் எடுத்துட்டு... ஃபேரி போட்டுக்கு வெயிட் பண்ணி எங்க டர்ன் வந்ததும் ஏறிகிட்டோம்.
எலிபெண்டா குகைகள்... மும்பைக்கு அருகே அரபிக் கடலில் உள்ள எலிபெண்டா தீவில் அமைய பெற்ற குகைகள். இது மும்பையில் இருந்து பத்து கி.மீ தொலைவிலும், ஒரு மணி நேர படகு பயண தூரத்தில் உள்ளது. யுனஸ்கோ வால் அறிவிக்கபட்ட பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். நாங்க போன படகு கரையில் இருந்து புறப்பட்டு தீவை நோக்கி நகர்ந்தது. படகின் மேலே செல்ல எக்ஸ்ட்ரா காசு. அதையும் கொடுத்துட்டு படகுக்கு மேலே போய்... கடலின் அழகை ரசித்து கொண்ட நாங்க போனோம்... போகுற பாதையில் தான் இந்திய கடற்படையின் போர்கப்பல்கள்... கம்பீரமா கடலில் நங்குரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் பல சரக்கு மற்றும் பல வகையான கப்பல்கள் கடலில் மிதந்து கொண்டு இருக்க... அதை எல்லாம் கடந்து சென்றது நாங்க போன படகு. கடல் பறவைகள் நாங்க போன போட் பக்கத்துல பறந்து வந்து... எங்க கூடவே பயணப்பட்டு... நாங்க எடுத்த போட்டோஸ் க்கு போஸ் கொடுத்துச்சி. இப்படியே ஒரு மணி நேர பயணத்துல அந்த தீவ ரீச் பண்ணோம். 
அந்த கரையில் இருந்து சின்ன ரயில் ல டிக்கெட் எடுத்து... அந்த தீவுல இருக்க குகையை நோக்கி போனேன். அப்புறம் அங்க மறுபடியும் டிக்கெட் எடுத்துட்டு... அந்த குகைகள் இருக்க பகுதிக்கு போய் பார்க்க நான் போனேன். தனி தனியாக அந்த காலத்தில் குடையப்பட்ட அந்த குகைகளையும்... அதனுள் இருந்த  சிற்பங்களையும் பார்த்து ரசிச்சிட்டு... போட்டோஸ் எடுத்துட்டு... மறுபடியும் மும்பை திரும்ப போட் பிடிக்க... நான் அந்த தீவுல போட் போடிங் பாயிண்ட் க்கு போனேன். அங்க போன அப்போ கிளம்ப தயாராக இருந்த போட்ல... அந்த சிஸ்டர்ஸ் குடும்பம் இருந்தாங்க. அவங்க கூட வந்த சிலரால் நடக்க முடியாது னு... அந்த குகைகள் இருந்த மலைகள் மேலே ஏறாமலே படகுக்கு திரும்பிட்டாங்க. அந்த போட்ல முன்னாடி போய்... நான் படுத்துட்டேன் ஒரு ஓரமா பேக் மாட்டிக்கிட்டே. மீண்டும் ஒரு மணி நேர பயணத்துல மும்பையின் கேட்வே ஆப் இந்தியாவ மதிய நேரத்துல அடைச்சோம்.
எனக்கு நைட் ட்ரெயின் சென்னைக்கு... அது வரை முடிஞ்ச அளவு மும்பையை சுற்றி பார்க்கனும் னு ஆசை. அப்போ தா அந்த ஹெட்மாஸ்டர் சிஸ்டர் கேட்டாங்க... தம்பி! உனக்கு என்னப்பா ப்ளான் னு... நான் என் ப்ளான் சொன்னதும்... அவங்க சொன்னாங்க... நாங்களும் மும்பை யை சுற்றி பார்க்குறோம்... வேணும் னா எங்க கூடவே வாப்பா... இந்த வேன்ல உனக்கு விருப்பம் இருந்தா... காசு லாம் எதுவும் வேணாம் னு சொன்னாங்க. நானும் கொஞ்ச யோசனைக்கு பிறகு... அவங்க கூடவே மும்பையை சுற்றி பார்க்கலாம் னு அவங்க டீம் ல ஜாயின் பண்ணிட்டேன். ரொம்ப ஜாலி டைப் அந்த ஹெட் மாஸ்டர் சிஸ்டர். ரொம்ப அன்பா என்ன பார்த்துகிட்டு... என் கூட  ப்ரெண்ட் போல பேசி பழகுனாங்க.
நாங்க கேட்வே ஆப் இந்தியா ல இருந்து நெக்ஸ்ட்... மும்பையின் நெக்லேஸ் னு சொல்லப்படுற மெரயின் டிரைவ் க்கு போனோம். நம்ம துப்பாக்கி படத்துல விஜய் ஒரு கடற்கரை ஓரம் படுத்து தூங்கிட்டு... தீவிரவாதிகள் பத்தி யோசிப்பாரே அந்த கடற்கரை தான். அந்த கடற்கரை ஓரமா போய் ரசிச்சிட்டு... அங்க இருந்து பக்கத்துல இருக்க ஒரு பழமையான கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம் போய்பார்த்து ரசிச்சிட்டு... அப்படியே நாங்க அதற்கு பக்கத்துல இருந்த பார்க்குக்கு போனோம். என் கூட வந்தவங்க அந்த பார்க்க செலக்ட் பண்ணத்துக்கு ரிசன்... அங்க அவங்க லஞ்ச் சாப்பிட போறாங்க. அந்த பார்க்ல அவங்க சாப்பிட ஒரு இடத்த பார்த்து செட்டில் ஆக... என்னையும் கூப்பிட்டு சாப்பிட சொல்லி சொன்னாங்க. நானும் நம்ம ஊர்க்காரங்க தானே அப்படினு... அவங்க கூட ஜாயின் பண்ணிக்கிட்டேன். அவங்க மார்னிங் இந்த டிரிப் க்காக... கான்வென்ட் ல இருந்து லெமன் ரைஸ் , புளி சாதம், சிக்கன் ப்ரை னு செமயா டிஸ் ரெடி பண்ணி... பிரிப்பேரா வந்து இருந்தாங்க. நானும் நல்ல பசி தீருர வரை நல்ல சாப்பிட்டேன். அப்புறம் கொஞ்ச நேரம் அந்த ஹேங்கிங் கார்டன் ல சுத்தி பார்த்துட்டு... எங்க டிரிப் அகைன் ஸ்டாட் ஆச்சி. 
மும்பை நம்ம அம்பானி யோட ஊர். அவர் வீடு தான் உலகத்துலயே விலைமதிப்பான வீடு... ஒரு தனி ஆள் வெச்சி இருக்கறதுல. அந்த வீட்ட கொஞ்சம் காட்டுங்க னு டிரைவர் கிட்ட சொல்லி... அந்த வீட்டை பார்த்து வாய பிளந்து ஆச்சரியப்பட்டுட்டு... அப்படி போட்டோ எடுத்துட்டு... நெக்ஸ்ட் ஸ்பாட் க்கு போற வழியில... மும்பையின் கடல் மேலே கட்டப்பட்ட பாந்த்ரா வார்லி கடல் பாலத்துல... எங்க வேன் கடல் காற்ற கிழித்து கொண்டு சீறி பாய்ந்துச்சி. அந்த கட்டுமான அழகை ரசிச்சிட்டு... அப்படியே போற வழியில பாலிவுட் பிரபலம் சல்மான்கான் மற்றும் ஷாருக் கான் வீட்டலாம் பார்த்துட்டு... நாங்க போன வேன் அப்படியே... மும்பை பாந்த்ரா ல இருக்க மலை மாதா சர்ச் க்கு கூட்டி போனாங்க. அந்த பழமையான 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த கத்தோலிக் சர்ச் க்கு உள்ள போய்... சிறிது நேரம் அன்னை மரியாளிடம் பிரார்த்தனை பண்ணோம். 
என்னை அவங்க கூட டிரிப் ல சேர்த்துக்கிட்ட பேமிலி அந்த சர்ச் ல இருந்து "தானே" க்கு போறாங்க னு சொன்னாங்க. அப்போ தா... என் கல்லூரி தோழியும், ஜூனியர் லோகேஸ்வரி... அண்ணா நீங்க கண்டிப்பா மும்பை போய்ட்டு சித்தி விநாயகர் கோயில் போகணும் னு சொன்னா. சரி டைம் இருக்கே னு... தாதர் கிட்ட இருக்க சித்தி வினாயகர் கோயில் போகணும் னு முடிவு பண்ணேன். நான் அந்த வேன்லயே போய் பாந்த்ரா கிழக்கு பகுதில இறங்கிட்டு... அவங்களுக்கு நன்றிய சொல்லிட்டு கிளம்பிட்டேன். நான் கூகுள் மேப் ல கோயிலுக்கு போக பஸ் நம்பர் பார்த்து... மராட்டி ல இருந்த நம்பர்ஸ் ஒன்னுமே புரியாம... குத்துமதிப்பா ஒரு பஸ் ல ஏறி நான் மும்பைல பேமஸ் ஆனா சித்தி வினாயகர் கோயிலுக்கு போனேன். மும்பையில் பிரபலமான அந்த கோயில் உள்ள செல்வதற்கு முன் வெடிகுண்டு பரிசோதனை ல 
முடிச்சிட்டு... உள்ளே போய் சித்தி வினாயகர தரிசனம் பண்ணிட்டு வெளியே வந்தேன். 
சரி... முடிஞ்ச அளவு மும்பையை சுற்றி பார்த்த திருப்தியில்... நான் ஒரு டாக்சி பிடிச்சி ரயில்வே ஸ்டேஷன் போலாம் னு முடிவு பண்ணேன்...ஏடிஎம் ல காசு இருக்கும் னு நினைச்சி. நான் ஏடிஎம் போய் கார்டு ஸ்வைப் பண்ணும் போது தான்... கார்ட்ல பைசா இல்லனு தெரிஞ்சி... என்னடா பண்றது இந்த டாக்சிக்குனு யோசிச்சிட்டே... என்ன மாறியே மும்பை டிரிப் முடிச்சிட்டு சென்னை திரும்ப இருந்த என் கல்லூரி சீனியர்ஸ் அ கான்டக்ட் பண்ணேன். வாட்ச்சப் லைவ் லொகஷன் ல அருணா அக்கா இருந்த மெரயின் டிரைவ் போய்... அவங்க கிட்ட இருந்து காசு வாங்கி டாக்சி க்கு கொடுத்துட்டு..ர அவங்க கூடவே மும்பை ரயில்வே ஸ்டேஷன் க்கு நடந்து போனேன். 

என் கல்லூரி நண்பர்கள் எல்லாம் ரயில் ஏறுவதற்கு தயாராக... ஹோட்டல் ல இருந்து சாப்பிட்டுட்டு லக்கேஜ் லா எடுத்துட்டு ஸ்டேஷன் வந்தாங்க. நானும் அருணா அக்கா கொடுத்த காசுல டின்னர் சாப்பிட்டுட்டு... சென்னை மெயில் பிடிக்க சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வந்தேன். நாங்க எல்லாரும் ஒன்னா அந்த டிரையின் ஏறி சென்னைக்கு எங்க ரிட்டர்ன் டிரிப்ல பயணப்பட்டோம்... மும்பை எங்களுக்கு கொடுத்த அனுபவங்களோட... குறிப்பா எனக்கு கொடுத்த சொந்தங்களோட.

இந்த நேரத்துல நான் இந்த பயணத்துல எனக்கு ரொம்ப உதவிய இருந்து உதவிய சிஸ்டர்ஸ்க்கு இந்த ப்ளாக் ஆர்டிக்கள்ல டெடிக்கெட் பண்றேன்.

“In The End, We Only Regret The Chances We Didn’t Take.” – Lewis Carroll.

பயணங்கள் தொடரும். 



Tuesday, 10 December 2019

நான் குறிஞ்சிப்பூ தேடி போன கதை - கொழுக்குமலை


இரவு எட்டு மணி இருக்கும்... இரண்டு கம்பளி போர்வை போர்த்தி படுத்துட்டு இருக்கேன்... உடம்பு பூரா நெருப்பா கொதிக்குது... கடும் குளிர்ல... உடம்பு ஜூரம் வந்து நடுங்குது. நண்பர்கள் கொடுத்த மாத்திரையும்... சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டு... தூங்க ட்ரை பண்றேன்... ஆனா என்னால முடியல.

என்ன ஆச்சு எனக்கு? யார் காரணம்? எல்லாத்துக்கும் காரணம் அவ தான். முதல் தடவை அவள நான் பார்த்த அப்பவே... என் மனச அவக்கிட்ட பறிகொடுத்துட்டேன். அவள பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். அவள பார்க்கணும் னு மனசுல ரொம்ப ஆசை. எப்படியோ என் கல்லூரி சீனியர் அக்கா... அவள எனக்கு முதல் தடவ இன்ரோ குடுத்தாங்க. அப்போ அவ கொடுத்த வசீகரம் தா... என்ன மறுபடியும் அவள பார்க்கணும் னு தூண்டி... அவக்கிட்ட என்ன கொண்டு போச்சி. அவள பார்க்கணும் அப்படிங்குற காரணத்த வச்சிக்கிட்டு... அவள பார்க்க சென்னையில இருந்து ப்ரெண்ட்ஸ் கூட போனேன். அவ கேரளத்து பேரழகி. அவ அழகுல மதி மயங்காத ஆளே இல்ல.  
போன வேளை முடிஞ்சி... அவளோட அழகுல நான் சொக்கி போய்... அவ எனக்கு கொடுத்த ஜிவ்வுனு ஏறுற ஈர முத்தத்துல தான்... நான் இப்போ ஜன்னி வந்தவன் மாறி... குளிர் ஜுரத்துல படுத்து இருக்கேன்.

அந்த அழகி பேரு...மூணாறு - கேரளா வுல இருக்க ஒரு மலைபிரதேசம். தேயிலை பயிர் சூழ்ந்த மலைகளும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூக்களும் இவளோட தனிச்சிறப்பு. ஆல்ரெடி இவள பத்தி நீங்க நிறைய கேள்விப்பட்டு இருப்பீங்க. சோ... நான் கதைக்குள்ள போயிடுறேன்.

பன்னிரெண்டு வருசத்துக்கு ஒருக்கா பூக்கும் குறிஞ்சிப்பூ வ பார்க்கணும் னு ரொம்ப நாள் ஆசை. எப்படி அந்த ஆசை வந்துச்சினா... நம்ப ஆர்யா மவுண்ட் அண்ட் டியூ விளம்பரத்துல... குறிஞ்ப்பூ பார்க்க மலை மேலே போவார்... அது மாறி இல்லனாலும் நம்ப மூணார் போய் பார்க்கலாம் னு... அந்த பூ பூக்குற அப்போ பார்க்கணும் னு இருந்தேன். குறிஞ்சிப்பூ 2018 ல மூணார் மலைகள் ல மறுபடியும் மலர போது அப்படினு... இன்டர்நெட் இன்ஃபோ மூலமா தெரிஞ்சிக்கிட்டு... எப்படியும் போய் பார்க்கணும் வழக்கம்போல முடிவு பண்ணேன். அப்போ தா கல்லூரி ஜூனியர் ஜாக்கின் அக்கா கல்யாணம்... அக்டோபர் மாசம் மூணார் ல நடக்குது னு வரச் சொல்லி இன்வைட் பண்ணான். குறிஞ்சிப்பூ ஜூலை மாச பூக்க ஸ்டாட் ஆகி... அக்டோபர் எண்ட் ல வாடிடும் னு இந்த இடைப்பட்ட காலத்துல பார்க்கணும் னு நினைக்க... அந்த கல்யாணமும் கரைக்ட்ட வர... மூணார் போற ப்ளான் முடிவு ஆச்சி. நான் கல்லூரி ஜூனியர்ஸ் கூட சென்னையில் இருந்து மூணார் க்கு தேனி வழியா கார்ல போனோம். கல்யாணம் ல நல்லபடியா முடிஞ்சதும்... நானும் ப்ரெண்ட்ஸ்ம் மூணார் ல இருக்க எனக்கு ரொம்பவும் பிடிச்ச டாப் ஸ்டேஷன் ரூட்ல ஒரு கார் டிரைவ் போய்... மூணார் அழக ரசிச்சிட்டு... நாங்க இருந்த ரூம் க்கு திரும்பும் போது தான்... எதிர்பாராத விதமா எனக்கு செம குளிர் ஜூரம் வந்துச்சி. ரூம்ல போய் மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டேன். 

மறுநாள் காலை 8 மணி. ஈவ்னிங் போடிநாயகனூர் ல நடக்குற ரிசப்ஷன் க்கு போகணும் அப்படிங்குறது மட்டும் தா ப்ளான். நம்மளால தான் வெளியூர்க்கு போன... சும்மா டைம் வேஸ்ட் பண்ண முடியாதே. சோ.... குறிஞ்சிப்பூ பாக்கலாம் னு அங்க இருந்தவங்க கிட்ட விசாரிக்கும் போது தான்... நமக்கு அந்த தகவல் சொன்னாங்க. கேரளா வ புரட்டிப்போட்ட கனமழையால மூணார் ல மலர்ந்த அத்தனை குறிஞ்சிப்பூவும் வாடி போய்ச்சிடுச்சி அப்படி னு சொன்னாங்க. ஆனா தமிழ்நாடு கேரளா பார்டர்ல இருக்க கொழுக்குமலையில மட்டும்... குறிஞ்சிப்பூ மலர்ந்து இருக்கு அப்படிங்குற விஷயத்த என்கிட்ட சொல்ல, இன்னும் 12 வருசம் வெயிட் பண்ணணுமே னு... அப்பவே குறிஞ்சிப்பூ பார்க்க முடிவு பண்ணேன். நம்ம நண்பர்கள் கிட்ட என்னோட ப்ளான் அ நான் சொல்ல... வழக்கம் போல நாங்க வரல... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் னு சொல்லிட்டாங்க. சரி போங்கடானு... நான் தனியா அந்த குறிஞ்சிப்பூ மலர்ந்து இருக்க மலையை பார்க்கலாம் னு கிளம்பிட்டேன் தன்னந்தனியாக.

கொழுக்குமலை டீ எஸ்டேட் - உலகத்திலேயே உயரமான இடத்துல அமைந்து இருக்க தேயிலை தோட்டம் இங்க தா. இங்க விளையுற தேயிலையின் டேஸ்ட் உலக அளவுல பேமஸ். இந்த எஸ்டேட் தமிழக அரசியலின் மிக பெரிய அரசியல் தலைவரின் மகளின் கணவருக்கு சொந்தமானது. இது தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

என் கூட இருந்த எல்லா தம்பிகளுக்கும் டாடா சொல்லிட்டு... மூணார் டவுன் நோக்கி நடந்து போனேன்... நாங்க தங்கி இருந்த மூணார் டவுன் ல இருந்து கொஞ்ச தொலைவில் இருக்க ஆனைச்சால் என்கிற ஊர்ல இருந்து... நான் போகணும் னு முடிவு பண்ண கொழுக்குமலைக்கு  சூரியநெல்லி போய்... அங்க இருந்து  ஜீப்ல தான் போக முடியும். நான் மூணார் போய் அங்க இருந்து பஸ் பிடிச்சி தேவிகுளம் வழியா சூரியநெல்லி போலாம் னு... நான் தங்கி இருந்த இடத்துல இருந்து கொஞ்ச தூரம் நடந்து, அப்புறம் ஆட்டோல, அப்புறம் லிப்ட் கேட்டு, அப்புறம் டவுன் பஸ் னு நமக்கு கிடைச்ச வாய்ப்ப எல்லாம் யூஸ் பண்ணி... ஒரு வழியா மூணார் டவுன் ல இருக்க பஸ் ஸ்டாண்ட் க்கு போய் சேர்ந்தேன்.

சூரியநெல்லிக்கு எப்போ அடுத்த பஸ் னு சேட்டன்கள் கிட்ட விசாரிச்சப்ப தா சொன்னாங்க... அந்த ஊருக்கு பஸ் ல இல்ல... ஏன்னா ரோடு சரி இல்லனு ரிப்ளை வந்துச்சி. என்னடா நமக்கு இப்படி ஆயிடுச்சே னு... என்ன பண்றதுனு யோசிச்சிட்டே எதாவது வண்டில லிப்ட் கேட்டு போலாம் னு நான் மூணார் டவுன் ல நடந்து போனேன். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை க்கு நடந்து அங்க போய் லிப்ட் கேட்டு நின்னுட்டு இருக்கும் போது... ஒரு குட்டி யானை வண்டில அந்த அண்ணாங்க வந்தாங்க. அவங்களோட குட்டி யானை ல எனக்கு லிப்ட் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. மூணார் சுற்றுவட்டாரத்துல இருக்க எல்லா ஊருக்கும் ஆச்சி மசாலா ப்ராடக்ட்ஸ் சப்ளை பண்ற வேளை பாக்குறவங்க அவுக. அவங்க கூட நான் ட்ராவல் நேரத்துல.. நான் போற ஊர பத்தி நல்லா விசாரிச்சிக்கிட்டு,  தேவிகுளம் முன்னாடி என்ன இறக்கி விட்டாங்க. அவங்க சொன்ன ட்ராவல் டிப்ஸ் ல ஞாபகத்துல வெச்சிக்கிட்டு... அடுத்து யாரு நம்ம கூட்டிட்டு போறாங்க னு வெயிட் பண்ணும் போது அந்த ஆட்டோக்காரர் அண்ணா வந்தார். 

அவர் பக்கா தமிழ்க்காரர். மூணார் ல பல ஆண்டுகளுக்கு முன்னே திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பக்கம் இருந்து வந்து செட்டில் ஆனாவராம். மூணார் க்கு இவரோட மூதாதையர் தேயிலை தோட்ட வேளைக்கு வந்தவங்க. அவரோட வேளை... மூணார் டவுன் ல ஆட்டோ ஓட்டுறது... அப்புறம் டவுன்ல இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு காய்கறி மற்றும் பல சரக்குகள் டெலிவரி பண்றது . அப்படி அவர் மூணார் டூ சின்னக்கானல் பக்கம் டெலிவரிக்கு போறவர்... எனக்கு அவர் ஆட்டோ ல இடம் கொடுத்து கூட்டிட்டு போனார். அந்த ஆட்டோவின் முன் இருக்கையில அமர்ந்துகிட்டு...அவர் பொறுமையா அந்த தேயிலை தோட்டங்கள் ஊடே பொறுமையா வண்டி ஓட்டுறத பார்த்துக்கிட்டு... தேயிலை மலைகளையும், அதன் கொள்ளை அழகை ரசிச்சிட்டே... விரிவாக்க பணிகள் தீவிரமா நடக்குற அந்த தேசிய நெடுஞ்சாலையில நான் பயணப்பட்டு போறேன்.



திடீர் னு மிஸ்ட் இறங்கி எங்க பாதையை மறைக்க,  அடுத்த கொஞ்ச நேரத்துல மழை கொட்டோ கொட்டுனு கொட்ட ஆரம்பிச்சிது. அப்போ நான் போன ஆட்டோ... நீர் பெருக்கெடுத்து வர பவர் ஹவுஸ் வாட்டர் ஃபால்ஸ் அ கடந்து போய்... பவர் ஹவுஸ் அப்படிங்குற இடத்துல அந்த அண்ணா என்ன இறக்கி விட்டார். அவருக்கு நன்றிகளையும் பணத்தையும் கொடுத்துட்டு... நான் மழையில இருந்து தப்பிக்க ஒரு பஸ் ஸ்டாப் பக்கம் ஒதுங்குனேன்.

அங்க இருந்து கொஞ்ச தொலைவில இருக்க சூரியநெல்லி க்கு இன்னொரு ஆட்டோ ல போனேன். அவர்கிட்ட நான் வந்த கதையைல சொல்லி பேசிட்டே போனஅப்போ தா... அவரும் தமிழ்க்காரர் னு சொன்னார். என்ன கொண்டு போய் கொழுக்குமலை க்கு போற ஜீப் பூக்கிங் ஆபீஸ் கிட்ட இறக்கி விட்டார். அவருக்கு காச கொடுத்துட்டு நான் கிளம்பும் போது... அவருக்கு என்ன தோனூச்சோ... திடீர்னு என்ன கூட்டிட்டு போயி அந்த ஜீப் ஸ்டாண்ட் ல இருக்க ஒருத்தர் கிட்ட... இந்த தம்பிய மட்டும் எதாவது ஜீப்ல ஏத்திக்க சொல்லி ரெக்கமண்ட் பண்ணார்... அவர் சொந்தக்கார பையன் அப்படி னு சொல்லி. அங்க இருந்து ஒன்லி ஜீப் ல தா போக முடியும் அந்த கொழுக்குமலைக்கு. ஒரு ஜீப் 2000 ரூபாய் அப் அண்ட் டவுன் ஜேர்னி. எப்படியோ நமக்கு ஒரு ஜீப் ல பின் சீட் ல இடம் கிடைக்க... கொலுக்குமலை நோக்கி பயணம் ஸ்டாட் ஆயிச்சி இனிமையா.



ஒரு குறிப்பிட்ட நேரம் நல்ல சமவெளியில் இருந்த ரோட்ல பயணப்பட்ட ஜீப்... அங்க ஒரு சின்ன கிராமத்தையும் அப்புறம் அங்க இருந்த டீ ஃபேக்டரிய கடந்து போச்சி. அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு ஒடைய கடந்து தன்னோட ரண கொடுரமான கரடுமுரடான பாதையில ஜீப் பயணத்தை தொடங்கிச்சி. பாதை எல்லாமே பாறைகளால் அமைக்கப்பட்டு... அப்போ தா மழை பெய்து சகதி சூழ்ந்து இருந்துச்சி. மலை மேல் மேடான பாதையில் ஜீப் குலுங்கி குலுங்கி ஏற கண்டிப்பா முதுகு வலி கேரண்டி. பத்து கி.மீ பயணம்... அதுவும் தேயிலை தோட்டங்கள் வழியா அந்த ஜீப்ல பயணப்பட்டு போற அனுபவம் தனித்துவமானது. உயர உயர ஜீப் போக போக... நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்க அந்த தேயிலை மலைகளின் அழகு நம்மை திகைப்படைய செய்யும். 
ஒரு வழியா அந்த மலை மீது போய்... குறிஞ்சிப்பூ பூத்து குலுங்கும் பகுதிய தேடி நான் ஓடி போகும் போது... அந்த பாறையை பார்த்தேன். மார்வல் சீரியஸ் ல ப்ளாக் பேந்தர் ல வர வக்காண்டா பாறை மாறியே... அந்த புலி பாறை இருந்துச்சி. அந்த பாறை பக்கத்துல இருந்த மலை பகுதியில குறிஞ்சிப்பூ பூத்து குலுங்க... அதன் அருகில் செல்ல சரிவான அந்த மலைத்தொடர்ல இறங்கி... அந்த பூ வ தொட்டு பார்த்து பல நாள் பார்க்கணும் னு நினைச்ச பூ வ பார்த்த மகிழ்ச்சி மனசுக்குள்ள. எப்பவும் நமக்கு ஆசைப்பட்ட விஷயம் நடந்த அந்த சந்தோஷம் ஆனந்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அந்த இடத்தில் நின்னுட்டு பார்க்கும் போது... மிஸ்ட் இறங்காத வேளையில் பல மலைகிராமங்களின் ஏரியல் வியூ நம்மால் காண முடியும். மைனா படத்துல காட்டுற மலை கிராமங்கள் இங்க தா இருக்கு. ட்ரெக்கிங் இந்த பகுதி ரொம்ப பேமஸ்.

நான் திரும்பி வரும் போது தூறல் மழை பொழிய... மிஸ்ட் விலக அந்த காட்சி கண் முன்னே தொலைவில் இருந்த மலையில்... ஊதா கலரில் மலைத்தொடர் முழுவதும் பரவி கிடந்து இருந்தது குறிஞ்சிப்பூக்கள். அந்த கண்கொள்ள காட்சியை பார்த்துட்டு... அந்த மலை மேலே தான் கொலுக்குமலை தேயிலை பேக்டரி இருக்குனு சொன்னாங்ஙங...அங்க மாறிட்டே இருந்த வெதர் கண்டிஷனால... இருள் சூழ்வதற்கு முன்பு கீழே இறங்கனும் னு... அப்படியே அங்க இருந்து மனசு நிறைவோட அந்த ஜீப்ல... மழையை விட்டு கீழே இறங்கினேன். மலையில அந்த ஜீப் இறங்குற பாதையே ரொம்ப த்ரிலிங்கா இருந்துச்சி. வாய்ப்பு கிடைச்சா ஒரு வாட்டி ஆச்சி கொழுக்குமலை போயிட்டு வாங்க. 
சடர்ன் ப்ளான் எனக்கு மறக்கமுடியாத மற்றுமொரு சிறந்த அனுபவத்தை கொடுத்துச்சி. விரைவில் போடி பக்கம் இருக்க குரங்கணி ல இருந்து கொழுக்குமலை க்கு ட்ரெக்கிங் போகணும் னு அடுத்த ஆசை பேண்டிங்ல இருக்கு.
அங்க இருந்து சூரியநெல்லி வந்து போடி போக ஜீப்ல காட்டுவழி குறுக்கு பாதையில ஜீப் ல நின்னுகிட்டே தொங்கி கொண்டே புது விதமா பயணப்பட்டு வந்தேன். அங்க இருந்து உத்தமபாளையம் சென்று பின்பு அங்க இருந்து தென்காசி,  குற்றாலம், பாபநாசம் போய் கடைசியா நெல்லையில இருந்து சென்னைக்கு நான் பயணப்பட்டு போய் என் பயணத்தை நிறைவு செஞ்சேன்.

பயணங்கள் தொடரும்...!

ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown ...