ஆடியோவில் இந்த கதையை கேட்க கீழே இருக்க லிங்க் அ க்ளிக் பண்ணி கேளுங்க
"காலங்கள் கடந்த பின்னும்
கலைந்துவிட்ட கனவுகளாய்
நினைவுகளை மட்டும் சுமந்து
சோகச்சுவடுகளுடன்...
சிதிலங்களை மட்டுமே
சின்னங்களாய் கொண்டு
திரும்பும் திசையெல்லாம்
திட்டுச்சுவருடன்...
இரும்பு வேலிக்குள்
இதயக்கனத்துடன்...
துப்பாக்கி வேலிக்குள்
தூக்கம் தொலைத்த
நம் சொந்தங்கள்
சுமைகளோடு...வந்திறங்கி
சோகச்சுவடுகள் பதித்த
மணல் திட்டுடன்...
கடைக்கோடி தமிழனின்
காணாமல் போன நகரம்..."
அங்கே அந்த குகை போன்ற கட்டிடத்தின் உள்ளே ஒரு வயதான பெரியவர் அவரின் கடைசி நாட்களை வாழ்ந்து வருகிறார் என்பதை உள்ளே இருந்த காட்சியை பார்க்கும் போது நமக்கு புரிந்தது. அங்கு இருந்த மற்ற சிதிலமடைந்த கட்டிடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு அந்த சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் இன்னொரு பகுதிக்கு நடந்தே சென்றேன்.
தனுஷ்கோடியில் ரயில் நிலையம் இருந்ததுக்கான அடையாளம் அந்த ஒரு கட்டிடம் மட்டுமே. அந்த கட்டிடம் மட்டுமே அங்கே புயலின் பாதிப்பையும் தாண்டி நின்றுகொண்டிருந்தது. சென்னையில் இருந்து போட் மெயில் என்னும் ரயிலில் தனுஷ்கோடி வரை பயணித்து பின்பு இங்கிருந்து படகில் தலைமன்னாருக்கு சென்று அங்கு இருந்து கொழும்புக்கு செல்லும் பலர் இந்த தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்கு தான் வந்து இறங்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு ரயில் நிலையம் இருந்ததற்கான தடமே இல்லாமல் புயல் தன் வாயில் போட்டுக்கொண்டது. இந்த ரயில் நிலையத்திற்கு தான் புயல் தனுஷ்கோடியை தாக்கிய அன்று சற்று நேரத்தில் நடக்கப்போகும் பேராபத்தை பற்றி உணராமல் வந்து கொண்டிருந்தது 110 பயணிகளுடன். அந்த ரயிலும் அப்படியே கடலில் மூழ்கி ரயிலில் இருந்த அத்தனை பேரும் மாண்டு போனார்கள். அங்கே அந்த ரயில் நிலையம் இருந்த இடத்தின் அருகில் சில இடங்களை நான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே தண்டவாளங்கள் இருந்ததற்கான தடயங்களை என்னால் காண முடிந்தது. பின்பு அந்த ரயில் நிலையத்தில் சிறிது நேரம் என் நேரத்தை கழித்துவிட்டு தொலைவில் தெரிந்த ஒரு குக்கிராமத்திற்கு சேறும் சகதியுமான ஒரு பாதையில் நடந்தே சென்றேன். தனுஷ்கோடியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தனியாக ஒரு குடியிருப்பு. அந்த கிராமத்தின் பக்கத்தில் இருந்த படகுகள் அது மீனவர்களின் குடியிருப்பு என்பதை நமக்கு சொல்லியது.
முட்டிக்கும் கீழான அளவில் தண்ணீர் தேங்கியிருந்த அந்த நீர்ப்பரப்பில் நான் அங்கு நடந்தே சென்று சேர்ந்தேன். அங்கே ஒரு மீனவர் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பிய காட்சியும் அந்த மீன்களை கரையில் அருகில் இருந்து அவரின் மனைவி இறக்கிக் கொண்டிருந்த காட்சியும் அவரின் சிறு குழந்தை அக்கரையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த காட்சியும் என்னை அந்த மீனவரின் படகு அருகில் செல்ல தூண்டியது. அவர் பிடித்து வைத்திருந்த மீனை என்னிடம் காட்டினார்.
அதை புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கே சில நிமிடங்களைக் கழித்துவிட்டு சூரியன் மறையத் தொடங்கிய காரணத்தால் அங்கிருந்து அரிச்சல்முனை நோக்கி கடற்கரையோரமாக நடக்க ஆரம்பித்தேன்.
கலைந்துவிட்ட கனவுகளாய்
நினைவுகளை மட்டும் சுமந்து
சோகச்சுவடுகளுடன்...
சிதிலங்களை மட்டுமே
சின்னங்களாய் கொண்டு
திரும்பும் திசையெல்லாம்
திட்டுச்சுவருடன்...
இரும்பு வேலிக்குள்
இதயக்கனத்துடன்...
துப்பாக்கி வேலிக்குள்
தூக்கம் தொலைத்த
நம் சொந்தங்கள்
சுமைகளோடு...வந்திறங்கி
சோகச்சுவடுகள் பதித்த
மணல் திட்டுடன்...
கடைக்கோடி தமிழனின்
காணாமல் போன நகரம்..."
- இப்படி இந்த கவிதையில் சொல்லப்பட்ட காணாமல் போன நகரத்தின் பெயர் தனுஷ்கோடி. அந்த தனுஷ்கோடிக்கு நான் ராமேஸ்வரத்தில் இருந்து 20 கி.மீ நடந்தே போன கதை தான் இது. வாங்க கதைக்குள்ள போலாம்.
தனுஷ்கோடி. தமிழகத்தின் தென்கிழக்கு திசையில் உள்ள ஒரு தீவு நகரம். இங்கிருந்து இலங்கை வெறும் 20 கி.மீ தொலைவு தான்.
20ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்று, இந்த நகரின் அழிவு சம்பவம். 1964-ம் ஆண்டு வங்காள விரிகுடாவில் உருவான புயல் தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய துறைமுக நகரை, இந்தியா - இலங்கை க்கு வணிக பாலமாக இருந்த நகரை துவம்சம் செய்து வாயில் போட்டு கொண்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனுஷ்கோடி நோக்கி போன ரயில் அந்த ஊரை நெருங்கும் முன்னே புயலில் சிக்குண்டு கடலில் மூழ்கி போய் அனைவரும் மாண்டனர். இப்படி வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு பெரும்துயரை எதிர்கொண்டு இன்று அந்த புயலின் பாதிப்பில் இருந்து தப்பி சிதிலமடைந்து போய் காட்சி தரும் கட்டிடங்கள் மட்டுமே அங்க இருப்பதாகவும் அந்த ஊரை அரசாங்காம் வாழ தகுதியற்ற ஊராக அறிவித்துவிட்டாக பல கட்டுரைகளில் படித்த போதே அந்த அழிந்த போன நகரை பார்க்க வேண்டும் என மனதில் நினைத்து கொண்டேன்.
2017-ம் ஆண்டு நான் நண்பர்களுடன் மூணார் சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தில் எனக்கு கிடைத்த எதிர்பாராத பேரனுபவத்தை பெற்று கொண்டு தனுஷ்கோடி சென்று விட்டு ராமேஸ்வரம் திரும்பி அதே நாளில் என் வீட்டிற்கு ரயிலில் கிளம்பினேன். ஆனால் என்னுடைய தனுஷ்கோடிக்கான முதல் பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடியை தாண்டி இருக்கும் அரிச்சல்முனை வரை பஸ்ஸில் சென்று மீண்டும் அதே பஸ்ஸில் சூரியன் மறைய தொடங்கிய காரணத்தால் ராமேஸ்வரம் நோக்கி திரும்பி வருவதாக அமைந்தது. அந்த பஸ் பயணத்தில் நான் பேருந்தில் இருந்தே தனுஷ்கோடி செல்லும் பாதையின் அழகையும் தனுஷ்கோடியில் மிச்சம் இருக்கும் சிதிலடைந்த கட்டிடங்களையும் கண்ட காட்சி கண்ணில் பதிந்து மீண்டும் இந்த ஊருக்கு வந்து ஒரு முழு நாளையும் இங்கே செலவழித்து போக வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றியது.
2019-ம் ஆண்டின் செப்டம்பர் மாத முதல் வார கடைசியில் பல நாட்களுக்கு முன்பு போக வேண்டும் என தீர்மானித்த தனுஷ்கோடிக்கு போகணும் னு திடீர் னு ப்ளான் பண்ணி கிளம்ப தயார் ஆனேன். ராமேஸ்வரத்துக்கு போக சென்னை எக்மோர்ல இருந்து தினமும் ரெண்டு டிரையின். அதுல போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ல போலாம் னு ப்ளான். ஏன்னா அந்த டிரையின் தான் மார்னிங் பாம்பன் கடல் பாலத்துல பொழுது விடிஞ்சதும் போற டிரையின். ஆனா அது விழுப்புரம் ல இருந்து திருச்சிக்கு நேரா போகாம ஊரல சுத்திட்டு லேட்டா தான் திருச்சி வரதால நான் அந்த ரயில்ல தாம்பரத்தில ஏறாம இரண்டு மணி நேர தாமதமா தாம்பரம் வர பொதிகை எக்ஸ்பிரஸ் ல திருச்சி வரைக்கும் போய் இறங்கிட்டு அங்க இருந்து ராமேஸ்வரம் போற ஊரலா சுத்திட்டு லேட்டா வர போர்ட் மெயில் டிரையின்ல போக ப்ளான் போட்டேன். அந்த இரண்டு மணி நேரத்த என்னோட எம் சி சி காலேஜ் ஹால் (ஹாஸ்டல்) ல நண்பர்களுடன் செலவிடலாம் அப்படிங்குற காரணத்தால. என் கல்லூரி ஹால் மெஸ்ஸில் டின்னர வழக்கம் போல ஏதோ ஒரு ஜூனியர் அக்கவுண்ட்ல சாப்பிட்டுட்டு செங்கோட்டை போற பொதிகை ரயில்ல பிடிக்க தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போய் டிக்கெட் கவுண்டர்ல டிக்கெட் எடுத்துட்டு ரயில் வர ஏழாவது ப்ளாட்பார்ம் க்கு போனேன். வெள்ளிகிழமை அப்படிங்குற காரணத்தால் செம கூட்டம். திடீர் ப்ளான் அப்படிங்குறதால அன்ரிசர்வ்ட் பயணம் தான். ஆனா அந்த பயணம் தான் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.
ஒருவழியா பொதிகை எக்ஸ்பிரஸ் ப்ளாட்பார்ம் க்கு வர நான் அந்த கூட்டத்தில் புகுந்து எப்படியோ உள்ளே நுழைந்தேன். ஆனால் என்னால் கதவை தாண்டி உள்ளே நகர கூட முடியாத அளவு கூட்டம். இந்த அன்ரிசர்வ்டு பயணங்கள்ல இன்னொரு ப்ரப்பளம் என்னனா ரயில் பெட்டியோட உள்ள நாம நகர்ந்து போகவே முடியாது. ஏன்னா சீட் கிடைக்காதவங்க அப்படியே வழியில உட்கார்ந்து தூங்கிடுவாங்க. அதுவும் இரவு நேர பயணங்கள்ல குழந்தைகள் உடன் பெண்கள் அப்படியே வழியில் படுத்து நமக்கு வழியே இல்லாத மாறி ஆக்கிடுவாங்க. நான் உள்ளே மேலும் போக முடியாதப்படி ஒரு இடத்துல மாட்டிக்கிட்டேன். எவ்வளவு முயற்சி பண்ணியும் உட்கார அந்த கூட்டநெரிசல் மிகுந்த ரயில் பெட்டியில சீட் கிடைக்கல. அப்புறம் அப்படியே நின்னுட்டு வந்தேன்.
நான் போன ரயில் செங்கல்பட்டை தாண்டி போய் கொண்டு இருந்துச்சி. அப்போ அந்த கூட்டத்துல தென்காசி பக்கம் இருக்க ஏதோ கிராமத்துக்கு போற ஒரு குடும்பம் டிரையின்ல ஏறி இருந்தாங்க. பெரிய கூட்டுக்குடும்பம் போல. அவங்களாலயும் நான் இருந்த இடத்தை தாண்டி செல்ல முடியாமல் நான் அருகிலேயே மாட்டிக்கிட்டு நின்னுட்டே வந்தாங்க. அதுல வயசான பாட்டி கூட்டத்தை பொருட்படுத்தாமல் அப்படியே கீழே இருந்த கொஞ்ச கேப்பை ஃபில் பண்ணி உட்கார அந்த இடத்துல இன்னும் நெருக்கடி ஆயிடுச்சி. அன்ரிசர்வ்ட் பெட்டி பயணங்கள் எபௌபவுமே இன்னொரு சுவராசியம் சிலர் தரையில் நடக்க இடம் இல்லாம் மேலே கம்பியை பிடித்து இருக்கைகள் மேல் கால் வைத்து தொங்கிட்டே ஒரு இடத்துல இருந்து மற்றோரு இடத்துக்கு போவாங்க. நான் பல தடவை அப்படி பண்ணிருக்கேன். இப்படியே நின்னுட்டு தான் திருச்சி வரைக்கும் போகணும் னு கால் வலியில நின்னுட்டு இருக்கும் போது அந்த கூட்டுக்குடும்பத்தில் இருந்த ஒரு சின்ன பொண்ணு ஒரு அக்கா அப்புறம் ஒரு தம்பியிடம் என வழக்கமா என்னுடன் பயணிக்கும் பயணிங்க கிட்ட பேச்சை ஸ்டாட் பண்ற மாறி ஸ்டாட் பண்ணேன். எங்க பேச்சு கலகலப்பா எல்லாரையும் கலாய்ச்சிட்டு அப்படியே போச்சு. நள்ளிரவு நெருங்க எனக்கு தூக்கம் லைட்டா வர நான் நின்னுக்கிட்டே எதிரில் இருந்த கம்பியை எட்டி பிடித்து என் முன்னாடி நின்னுட்டு இருந்த யார் என்றே தெரியாத அண்ணா முதுகில் தலை சாய்ந்து படுத்துக்கிட்டேன். என் பின்னாடி இருந்த அந்த பெரிய குடும்பத்தில் என்னுடன் பேசிட்டு வந்த அக்காவும் என் மீது சாய்ந்து தூங்கிட்டாங்க. எப்படியே ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமான பயணத்துல திருச்சிய நெருங்கிட்டு இருக்கும் போது அந்த அக்கா சொன்னாங்க உன்ன மாறி டீசன்ட்டான பையன் கூட டிராவல் பண்ணதால எனக்கு எந்த தொல்லைகள் இந்த கூட்டத்துல இல்ல னு சொல்லி என்னை ரொம்ப புகழ்ந்து தள்ளுனாங்க. அதுக்கான காரணம் அந்த அக்கா கடைசி வரைக்கும் தெளிவா சொல்லவே இல்லை. அப்புறம் அந்த சின்ன பையன் காமேஷ் கூட வழக்கம் போல ஒரு செல்பி எடுத்துட்டு திருச்சி ரயில் நிலையத்தில் என்னோட அடுத்த ரயில்க்காக இறங்கினேன். அதிகாலை 2.30 மணிக்கு.
அந்த அதிகாலை வேளையில் தனியே நான் ராமேஸ்வரம் போற ரயில்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்த அப்போ அந்த நான் இருக்க ப்ளாட்பிராம் க்கு வர போறதா அறிவிப்பு வந்துச்சு. எனக்கு முன்னாடி தாம்பரத்துல கிளம்புனவன் நீ, ஆனா ஊரல சுத்திட்டு லேட்டா வரியே னு அந்த ரயிலா பார்த்து கேட்கனும் போல இருந்துச்சி. அங்க வந்து சேர்ந்த ரயில்ல நான் ஏறினேன். போன ரயில விட கூட்டம் கம்மி தான் இருந்தாலும் இந்த ரயிலயும் உட்கார சீட் கிடைக்கல. ஆனா நல்ல தூக்கம் வேற எனக்கு அதான் அந்த ரயில்ல நான் ஏறுன பெட்டியில இருக்க வழியில் அப்படியே ஒரு ஓரமா படுத்துகிட்டேன். நல்ல தூக்கம். அதிகாலை 5.30 மணி இருக்கும் போது முழிப்பு வந்து எழுந்து படிக்கெட்டில் உட்கார்ந்து ரயில் தண்டாவளம் ஓரமா இருக்க கிராமங்களை அந்த காலை வேளையில் ரசிச்சிட்டு இருந்தேன். அப்போ என் அருகில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவர் கூட வழக்கம் போல பேச்சு கொடுத்து பேச ஆரம்பித்தேன்.
அவர் பெயர் சந்திரன். ராமேஸ்வரம் தீவின் தொடக்கத்தில் இருக்க பாம்பன் தான் அவர் ஊர். மீன் பிடிக்கிறது தான் அவர் தொழில். அவர்கிட்ட பேசிட்டே இருக்கும் போது உங்களுக்கு 1964-ம் ஆண்டு வீசிய புயல் பத்தி தெரியுமா னு நான் கேட்க அவர் சொன்னார்... அந்த புயல் அந்த தீவுக்கு வந்த அப்போ கடல்ல படகுல மீன் பிடிச்சிட்டு இருந்த அவரை அந்த புயல் படகோட கடல்ல கவிழ்த்து விட்டுசாம். அப்புறம் எப்படியே தண்ணில தத்தளிச்சிட்டு இருந்த அவர் கரை சேர்ந்து உயிர் பிழைத்தார் னு கதை சொன்ன அப்புறம் தான் அந்த இயற்கை பேரழிவை கண்ணால் பார்த்த சாட்சியிடம் பேசிய அரிய வாய்ப்பு கிடைத்தது னு கொஞ்சம் சந்தோஷப்பட்டு அவர் கூட பல கதைகள் பேசிட்டே வந்தேன். நாங்க போன ரயில் மண்டபம் ல இருந்து ராமேஸ்வரம் போக பாம்பன் கடல் பாலத்து மேலே மெதுவா ஊர்ந்து போச்சி.
ஏற்கனவே இந்த பாலத்துல எனக்கு கிடைத்த அந்த எதிர்பாராத பேரனுபவத்தை நினைத்து பார்த்துட்டே அந்த தூக்கு பாலத்தையும் கடந்து போனேன் அந்த ரயில்ல. அடுத்த வந்த மண்டபம் ரயில்வே ஸ்டேஷன்ல அந்த பெரியவர் இறங்கி , என்னை பத்திரமா போக சொன்னார். நானும் அவருக்கு டாடா சொல்லிட்டு ராமேஸ்வரம் நோக்கி போனேன். சரியா 8 மணிக்கு மேலே இருக்கும். அந்த கடைசி ரயில் நிலையத்துல இறங்கி பல் துலக்கி, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிட்டு நான் திட்டமிட்ட பயணத்தை தொடர்ந்தேன்.
காலை யில நல்ல பசி. சரி! நல்லா சாப்பிடலாம் னு ரயில்வே ஸ்டேஷன் வெளியே இருக்க ஓட்டல்ல வயிறு நிறைய சாப்பிட்டேன். அப்புறம் அங்க இருந்து பொடிநடையா நடந்தே, நம்ம அப்துல்கலாம் ஐயா வீட்டுக்கு போனேன்.
ஏற்கனவே ராமேஸ்வரம் வந்து மத்த இடத்தல பார்த்துட்டதால அப்போ பார்க்காம விட்ட கலாம் ஐயா வாழ்ந்த வீட்டுக்கு போய் சிறிது நேரம் அங்க டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, அடுத்து நான் அந்த முழு நாளையும் ஒரு இடத்தில் செலவு செய்ய நினைத்த ஊரான தனுஷ்கோடி இருக்க திசையில் நடக்க ஸ்டாட் பண்ணேன். கடந்த முறை நான் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு அரசு பஸ்ஸில் சென்றேன். அப்பொழுது அந்த சாலையின் இருபுறமும் இருந்த அழகு என்னை அந்த சாலையில் நடந்தே தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை உருவாக்கியது.
ஏற்கனவே ராமேஸ்வரம் வந்து மத்த இடத்தல பார்த்துட்டதால அப்போ பார்க்காம விட்ட கலாம் ஐயா வாழ்ந்த வீட்டுக்கு போய் சிறிது நேரம் அங்க டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, அடுத்து நான் அந்த முழு நாளையும் ஒரு இடத்தில் செலவு செய்ய நினைத்த ஊரான தனுஷ்கோடி இருக்க திசையில் நடக்க ஸ்டாட் பண்ணேன். கடந்த முறை நான் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு அரசு பஸ்ஸில் சென்றேன். அப்பொழுது அந்த சாலையின் இருபுறமும் இருந்த அழகு என்னை அந்த சாலையில் நடந்தே தனுஷ்கோடிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை உருவாக்கியது.
நான் ராமேஸ்வரத்தில் என் நடைபயணத்தை தொடங்கியபோது, என் கண்ணில் பட்ட போர்டில் தனுஷ்கோடி 22 கிலோமீட்டர் என்றிருந்தது. காலை பத்து மணி இருக்கும், அப்பொழுது தான் வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்டத் தொடங்கியது. நானும் அந்த சாலையில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தேன். சிறிது தூரம் சென்றதும் வழக்கம்போல் சாலையில் செல்லும் வாகனங்களில் லிஃப்ட் கேட்க தீர்மானித்து, அதே போல் லிப்ட்ம் கேட்டேன். எப்பவும் போல எனக்கு உடனே ஒரு பைக்ல லிப்ட் கிடைத்தது. நானும் லிஃப்ட் கிடைச்ச உடனே அவர் பைக்ல ஏறி எதுவரைக்கும் போறாரோ அவர் கூடிய போயிட்டு எனக்கு தோனுற இடத்தில இறங்கலாம் என்று ப்ளான் பண்ணேன். தனுஷ்கோடிக்கு நான் போற அந்தப் பாதையில் ராமேஸ்வரம் தீவில் மக்கள் அதிகமாக வசிக்கிற ஒரு பகுதியிலிருந்து விடைபெற்று ஒரு மிகப்பெரிய வளைவில் ஆள் அரவமில்லாத ஒரு காட்டு வழியா போற அந்தப் பாதையின் தொடக்கத்தில் ஒரு செக்போஸ்ட் இருந்துச்சு. அந்த செக்போஸ்ட் முன்னாடிதான் என்னை அந்த அண்ணா என்னை இறக்கி விட்டார்.
அவர் பெயர் நல்லசாமி. அவர் பைக்கில் இருந்து இறங்கின பிறகுதான் எனக்கு தெரியும் அவர் ஒரு போலீஸ். அவர் போலீஸ்னு கூட தெரியாம அவர்கிட்டயே லிப்ட் கேட்டு நான் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அப்போ அவர் என்னை பார்த்து கேட்டார் எங்கடா போற தம்பி? அதுக்கு நான் தனுஷ்கோடியை சுத்தி பாக்க போறேன்னு சொன்னேன் அவர்கிட்ட. தனியா வாடா போற? அப்படின்னு அவர் என்னை கேட்க... வீட்டில் ஏதாவது பிரச்சனையா? அப்படின்னு என்கிட்ட இன்னொரு கேள்வி கேட்டார். அந்த இரண்டாவது கேள்விக்கான காரணம் அப்புறம் தான் புரிஞ்சது. பல பேரு பல பிரச்சினைகளிலிருந்து விடுபட தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள தனுஷ்கோடியை தேர்ந்தெடுக்கறங்களாம். நானும் அவர்களில் ஒருவன் அப்படி னு அந்த போலீஸ்காரர் நினைச்சிட்டார் போல. அப்புறமா அவர்கிட்ட தெளிவா நான் பேசிக்கிலி ஒரு டிராவலர் அண்ணா. பல பயணங்கள் போயிட்டு அதைப் பற்றிய கட்டுரையை எழுதற டிராவல் ப்ளாக்கர் னு அவர்கிட்ட விளக்கி சொன்னேன். அப்புறம் அவரு என்ன பத்திரமா பார்த்து போடான்னு அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தார்.
நானும் எப்போடா தனுஷ்கோடி போய் சேருவோம் அப்படின்னு எதுவுமே தெரியாம அந்த நீளமான ஸ்ரைட்டா ஒரு ரோட்ல நடந்து போயிட்டு இருந்தேன். நான் போன பாதையில் ரெண்டு பக்கமும் காடு அதுவும் முள் காடு. அடிச்சுப் போட்டா கூட உதவிக்கு ஒருத்தருமே இல்லாத பகுதி. அப்பப்போ ஒன்னு ரெண்டு வண்டிங்க அந்த ரோட்டை கிராஸ் பண்ணி போயிட்டு இருந்துச்சு. நானும் அந்த ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது அந்த ரோட்டோரமா தனுஷ்கோடி இத்தனை கிலோமீட்டர் னு எழுதி இருக்க ஒரு கல்லு பக்கத்துல நின்னு வழக்கம் போல ஒரு செல்பி எடுத்தேன்.
நான் நடந்து போன அந்த சாலையோடு இடது பக்கத்தில் தான் நிறைய பிரசித்தமான புனிதா தீர்த்தங்கள் காட்டுக்குள்ள இருக்கிறதா அங்கிருக்க சைன் போர்டு சொல்லிச்சு. சில மனநல பாதிக்கப்பட்டவங்க சாலை ஓரமா இருந்தாங்க. பல ஊர்கள்ல இருந்து இங்க கொண்டு வந்து விட்டுட்டு போய்டுவாங்களாம் இவங்கள. சாலையில் போறவங்க தர தீணி பண்டங்கள் தான் அவர்களுக்கான உணவு. சரியா ஒரு ரெண்டு மூணு கிலோமீட்டர் மர நிழலால் நடந்து போன எனக்கு அடுத்தது தான் ரொம்ப சவாலா இருந்துச்சு. மரமே இல்லாத வெறிச்சோடி போன அந்த வெயில் கொளுத்திய சாலையில... எப்படா மரநிழல் கிடைக்கும்னு நான் ஏங்கி தவிச்சேன். இருந்தாலும் இதை ஆசைப்பட்டே வந்த பயணம் அப்படிங்குற காரணத்தால் , போகப் போக அந்த வெயிலும் எனக்கு பழகிடுச்சு. என் பையில் வைத்திருந்த ஒரு துண்டை எடுத்து தலையில் கட்டிக்கிட்டேன். சாலையிலேயே நடந்து போக எனக்கு கொஞ்சம் சலிப்பா தான் இருந்துச்சு. தூரத்தில தண்ணி வற்றி இப்ப காஞ்சு போய் இருக்க ஒரு பகுதியை என்னோட இடது புறத்தில் பார்த்தேன். அங்க ஒரு கண்காணிப்பு கோபுரம் தன்னந்தனியே அந்தப் பகுதியில தனியா நின்னுட்டு இருந்துச்சு. நான் என்ன நெனச்சேன்... சரி நாம கொஞ்சம் இறங்கி அந்த தண்ணி இல்லாத வத்திப் போன அந்த இடத்தில் நடந்து போலாம்னு நான் சாலையில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சேன்.
கண்ணுக்கு தொலைவில் யாரோ சில மனிதர்கள் இருக்கிற காட்சியைக் கண்டு நான் அவங்க கிட்ட போகணும்னு வேகமாக முன்னேறி நடந்து போயிட்டு இருந்தேன். நீங்க கூகுள் மேப்ல தனுஷ்கோடி போற அந்த சாலையை பார்த்தா உங்களுக்கே தெரியும். ஒரு சாலை அதோட ஒரு பக்கம் ஆக்ரோஷமாக இருக்கிற கடல், இன்னொரு பக்கம் அமைதியா இருக்கிற தேங்கிய கடல் தண்ணீர் ஏரி போல இருக்கும். நான் நடக்க நடக்க தொலைவில் என் கண்ணில் பட்ட நபர்கள் வேகமாக முன்னேறி போறத பார்த்து முடிந்தவரை அவங்ககிட்ட போகணும்னு வேகமா இன்னும் முன்னேறி போனேன். ஆனா என்னால அவங்க கிட்ட போகவே முடியல அவங்க வேகமாக முன்னேறி போயிட்டே இருந்துட்டாங்க. அரை மணி நேரத்தையும் கடந்து அந்த பாலைவனம் போன்ற திறந்தவெளியில் தனியே நடந்து போய்ட்டே இருந்தேன். சரி நாம கொஞ்சம் டேக் டைவர்ஷன் எடுத்து எனது வலது புறமாக திரும்பி தொலைவில் இருக்கிற அந்த கோதண்டராமர் கோயில் கிட்ட போலாம்னு முடிவு பண்ணி அதை நோக்கி போனேன். அந்த வற்றிப்போன பாலைவனம் போல இருந்த நிலப் பகுதியில் பல பைக்கர்ஸ் ரேஸ் பைக் ஓட்டி போன தடயங்களும் சிலர் கார் ஓட்டிட்டு போன தடயங்களும் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷலா சூரியனை சுத்தி கருப்பு நிற வளையம் ஒன்று வானத்தில் இருந்துச்சு. சிறிது நேர நடைபயணத்தில் நான் அந்த கோதண்டராமர் கோவிலை அடைந்தேன்.
நான் நடந்து போன அந்த சாலையோடு இடது பக்கத்தில் தான் நிறைய பிரசித்தமான புனிதா தீர்த்தங்கள் காட்டுக்குள்ள இருக்கிறதா அங்கிருக்க சைன் போர்டு சொல்லிச்சு. சில மனநல பாதிக்கப்பட்டவங்க சாலை ஓரமா இருந்தாங்க. பல ஊர்கள்ல இருந்து இங்க கொண்டு வந்து விட்டுட்டு போய்டுவாங்களாம் இவங்கள. சாலையில் போறவங்க தர தீணி பண்டங்கள் தான் அவர்களுக்கான உணவு. சரியா ஒரு ரெண்டு மூணு கிலோமீட்டர் மர நிழலால் நடந்து போன எனக்கு அடுத்தது தான் ரொம்ப சவாலா இருந்துச்சு. மரமே இல்லாத வெறிச்சோடி போன அந்த வெயில் கொளுத்திய சாலையில... எப்படா மரநிழல் கிடைக்கும்னு நான் ஏங்கி தவிச்சேன். இருந்தாலும் இதை ஆசைப்பட்டே வந்த பயணம் அப்படிங்குற காரணத்தால் , போகப் போக அந்த வெயிலும் எனக்கு பழகிடுச்சு. என் பையில் வைத்திருந்த ஒரு துண்டை எடுத்து தலையில் கட்டிக்கிட்டேன். சாலையிலேயே நடந்து போக எனக்கு கொஞ்சம் சலிப்பா தான் இருந்துச்சு. தூரத்தில தண்ணி வற்றி இப்ப காஞ்சு போய் இருக்க ஒரு பகுதியை என்னோட இடது புறத்தில் பார்த்தேன். அங்க ஒரு கண்காணிப்பு கோபுரம் தன்னந்தனியே அந்தப் பகுதியில தனியா நின்னுட்டு இருந்துச்சு. நான் என்ன நெனச்சேன்... சரி நாம கொஞ்சம் இறங்கி அந்த தண்ணி இல்லாத வத்திப் போன அந்த இடத்தில் நடந்து போலாம்னு நான் சாலையில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சேன்.
கண்ணுக்கு தொலைவில் யாரோ சில மனிதர்கள் இருக்கிற காட்சியைக் கண்டு நான் அவங்க கிட்ட போகணும்னு வேகமாக முன்னேறி நடந்து போயிட்டு இருந்தேன். நீங்க கூகுள் மேப்ல தனுஷ்கோடி போற அந்த சாலையை பார்த்தா உங்களுக்கே தெரியும். ஒரு சாலை அதோட ஒரு பக்கம் ஆக்ரோஷமாக இருக்கிற கடல், இன்னொரு பக்கம் அமைதியா இருக்கிற தேங்கிய கடல் தண்ணீர் ஏரி போல இருக்கும். நான் நடக்க நடக்க தொலைவில் என் கண்ணில் பட்ட நபர்கள் வேகமாக முன்னேறி போறத பார்த்து முடிந்தவரை அவங்ககிட்ட போகணும்னு வேகமா இன்னும் முன்னேறி போனேன். ஆனா என்னால அவங்க கிட்ட போகவே முடியல அவங்க வேகமாக முன்னேறி போயிட்டே இருந்துட்டாங்க. அரை மணி நேரத்தையும் கடந்து அந்த பாலைவனம் போன்ற திறந்தவெளியில் தனியே நடந்து போய்ட்டே இருந்தேன். சரி நாம கொஞ்சம் டேக் டைவர்ஷன் எடுத்து எனது வலது புறமாக திரும்பி தொலைவில் இருக்கிற அந்த கோதண்டராமர் கோயில் கிட்ட போலாம்னு முடிவு பண்ணி அதை நோக்கி போனேன். அந்த வற்றிப்போன பாலைவனம் போல இருந்த நிலப் பகுதியில் பல பைக்கர்ஸ் ரேஸ் பைக் ஓட்டி போன தடயங்களும் சிலர் கார் ஓட்டிட்டு போன தடயங்களும் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அன்னைக்கு கொஞ்சம் ஸ்பெஷலா சூரியனை சுத்தி கருப்பு நிற வளையம் ஒன்று வானத்தில் இருந்துச்சு. சிறிது நேர நடைபயணத்தில் நான் அந்த கோதண்டராமர் கோவிலை அடைந்தேன்.
இராமாயணத்தில், வீடணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் அறிவுரை கூறினார். ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன், வீடணனை காலால் மிதிக்கச் சென்றார் .இதனால் வெறுப்புற்ற வீடணன் ராமருக்கு உதவிசெய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தார். வீடணனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும்முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். வீடணனுக்கு பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும். அந்தக் கோயில் அமைந்திருக்க நில அமைப்பே ரொம்ப ரம்மியமா இருக்கும். கடல் சீற்றம் அதிகமாயிருக்க காலத்திலும் மழை காலத்திலும் அந்த வற்றிப்போன பாலைவனத்தில் தண்ணீர் சூழ்ந்து அந்த தண்ணீர் காட்டுக்கு நடுவுல ஒரு தீவில்தான் இந்த கோயில் இருக்கும். அதுக்கு மெயின்ரோட்டில் இருந்து கனெக்டிங் ரோடும் ஒன்னு இருக்கு. மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் அந்த கோயிலுக்கு பக்கத்துல தான் மாதவன் வீடு இருக்கிற மாதிரி அமைச்சு இருப்பாங்க. நான் அங்க போயி முதல்ல என் தாகத்தை தீர்க்க ஒரு மாஸா பாட்டில் வாங்கி குடிச்சேன். தாகம் தீர்ந்ததும் என்னோட பயணத்தை சிறிது ஓய்வுக்குப் பிறகு அங்க இருந்து தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சேன்.
என்னோட பயணத்தில் பாதி தூரம் கூட கடந்து இருப்பேன்னானு எனக்கு தெரியல. ஆனா அந்த கோதண்டராமர் கோயிலில் இருந்து மெயின் ரோட்டுக்கு போற ரோடு புடிச்சு நடந்து போயிட்டே இருந்தேன். அப்போ என்னோட வலதுபுறத்தில் காய்ந்துபோன வற்றிய பாலைவனத்தில் கலர்கலரா ஏதோ செட்டு மாறி போட்டிருந்தாங்க. அது என்னனு பாக்கணும்னு நான் அதுகிட்ட போகலாம்னு நடந்து போயிட்டு இருந்தேன். நான் அதோடு அருகில் போய் பார்த்த அப்ப தான் தெரிஞ்சது கொஞ்ச நாளைக்கு முன்னாடி அங்க ஒரு சினிமா சூட்டிங் நடந்து இருக்கு. அங்க ஒரு பாட்டுக்காக போட்டு வைத்திருந்த செட்ட பிரிச்சுட்டு இருந்தாங்க. அப்பதான் அங்கே இருந்த ஒருத்தர் நடிகர் சிவகார்த்திகேயன் ஓட ஹீரோ படத்துல வர ஒரு பாட்டு ஷூட்டிங் இங்க நடந்துச்சி னு சொன்னார். நானும் அங்க கொஞ்ச நேரம் இருந்து அதை வேடிக்கை பாத்துட்டு அங்கிருந்து என் பயணத்தில் தொடர்ந்து நடந்து போயிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம் அப்படின்னு சாலையோரம் இருந்த ஒரு இடத்தில கொஞ்ச நேரம் ஒரு துண்டை விரிச்சு படுத்துட்டேன்.
அரை மணிநேர தூக்கத்திற்கு பின்பு சரி கிளம்பலாம் னு அந்த சாலையில் மீண்டும் நடக்க ஆரம்பிச்சேன் தனுஷ்கோடியை நோக்கி. மதிய வேலைக்கு மேல ஆயிடுச்சு. இன்னும் சாப்பாடு வேற சாப்பிடல. தொடர்ந்து நடக்க முடியாத நிலை. சரின்னு வழக்கம்போல தனுஷ்கோடிக்கு சீக்கிரம் போய் ஆகணும்னு லிப்ட் கேட்க சாலையில் போன எல்லா வாகனத்துக்கும் கையை போட்டேன். அப்பதான் ஒரு குட்டியானை வண்டியில எனக்கு லிப்ட் கிடைத்தது. அந்த குட்டி யானை டிரைவர் பேரு சக்திவேல் அண்ணா.
தனுஷ்கோடியில் இருக்க ஒரு கடைக்கு பொருட்களை டெலிவரி பண்றதுக்கு போயிட்டு இருந்தார். சரியா ஒரு ஐந்தாறு கிலோ மீட்டருக்கு மேல அவருடைய வண்டியில் நான் போயிருப்பேன்.
தனுஷ்கோடியில் இருக்க ஒரு கடைக்கு பொருட்களை டெலிவரி பண்றதுக்கு போயிட்டு இருந்தார். சரியா ஒரு ஐந்தாறு கிலோ மீட்டருக்கு மேல அவருடைய வண்டியில் நான் போயிருப்பேன்.
தனுஷ்கோடிக்கு முன்னாடி இருக்க ஒரு சின்ன ஊரு தான் முகுந்தராயர் சத்திரம். இந்த ஊர்ல ஒரு சின்ன துறைமுகமும் இருக்கு. சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தனுஷ்கோடியையும் தாண்டி அரிச்சல்முனை அப்படிங்கிற பகுதி வரைக்கும் ஒரு சாலையை போட்டாங்க. இந்த சாலை திட்டம் போடறதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த முகுந்தராயர் சத்திரம் வரைக்கும் தான் ராமேஸ்வரத்திலிருந்து வாகனங்களில் போக முடியும். அங்கிருந்து கடல் தண்ணீர் தேங்கி இருக்கிற சின்ன ஏரி மாதிரியான நீரில் வேன்களில் தான் தனுஷ்கோடிக்கு போயிட்டு வந்துட்டு இருந்தாங்க தனுஷ்கோடியில் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கும் மக்களும் சுற்றுலாப் பயணிகளும். அந்த சாலை திட்டத்திற்கு அப்புறமா இப்போ எல்லாராலும் தனுஷ்கோடியையும் தாண்டி அரிச்சல்முனை வரைக்கும் எல்லா வாகனங்களையும் சுலபமாக போயிட்டு வர முடியுது. ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை வரைக்கும் அரசு பஸ் வசதி கூட இருக்கு. பல நேரங்கள்ல புழுதி காற்று அடிக்க இந்த சாலையை முழுவதும் கடல் மணல் சூழ்ந்து இருக்கிற காட்சியும் பார்க்க முடிஞ்சுச்சு. கடல் அலை ஆக்ரோஷமாக இருக்க நேரத்தில் இந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்தை தடை பண்ணிடுவாங்க பாதுகாப்பு காரணங்களுக்காக. நான் தனுஷ்கோடியை போய் ரீச் ஆன நேரம் மதியம் 2 மணி இருக்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ரொம்ப சுறுசுறுப்பா இயங்கிட்டு இருந்த ஒரு நகரம்... ஒரு பெரும் புயலில் அழிந்து போய் அந்த புயலில் மிஞ்சிய சில கட்டிடங்கள் நிறைந்த பகுதிகள் அந்தப் புயலோட கோரத்தாண்டவத்தை நமக்கு கண்முன்னே காட்டுது. இப்போ வாழவே தகுதி இல்லாத நகரம் னு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இப்பவும் அங்கே பல மீனவ குடும்பங்கள் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அங்க இருக்க பசங்களுக்குக்காகவே சின்ன ஒரு பள்ளிகூடம் அங்க இருக்கு. அவங்களோட மிகப்பெரிய வருமானமே மீன் பிடிக்கிறது மற்றும் தனுஷ்கோடியை சுற்றிப்பார்க்க வர சுற்றுலாவாசிகளுக்கான கடைகளும் தான்.
நான் போய் முதல்ல போன இடம் அங்க இருக்க ஒரு சிதிலமடைந்த 300 வருடங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட போர்த்துகீசியர் காலத்து சர்ச் தான். அந்த சர்ச் பவளப்பாறைகள் கொண்டு கட்டப்பட்டது. தற்போது அந்த சர்ச்சின் முகப்பு மட்டுமே அந்த சர்ச் அங்கு இருந்ததற்கான அடையாளமாக புயலின் பாதிப்பையும் கடந்து தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சிறிது நேரம் அந்த சர்ச்சையை சுற்றி பார்த்துவிட்டு அருகில் இருந்த ஒரு ஓலைக் கொட்டகையில் சிறிது நேரம் உறங்கி ஓய்வு எடுத்தேன். பின்பு அந்த தனுஷ்கோடியில் சிதிலமடைந்த ஒரு அந்த காலத்து மருத்துவமனையையும் பின்பு அங்கு மண்ணில் புதையுண்ட சில கட்டிடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கே சிறு குகை போன்ற ஒரு கட்டிடம் இருப்பதின் அருகில் சென்றேன்.
நான் போய் முதல்ல போன இடம் அங்க இருக்க ஒரு சிதிலமடைந்த 300 வருடங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட போர்த்துகீசியர் காலத்து சர்ச் தான். அந்த சர்ச் பவளப்பாறைகள் கொண்டு கட்டப்பட்டது. தற்போது அந்த சர்ச்சின் முகப்பு மட்டுமே அந்த சர்ச் அங்கு இருந்ததற்கான அடையாளமாக புயலின் பாதிப்பையும் கடந்து தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சிறிது நேரம் அந்த சர்ச்சையை சுற்றி பார்த்துவிட்டு அருகில் இருந்த ஒரு ஓலைக் கொட்டகையில் சிறிது நேரம் உறங்கி ஓய்வு எடுத்தேன். பின்பு அந்த தனுஷ்கோடியில் சிதிலமடைந்த ஒரு அந்த காலத்து மருத்துவமனையையும் பின்பு அங்கு மண்ணில் புதையுண்ட சில கட்டிடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கே சிறு குகை போன்ற ஒரு கட்டிடம் இருப்பதின் அருகில் சென்றேன்.
அங்கே அந்த குகை போன்ற கட்டிடத்தின் உள்ளே ஒரு வயதான பெரியவர் அவரின் கடைசி நாட்களை வாழ்ந்து வருகிறார் என்பதை உள்ளே இருந்த காட்சியை பார்க்கும் போது நமக்கு புரிந்தது. அங்கு இருந்த மற்ற சிதிலமடைந்த கட்டிடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு அந்த சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் இன்னொரு பகுதிக்கு நடந்தே சென்றேன்.
முட்டிக்கும் கீழான அளவில் தண்ணீர் தேங்கியிருந்த அந்த நீர்ப்பரப்பில் நான் அங்கு நடந்தே சென்று சேர்ந்தேன். அங்கே ஒரு மீனவர் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பிய காட்சியும் அந்த மீன்களை கரையில் அருகில் இருந்து அவரின் மனைவி இறக்கிக் கொண்டிருந்த காட்சியும் அவரின் சிறு குழந்தை அக்கரையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த காட்சியும் என்னை அந்த மீனவரின் படகு அருகில் செல்ல தூண்டியது. அவர் பிடித்து வைத்திருந்த மீனை என்னிடம் காட்டினார்.
அதை புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கே சில நிமிடங்களைக் கழித்துவிட்டு சூரியன் மறையத் தொடங்கிய காரணத்தால் அங்கிருந்து அரிச்சல்முனை நோக்கி கடற்கரையோரமாக நடக்க ஆரம்பித்தேன்.
தனுஷ்கோடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது தான் அரிச்சல்முனை. இதுதான் இந்தியாவின் நிலப்பகுதியின் ஒரு கடைசி எல்லைமுனை. இலங்கை இங்கிருந்து வெறும் 15 கிலோ மீட்டர்தான். அந்த கடற்கரை ரொம்ப ரம்மியமாகவும் ஆனால் மிகவும் ஆக்ரோஷமாக சீறிக்கொண்டு அலைகளைக் கொண்டதாக இருந்தது. அங்கே சென்று சிறிது நேரம் கடற்கரையில் கால் நனைத்து விட்டு ராமேஸ்வரம் செல்லும் கடைசி பஸ்ஸிற்காக காத்திருந்தேன். எனக்கு ஒரு ஆச்சரியம் நான் பயன்படுத்தும் ஏர்டெல் நெட்வொர்க்கில் "வெல்கம் டு ஸ்ரீலங்கா" என்று குறுஞ்செய்தி வந்தது. சூரியன் இன்னும் சற்று நேரத்தில் மறைந்துவிடும் சூழ்நிலையில் ராமேஸ்வரம் செல்லும் கடைசி பேருந்தும் அரிச்சல்முனை வந்தடைந்தது. நான் தனுஷ்கோடியை முற்றிலுமாக சுற்றி பார்த்துவிட்டு அந்த பேருந்தில் அரிச்சல் முனையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி என் பயணத்தை தொடங்கினேன். கடந்த முறை இந்த இடத்திற்கு வந்த பொழுது ஒரு முழு தினத்தையும் இந்த தனுஷ்கோடியையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் சிதிலமடைந்த கட்டிடங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையில்தான் இந்த பயணத்தை தொடங்கினேன். அந்த ஆசை நிறைவேறிய திருப்தியுடன் மறக்க முடியாத நினைவுகளுடன் அந்த இடத்தில் இருந்து பிரியா விடை பெற்றேன்.
தனுஷ்கோடி பயணத்தை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தேன் அந்த இரவில். ராமேஸ்வரத்தில் வயிறு நிறைய இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு வண்டியில் குமரி நோக்கி என் பயணம் தொடர்ந்தது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நீங்கள் எல்லோரும் ஒருமுறையாவது வாழ்க்கையில் அந்த அழிந்துபோன நகரமான தனுஷ்கோடியை பார்த்துவிட்டு வாருங்கள். மீண்டும் சென்னையில் இருந்து பைக்கில் தனுஷ்கோடிக்கு போக வேண்டும் என்ற மற்றொரு ஆசையும் எனக்கு உண்டு.
அதுவும் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உங்கள் தினேஷ்குமார்.
இந்த பயணம் போய் வந்த சில நாட்களிலேயே என் மொபைல் தொலைந்த காரணத்தால் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் பேக்அப் பண்ணவில்லை. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்களே இதில் இணைக்கப்பட்டுள்ளது.
பயணங்கள் முடிவதில்லை தொடரும்.
- தினேஷ் குமார் (எ) SDK