ஒரு பயணம் போகனும் அப்படி னு அன்னைக்கு காலையில இருந்தே ஒரே யோசனை. அதற்கான காரணம் ஆயூத பூஜை தொடர் விடுமுறை. நானும் எங்கயாவது போலாம் னு யோசனையில் இருக்கும் போது தான், நான் பல நாள் போகனும் னு ஆசைப்பட்ட ஒரு மலைக்கு டிரேக்கிங் போகனும் னு முடிவு பண்ணேன். அதற்கு மற்றொரு காரணம் நான் பார்த்த செய்தி. அந்த செய்தியில் நான் போகனும் ஆசைப்பட்ட மலையில் ஏற நான்கு நாட்கள் அனுமதி அப்படிங்குற நியூஸ். ஆனா நாம நினைக்கிற மாறி ஈசியால அந்த மலை மேலே ஏறி போய்ட்டு வர முடியாது. மாதத்தின் சில தினங்கள் மட்டுமே வனத்துறை அனுமதி, அதுவும் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். மழைக்காலங்கள் அப்போ அந்த டிரேக்கிங் பாதையின் குறுக்கே ஓடும் சிற்றோடையில வெள்ளப்பெருக்கு ஏற்படுமாம். அந்த மலை பயணம் கொஞ்சம் ரிஸ்க்கான பயணம் வேற. தனியாவே டிரிப் போயிட்டு இருந்த நான், நம்ம கூட ஒருத்தர கூட்டிட்டு போவோம் னு முடிவு பண்ணி, அந்த ஒருத்தர் யார் னு முடிவு பண்ண என் வாட்சப்ல ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.
"டிரேக்கிங் லவ்ர்ஸ், நெக்ஸ்ட் டூ டேஸ்" - இதான் அந்த ஸ்டேட்ஸ்.
நான் ஸ்டேட்ஸ் போட்ட அடுத்த நிமிடமே என் கல்லூரி ஜூனியர் தம்பி ஹரிஷ் வெங்கடாஜலபதி, "நான் வரேன் அண்ணா" னு ரிப்ளை பண்ணான். நானும் அவன் கிட்ட வெயிட் பண்ணுடா னு சொல்லிட்டு, டிரிப் பத்தின யோசனையில் இருந்த அப்போ தான் இன்னொரு ஜூனியர் தம்பி க்ளின்டன் கிறிஸ்டி ராஜ் ரிப்ளை பண்ணான், "அண்ணா! எங்க எப்போ வரனும்?" அப்படி னு. நான் நீண்ட யோசனைக்கு பிறகு இருவரையும் என்னுடன் கூட்டிட்டு போகலாம் னு முடிவு பண்ணிட்டு, ஈவ்னிங் மீட் பண்ணுவோம் அப்படினு என்னுடைய திடீர் பயணத்துக்கு தயார் ஆனேன். அப்போ தான் ஒரு டிவிஸ்ட். என் கூட டிரிப் க்கு வரேன் அப்படினு சொன்ன க்ளின்டனை தொடர்பு கொண்ட போது, தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் அப்படி னு ரிப்ளை வர, அவனுக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கும் போது அவனை என்னால் காண்டக்ட் பண்ண முடியாத காரணத்தால் நானும் ஹரிஷ் மட்டும் அந்த திடீர் பயணத்தை தொடரலாம் அப்படி னு, தாம்பரம் ல எங்க காலேஜ் முன்னாடி மாலை ஆறு மணிக்கு மீட் பண்றது னு முடிவு பண்ணோம்.
சரியா நானும் ஹரிஷும் தாம்பரம்ல இருக்க எங்க எம்சிசி காலேஜ் முன்னாடி மாலை ஆறு மணிக்கு மீட் பண்ணோம். நான் போக வேண்டும் என முடிவு செய்து இருந்த ஊருக்கு நான் ரெண்டு டிக்கெட் எடுத்தேன். ஆனா கூட வர தம்பி ஹரிஷுக்கு நான் எங்க அவனை கூட்டிட்டு போறனு தெரியாது. நாங்க ரெண்டு பேரும் புறநகர் ரயில் பிடிச்சி சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் சேர்ந்தோம். இரவு நேர அன்ரிசர்வ்டு பயணம் அப்படிங்குற காரணத்தால் நாங்க நைட் டின்னர் அந்த ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல சாப்பிடலாம் அப்படினு, அவனை ஆல்பர்ட் தியேட்டர் பக்கம் இருக்க ரோட்டோர தள்ளுவண்டி கடைக்கு கூட்டிட்டு போனேன். நாங்க பசியாற சாப்பிட்டுட்டு சென்னை எக்மோர் ரயில் நிலையத்துல தென் தமிழ்நாடு போற ரயில்கள்ல உட்கார இடம் இருக்கா னு செக் பண்ணும் போது, கேரள மாநிலம் கொல்லத்திற்கு நெல்லை, நாகர்கோவில் வழியா போற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அன்ரிசர்வ்டு கோச்ல சீட் இருந்ததால எங்களுக்கான இடத்தை பிடிச்சு உட்கார்ந்தோம். அப்போ டைம் ஆரவு 8.10. ரயிலில் அன்ரிசர்வ்டு கோச்ல சீட் கிடைக்குறது நீங்களா கொடுத்து வெச்சிருக்கனும். பல அன்ரிசர்வ்டு பயணங்களில் நான் போராடியே இடம் கிடைத்து இருக்கிறது. வழக்கம் போல எங்களோட கோ பேசஞ்சர்ஸ் உடன் பேச்சு கொடுத்த அப்போ தான் திண்டுக்கல் போற விக்கி என்னும் சிறுவன் நண்பன் ஆனான். அவனுடன் சிறிது நேரம் பேசி விட்டு, அடுத்த நாளின் சாகச பயணத்தை கருத்தில் கொண்டு, உட்கார்ந்த நிலையிலே ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒரு குட்டி தூக்கம் போட்டோம் அந்த அன்ரிசர்வ்டு கோச்ல.
அதிகாலை நாலு மணிக்கு கூடல் மாநகரான மதுரையை அடைந்தது நாங்க போன அனந்தபுரி எக்ஸ்பிரஸ். ரயிலில் இருந்து இறங்கிய நாங்க மதுரை ரயில் நிலையத்திலேயே எங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களில் ரிப்ஃரெஷ் ஆயிட்டு, எங்களின் அடுத்த ரயிலுக்காக வெயிட் பண்ணோம். என்னுடன் வந்த நண்பன் ஹரிஷ் க்கு எங்க போகிறோம்? எதுக்காக மதுரையில் இறங்கினோம்? அடுத்த எந்த ரயிலுக்காக வெயிட் பண்றோம்? னு எதுவுமே தெரியாம என்னுடன் பயணத்தின் அடுத்த கட்டத்திற்காக எதற்கும் தயாராக இருந்தான். அப்போ மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த செங்கோட்டை போற பொதிகை எக்ஸ்பிரஸ்ல இருக்க அன்ரிசர்வ்டு பெட்டியில் நாங்க ஏறி எங்களுக்கான சீட் பிடிச்சி உட்கார்ந்தோம். சூரியன் உதித்க ஸ்டாட் ஆன உடனே ரயில் போற வழியில் பரந்து விரிந்து கிடக்கும் வயல்களையும் கிராமங்களையும் பார்க்க நான் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தேன். அப்போ கரும்புகை கக்க பேரொலி எழுப்பிக்கிட்டே, சிக்குபுக்கு சிக்குபுக்கு னு ரயில் சத்தம் எழுப்பிக்கிட்டே போச்சு. ரயில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை நெருங்கும் போது என்னுடன் வந்த நண்பன் ஹரிஷிடம் எங்க நாம போறோம் னு ஏதாவது ஐடியா இருக்கா னு கேட்ட அப்போ தென்காசி போறோம்மா? னு என்கிட்ட கேட்டான். நான் அதற்கு எதுவும் ரிப்ளை பண்ணாமல் அமைதியாக அவனுக்கு சர்ப்பிரைஸ் ஆகவே இருக்கட்டும் னு விட்டுட்டேன். ரயில் ஸ்ரீவில்லிபுத்துரை சென்று சேர்ந்ததும் நான் நண்பன் ஹரீஷை ரயிலில் இருந்து இறங்க சொன்னேன். ஆம். நாங்க இறங்க வேண்டிய இடமே ஸ்ரீவில்லிபுத்தூர் தான். நானும் அவனும் அந்த ஊரில் இறங்கி, அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டான்ட் க்கு சென்றோம். அந்த பேருந்து நிலையத்தில் நான் போக வேண்டும் என திட்டமிட்டு வந்த அந்த மலைக்கு செல்வதற்கான அடிவாரம் வரை செல்லும் பேருந்திற்கு காத்திருந்த சில நிமிடங்களில் தானிப்பாறை என்னும் அந்த ஊருக்கு வத்திராயிருப்பு வழியாக செல்லும் அந்த பேருந்து வந்து சேர்ந்தது. அதில் ஏறி எங்களுக்கான இருக்கையில் நாங்ள் இருவரும் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பயணிகளால் நிரம்பிய உடன் பேருந்து பயணம் இனிதே தொடங்கியது. நாற்பது நிமிடங்களுக்கும் மேலான அந்த பயணத்தில் நாங்கள் இருவரும் தானிப்பாறை என்னும் அந்த கிராமத்திற்கு சென்று சேர்ந்தோம். காலை உணவை அந்த ஊரில் இருந்த ஒரு ரோட்டோர கடையில் இட்லியும் வடையும் சாப்பிட்டு விட்டு எங்களின் அன்றைய சாகச பயணம் தொடங்கியது. ஆமா நிறுத்துடா! எங்க தான் டா அந்த பையன கூட்டிட்டு போற னு நீங்க என்ன கேட்குறது புரியுது. அந்த நண்பன் மனதிலும் அந்த கேள்விகள் அப்போ எழுந்திருக்கலாம். ஆனா அவன் என்கிட்ட கேட்கல. உங்களுக்கு மட்டும் சொல்றேன். நான் அந்த நண்பன கூட்டிட்டு போகனும் என் மனசில் நினைத்து நான் டிரேக்கிங் இப்போ கூட்டிட்டு போக போற மலை பேரு சதுரகிரி.
சதுரகிரி. திசைக்கு நான்கு மலைகள் என்று பதினாறு மலைகள் சமமாகவும், சதுரமாகவும் அமைந்திருப்பதால் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்தது. இந்த மலையானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலை. இந்த மலை மீது சுந்தர மகாலிங்கம் கோவில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில் என இரண்டு கோயில்கள் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களுக்கு முன்னும் பின்னும் நான்கு நாட்கள் மட்டுமே இந்த மலை மீது ஏற வனத்துறை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கிறது. அதுவும் மழை பொழிவு இல்லாமல் இருந்தால் தான். ஏனெனில் மலை மீது ஏறி செல்லும் பாதையின் குறுக்கே பல சிற்றோடைகளை கடந்து செல்கிறது. இந்த மலையை பற்றி எனக்கு தெரிய வர காரணமே மழை காலங்களில் இந்த மலை மீது ஏறிய பக்தர்கள் மீண்டும் கீழே இறங்க முடியாமல் மலையில் சிக்கி கொண்டார்கள் என்பதும் அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டார்கள் என்ற செய்தியை பார்த்தே. நானும் இந்த பயணத்தை தொடங்கியது திடீர் என்று செய்தியில் பார்த்த சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அனுமதி என்னும் செய்தியை பார்த்தே. இந்த சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளே தானிப்பாறை என்னும் இடத்தில் தொடங்கும் பாதையும், மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள வாழைத்தோப்பு என்னும் தொடங்கும் பாதையும் மற்றும் தேனி மாவட்டம் வருசநாடு அருகே தொடங்கும் பாதை என மூன்று வெவ்வேறு பாதைகள் உள்ளது. இதில் தானிப்பாறை பாதை எளிதான பாதையாகவும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பாதையாக உள்ளது. வாழைத்தோப்பு பாதையும் மற்றும் வருசநாடு பாதையும் கடினமான பாதையாக இருப்பதால் சிலர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். நாங்கள் எங்களின் சாகச பயணத்தை தானிப்பாறை பாதையில் தொடங்கினோம்.
சாம்பல் நிற அணில் சரணாலயம் - திருவில்லிப்புத்தூர் என்னும் பெயர் கொண்ட வரவேற்பு நுழைவாயிலில் புகுந்து நாங்கள் இருவரும் நடக்க தொடங்கினோம். அப்போ டைம் காலை 8.55. நாங்க போன பாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தது. பாதையின் ஓரமாக இருந்த பெரிய பலகைகளை பார்த்த போது தான் தெரிந்தது நாங்கள் பயணப்படுகிற வனம் ஒரு மூலிகைகளால் சூழப்பட்ட தானிப்பாறை மூலிகை வனம் என்று. சூரியன் தன் உக்கிரத்தை லைட்டா ஸ்டாட் பண்ணிச்சு. எங்களின் பத்து நிமிட பயணத்தில் எங்களின் பாதையில் ஒரு சிறு கோயிலை அடைந்தோம். அந்த கோயிலில் பயணம் போற எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு மலை ஏறினாங்க. அப்போ அந்த கோயிலுக்கு பக்கத்திலேயே ஒரு சிற்றோடை ஓடிச்சு. அதில் சிலர் குடும்பமாக குளித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் ஆசையாய் இருந்தாலும் வெயில் உக்கிரமாக மாறுவதற்கு முன்னால மலை மேல போய் சேரனும் அப்படி னு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நாங்க போன பாதையின் குறுக்கே அப்போ ஒரு சிற்றோடை வந்துச்சு. தண்ணீர் ரொம்ப கம்மியா அதான் அதுல ஓடிச்சு. அதைக் கடந்து நாங்க போன அப்பதான் அந்த செங்குத்தான வழுக்குப்பாறை வந்துச்சு. அந்த வழுக்குப்பாறையின் பக்கத்துல நாங்க ஏற்கனவே பார்த்த அந்த சிற்றோடை ஓடியது. எங்க பாதையில இருந்து கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் நாங்க அதுல போய் விழுந்து நமக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்க அளவுக்கு அந்த செங்குத்தான பாறையில் செதுக்கப்பட்டு இருந்த படிக்கட்டுல பார்த்து பொறுமையா ஏறினோம்.
வழூக்குப்பாறை வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/2oceQJy2uF6gULLG9 பாதை ரொம்ப கடினமாக இருந்துச்சு. செங்குத்தா கையில ஒரு தடியை வச்சுக்கிட்டு நாங்க ஏறி போய்க்கிட்டே இருந்தோம். ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது ஆனாலும் நாங்க ரொம்பவே சோர்வடைந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்தோம். சிறிது நேரம் கழிச்சு நாங்க பயணத்தை தொடர்ந்த அப்போ ஒருவரை ஒரு பெட்ஷீட்டில் கட்டி இருவர் கீழே டோலி கட்டி தூக்கிட்டு போனாங்க. நாங்க அதப்பத்தி விசாரிக்கும் போது தான் பலர் மலை மீது ஏறிட்டு கீழே இறங்க முடியாமலும் சிலர் மலை மீதே கூட இறந்து கூட போய் இருக்காங்க சொன்னாங்க. அப்படி இருக்கவங்கள இப்படி டோலி கட்டி தான் கீழே தூக்கிட்டு போவாங்க னு சொன்னாங்க
டோலி கட்டி தூக்கி செல்லும் வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/8nHb3nkbL5FFvoZk9
எங்களின் பயணத்தின் இடையே நாங்க ஒரு மக்கள் அதிகமா கூடி இருந்த ஒரு இடத்தை அடைந்தோம். அங்கே இருந்த ஒரு பாறையில் ஒரு வித மாவால் கோபுரம் போல எழுப்பி அதை வழிப்பட்டு கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு இருந்தவர்களிடம் விசாரித்த போது அது கோரக்கர் சித்தரை வழிப்பட்டு கொண்டு இருந்தார்கள். கோரக்கர் தவமிருந்த குகை இந்த மலையில் உள்ளதாகவும் அங்கு செல்ல வனத்துறை அனுமதி இல்லை என்பதும் பின்னர் தெரிய வந்தது. அங்கிருந்து தொடர்ந்து எங்கள் நடந்து செல்லும் வழியில் சலசலத்து ஓடும் நீரின் ஓசையை கேட்டு நாங்கள் எங்களின் பாதையில் இருந்து விலகி அந்த நீரோடையை தேடி சென்ற போது அங்கு மறைந்து இருந்த ஒரு சிற்றருவியை கண்டுபிடித்தோம். அந்த சிற்றருவியில் இறங்கி கால்களை நனைத்து கொண்டு சில புகைப்படங்களை எடுத்து கொண்டு நாங்க தவறவிட்ட பாதையை தேடி பயணத்தை தொடர்ந்தோம். நாங்க போன பாதையில சில இடங்கள் செங்குத்தாகவும், சில இடங்கள் பாறைகள் ஆகவும், சில இடங்கள் மண் பாதையாகவும் ஒரு கலவையாக கடினமாகவும் இருந்துச்சு. அப்போ தான் எங்களுடன் மலையேறிய இருவரிடம் பேச்சு கொடுத்தோம். அவங்க இரண்டு பேரும் சாப்டூர் பக்கம் இருக்க ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள். அமாவாசை பௌர்ணமி தினங்களில் மலையேறி அங்கேயே தங்கி சிவனை வழிப்பட்டு விட்டு மறுநாள் மலையில் இருந்து கீழே இறங்குவோம் னு சொன்னாங்க. அவர்கள் கிட்ட பேசிய போது பல சுவாரசியமான கதைகள் நமக்கு கிடைத்தது. இந்த மலையில பல மூலிகைகள் நிறைந்து இருப்பதாகவும் அதை தேடி பலர் இங்க வருவாங்க னு சொன்ன அந்த அண்ணன்கள், சென்னையில் இருந்து ஒரு சித்த வைத்தியர் இங்க வந்து ஏதோ மூலிகைகளை வைத்து எய்ட்ஸ்க்கே வைத்தியம் பார்ப்பார் னு சொன்னார். அவர் சொன்ன மற்ற கதைல அண்ணன் சொல்ற ஆமைக்கறி சாப்பிட்டேன் கதை மாறி நம்பவே முடியல. இருந்தாலும் அவங்க கிட்ட இருந்து எங்க பயணத்துக்கு தேவையான பல டிப்ஸ் கிடைச்சிது. நாங்க அந்த அண்ணன்கள் உடன் செல்லும் போது அதில் ஒரு அண்ணன் தான் வைத்திருந்த பீடிக்கட்டில் இருந்து ஒன்றை எடுத்து பற்ற வைக்க முயல, அந்த நேரம் என்று மலையில் இருந்து கிழே இறங்கி கொண்டு இருந்த வனக்காவலர்கள் கண்ணில் பட , அண்ணனின் கன்னத்தில் பளார் என்று விட்டு அவரிடம் இருந்து பீடிக்கட்டையும் தீப்பெட்டியை பிடுங்கி கொண்டார்கள். பாவம் அவர் அன்றைய இரவை மலை தங்கி கழிக்க திட்டமிட்டு வாங்கி வந்த பீடிக்கட்டை இழந்து விட்டு ரொம்பவே மனுசன் சோகம் ஆயிட்டாப்பல. காட்டிற்குள் பீடி சிகரெட் பிடிக்க கூடாது னு சட்டம் இருப்பதால், சிறு கவனக்குறைவும் பெரும் தீ விபத்திற்கு வித்திடும் என்பதால் இது போல நாம தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்த்து விடுவது நல்லது.
எங்கள் பயணத்தை தொடங்கி நடந்து நடந்து பாதைகளும் கடினமாக இருந்து இன்னும் எவ்வளவு தூரம் போகனும் னு யோசிச்சிட்டே நாங்க போய்ட்டு இருந்த அப்போ எங்களின் பாதையில் இரட்டை சுயம்பு லிங்க கோவில், வன தூர்கை அம்மன் கோவில், பலாவடி கருப்பசுவாமி கோவில் னு பல கோவில்களை கடந்து ஒருவழியா நாங்க மணி 12 மணிக்கு எங்களின் மூன்று மணி நேர பயணித்தில் சுந்தர மகாலிங்க கோவிலை அடைந்தோம். அடர்ந்த காட்டிற்கு நடுவில் அமைந்துள்ள இந்த கோவிலில் பல சிவனடியார்களை எங்களால் காண முடிந்தது. பசி வயிற்றை கிள்ள முதலில் வயிற்றை நிரப்புவோம் அப்படி னு நாங்க அன்னதான கூடத்தை நோக்கி நடந்தோம். விஷேச நாட்களில் மலைமீது பொதுமக்களுக்கு அன்னதானம் அளிப்பார்கள் என்பதை கூட வந்த அண்ணன் சொன்னதை வைத்து தான் நாங்க அங்க போனோம். 12.30 மணி இருக்கும் நாங்க அந்த அன்னதான கூடத்தை சென்று சேர்ந்த போது. அன்றைய தினத்திற்கான மதிய சாப்பாடு அங்கு பரிமாறப்பட்டு கொண்டிருந்தது. நாங்கள் அந்த லைன்ல நின்று எங்களுக்கான தட்டில் சாப்பாடு வாங்கி அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டோம். வெயிட் ரைஸ் வித் சாம்பார் அண்ட் பாட்டாணி பொரியல் அன்றைய ஸ்பெஷல். நாங்கள் வயிறார சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். பின்பு சுந்தர மகாலிங்கம் சுவாமி சன்னதிக்கு சென்று வழிப்பாடு செய்து விட்டு அடுத்து சந்தன மகாலிங்கம் சுவாமி சன்னதி க்கும் சென்று வழிப்பாடு செய்து விட்டு மீண்டும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு எப்படி மலையில் இருந்து கீழே இறங்குவது என யோசித்து கொண்டு இருந்தோம். எங்களுடன் வந்த அண்ணன்களிடம் எங்களுக்கான பயண சந்தேகங்கள் அனைத்தும் கேட்டு கொண்டு எங்களின் அடுத்த பயணத்தில் ரிஸ்க் எடுக்க தயார் ஆனோம். என்னுடன் வந்த நண்பன் ஹரிஷிடம் அடுத்த கட்ட பயணம் எப்படி இருக்கும் என்று எதுவும் தெரியாமல், எது வந்தாலும் எதிர் கொள்வோம் ஒன்றாக என்று சொல்லி விட்டு மலை மீது இருந்து கீழே இறங்கும் அந்த ரிஸ்க்கான பயணத்தை தொடங்கினோம். மீண்டும் என்னடா உங்க பயணத்துல ரிஸ்க் இருக்கு? அதான் வந்த வழியே கீழே இறங்க போறீங்க; அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப் னு நீங்க கேட்குறது எனக்கு புரியுது. அங்க தான் ட்விஸ்ட். நாங்க இந்த மலையிலிருந்து கீழே இறங்க முடிவு பண்ணது எல்லாரும் இறங்குற விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிற தாணிப்பாறை பாதை அல்ல. யாருமே பயன்படுத்தாத மதுரை மாவட்டத்தில சாப்டூர் பக்கம் இருக்க வாாழைத்தோப்பு பாதையை தான் தேர்ந்து எடுத்தோம்.
பிற்பகல் 3 மணி.
முன்பின் தெரியாத அதுவும் விலங்குகள் அச்சம் இருக்குற அடர்ந்த காட்டுக்குள் போற ஒத்தயடி பாதையை நம்பி அது போகும் திசையில் நானும் நண்பன் ஹரிஷும் நடந்து போனோம். நாங்க மலையேறிய தானிப்பாறை பாதை மாறி இது கிடையாது. மேலே நாங்க ஏறும் போது எங்க கூட ஒரு பெருங்கூட்டம் மலையேறியது. ஆனா இறங்கும் போது நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா போனோம். குறுகலான ஒத்தயடி பாதையில் இன்னும் எவ்வளவு நேரத்தில் மலையடிவாரத்தை சென்று சேருவோம் னு தெரியாம நடந்து போய்ட்டே இருந்தோம். நண்பன் ஹரிஷ் என்னை வீடியோ எடுத்துட்டே பொறுமையா பின்னாடி நடந்து வந்தான். நாற்பது நிமிட பயணத்துல நாங்க ஒரு சின்ன ஓடையை அடைந்தோம்.
காட்டில் வழி தெரியாத பாதையில் பயணம் செய்த லிங்க் - https://photos.app.goo.gl/eoHkjKocCEhVHUMm9
அங்கு சிறிது நேரம் ஒய்வு எடுத்து கொண்டோம். அந்த அடர்ந்த காட்டில் வழி தவறி போய் விடாமல் என்னை நம்பி வந்த நண்பனை எப்படியாவது சூரியன் மறைவதற்குள் மலை அடிவார கிராமத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் வேகமாக நடந்து சென்றோம். தொலைவில் சமவெளி தெரிந்தால் கூட ஒரு ஆறுதலாக இருக்கும் எங்களுக்கு, ஆனால் ஒரு மணி நேர நடைபயணத்தில் நாங்கள் அந்த காட்டிலேயே தான் நடந்து வந்து கொண்டு இருந்தோம். இதில் மற்றுமொரு விஷயம் நடுவில் அந்த ஒத்தையடி பாதை காணாமல் போய் விட்டது. நாங்களே ஒரு பாதையில் நடந்து சென்று எங்களின் பாதையை தேடி கொண்டே ஒரு மலையின் சரிவான பகுதிக்கு சென்று சேர்ந்தோம். மணி மாலை 4. அப்போது தான் தெரிந்தது நாங்கள் வழி மாறி வந்தது. நாங்கள் ஒரு மலையின் முனையில் நிற்க, எங்களுக்கு தொலைவில் பக்கத்துல மலையில் நாங்க தவறவிட்ட ஒத்தையடி பாதையை கண்டுபிடித்தோம். இரு மலையையும் பிரிக்கும் பெரிய சரிவான பள்ளமும் , மற்றும் மலைகளுக்கு நடுவில் ஒரு நீர்வீழ்ச்சி என அந்த இடம் அழகும் ஆபத்தும் கலந்து இருந்தது. அடுத்த மலையில் இருக்கும் பாதைக்கு போனால் மட்டுமே சீக்கிரம் மலையை விட்டு சீக்கிரம் கீழே இறங்க முடியும் என்று அந்த ஆபத்தான டாஸ்க்கை நாங்கள் செய்தோம். அந்த சரிவான மலையில் இறங்க தொடங்கினோம். நான் வேகமாக இறங்குவதை பார்த்த ஹரிஷ் சொன்னான். அண்ணா! பொறுமையா இறங்குங்க. ஒரு வேளை எனக்கு எதாவது ஆச்சுனா இங்கயே என்னோட உயிர் போய்டனும். கை கால் உடைஞ்சு வீட்ல கஷ்டத்த தர கூடாது னு அவன் சொன்ன வார்த்தைகள் அவனின் அந்த பயத்தை எனக்கு உணர்த்தியது. எப்படியோ நாங்கள் பொறுமையாக ஒரு மலையில் இருந்து சரிவான பாதையில் இருந்து இறங்கினோம்.
அந்த சரிவான பாதை விடியோ லிங்க் - https://photos.app.goo.gl/PwFJrNxwsiroAyiU9
அங்கே அந்த நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்து விட்டு அதன் அருகே இருந்த ஒரு குகையை பார்த்து விட்டு மீண்டும் அடுத்த மலையின் சரிவான செங்குத்தான பாதையில் ஏறி நாங்கள் தவறவிட்ட பாதையை அடைந்தோம். சிறிது நேரம் அந்த பாதையில் நடந்து சென்ற போது தான் கொஞ்சம் ஆறுதல் அளித்த காட்சியை கண்டோம். தொலைவில் சமவெளி பகுதியில் பரந்து விரிந்து இருந்த கிராமங்களை அந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்த உடனே சீக்கிரம் இருட்டுவற்குள் நாங்கள் மலையடிவாரம் சென்று சேர வேண்டும் என எங்களின் நடையின் வேகத்தை கூட்டினோம்.
மலை மீது சரிவான பாதையில் ஏறும் வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/mHmvhK7mSnAasdpB8
ஆபத்து நிறைந்த சரிவான பாதையில் பயணம் செய்த வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/TaVz3ozYgQjUvxFJA
எங்களுக்கு மற்றுமொரு மிகப்பெரும் சாவல் அந்த பாதையில் உள்ள பாறைகளில் நாங்கள் கால் வைத்து இறங்கும் போது தீடீர் என அது உருண்டு கீழே சென்றது . வேகமாக இறங்க வேண்டும் என நாங்கள் நினைத்தது இதனால் எங்களை பொறுமையாக இறங்க வைத்தது. குடிக்க வைத்து இருந்த தண்ணீர் தீர்ந்து போக , பாதையில் எந்த பாறை எப்போ உருளுமோ என்று தெரியாமல், இதற்கு நடுவில் சூரியன் வெளிச்சம் குறைய எங்கள் பயணம் இன்னும் கடினமாக மாறியது. அப்போது தான் எங்கள் பாதையில் மலையடிவார கிராமத்தில் இருக்கும் ஒரு குடும்பம் இரவு மலையில் தங்கி தரிசனம் செய்ய மலையேறி கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் இன்னும் எவ்வளவு தூரம் என கேட்க அவர்கள் இன்னும் சிறிது தொலைவு தான் என சொன்னது கொஞ்சம் ஆறுதலான விஷயம். நாங்கள் தொடர்ந்து கீழே இறங்கி , பல இடங்களில் ஓய்வு எடுத்து கொண்டு மாலை 5.30 மணி அளவில் எங்க பாதையில் மற்றுமொரு நீர்வீழ்ச்சியை கண்டோம். முதல் வேளையாக தாகம் தீரும் அளவு நீர்வீழ்ச்சி தண்ணீயை குடித்து விட்டு எங்களின் உடல் அசதியை போக்க அந்த மூலிகை வனத்தின் ஊடே மலையில் இருந்து கீழே வரும் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடிவு செய்தோம். பத்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு விட்டு அந்த மலையடிவார கிராமம் நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.
அருவியில் ஆனந்த குளியல் வீடியோ லிங்க் - https://photos.app.goo.gl/NwsK2BYXSUD4VA8V7
சூரியன் முற்றிலுமாக மறைந்து இருள் சூழ தொடங்கிய வேளையில் நாங்கள் மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள வாழைத்தோப்பு என்னும் குக்கிராமத்தை அடைந்தோம். மணி மாலை 6.30.
நாங்கள் வாழைத்தோப்பு கிராமத்திற்கு சென்று சேர்ந்த போது அந்த ஊரே அனைத்து வேளைகளையும் முடித்து கொண்டு அதற்குள் அமைதியாக காட்சி தந்தது. அந்த குக்கிராமத்தில் இருந்து எப்படி மதுரை செல்வது என தெரியாமல் அங்கு இருந்த சில கிராமவாசிகளிடம் கேட்ட போது அவர்கள் சொன்னார்கள், "பஸ்ல இல்லப்பா! இப்போ ஒரு பால் வண்டி வரும் பேரையூர் வரைக்கு போகும். அதுல ஏறி நீங்க பேரையூர் போய்ட்டு அங்க இருந்து மதுரைக்கு பஸ்ல போய்டலாம்" னு சொன்னதை கேட்டு அந்த பால் வண்டிக்காக காத்து இருந்தோம். சிறிது நேரத்தில் வந்த பால் வண்டியில் அந்த ஐடியா கொடுத்த ஊர்க்காரங்களே பால் வண்டி டிரைவர் கிட்ட பேசி எங்களை அந்த வண்டியில் ஏற்றி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு அந்த பால் வண்டியில் மதுரை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.
இந்த திடீர் பயணத்தை பல திரில்லிங்கான அனுபவத்தோட நான் ஆசைப்பட்ட மாறியே திடீர் திடீரென மாறிய திட்டங்களுடன் வெற்றிகரமாக நான் கம்ப்ளீட்டு பண்ணதுக்கு முக்கிய காரணம் என் கல்லூரி ஜூனியர் நட்பு ஹரீஷ் தான். ஒரு பயணத்துல நம்ம கூட வரவங்க நம்ம மைன்ட் செட்க்கு ஏற்றார் போல அமைவதும், நாம போடுற எல்லா திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கறதும் தான் நம்ம பயணத்தை மகிழ்ச்சியான ஒன்றாகவும் சிறந்த ஒன்றாக மாற்றும். நண்பன் ஹரீஷ் நான் போன பயணங்களில் உடன் வந்த நண்பர்களில் ஒரு சிறந்த சக பயணி. மேலும் பல பயணங்கள் அவனுடன் போகணும் னு ஆசை இருக்கு, ஆனா அதுக்கு காலம் தான் பதில் சொல்லனும். நாங்க இந்த பயணத்தில் மதுரையை அடைந்து பின்பு மற்றுமொரு திடீர் பயணமாக குலசேகரப்பட்டினம் தசராவிற்கு தம்பி சரவணா என்கிற பிரவோ வின் அழைப்பை ஏற்று சென்று அப்புறம் சிஏ டெஸ்ட் எழுத குமரியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறி மீண்டும் மற்றுமொரு திடீர் ப்ளானாக சிஏ டெஸ்ட்டை எல்லாம் தள்ளி வெச்சிட்டு கொல்லிமலைக்கு போனோம். இந்த அனுபவங்களை வாய்ப்பிருந்தால் அடுத்த அடுத்த பயணக்கட்டுரைகளில் பார்ப்போம் நண்பர்களே!