Sunday, 6 October 2019

தன்னந்தனியே - பார்ட் த்ரீ

“Go, fly, roam, travel, voyage, explore, journey, discover, adventure.”
இந்த வாக்கியம் என் பயணத்துக்கு ரொம்பவே பொருந்தும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம் இருக்க வாணரமுட்டி கிராமத்தில் இருக்க... என் நண்பன் டேவிட் வீட்ல... நல்லா தூங்கி எழுந்தேன். அப்போ டைம் காலையில ஒரு 6 மணி இருக்கும். என் கல்லூரி ஜூனியரும் , என் நண்பன் கீர்த்திவாசன் கால் பண்ணான். என்ன ப்ரோ,  குளிச்சுட்டு இருக்கீங்களானு ? கேட்டான். எனக்கு ஒன்னுமே புரியல... அப்போ தான் சொன்னான்,  அண்ணா!  நீங்க அனுப்புன கூகுள் மேப் லிங்க்... ஒரு குளத்துல ல தா காட்டுது ...அதான் கேட்டேன் னு சொன்னான். நான் டிரிப் போகும் போது... எங்க போறனு மத்தவங்களுக்கு தெரியனும் னு கூகுள் ல லைவ் லிங்க் ஷேர் பண்ணி இருந்தேன். நமக்கு தா தெரியுமே,  சம்டைம்ஸ் கூகுள் தப்பா இடத்த காட்டும் னு.  என் ப்ரெண்ட் வீட்டு பக்கத்துல இருக்க குளத்துல நா இருக்க மாறி அவனுக்கு காட்டிருக்கு. என்ன பண்றது கூகுள் காலம் .

செல்வமலர் கல்யாணத்துக்கு தூத்துக்குடி பக்கம் இருக்க சாயர்புரம் போகனும்,  அதுவும் 10 மணிக்குள்ள போகனும் னு... மார்னிங் டேவிட் வீட்ல ரிஃபெரஷ் ஆயிட்டு,  அவங்க அம்மா கொடுத்த காபிய குடிச்சிட்டு கிளம்பிட்டேன் . மணி காலையில 7.35.

நண்பன் டேவிட் அவனோட வண்டில... வானரமுட்டி ல இருந்து நல்லடின்புதூர் வரைக்கும் கூட்டிட்டு வந்து... பைபாஸ் ல இறக்கி விட்டான். அங்க பைபாஸ் ல லிப்ட் கேட்டு நின்னுட்டு இருக்கும் போது... சுடலை அண்ணா எனக்கு அவர் பைக் ல லிப்ட் கொடுத்து தலவாயபுரத்துல இறக்கி விட்டார். அங்க இருந்து திருநெல்வேலி போற நியுஸ் பேப்பர் கொண்டு போற வேன் ல... லிப்ட் கேட்டு 45 நிமிட பயணத்துல திருநெல்வேலி பக்கம் இருக்க சங்கர் நகர் வரைக்கும் போனேன் லிப்ட் கேட்டே. மணி காலை 9.06.

அப்புறம் சங்கர் நகர் ல இருந்து ரகமத் நகர் வரைக்கும் லாரி ல சுசீலன் சேட்டா கூடயும், அங்க இருந்து திருநெல்வேலி தூத்துக்குடி பைபாஸ் ல இருக்க KTC நகர் வரைக்கும் இசக்கி அண்ணாகூட லிப்ட் கேட்டு போனேன்.




எப்படியோ தூத்துக்குடி போற பைபாஸ்க்கு வந்துட்டோம் னு நினைச்சி, அங்க லிப்ட் கேட்டு நின்னுட்டு இருந்தேன். அப்போ செல்வகுமார் னு ஒரு அண்ணா லிப்ட் கொடுத்தார். எங்க போற னு கேட்டார்.  நான் சென்னையில இருந்து பயணப்பட்டு வந்த என் முழு கதையையும் அவர்க்கிட்ட சொன்னேன். கொஞ்சம் ஆச்சரியப்பட்டு கேட்டவர் கூட... உள்ளுர் கதைய ல பேசிட்டு போய்ட்டு இருந்தேன். நாங்க பைக்ல போன பைபாஸ் ல ஒரு இடத்துல போலீஸ் நிறைய நின்னுட்டு இருந்தாங்க... அவர்க்கிட்ட கேட்டதுக்கு...அங்க தா நேத்து ரெண்டு கொலை நடந்துச்சி ... ஏதோ முன்விரோதம் போல... அங்க அது ல அடிக்கடி நடக்கும் னு சொன்னார்.
அவர்கூட பைக் ல பேசிட்டே போய்ட்டு இருந்தேன். சரியா செல்வா அண்ணா என்ன தூத்துக்குடி விமான நிலையம் தாண்டி புதுக்கோட்டை னு ஒரு ஊர்ல இறக்கி விட்டார். வழக்கம் போல அந்த அண்ணா கூட போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்பும் போது... அவர் அவரோட மொபைல கொடுத்து செல்பி எடுக்க சொன்னார்... வீட்ல போய் அவங்க பேமிலி கிட்ட இப்படி ஒருத்தன மீட் பண்ணேன் னு கதை சொல்லனும் சொன்னார். செலிபிரெட்டி பீல்....

பைபாஸ் ல அங்க இருந்து மறுபடியும் ஊர்க்கு உள்ள போற ரோட்ல விக்னேஷ் , சுரேஷ்,  ஜார்ஜ் னு மாறி மாறி லிப்ட் கேட்டு எப்படியோ ஒரு வழியா நான் போகணும் ஆசைப்பட்ட... செல்வமலர் கல்யாணத்துக்கு தூத்துத்குடி பக்கம் இருக்க சாயர்புரம் வந்து சேர்ந்தேன். மணி காலையில 10.19.

அங்க கல்யாண நடக்குற மண்டபத்துக்கு போய்... என்னோட கல்லூரி சீனியர்ஸ மீட் பண்ணிட்டு, கல்யாணத்துல நல்லா சாப்பிடலாம் னு பந்தி ய தேடி போய்... ரெண்டுநாள் கழிச்சி நல்லா சாப்பிட்டேன். அப்புறம் அங்க இருந்து கல்யாணம் நடக்குற சர்ச் க்கு வேன் ல கூட்டிட்டு போனாங்க. அந்த சர்ச் ல கல்யாணம் முடிஞ்சதும் நம்ம செல்வமலர் வீட்டுக்கு போய்ட்டு... அங்க இருந்து மறுபடியும் கல்யாண மண்டபத்துக்கு போனோம். போற வழியில செல்வமலர் தங்கச்சிங்க எங்களுக்கு கிராமத்து ஸ்பெஷல் குச்சி ஐஸ் வாங்கி தந்தாங்க... நாங்க வேனுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது.





மண்டபத்துல போய் ரிசப்ஷன்ல குரூப் போட்டோ க்கு போஸ் கொடுத்துட்டு... மறுபடியும் மதிய சாப்பாடு கல்யாண மண்டபத்துல சாப்பிட்டு முடிஞ்சேன். ஏன்னா ...கொல பசியில இருந்தேன்.
கல்யாணம் நல்ல படியா முடிஞ்சதும்... என் மனசுல ஒரு யோசனை தோணுச்சி. இந்த பயணத்த குமரி ல போய் முடிக்கணும் னு ஐடியா. சோ...எல்லாருகிட்டயும் சொல்லிட்டு கிளம்பிட்டேன். சரி போற வழியில தூத்துக்குடி போய் நண்பன் பெனியஸ் அ போய் பார்த்துட்டு போலாம் னு... முத்து நகர் நோக்கி பயணப்பட்டு போனேன். சாயர்புரம் ல இருந்து கிளம்பும் போது மணி மதியம் 3.35.
சாயர்புரம் ல இருந்து ஊருக்கு வெளியே கொஞ்ச தூரம் நடந்து போய்ட்டு இருந்தேன். சிவத்தியாபுரம் ல இருந்து போப்ஸ் காலேஜ் வரைக்கும் மயிலு அண்ணாவும்,  அங்க  இருந்து புதுக்கோட்டை ல இருக்க தூத்துக்குடி பைபாஸ் வரைக்கும் மகாராஜா னு ஒரு போலீஸ்காரர் அண்ணா லிப்ட் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. அப்புறம் அங்க இருந்து தூத்துக்குடியில இருக்க பாலிடெனிக் காலேஜ் வரைக்கும் பெனிட் டேவிட் அண்ணா லிப்ட் கொடுத்தாங்க. அங்க போய் என் நண்பனும் தாமஸியன் பெனியஸ் க்கு போன் பண்ணிட்டு, அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். 15 நிமிட காத்திருப்புக்கு பிறகு அவன் நான் இருக்க இடத்துக்கு வந்தான்.

நண்பன் பெனியஸ் கூட அவன் பைக் ல தூத்துக்குடி நகர சுத்தி பாக்கணும் ப்ளான் பண்ணி முதல நான் போகணும் சொன்ன இடம் பனிமய மாதா கோவில். போற வழியில போலீஸ் பிடிப்பாங்க னு பயந்துகிட்டே பைக் ஓட்டிட்டு போனான் நண்பன். தூத்துக்குடி ல நடக்குற கிறிஸ்மஸ் கேரல்ஸ் பத்தி... நண்பன் சொல்ல சொல்ல நாமும் ஒரு வாட்டி அத பாக்கணும் னு மனசுல ஆசைய வளர்த்துகிட்டேன். நண்பன் என்ன மாதா கோவில் ல கொண்டு போய் விட்டான். பழமையான அந்த புனித பனிமய மாதா கோவில் க்கு போய் கொஞ்ச நேரம் ப்ரே பண்ணிட்டு அப்படியே அங்க இருந்து கிளம்பினேன்.
அப்படியே அவன் பைக்ல தூத்துக்குடி அவுடர் ல அப்படியே ஒரு 45 நிமிட ரைடு போய்ட்டு தூத்துக்குடி அனல் மின் நிலையம், உப்பளம், முத்துநகர மாசு படுத்துற தொழிற்சாலைகள் இப்படி எல்லாதையும் பைக்லயே ரவுண்டு அடிச்சு பார்த்துட்டு...
தூத்துக்குடி க்கு வெளியே திருநெல்வேலி பைபாஸ் ல நண்பன் பெனி என்ன இறக்கி விட்டுட்டு கிளம்பிட்டான். மணி  சாயங்காலம் 5.33.

திருநெல்வேலி போய் அங்க இருந்து நாகர்கோவில் ல இருக்க தம்பி வில்லியம்ஸ் வீட்ல போய் நைட் ஸ்டே னு டிசைட் பண்ணி,  நெல்லை போறத்துக்கு லிப்ட் கேட்டு ரோட்ல நின்னுட்டு இருந்தேன். KL 17 J 7661 கேரளா க்கு மர கட்டை ஏத்திட்டு போற லாரில சனில் சேட்டா லிப்ட்டு கொடுத்தார். அவர் கூடவே நாகர்கோவில் போய்டலாம் னு நினைச்சி ப்ளான் போட்டேன். அப்படியே பயண களைப்புல லாரில தூங்கிட்டேன். சனில் சேட்டா திருநெல்வேலி ல இருக்க பாளையங்கோட்டை ல என்ன எழுப்பி... நைட் அவர் அங்க ரெஸ்ட் எடுக்க போறேன் னு சொல்லிட்டு இறக்கி விட்டார்.
அங்க இருந்து செல்வகுமார் னு ஒரு அண்ணா கன்னியாகுமரி பைபாஸ் வரைக்கும் லிப்ட் கொடுத்தார். குமரி போற திசையில பைபாஸ் ல கொஞ்ச தூரம் நடந்து போனேன்.

வெளிச்சம் குறைஞ்சு இரவு தன் கணக்க ஸ்டாட் பண்ணிட்டு இருந்துச்சி. சிறிது நேர காத்திருப்புக்கு அப்புறம் ஒரு அண்ணா லிப்ட் கொடுத்தார். அவர் பெயர் மகேஷ். என்னோட பயணத்த பத்தி கேட்டு தெரிஞ்சிக்கிட்ட அவர்... மீண்டும் மீண்டும் கேள்விகளா கேட்டு... என்ன இப்படில கூட பயணம் பண்ணுவாங்களா னு கேட்டார். அவர் கிட்ட இந்த பயணம் ஒரு அனுபவத்துகான பயணம் னு சொல்லிட்டே வந்தேன். அவர்கூட 30 நிமிட ட்ராவல் பண்ணி பானங்குளம் னு ஒரு ஊர்ல இறக்கி விட்டார். மனுசன் பைக் அ நேரா கொண்டு போய்... ரோட்டு ஓரமா இருந்த போலீஸ்காரங்க மேலே மோதுற மாறி கொண்டு போய் நிறுத்தினார். கொஞ்சம் லைட் ஆ மனசு ல பக் னு இருந்துச்சு. அவர்  பைக் அ விட்டு இறங்கின அப்புறம் தான் தெரிஞ்சிது நம்மல லிப்ட் கொடுத்து கூட்டிட்டு வந்ததே மப்டில இருந்த போலீஸ்காரர் அண்ணா னு. துருவி துருவி கேள்வி கேட்கும் போதே உஷார் ஆகிருக்கனும். அவர்கூட அப்படியே ஒரு செல்பி எடுத்துட்டு...
நன்றி சொல்லிட்டு... நெக்ஸ்ட் லிப்ட்க்கு வெயிடிங். அப்போ அந்த போலீஸ் அண்ணா சொன்னார் , தம்பி நீ அனுபவத்துக்கு பயணம் னு சொன்னதால தான் உன்ன விடுறேன். இல்லனா பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்பி இருப்பேன் . வாழ்க்கையில நாம யாரையும் சார்ந்து இருக்க கூடாது டா னு அட்வைஸ் பண்ணார். இதுக்கு நடுவுல என் கதை முழுசா மத்த போலீஸ் கிட்ட சொல்லிட்டார் மகேஷ் அண்ணா. லிப்ட் கேட்கும் போது ஒரு போலீஸ் அண்ணா சொன்னார்... இங்க லா லிப்ட் கிடைக்காது டா தம்பி னு சொன்னார்... உடனே அவர்க்கிட்ட சென்னையில இருந்து வந்துருக்கேன்... இங்க இருக்க நாகர்கோவிலுக்கு லிப்ட் கிடைக்காதா னு சொல்லிட்டு தொடர்ந்து லிப்ட் கேட்டேன். அப்போ ஒரு போலீஸ் அண்ணா... எனக்காக வண்டிய மடக்க ஸ்டாட் பண்ணாங்க. அப்போ ஒரு லாரிய நிறுத்தி... என்ன ஏத்திக்கிட்டு போக சொன்னாங்க... அந்த லாரி டிரைவர் பக்கத்துல இருக்க ஊர்ல போய் ரெஸ்ட் எடுக்க போறேன் னு போய்ட்டார். பொறுமையிழந்த போலீஸ் அண்ணாங்க... இருட்டுற காரணத்தால பஸ் ல போறியா டா னு கேட்டாங்க. அப்போ நான் சொன்னேன்... ஒத்த காசு செலவு பண்ணாம இது வரைக்கும் வந்துருக்கேன்... இப்படியே கன்னியாகுமரி போகணும் னு.  அப்போ ஒரு போலீஸ் அண்ணா சொன்னார்... நா உன்ன பஸ் ல டிரைவர்ட்ட சொல்லி ஏத்தி விடுறேன்... பக்கத்துல இருக்க நாங்குநேரி டோல்கேட் ல இறங்கிக்கோ. அங்க நிறைய வண்டி நிக்கும்... லிப்ட் கேட்டு போடா னு சொல்லிட்டு ... நாங்குநேரி போற டவுன் பஸ் ல இலவசமா என்ன கூட்டிட்டு போக சொல்லி... டிரைவர் கண்டக்டர் கிட்ட சொல்லி ஏத்தி விட்டாங்க. நானும் பஸ் ல லிப்ட் கேட்டு போறதா நினைச்சிட்டு பஸ் ல ஏறி போனேன். பஸ் ல பயணம் பண்ண சில பயணிகள் என் கதைய கேக்க, ஒன்ஸ் மோர் னு... என் கதைய சொல்லிட்டு... எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு நாங்குநேரி டோல்கேட் ல இறங்கிட்டேன்.

பஸ் அ விட்டு இறங்கி அடுத்த நிமிசம் லிப்ட் கிடைச்சுது நாகர்கோவில் போக அங்க இருந்து.  75 நிமிட பயணத்துல ராஜேஷ் மற்றும் பிரபு அண்ணாங்க கூட எர்ணாகுளத்துல இருக்க ரப்பர் பேக்டரிக்கு தூத்துக்குடி ல இருந்து கரி ஏத்திட்டு போற டிரக் ல லிப்ட் கேட்டு போனேன். நாகர்கோவில் அ நான் ரீச் ஆனா அப்போ டைம் நைட் 8.49.
தம்பி வில்லி அவன் வீட்டு அட்ரஸ் அ வாட்சப் ல ஷேர் பண்ணத ஃபாலோ பண்ணி நாகர்கோவில் வீதிகள் ல நடந்து போனேன்.

நான் நடந்து போன வீதியில இரவு நேரத்துல ... நல்லா கிறிஸ்துமஸ் க்கு ஸ்டார் லைட் னு ஒரே செம அலங்காரம் பண்ணி இருந்தாங்க ஒரு ஸ்டிரீட் ஃபுல்லா. அப்போ அங்க ஒரு சினிமா பாட்டு கச்சேரி நடந்துட்டு இருந்துச்சி. என்னடா கச்சேரி னு பார்த்த.. புதுகுடியிருப்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் னு பேனர். என்னமா கொண்டாடுறாங்க... ஒரே ஆட்டம் பாட்டம் தான். சிறிது நேரம் அத ரசிச்சிட்டு... அப்படியே தம்பி வில்லி வீட்டுக்கு போன அப்போ டைம் இரவு 9.18.


வில்லி வீட்ல பேக் வெச்சிட்டு நானும் தம்பியும் சாப்பிட பக்கத்துல ஒரு ஓட்டல் க்கு போனோம். அங்க நல்லா சாப்பிட்டுட்டு , அப்படியே கொஞ்ச நேரம் நாகர்கோவில் ரோட்ல நைட் வாக் போய்ட்டு... வீட்டுக்கு போய் தூங்க போய்ட்டேன். நான் அவன் வீட்டுக்கு போன நேரம்... வில்லி அப்பா வடநாட்டுக்கு நண்பர்கள் சந்திப்பு க்கு போயிருந்தார். நான் வில்லி ட சொன்னேன்... காலையில எழுப்பி விடுடா,  நான் லிப்ட் கேட்டு கன்னியாகுமரி போய்ட்டு என் டிரிப் முடிச்சிட்டு வரேன் னு. அப்போ தான் வில்லி சொன்னான்,  அண்ணா வீட்ல அப்பா பைக் இருக்கு... நாம ரெண்டு பேரும் அதுல கன்னியாகுமரி போலாம் னு... சரி னு முடிவு பண்ணி நைட் தூங்கிட்டோம்.

மார்னிங் 5.40 க்கு ல எழுந்து நானும் வில்லி யும் பைக் அ எடுத்துட்டு... கன்னியாகுமரி ல சூரிய உதயத்த பார்க்க கிளம்பிட்டோம். எங்க லக் அன்னைக்குனு பார்த்து பைக் ல டேங்க் புல்லா பெட்ரோல் இருந்துச்சி. முடிஞ்ச அளவு சீக்கிரம் போய் கன்னியாகுமரி ய ரிச் ஆனோம். நாங்க கன்னியாகுமரில சூரிய உதயத்த பார்க்க வெயிட் பண்ணும் போது... என் கல்லூரி ஜூனியர்ஸ் அ மீட் பண்ணோம் சர்ப்ரைஸ் ஆ. அனிஷா மற்றும் காட்ஜினா அவங்க ப்ரெண்ட்ஸ் கூட வந்து இருந்தாங்க. அப்போ கொஞ்ச நேரத்துல சூரிய உதயம் எங்களுக்கு அய்யன் வள்ளுவன் சிலை பக்கத்துல காட்சியா தெரிஞ்சிது. என் பயணம் மனசுக்கு நிறைவா இந்தியாவின் கடைக்கோடி குமரி ல முற்று பெற்றது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

ஒரு பைசா கூட செலவு பண்ணமா... பல மறக்க முடியாத நினைவுகள் பலவற்றை சுமந்து... லிப்ட் கேட்டே நான் நினைத்தது போலவே சென்னை ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் வந்து சேர்ந்தேன். இந்த பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த பயணம்.

“Travel is never a matter of money but of courage” – Paulo Coelho
பயணம் போறத்துக்கு பணம் முக்கியமில்லை,  தைரியம் தான் முக்கியம் னு நான் இந்த உலகத்துக்கு என் இந்த பயணம் முலமா சொல்லிருக்கேன் அப்படினு நம்புறேன்.

“All you need to know is that it’s possible.” – Wolf, an Appalachian Trail Hiker
பயணம் என்று இல்லை,  வாழ்க்கையில நீங்க நினைக்கிற எல்லா விஷயமும் முடியும் னு நினைச்சி முழு மனசா பண்ண நிச்சயம் முடியும்.

ஒருநாள் வாட்சப் ல இன்ஜினியரிங் காலேஜ் ல தமிழ்த்துறை பேராசிரியர இருக்க என் கல்லூரி சீனியர் அண்ணா,  " தம்பி இன்னைக்கு க்ளாஸ்ல உன்னோட ட்ராவல் பத்தி  சொன்னேன்,  எல்லோரும் ஆச்சரியமா பார்த்தாங்க" னு சொன்னார். என் கல்லூரி பி எச் டி படிக்குற அண்ணா ஒருத்தர் தினேஷ் தொடர்ந்து நீ எழுதனும் சொல்லி என் பயண கட்டுரைய அவர் வாசிச்சத பத்தி என்கிட்ட அவரின் கருத்தை சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். இது போல் பலரின் உற்சாகமான வார்த்தைகள் என்னை என் சென்னை டூ கன்னியாகுமரி பயணத்தின் இறுதி அத்தியாயத்தை சீக்கிரம் எழுதணும் ஊக்கப்படுத்திச்சி.

இந்த வேலையில நான் என் கல்லூரி நண்பர் பாரத் மற்றும் விக்கேஷ் க்கு என் நன்றிகள். அவங்க தா இது மாறி பயண அனுபவங்கள கண்டிப்பா SDK நீங்க பதிவு பண்ணணும் னு இந்த ப்ளாக் அ நான் எழுத தூண்டுகோல் ஆக இருந்த காரணகர்த்தாக்கள்.

அதே போல என் முதல் பயணக்கட்டுரை ல இருந்து தொடர்ந்து ஆதரவளித்து... அடுத்து எப்போ நெக்ஸ்ட் ஸ்டோரி போடுவீங்க னு கேட்ட ... அனைத்து என் ப்ளாக் ரீடர்ஸ்க்கும் ... தொடர்ந்து என் பயண கட்டுரைக்கள் ல சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ஆதரவளிக்கும் அனைத்து அட்மின்ஸ் மற்றும் நண்பர்களுக்கு என் நன்றிகள்.
- முடிவு - Conclusion.

7 comments:

ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown ...