"சொர்க்கம்" என்று ஒன்று வானில் எங்கோ இருப்பதாகவும், அங்கு பாலாறு, தேனாறு என நாம் நினைத்துப் பார்த்திடாத பல அதிசயங்கள் இருப்பதாகவும் சிறு வயது முதலே கேட்டிருப்போம். ஆனால், நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் இல்லையா? சொர்க்கம் எப்படி இருக்கும் தெரியுமா? சொர்க்கம் என்றுமே ஒரே இடத்தில் இருப்பதில்லை, மாறாக உலகம் முழுக்க சிதறிக் கிடக்கிறது. அப்படியான சொர்க்கத்தின் ஒரு கீற்றுதான் 'மாஞ்சோலை'!
இந்த பஸ் தா... அந்த மலைக்கு போற ரெண்டாவது பஸ். பஸ் ஏறின உடனே கொஞ்ச நேரத்துல அசந்து தூங்கிடேன். கல்லிடைக்குறிச்சி தாண்டி பஸ் போகும் போது முழிப்பு வந்து எழுந்துட்டேன். அப்புறம் மணிமுத்தாறு நோக்கி பஸ் போய்ட்டு இருந்துச்சி. அந்த ஊர கடந்து போறத்துக்கு முன்னாடி... ஒரு இடத்துல பஸ் ரொம்ப நேரமா நின்னுச்சி... என்னன்னு பார்த்தா... பஸ் ல மலை மேல இருக்க போஸ்ட் ஆபீஸ்க்கு... நேம் போர்ட்ஸ பஸ் ல ஏத்துனாங்க. ஏன்... இத இங்க சொல்றேன்னா... அந்த மலை ஊர்களுக்கு லோடு ஏத்திட்டு போற லோடு வேவிகல் அந்த கவர்மண்ட் பஸ் தா. மற்ற வாகனங்கள் காட்டுக்குள்ள நோ என்ட்ரி. அப்புறமா பஸ் மணிமுத்தாறு டேம் கடந்து வனக்காவல் சோதனைச்சாவடி ல போய் நின்னுச்சி. அப்புறமா அங்க இருந்து பஸ் தன்னோட காட்டு வழி பயணத்தை தொடங்கிச்சி இனிதே.
மாஞ்சோலை காடுகள்ல மழை பொழிவு அதிகமா இருந்த காரணத்தால்... அங்க இருந்த அழகிய நீர்வீழ்ச்சி ல தண்ணி ஆர்ப்பரிச்சி கொட்டிச்சி.
பஸ் டிரைவர் அருவிய கடக்குற இடத்துல பஸ் அ கொஞ்ச நேரம் நிறுத்தி... இன்னைக்கு அருவில தண்ணி கொஞ்சம் அதிகம் னு சொன்னார். நாங்களும் அந்த அழகை மொபைல் ல போட்டோ வீடியோ வா பதிவு பண்ணிக்கிட்டோம்.
நாங்க அதை கடந்து போகுற பாதையில் நிறைய மயில்கள் உலவிட்டு இருந்துச்சி.
பஸ் அங்க இருந்து கிளம்பி போக... நான் போய் டிரைவர் பக்கத்துல உட்கார்ந்துட்டு... எனக்கு அந்த காட்டை பத்தி இருக்க எல்லா கேள்விகளுக்கும் பதில் கேட்டுகிட்டு... திருநெல்வேலி போக எப்போ பஸ் னு வரைக்கும் விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அப்போ கண்டக்டர் சொன்னார்... படிக்கட்டு போய் நின்னுக்கோ டா தம்பி... நல்ல போட்டோ ஸ் வீடியோ ஸ் எடுக்கலாம் னு சொன்னார். நானும் அங்க போய் நின்னுக்கிட்டு எல்லாத்தையும் என் மொபைல் ல பதிவு பண்ணிக்கிட்டேன். அப்போ மாஞ்சோலை டீ எஸ்டேட் ல தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்... அந்த பனி மூடிய காலை பொழுதுல தேயிலை பறிச்சிட்டு இருந்தத பஸ் ல இருந்து பார்க்க ரொம்பவே அழகாகவும் மற்றும் அப்படியே பாலாவின் பரதேசி படத்துல வந்த க்ரேக்டர்ஸ் அ அப்படியே பார்க்குற பீல். அந்த காலத்தில் கீழே இருந்து பிழைப்புக்காக மேலே அகதியா வந்தவங்களோட வம்சவழிகளா... இப்பவும் அவங்க வேலை செய்யுறங்க அந்த பாம்பே பர்மா டிரேடிங் கப்பெனி டீ எஸ்டேட் ல.
அப்படியே பஸ் நாலூமுக்கு எஸ்டேட் அ போய் சேர்ந்துச்சி. இந்த நாலூமுக்கு தா அந்த காட்டுல இருக்க முக்கியமான ஜங்கஷன். அங்க இருந்து ஒரு பக்கம் மின்த்துறையின் கட்டுப்பாட்டுல இருக்க... மேல் கோதையாறு அணைக்கு போற ரூட் ம்... மறுபக்கம் ஊத்து மற்றும் குதிரைவெட்டி எஸ்டேட் போற ரூட் னு... இரு வேறு சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் பாதைகள் இருந்துச்சி. நாம போன பஸ் நாலூமுக்குல இருந்து கிளம்பி... சிறிது நேர பயணத்துல ஊத்து எஸ்டேட் அடைந்துச்சி. அந்த சின்ன ஊர் தா லாஸ்ட் ஸ்டாப். அந்த அழகான குட்டி ஊர நாங்க அடைந்த அப்போ டைம் மதியம் 12.10 .
ஊத்து கிராமத்தை அடைந்ததும்...நேரா அந்த ஹோட்டல் க்கு போய் காபி ஆர்டர் பண்ணி... அதுல மில்க் பிஸ்கேட் அ முக்கி சாப்பிட்டு... எங்க பசிய தீர்த்துகிட்டோம். லைட் ஆ பசி அடங்கிச்சி. சரி... இன்னும் டூ அவர்ஸ் இருக்கு... அது வரைக்கும் அந்த சின்ன ஹம்லெட் அ சுத்தி பார்க்கலாம் னு... நானும் என் நண்பர்களும் சுத்தி பார்க்க கிளம்பி போனோம்... எங்க பேக் எல்லாத்தையும் அந்த கடையிலயே வெச்சிட்டு.
அப்போ ஒரு கொய்யா மரத்துல... நிறைய பழங்கள் காய்த்து இருந்துச்சி... நாங்க போய் எங்க ஆசை தீர அந்த மரத்தில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டுட்டு நடந்து போனோம்.
போகிற பாதையில் இருக்குற தேயிலை தோட்டங்களுக்கு சென்று... வித விதமா போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கிட்டோம். அப்போ அங்க ஒரு டீ பேக்டரி இருந்துச்சி.
அதுக்குள்ள போய் பார்க்கலாம் னு அங்க போன... பர்மிசன் இல்லனு சொல்லிட்டாங்க. சரி நாம ரிட்டர்ன் நம்ம பஸ் ஏற வேண்டிய அந்த ஹோட்டல் பக்கம் போலாம் னு ரிட்டர்ன் வரும் போது செம மழை பெய்ய தொடங்கிச்சி.
சிறிது நேரம் அந்த பேக்டரி ல மழைக்கு ஒதுங்கிட்டு, மழை நின்னதும் நாங்க கிளம்பி ஊத்து கிராமத்தோட மையப்பகுதிக்கு போனோம்.
திருநெல்வேலிக்கு போற கடைசி பஸ் அதான். அந்த மாஞ்சோலை மலைக்காடுகள் ல இருந்து கீழே நிலப்பகுதியை அடைய... அந்த நாளின் கடைசி வாகனம் அது மட்டும் தான். அந்த பஸ் ல நானும் என் நண்பனும் மற்றும் சில பயணிகள் ஏறிகிட்டோம். ஊத்து கிராமத்துல இருக்க கடைக்கு அந்த பஸ் ல தா... காய்கறி முட்டை மற்றும் மளிகை பொருட்கள் வந்து இறங்கிச்சி. ஊத்து ல இருந்து நாலூமுக்கு வழியா அந்த பஸ்... மேல் கோதையார் அணை வரைக்கும் போய்ட்டு... அப்புறம் மீண்டும் நாலூமுக்கு வந்து... அங்க இருந்து மாஞ்சோலை வழியா மலையில இருந்து கீழே இறங்குறது னு பஸ் பயணம் போற ரூட். பஸ் அ ஊத்துல ஸ்டாட் பண்ணதும்... டிரைவர், கண்டக்டர் சொன்னாங்க... இன்னைக்கு என்னலா மிருகம் குறுக்க வரும் னு தெரியாது... நம்ம லக் என்னன்னு பார்ப்போம் னு சொல்லிட்டு... பஸ் அந்த இருள் சூழ்ந்த இரவில் கரடுமுரடான பாதையில்... வேகமாக கோதையாறு அணை நோக்கி போச்சி பஸ். போற வழியில ஒரு குக்கிராமத்தில் பஸ் சிறிது நேரம் நின்னுச்சி. என்னடா னு... இறங்கி பார்த்தா... பஸ் மேலே இருந்து கோழிகள் ல இறக்கிட்டு இருந்தாங்க. ஆல் ரெடி சொன்னது போலவே... ஆடு கோழி லாம் கூட இந்த அரசு பஸ் ல தான்... மலை மேலே இருக்க சின்ன சின்ன குக்கிராமங்களுக்கு கொண்டு வரப்படுதாம்.
இப்படியான ஆர்வத்தை தூண்டும் அறிமுகத்துடனே மாஞ்சோலை பற்றி நான் படித்த கட்டுரையின் தொடக்கம் அமைந்து இருந்தது. என்னடா...ரொம்ப தா பில்டப் கொடுக்குறாங்க இந்த ஊருக்கு னு யோசிச்சிட்டு இருக்கும் போதே...எப்படியும் கூடிய சீக்கிரம் மாஞ்சோலை போய்ட்டு வந்துடணும் னு முடிவு பண்ணிட்டேன்.
“Don't listen to what they say, go see”
~ Chinese Proverb.
நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்து கொண்டு இருந்த பொழுது தான் அந்த ஊரின் பெயரை... முதன்முதலில் என் கல்லூரி சீனியர்ஸ் சொல்லி கேள்விப்பட்டேன். அவர்கள் அந்த சொர்க்கத்திற்கு சென்று வந்த கதையை... என்னிடம் சொன்ன பொழுதே அங்கே செல்ல வேண்டும் என்ற ஆசை என்னுள் முளைத்தது... ஆனால் அதை நிறைவேற்றியே ஆகணும் னு முடிவு பண்ணது... மேலே இருக்க வாக்கியங்களை அந்த கட்டுரையில் படித்த பின்பு தான்.
மாஞ்சோலை - தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம். மற்ற மலை வாசஸ்தலங்களுக்கு சென்று வருவதை போல் எல்லாம்... யாராலும் எளிதில் சென்று வர கூடிய ஊர் அது அல்ல. காரணம் அது அமைந்துள்ள நிலப்பகுதி அப்படி. அது யுனஸ்கோ வால் அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்படவேண்டிய வன உயிர் காப்பகமாக அரசால் அறிவிக்கப்பட்ட... மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டாந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குள் வரும் ஊர்.
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் காட்டுப்பகுதியை... சிங்கம்பட்டி ஜமீன் க்கு நன்றிகடனாக எழுதி கொடுத்தார். பின்பு கால சூழ்நிலைகளால் சுதந்திரத்துக்கு முன்பு... அந்த காட்டை பாம்பே பர்மா டிரேடிங் கப்பெனிக்கு 99 வருட குத்தகைக்கு அந்த பரிசாக பெற்ற காட்டின் சில பகுதிகளை கொடுத்தனர் சிங்கப்பட்டி ஜமீன். அந்த மலைப்பகுதிகளை தேயிலை பயிர்கள் கொண்டு மிகப்பெரிய தேயிலை தோட்டங்களாக உருவாக்கி... தேயிலை உற்பத்தி செய்து வருகிறார்கள் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி. தென்தமிழகத்தில் தாமிரபரணி மாஞ்சோலை தொழிலாளர் படுகொலையை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த படுகொலைக்கு சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட மலையே மாஞ்சோலை.
சரி ! மாஞ்சோலை பத்தி கொடுத்த இன்ரோ பில்டப் ல போதும் டா... நீ போய்ட்டு வந்த கதைய சொல்லு னு ... நீங்க நினைக்குறத உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு புரியுது. நான் சொர்க்கத்தின் கீற்றாக அமைந்த... மாஞ்சோலைக்கு பயணப்பட்டு போய் வந்த கதையை இப்போ சொல்றேன்.
2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ... இந்த ஆண்டில் செல்ல வேண்டிய ஊர்களின் பட்டியலை மனதில் நினைத்து வைத்து இருந்தேன். அதில் முதன்மையானது மாஞ்சோலை. ஆனால் நவம்பர் மாதம் வந்தே விட்டது... போய் வந்த பாடில்லை...எப்படியாவது இந்த செமஸ்டர் லீவுல மாஞ்சோலை போய்ட்டு வந்துடணும் னு டிசைட் பண்ணி ப்ளான் பண்ணேன். தனியா போய் கொஞ்சம் போர் அடிச்சாதலயும்... அப்புறம் நிறைய தம்பிமார்கள் என்னையும் உங்ககூட டிரிப் க்கு கூட்டிட்டு போங்கனு... நான் போற எல்லா டிரிப் அப்போ வும் சொன்னதால... ஆல்ரெடி நம்மக்கிட்ட சொன்ன பல தம்பிகள் ல இருந்து ரெண்டு பேர்க்கிட்ட... இந்த டிரிப் பத்தி சொல்லி போலாம் னு டிசைட் பண்ணிட்டேன்.
நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு வியாழன் மதியம். திருநெல்வேலி சென்று அங்கு இருந்து தான் மாஞ்சோலை செல்ல முடியும் . திருநெல்வேலி யில இருந்து அதிகாலையில ஒரு நேரடி பஸ் இருக்குனு எப்பவோ யாரோ சொல்லி கேள்விப்பட்ட ஞாபகம். எனவே மதுரை வழியா திருநெல்வேலி போக முடிவு பண்ணி... மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் நானும் தம்பி ப்ரதீப் பும் தாம்பரத்திலும்... தம்பி முகிலன் விழுப்புரத்திலும்... டிரையின் ல ஏறி மதுரை க்கு போனோம். தூங்கா நகரத்தை சென்றடைந்த போது மணி நைட் 9 .
மதுரையை நாங்க நெருங்கி கொண்டு இருந்த அப்போ... ஒரு சக பயணிக்கிட்ட நாங்க மதுரையில எங்க டேஸ்டான ஜிகர்தண்டா கிடைக்கும் னு கேட்டோம். என்னா...மதுரையில இருந்து திருநெல்வேலி போக எங்களுக்கு நைட் 11.30 க்கு தா நெக்ஸ்ட் டிரையின். அப்போ அவர் எங்களுக்கு ஒரிஜினல் ஜிகர்தண்டா கிடைக்கும் அட்ரஸ் சொல்லிட்டு... இந்த கால பசங்க லாம் டாஸ்மாக் தேடி போற காலத்துல... ஜிகர்தண்டா தேடி போற பசங்கல பார்க்கும் போது பெருமை யா இருக்குனு சொன்னார்.
மதுரை ரயில் நிலையத்தில் இறங்கி விளக்குத்தூண் பக்கத்துல இருக்க ஒரிஜினல் பேமஸ் ஜிகர்தண்டா குடிக்க ஒன்றரை கி.மீ நடந்து போனோம்.
அப்படியே ஜிகர்தண்டா வ வாங்கி பருகிட்டு , பக்கத்துல இருக்க கடையில் எண்ணெயில் தீக்குளிச்ச மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா சாப்பிட்டுட்டு... ரயில் பிடிக்க மீண்டும் ஸ்டேஷன் நோக்கி போனோம்.
அப்போ வாட்ஸ்சப் ல நம்ம கல்லூரி நண்பர்கள் ஹட்சன் செல்சன் ப்ரோஸ், பெரியார் பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்க... ரொம்ப பேமஸ் ஆன ரோஸ் மில்க் அ மிஸ் பண்ணாம குடிங்க னு சொன்னாங்க. சரி! அதையும் சுவைக்கலாம் னு... அங்க போய் ஒரு க்ளாஸ் வாங்கி பருகி சுவைத்தேன்.
அப்புறம் கன்னியாகுமரி போற ராமேஸ்வரத்துல இருந்து வர டிரையின் க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்... எப்பவுமே எனக்கு பிடிச்ச மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் .
அப்படியே ஜிகர்தண்டா வ வாங்கி பருகிட்டு , பக்கத்துல இருக்க கடையில் எண்ணெயில் தீக்குளிச்ச மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா சாப்பிட்டுட்டு... ரயில் பிடிக்க மீண்டும் ஸ்டேஷன் நோக்கி போனோம்.
அப்போ வாட்ஸ்சப் ல நம்ம கல்லூரி நண்பர்கள் ஹட்சன் செல்சன் ப்ரோஸ், பெரியார் பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்க... ரொம்ப பேமஸ் ஆன ரோஸ் மில்க் அ மிஸ் பண்ணாம குடிங்க னு சொன்னாங்க. சரி! அதையும் சுவைக்கலாம் னு... அங்க போய் ஒரு க்ளாஸ் வாங்கி பருகி சுவைத்தேன்.
அப்புறம் கன்னியாகுமரி போற ராமேஸ்வரத்துல இருந்து வர டிரையின் க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்... எப்பவுமே எனக்கு பிடிச்ச மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் .
திருநெல்வேலி யில போய் இறங்க மூன்று மணி நேரம் ஆகும் னு... டிரையின் வந்ததும் அன்ரிசவ்டு பெட்டியில ஏறி ஒரு இருக்கையில நான் படுத்துக்கிட்டேன். மதுரையில இருந்து அரை மணி நேரம் கால தாமதமாக கிளம்பி... நெல்லை சந்திப்பை அதிகாலை 2.45 க்கு போய் ரிச் ஆச்சு ரயில். மாஞ்சோலை போற ஏர்லி மார்னிங் பஸ் அ பிடிக்க டிரை பண்ணலாம் னு... ரயில் நிலையத்தில் இருந்து ஊருக்கு வெளிய இருக்க புது பஸ் ஸ்டாப் க்கு டவுன் பஸ் ல ஏறி போனோம். அந்த பஸ் கண்டக்டர் கிட்ட கொஞ்சம் டிப்ஸ் ஐடியாஸ் கேட்டுக்கிட்டோம்.
திருநெல்வேலி புது பஸ் ஸ்டாப் போய் அங்க இருக்க ஒரு டீக்கடையில் டீ குடிச்சிட்டே... மாஞ்சோலை போற பஸ் வருமா னு கேட்கும் போது... பஸ் போய்டுச்சி னு ஒருத்தரும்... பஸ் போகல னு ஒருத்தர் னு முரண்பாடா சொல்ல... யார் சொல்றத நம்புறதுனு புரியாம... பாபநாசம் போற பஸ் ல ஏறிட்டோம். ஏன்னா ? கல்லிடைக்குறிச்சி ல போய் ஒரு வேளை பஸ் அ அங்க இருந்து பிடிச்சிடலாம் னு அங்க போய் இறங்கினோம். மணி ஒரு நாலு இருக்கும். கல்லிடைக்குறிச்சி பஸ் ஸ்டாப் ல வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது... அங்க பாதுகாப்பு பணியில இருந்த ரெண்டு பெண் போலீஸ் அக்கா எங்க போக வெயிட் பண்றீங்க னு கேட்டாக. நாங்க மாஞ்சோலை னு சொல்ல... அவுக சொன்னாங்க பஸ் கிளம்பி போய்ச்சி தம்பி. அதுவும் இன்னைக்கு ரொம்ப காலி போனதா சொன்னாங்க. எங்களை பத்தி முழுசா கேட்கிட்டு... அந்த அக்காஸ் மாஞ்சோலை பத்தியும்... அங்க போறது எவ்வளவு கஷ்டம் னு சொல்லிட்டு , அங்க பல டைம் போற வழியில யானை, கரடி, காட்டெருமை யின் குறுக்கீடு கள் இருக்கும் னு சொன்னாங்க. இதலா கேட்டுட்டு நம்ம கூட வந்தவங்க... இன்னும் ஆர்வம் ஆயிட்டாங்க. ஏன்னா அந்த பசங்க ளுக்கு நாங்க போற இடம் பத்தி எதுவுமே தெரியாது. எல்லாமே என்ன மட்டுமே நம்பி... என் கூட பயணப்பட்டு வந்தாங்க. அப்புறம் அந்த அக்காஸ் புது ஐடியா ஒன்னு சொன்னாங்க. அடுத்த பஸ் காலையில 8.45 க்கு தான் கல்லிடைக்கு வரும். நீங்க அதுக்கு முன்னாடி... பாபநாசம் போய் தாமிரபரணி ஆத்துல குளிச்சிட்டு வந்துருங்க... ஆனா சேப்டியா போய்ட்டு வாங்க னு புது ஐடியா கொடுத்தாங்க. சரி னு நாங்களும் அந்த போலீஸ் அக்காஸ் க்கு நன்றி அ சொல்லிட்டு... பாபநாசம் போற டவுன் பஸ் ஏறி பாபநாசம் போனோம். அங்க ஆல்ரெடி மகா புஷ்கரணி ல குளிச்ச அனுபவம் இருந்ததால எனக்கு பாபநாசம் புதுசு இல்ல.
அதிகாலை 5.30 மணிக்கு... பாபநாசம் ல இருக்க தாமிரபரணி ஆற்றுல குளிக்கலாம் னு நண்பர்கள் கூட ஆற்றை ஒட்டியே நடந்து போய்... அந்த அழகான ஸ்பாட் அ கண்டுபிடிச்சோம். அந்த ஊர் ஆளுங்க மட்டுமே குளிக்குற இடம். அந்த தலையணை யில குளிச்சி மார்னிங் ரிஃபெரஷ் பண்ணிக்கிட்டோம்.
குறிப்பு : இது தடை செய்யப்பட்ட ஆபத்தான தலையணை. இந்த தலையணையில் குளிப்பது சட்டவிரோதம். தயவு செய்து முயற்சி செய்யாதீர்கள். இது எங்களுக்கு பின்னரே தெரிய வந்தது.
அப்புறம் அங்க இருந்து அப்படியே நடந்து போய்... பாபநாசநாதர் கோயில் க்கு போய் தரிசனம் பண்ணிட்டு... பாபநாசம் பஸ் டிப்போ பக்கத்துல இருக்க நாஸ்டா கடையில காலை பிரேக்பாஸ்ட் அ சாப்பிட்டு முடிச்சோம்.
காலை 8.10 க்கு பாபநாசம் டிப்போ ல இருந்து மாஞ்சோலை க்கு மேலே இருக்க ஊத்து தேயிலை எஸ்டேட் வரைக்கும் போற பஸ் ல ஏறிக்கிட்டோம்.
இந்த பஸ் தா... அந்த மலைக்கு போற ரெண்டாவது பஸ். பஸ் ஏறின உடனே கொஞ்ச நேரத்துல அசந்து தூங்கிடேன். கல்லிடைக்குறிச்சி தாண்டி பஸ் போகும் போது முழிப்பு வந்து எழுந்துட்டேன். அப்புறம் மணிமுத்தாறு நோக்கி பஸ் போய்ட்டு இருந்துச்சி. அந்த ஊர கடந்து போறத்துக்கு முன்னாடி... ஒரு இடத்துல பஸ் ரொம்ப நேரமா நின்னுச்சி... என்னன்னு பார்த்தா... பஸ் ல மலை மேல இருக்க போஸ்ட் ஆபீஸ்க்கு... நேம் போர்ட்ஸ பஸ் ல ஏத்துனாங்க. ஏன்... இத இங்க சொல்றேன்னா... அந்த மலை ஊர்களுக்கு லோடு ஏத்திட்டு போற லோடு வேவிகல் அந்த கவர்மண்ட் பஸ் தா. மற்ற வாகனங்கள் காட்டுக்குள்ள நோ என்ட்ரி. அப்புறமா பஸ் மணிமுத்தாறு டேம் கடந்து வனக்காவல் சோதனைச்சாவடி ல போய் நின்னுச்சி. அப்புறமா அங்க இருந்து பஸ் தன்னோட காட்டு வழி பயணத்தை தொடங்கிச்சி இனிதே.
மணிமுத்தாறு அணையின் கரையோரமாக... அந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பஸ் போற அளவு இருக்க ரோட்ல... டிரைவர் பஸ் அ அசால்ட்டா ஓட்டிட்டு போறார். ரோடு நீங்க நினைக்குற மாறி தார் ரோடு இல்லங்க... ஜல்லி கொட்டி வச்சி இப்ப மீண்டும் பழைய ரோடு மேலே ரோடு வோர்க் நடக்குது. பைக் கார் ல போன பஞ்சர் ஆகுறத்துக்கு கூட சான்ஸ் இருக்கு... அப்படி கரடுமுரடான ரோடு. அணையை தாண்டி போய் ஒரு அஞ்சு நிமிடத்துல அந்த இடம் வந்துச்சி.
பஸ் டிரைவர் அருவிய கடக்குற இடத்துல பஸ் அ கொஞ்ச நேரம் நிறுத்தி... இன்னைக்கு அருவில தண்ணி கொஞ்சம் அதிகம் னு சொன்னார். நாங்களும் அந்த அழகை மொபைல் ல போட்டோ வீடியோ வா பதிவு பண்ணிக்கிட்டோம்.
நாங்க அதை கடந்து போகுற பாதையில் நிறைய மயில்கள் உலவிட்டு இருந்துச்சி.
பேருந்து போகுற பாதை இருக்க கண்டிசனுக்கும்... டிரைவர் ஓட்டுற வேகத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாறி... அந்த காட்டுல அந்த அனுபவமான டிரைவர் பஸ் அ ஒட்டுறத பாக்கவே த்ரிலிங்க இருந்துச்சி. பஸ் ஒரு வழியே மாஞ்சோலை எஸ்டேட் நுழைவாயில் அ கடந்துச்சி.
காலையில 10.50 க்கு மாஞ்சோலை டீ எஸ்டேட் போய் பஸ் ரீச் ஆனாதும்... அங்க ஒரு பத்து நிமிசம் ப்ரேக். அதுக்குள்ள அங்க மட்டுமே இருக்க ஒரு டீ கடையில மாஞ்சோலை ஸ்பெஷல் டீ அண்டு வடை சாப்பிட்டு... எங்க பயணத்தின் அடுத்த கட்டத்துக்கு போக வெயிட் பண்ணோம்.
பஸ் அங்க இருந்து கிளம்பி போக... நான் போய் டிரைவர் பக்கத்துல உட்கார்ந்துட்டு... எனக்கு அந்த காட்டை பத்தி இருக்க எல்லா கேள்விகளுக்கும் பதில் கேட்டுகிட்டு... திருநெல்வேலி போக எப்போ பஸ் னு வரைக்கும் விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அப்போ கண்டக்டர் சொன்னார்... படிக்கட்டு போய் நின்னுக்கோ டா தம்பி... நல்ல போட்டோ ஸ் வீடியோ ஸ் எடுக்கலாம் னு சொன்னார். நானும் அங்க போய் நின்னுக்கிட்டு எல்லாத்தையும் என் மொபைல் ல பதிவு பண்ணிக்கிட்டேன். அப்போ மாஞ்சோலை டீ எஸ்டேட் ல தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்... அந்த பனி மூடிய காலை பொழுதுல தேயிலை பறிச்சிட்டு இருந்தத பஸ் ல இருந்து பார்க்க ரொம்பவே அழகாகவும் மற்றும் அப்படியே பாலாவின் பரதேசி படத்துல வந்த க்ரேக்டர்ஸ் அ அப்படியே பார்க்குற பீல். அந்த காலத்தில் கீழே இருந்து பிழைப்புக்காக மேலே அகதியா வந்தவங்களோட வம்சவழிகளா... இப்பவும் அவங்க வேலை செய்யுறங்க அந்த பாம்பே பர்மா டிரேடிங் கப்பெனி டீ எஸ்டேட் ல.
பஸ் காக்காச்சி எஸ்டேட் அ கடந்து போகையில் பெரிய புல்வெளி... அதான் கோல்ஃப் க்ரவுண்ட்... அதுல மேய்யுற மாடுகள்... அதனருகிலே பெரிய மாசுபடாத ஏரி னு... இயற்கையின் அழகு அப்படியே கொட்டி கெடந்துச்சி.
அந்த அழகை எல்லாம் பார்த்துட்டே... மாஞ்சோலை ல பேமஸ் ஆனா மரப்பலத்த பஸ் கடந்து போச்சு ... இப்போ அந்த பாலத்த இரும்புல ரினவேட் பண்ணிருக்காங்க...
அந்த அழகை எல்லாம் பார்த்துட்டே... மாஞ்சோலை ல பேமஸ் ஆனா மரப்பலத்த பஸ் கடந்து போச்சு ... இப்போ அந்த பாலத்த இரும்புல ரினவேட் பண்ணிருக்காங்க...
அப்படியே பஸ் நாலூமுக்கு எஸ்டேட் அ போய் சேர்ந்துச்சி. இந்த நாலூமுக்கு தா அந்த காட்டுல இருக்க முக்கியமான ஜங்கஷன். அங்க இருந்து ஒரு பக்கம் மின்த்துறையின் கட்டுப்பாட்டுல இருக்க... மேல் கோதையாறு அணைக்கு போற ரூட் ம்... மறுபக்கம் ஊத்து மற்றும் குதிரைவெட்டி எஸ்டேட் போற ரூட் னு... இரு வேறு சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் பாதைகள் இருந்துச்சி. நாம போன பஸ் நாலூமுக்குல இருந்து கிளம்பி... சிறிது நேர பயணத்துல ஊத்து எஸ்டேட் அடைந்துச்சி. அந்த சின்ன ஊர் தா லாஸ்ட் ஸ்டாப். அந்த அழகான குட்டி ஊர நாங்க அடைந்த அப்போ டைம் மதியம் 12.10 .
பஸ் ல வரும் போதே டிரைவர் அண்ணா சொன்னார் ...காட்டுல அப்படியே நடந்து போய்ட்டு வாங்க டா ... ஆனா சேப்டி முக்கியம் னு அட்வைஸ் பண்ணார். நான் ப்ளான் பண்ணது குதிரைவெட்டி போகணும் னு. ஏன்னா... அங்க இருக்க வியூ பாயிண்ட் தா... அங்க ஸ்பெஷல் னு படிச்சதால அங்க எப்படியாவது போகனும் னு முடிவு பண்ணி வச்சிருந்தேன். ஆனா அது நாங்க இறங்குன இடமான ஊத்துல இருந்து அஞ்சு கி.மீ காட்டுக்குள்ள... கைவிடப்பட்ட பாதையில நடந்து போனாத்தா அங்க போக முடியும். அங்க போக பர்மிசன் கிடையாது னு வேற சொன்னாங்க. கொஞ்ச வருஷக்கு முன்னாடி வரைக்கும்... அங்க இருந்த எஸ்டேட் ல ஆளுங்க தங்கி இருந்த அப்போ... அங்க போக தடை எதுவும் இல்லையாம். ஆனா எஸ்டேட் கம்பெனி... அங்க இருந்தவங்கள ஊத்து எஸ்டேட்க்கு இடம் மாற்றம் பண்ணத்துக்கு அப்புறம்... அங்க போக யாருக்கும் மோஸ்ட்லி பர்மிசன் இல்லையாம். முக்கியமான ஆளுங்க, பாரஸ்ட் இலாகா ஆளுங்க மூலமா வர ஆளுங்க மட்டுமே... அங்க கார்ல போக முடியும் னு அங்க இருந்தவங்க சொன்னாங்க. பஸ் ல இருந்து இறங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தோம்.
ஊத்து எஸ்டேட் ல நாம நினைச்ச நேரத்துக்குலாம் சாப்பாடு கிடைக்காது. அங்க ஒரு ஓட்டல் தா இருந்துச்சி... அங்கயே நாம முன்னாடியே சொன்னாதா சாப்பாடு செஞ்சு குடுப்பாங்க ...அதனால முன்னாடியே சொல்லிடுங்க சாப்பாடு க்கு னு டிரைவர் சொன்னார். ஆனா எங்களுக்கு பசிக்கல.. சோ நாங்க ஆர்டர் பண்ணாமலே குதிரைவெட்டி போலாம் னு முடிவு பண்ணிட்டோம்.
குதிரைவெட்டி நோக்கி எங்கள் காட்டுவழி நடைப்பயணம் தொடங்கிச்சி. நானும் என் நண்பர்களும் அந்த வழியிலே வேகமாக நடந்து போகையில்... அந்த மண்ணில் பல ஆண்டுகள் தேயிலை தொழிலாளியாக தன் வாழ்நாளை வாழ்ந்த ஒரு பாட்டி... எந்த ஊர்காரங்க டா நீங்க ? இவ்வளவு வேகமா எங்கடா போறீங்க னு கேட்டாங்க?... நாங்க சென்னையில இருந்து வரோம்... இப்போ குதிரைவெட்டி போறோம் னு சொன்னதும்... அந்த பாட்டி சொன்னாங்க...அது சரி காட்டுக்குள்ள பார்த்து போங்க டா... கையில கம்பு ஒன்னு இருக்கட்டும்... காட்டு பாதையில மிருகம் ல வரும்... அட்டைங்க அதிகம் னு டிரக்கிங் ரூட் டிப்ஸ் சொன்னாங்க. சரி நாங்க போற பாதையிலேயே ஒரு கம்பு ரெடி பண்ணோம். அந்த பாதையின் ஒரு பக்கத்தில் ஒரு தெளிவான மாசு ஏற்படாத சிறிய நீர்த்தேக்கம்... மலையில் இருந்து வரும் ஊத்து தண்ணியால நிறைந்து சிறிய ஓடையாக வழிந்து ஓடிச்சி. அதான் ஊர் பேர் ஊத்து போல. அந்த நீர் தான் அந்த சிற்றூரின் நீராதாரம்.
நாங்க போகும் பாதை எங்கும் பசுமை படர்ந்திருக்க... சடன்னா மழை பெய்ய ஸ்டாட் ஆச்சு. மழையில் நனைந்தபடியே எங்கள் பாதையின் லேப்ஃட் சைடுல... அடர்ந்த காடும் அதில் இருந்து வழியும் நீரோடைகளும்... ரைட் சைட்ல பச்சைப்பசேல் னு தேயிலை தோட்டங்கள் னு... யாரும் இல்லாத அந்த பாதை டிராவல் லவ்வர்ஸ் க்கு ஒரு போதையை ஏற்படுத்தும் என்பதில்லை மாற்று கருத்து இல்லை.
எங்களின் பயணத்தின் நடுவில் கால்களில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகளின் தொல்லையும்... அது கால்களில் ஏற்படுத்திய ரத்தக்காயங்களும் சொல்லி அடங்காத ரணங்கள். ஒரு கப் சுவையான தேநீர் நாம் பருக... அந்த தேயிலை காடுகளில் அந்த தேயிலை தோட்டங்களே கதியேனு வாழும் தொழிலாளர்கள்... அனுபவிக்கும் கஷ்டங்களில் நாங்கள் எதிர்க்கொண்ட அட்டையின் தாக்கங்கள் சிறு சாம்பிள் தான் போல. ’தேயிலையும் மரமாகும் அதை வளர்ப்பதில்லை; உயரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ என்ற வைரமுத்துவின் வரிகள் நிதர்சனமான வரிகள். குதிரைவெட்டி ஒரு வியூ பாயிண்ட் என்பதால்... எப்படா ஒரு ஓப்பன் ஸ்பேஸ் உடன் கூடிய பள்ளத்தாக்கு வரும் னு நடந்து போயிட்டே இருந்தோம். அப்போதா எங்கள் பாதையில் எதிர்பாராத விதமா அந்த அழகிய பார்த்தோம். மழை மீது இருந்து மென்மையாக... கீழ் நோக்கி ஓடி வரும் நீர்வீழ்ச்சியின் அழகு... கொட்டும் மழையிலும் நம்மை சிறிது நேரம் அங்க நின்று ரசிக்க தோன்றியது.
பின்பு நடந்து நடந்து கால்கள் வலியை தர... ஒருவழியாக நாங்கள் பரந்து விரிந்த அந்த குதிரைவெட்டி என்னும் குக்கிராமத்தை அடைந்தோம். அப்போ மணி மதியம் 1.15
பின்பு நடந்து நடந்து கால்கள் வலியை தர... ஒருவழியாக நாங்கள் பரந்து விரிந்த அந்த குதிரைவெட்டி என்னும் குக்கிராமத்தை அடைந்தோம். அப்போ மணி மதியம் 1.15
ஒரு காலத்தில் குதிரைகளை இங்கே கட்டி வைத்து வளர்த்து வந்தார்களாம். படை எடுத்த வந்த எதிரிகள்... குதிரைகளை வெட்டி கொன்றதால்... இந்த இடத்தின் பெயர் குதிரைக்கட்டி என்பது குதிரைவெட்டி ஆனதாக கதை சொன்னார்கள். அந்த பரந்த புல்வெளியில் ஒரு விருந்தினர் மாளிகை அண்மையில் திறக்கப்பட்டதும்... அதன் அருகே வனக்காவலர்களின் தங்கும் முகாமும் இருந்தது. அதற்கு நேரெதிரே இருந்த கைவிடப்பட்ட குடியிருப்பு பகுதியில்... மரங்களை வெட்டும் பணிகள் நடந்து கொண்டு இருந்துச்சி. தொலைவில் ஒரு வியூ பாயிண்ட் அமைக்கப்பட்டு இருந்துச்சி. அங்க போகலாம் னு யோசிக்கும் போது... எதுக்கும் அந்த ஆபீசர்க்கிட்ட போய் பர்மிசன் வாங்கிட்டு போவோம் னு... அவங்க இருக்க இடத்துக்கு போனோம். எங்கள பார்த்ததும்... எப்படி இங்க வந்தீங்க நீங்க? நடந்து இங்க வர பர்மிசன் இல்லனு சொன்னாங்க. நாங்க அந்த வியூ பாயிண்ட் போகணும் னு கேக்க... சரி போய் சீக்கிரம் பார்த்துட்டு வந்து... இங்க இருந்து கிளம்பிடுங்க னு சொன்னாங்க ஒரு அதிகாரி. அந்த அதிகாரி எங்க கூட பஸ் ல வந்தவர்.
நானும் என் நண்பர்களும் எங்களுக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு னு... சீக்கிரமா அந்த காட்சிமுனைக்கு போனோம். அங்க இருந்து 270 டிகிரி கோணத்துல... பரந்து விரிந்து கிடந்த களக்காடு முண்டந்துறை பாதுக்காக்கப்பட்ட புலிகள் காப்பகத்தை ரசிச்ச தருணம் அளப்பரியது. அந்த வியூ பாயிண்ட ல இருந்து பார்க்கையில்... காட்டுக்குள்ள தொலைவில் அழகிய நீர்வீழ்ச்சியும்... அதன் தொடர்ச்சியாக அது ஆறாக ஓடும் அழகும்... அது போய் சேரும் மணிமுத்தாறு அணையின் காட்சியும்... மறு பக்கம் காரையாறு அணையின் காட்சியும்... அந்த காட்சியை நம் கண் முன் கண்ணாமுச்சி ஆடுவது போல... பனி மறைத்து பின்பு நமக்கு அதைக்காட்டி விளையாடும் அந்த காட்சி கொள்ளை அழகு.
சிறிது நேரம் அந்த இடத்துல நேரத்தை கழித்து விட்டு... போட்டோ வீடியோஸ் ல எடுத்துட்டு அங்கிருந்து கிளம்பி... அந்த வனக்காவலர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு... அந்த இடத்தின் அருகில் இருந்த கொய்யாமரத்தில் இருந்து கொய்யா காய்களை பறித்து சாப்பிட்டு கொண்டே மீண்டும் ஊத்து எஸ்டேட் நோக்கி பயணப்பட்டோம். அப்போ டைம் மதியம் 2 மணி.
சிறிது நேரம் அந்த இடத்துல நேரத்தை கழித்து விட்டு... போட்டோ வீடியோஸ் ல எடுத்துட்டு அங்கிருந்து கிளம்பி... அந்த வனக்காவலர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு... அந்த இடத்தின் அருகில் இருந்த கொய்யாமரத்தில் இருந்து கொய்யா காய்களை பறித்து சாப்பிட்டு கொண்டே மீண்டும் ஊத்து எஸ்டேட் நோக்கி பயணப்பட்டோம். அப்போ டைம் மதியம் 2 மணி.
குறிப்பு : குதிரைவெட்டி எஸ்டேட்க்கு உரிய அனுமதி இல்லாமல் செல்வது சட்டவிரோதம். வனத்துறை அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்று அங்கு செல்வதே சிறந்தது. தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். எங்களுக்கு பின்னரே அங்கு செல்ல எப்படி அனுமதி வாங்குவது என தெரிந்தது.
மீண்டும் ஊத்து நோக்கி போகுற வழியில் பல இடங்களில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டு... பொறுமையா நடந்து போனோம். ஏன்னா... நெக்ஸ்ட் பஸ் ஈவ்னிங் 6.30 க்கு தா... ஊத்து ல இருந்து திருநெல்வேலிக்கு. நாங்க ரிடர்ன் வரும் போது மழை நின்னு இருந்துச்சி. வரும் வழியில் தேயிலை தோட்டம், நீர்விழ்ச்சி னு நல்ல போட்டோஸ் எடுத்துட்டு... மீண்டும் நாங்க காட்டை விட்டு வெளியே வந்த அப்போ டைம் மதியம் 3.30. ஊருக்குள்ள என்டர் ஆகுறத்துக்கு முன்னாடி... அப்படியே ரோட்டுல படுத்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு... தெளிந்த நீரோடையில ஓடுன நீர்ல பேஷ் வாஷ் பண்ணி எங்கள கொஞ்சம் ரிப்ஃபெரஷ் பண்ணிக்கிட்டோம்.
“GREAT THINGS NEVER CAME FROM COMFORT ZONES.” ~ ANONYMOUS
ஊத்து கிராமத்தை அடைந்ததும்...நேரா அந்த ஹோட்டல் க்கு போய் காபி ஆர்டர் பண்ணி... அதுல மில்க் பிஸ்கேட் அ முக்கி சாப்பிட்டு... எங்க பசிய தீர்த்துகிட்டோம். லைட் ஆ பசி அடங்கிச்சி. சரி... இன்னும் டூ அவர்ஸ் இருக்கு... அது வரைக்கும் அந்த சின்ன ஹம்லெட் அ சுத்தி பார்க்கலாம் னு... நானும் என் நண்பர்களும் சுத்தி பார்க்க கிளம்பி போனோம்... எங்க பேக் எல்லாத்தையும் அந்த கடையிலயே வெச்சிட்டு.
அப்போ ஒரு கொய்யா மரத்துல... நிறைய பழங்கள் காய்த்து இருந்துச்சி... நாங்க போய் எங்க ஆசை தீர அந்த மரத்தில் இருந்து பழங்களை பறித்து சாப்பிட்டுட்டு நடந்து போனோம்.
போகிற பாதையில் இருக்குற தேயிலை தோட்டங்களுக்கு சென்று... வித விதமா போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக்கிட்டோம். அப்போ அங்க ஒரு டீ பேக்டரி இருந்துச்சி.
அதுக்குள்ள போய் பார்க்கலாம் னு அங்க போன... பர்மிசன் இல்லனு சொல்லிட்டாங்க. சரி நாம ரிட்டர்ன் நம்ம பஸ் ஏற வேண்டிய அந்த ஹோட்டல் பக்கம் போலாம் னு ரிட்டர்ன் வரும் போது செம மழை பெய்ய தொடங்கிச்சி.
சிறிது நேரம் அந்த பேக்டரி ல மழைக்கு ஒதுங்கிட்டு, மழை நின்னதும் நாங்க கிளம்பி ஊத்து கிராமத்தோட மையப்பகுதிக்கு போனோம்.
செலீனா அக்கா. அந்த அக்கா வோட ஹோட்டல் தான் அது. ரொம்ப அன்பா பேசுனாங்க. அவங்க தா அந்த ஹோட்டல் ஓட குக் அன்ட் ஓனர் ஒய்ஃப். அவங்க கிட்ட நீங்க மிருகங்கள் ல பார்த்து இருக்கீங்களா... அப்படி னு கேட்டதும்... புலி, கரடி, யானை, மான், காட்டெருமை னு... எல்லாமே பார்த்து இருக்கேன்... சிங்கம் தவிர... ஏன்னா அது இங்க இல்லலனு... அவங்களோட மிருகங்கள பார்த்த அனுபவத்த நம்மக்கிட்ட சொன்னாங்க .கிராமத்தில் இருக்கவங்க எப்பவும் குணத்துலயும் பழகுறதுலயும் ரொம்பவே மென்மை ஆனாவங்க. குறிப்பா இது போன்ற மலைகள் ல இருக்கவங்க.
ஆல்ரெடி வால்பாறை டீ எஸ்டேட் ல இத மாறி நான் பீல் பண்ணிருக்கேன். பஸ் வர இன்னும் கொஞ்சம் டைம் இருக்குனு... சாப்பிட எதாவது கிடைக்குமா ? கேட்டேன். அவங்க சரி டா வெயிட் பண்ணு அப்படி னு சொல்லிட்டு. சாப்பாத்தி வித் சாம்பார் + ஒரு காபி ரெடி பண்ணி கொடுத்தாங்க.
சரி பசிக்குதே னு சாப்பிட்டுட்டு... அவங்க கிட்ட சாப்பிட்டத்துக்கு பில் கொடுத்துட்டு வெயிட் பண்ணிட்டு இருந்த அப்போ பஸ் வந்துச்சி. டைம் ஈவ்னிங் 6.30.
ஆல்ரெடி வால்பாறை டீ எஸ்டேட் ல இத மாறி நான் பீல் பண்ணிருக்கேன். பஸ் வர இன்னும் கொஞ்சம் டைம் இருக்குனு... சாப்பிட எதாவது கிடைக்குமா ? கேட்டேன். அவங்க சரி டா வெயிட் பண்ணு அப்படி னு சொல்லிட்டு. சாப்பாத்தி வித் சாம்பார் + ஒரு காபி ரெடி பண்ணி கொடுத்தாங்க.
சரி பசிக்குதே னு சாப்பிட்டுட்டு... அவங்க கிட்ட சாப்பிட்டத்துக்கு பில் கொடுத்துட்டு வெயிட் பண்ணிட்டு இருந்த அப்போ பஸ் வந்துச்சி. டைம் ஈவ்னிங் 6.30.
திருநெல்வேலிக்கு போற கடைசி பஸ் அதான். அந்த மாஞ்சோலை மலைக்காடுகள் ல இருந்து கீழே நிலப்பகுதியை அடைய... அந்த நாளின் கடைசி வாகனம் அது மட்டும் தான். அந்த பஸ் ல நானும் என் நண்பனும் மற்றும் சில பயணிகள் ஏறிகிட்டோம். ஊத்து கிராமத்துல இருக்க கடைக்கு அந்த பஸ் ல தா... காய்கறி முட்டை மற்றும் மளிகை பொருட்கள் வந்து இறங்கிச்சி. ஊத்து ல இருந்து நாலூமுக்கு வழியா அந்த பஸ்... மேல் கோதையார் அணை வரைக்கும் போய்ட்டு... அப்புறம் மீண்டும் நாலூமுக்கு வந்து... அங்க இருந்து மாஞ்சோலை வழியா மலையில இருந்து கீழே இறங்குறது னு பஸ் பயணம் போற ரூட். பஸ் அ ஊத்துல ஸ்டாட் பண்ணதும்... டிரைவர், கண்டக்டர் சொன்னாங்க... இன்னைக்கு என்னலா மிருகம் குறுக்க வரும் னு தெரியாது... நம்ம லக் என்னன்னு பார்ப்போம் னு சொல்லிட்டு... பஸ் அந்த இருள் சூழ்ந்த இரவில் கரடுமுரடான பாதையில்... வேகமாக கோதையாறு அணை நோக்கி போச்சி பஸ். போற வழியில ஒரு குக்கிராமத்தில் பஸ் சிறிது நேரம் நின்னுச்சி. என்னடா னு... இறங்கி பார்த்தா... பஸ் மேலே இருந்து கோழிகள் ல இறக்கிட்டு இருந்தாங்க. ஆல் ரெடி சொன்னது போலவே... ஆடு கோழி லாம் கூட இந்த அரசு பஸ் ல தான்... மலை மேலே இருக்க சின்ன சின்ன குக்கிராமங்களுக்கு கொண்டு வரப்படுதாம்.
காட்டுல பஸ் சடான்னா ப்ரேக் போட்டு ஒரு இடத்துல நிக்க... என்னனு முன்னாடி போய் பார்த்த... ஒரு பாம்பு அப்போ தா ரோட்டை க்ராஸ் பண்ணி போச்சி. அது போனதும்... பஸ் அந்த கோதையாறு போய் ரிடர்ன் வந்து... நாலூமுக்கு ல இருந்து மாஞ்சோலை போற வழியில செம மழை பெய்ய... அந்த மழைய பொருட்படுத்தாம... டிரைவர் வேகமாக... அந்த டீ எஸ்டேட் இருக்க மலைப்பாதை வளைவுல... பாதுகாப்புக்கு தடுப்புகள் இல்லாத சூழ்நிலையில கூட... அசால்டா பஸ் ஸ இயக்கியத பார்த்து மிரண்டு போய்ட்டேன். தமிழ்நாட்ல அடர்ந்த மலைக்காடுகள் ல... அதுவும் மோசமான ரோட்ல இப்படி ஒரு பஸ் அ இயக்குறாங்கனா... ஊட்டி வால்பாறை கொல்லிமலை ல விட ... "தக்" கான டிரைவர்ஸ் இந்த மாஞ்சோலை காடுகள் ல... பஸ் ஓட்டுற டிரைவர்ஸ் தான் னு என்னோட பஸ் பயண அனுபவத்துல சொல்றேன்.
மழை கொட்டோ கொட்டு னு பெய்ய... தேயிலை தோட்டங்களின் வளைவு ல திடீர் னு பஸ் நிக்க... பேருந்தின் முன்பக்க விளக்கோளியில... தூரத்துல கூட்டமாக காட்டு எருமைகள் தோட்டத்துல நடந்து போறத பார்த்தோம்.
அத பார்த்துட்டு அப்படியே போற வழியில.. மான் கூட்டத்தையும் பார்த்தோம். அப்படியே அரசு பேருந்து பயணம் ஜங்கிள் சவாரி பயணமா போச்சி. பின்பு பேருந்து கொட்டும் மழையில மாஞ்சோலை டீ எஸ்டேட் அ அடைந்துச்சி. அங்கே கொஞ்ச நேரம் நின்னுட்டு... சிலரை ஏற்றிக் கொண்டு பேருந்து கீழே நோக்கி சீறி பாய்ந்து இறங்கி போய்ச்சி. கடைசியா மாஞ்சோலை டீ எஸ்டேட் எக்ஸீட் கேட்கிட்ட... கேட் கீப்பர் பஸ்க்காக கேட் ட ஓப்பன் பண்ணும் போது... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தா இங்க கரடி ஒன்னு வந்துச்சி னு சொன்னார். நாங்க பேட் லக் அதை பார்க்கல. சில சமயங்களில் காட்டு பாதையில... யானைகள் பேருந்த மறிச்சி நின்னு... மீண்டும் பேருந்தை பின் நோக்கி இயக்கிய சம்பவங்களும்... அரிதாக புலிகளை பார்த்த சம்பவங்களும்... நடந்துச்சி னு அந்த மண்ணின் மைந்தர்கள் சொன்னாங்க. எப்படியோ மீண்டும் பஸ் மலையில இருந்து இறங்கி மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, அபாசமுத்திரம், சேரன்மாதேவி வழியா... நைட் 11 மணிக்கு நெல்லை சீமையை ரீச் ஆயிச்சு.
அத பார்த்துட்டு அப்படியே போற வழியில.. மான் கூட்டத்தையும் பார்த்தோம். அப்படியே அரசு பேருந்து பயணம் ஜங்கிள் சவாரி பயணமா போச்சி. பின்பு பேருந்து கொட்டும் மழையில மாஞ்சோலை டீ எஸ்டேட் அ அடைந்துச்சி. அங்கே கொஞ்ச நேரம் நின்னுட்டு... சிலரை ஏற்றிக் கொண்டு பேருந்து கீழே நோக்கி சீறி பாய்ந்து இறங்கி போய்ச்சி. கடைசியா மாஞ்சோலை டீ எஸ்டேட் எக்ஸீட் கேட்கிட்ட... கேட் கீப்பர் பஸ்க்காக கேட் ட ஓப்பன் பண்ணும் போது... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தா இங்க கரடி ஒன்னு வந்துச்சி னு சொன்னார். நாங்க பேட் லக் அதை பார்க்கல. சில சமயங்களில் காட்டு பாதையில... யானைகள் பேருந்த மறிச்சி நின்னு... மீண்டும் பேருந்தை பின் நோக்கி இயக்கிய சம்பவங்களும்... அரிதாக புலிகளை பார்த்த சம்பவங்களும்... நடந்துச்சி னு அந்த மண்ணின் மைந்தர்கள் சொன்னாங்க. எப்படியோ மீண்டும் பஸ் மலையில இருந்து இறங்கி மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, அபாசமுத்திரம், சேரன்மாதேவி வழியா... நைட் 11 மணிக்கு நெல்லை சீமையை ரீச் ஆயிச்சு.
“TRAVELING – IT LEAVES YOU SPEECHLESS, THEN TURNS YOU INTO A STORYTELLER.” – IBN BATTUTA
பல நாட்களா போகனும் னு ஆசைப்பட்டு... போகணும் னு நினைச்ச மாஞ்சோலை க்கு ஒருவழியா போய்ட்டு... மாஞ்சோலை யின் பசுமை போலவே பசுமையான மறக்க முடியாத நினைவுகளோட... அந்த மலைகள் ல இருந்து இறங்கி வந்தேன். அடுத்த முறை நான் கண்டிப்பாக மாஞ்சோலை காடுகளுக்கு போகும் போது... நான் தற்போது கண்ட காட்சிகள் அப்படியே இருக்குமானு தெரியாது. ஏன்னா... இன்னும் சில ஆண்டுகளில் மொத்த மலைகளும் அரசின் வனத்துறையின் முழு கட்டுபாட்டுக்குள் வர உள்ளது. அங்கே இருக்கும் தேயிலை தொழிலாளர்கள் அனைவரும்... மலையை விட்டு கீழே உள்ள நிலப்பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படவும் இருக்கிறார்கள் என்பதை... அங்கே நாம் கண்ட காட்சிகள் மற்றும் கேட்ட பேச்சுகள் மூலம் எளிதாக உணர முடிந்தது. நீங்களும் முடிந்த அளவு சீக்கிரம் மாஞ்சோலை யை போய் பார்த்துட்டு வந்துருங்க முடிந்த அளவு.
அரசு பேருந்து டைமிங்
திருநெல்வேலி டூ மாஞ்சோலை - ஊத்து - கோதையாறு - காலை 2 மணி, மதியம் 2 மணி, இரவு 7 மணி.
பாபநாசம் டூ மாஞ்சோலை - ஊத்து - கோதையாறு - காலை 8 மணி.
கல்லிடக்குறிச்சி தான் முக்கியமான பஸ் ஸ்டாப் மலை ஏறவதற்கு முன்பு.
கல்லிடைக்குறிச்சி ல எங்களுக்கு ஐடியா கொடுத்த போலீஸ் அக்காங்க... என்கிட்ட மாஞ்சோலை போய்ட்டு வந்து... எங்க அனுபவத்தை அவங்க கிட்ட ஷேர் பண்ணணும் னு சொன்னாங்க... ஆனா அதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கல.... அதனால அவங்களுக்கு இந்த ப்ளாக் ஆர்டிக்கள போஸ்ட் பண்ணிருக்கேன். வெயிடிங் பார் போலீஸ் அக்காஸ் ரிப்ளை.
பயணங்கள் முடிவதில்லை... ! தொடரும் ...!
“WHERE TO NEXT?”
இந்த ப்ளாக் ஆர்டிக்கள் ல... என்கிட்ட என்னை பார்க்கும் போது எல்லாம், என்னிடம் வாட்சப் மற்றும் இன்ஸ்டகிராம் ல சாட் பண்ணும் எல்லாம்... எப்போ ப்ரோ நெக்ஸ்ட் ப்ளாக் ரைட்அப் னு கேட்ட... அத்தனை என்னுடைய ப்ளாக் ரீடர்ஸ் நண்பர்களுக்கு டெடிக்கேட் பண்றேன்.
Naanum poiruken maanjolaikuh...epponah ...ippo thaan👆♥️keep going anna
ReplyDeleteSuper bro😍😍😍
ReplyDeleteஇது போன்ற பயணத்தை நீங்க தொடரனும்...அத இதே மாதிரி நீங்க சொல்லனும்...அத படிகர்த்து மூலமாக நாங்களும் பயணத்தில் ஒரு அங்கமாக மாற ஆசை படறேன்❤️❤️❤️...அண்ணா
ReplyDeleteNice write-up!!
ReplyDeleteSuper DA...👌
ReplyDelete��
ReplyDeleteஇதை படிக்கையில் நீங்கன் பயணம் செய்வதற்கென்றே பிறந்தார் போல் உள்ளது.உங்களின் இந்த பதிவினில் எழுதியிருந்தது போல் "Dont listen to what they say,go see" ஆனால் உங்கள் பதிவோ உடன் அமர்ந்து பயணம் செய்து கண்டுகழித்த உணர்வழிக்கிறது.What's Next அண்ணா??? ✌✌
ReplyDeleteNice da😎
ReplyDeleteHad a great journey with you anna.... Such a amazing feel on reading this blog 👌no words.. Just awesome Anna and keeping going 👍👍
ReplyDeleteமாஞ்சோலைக்கு உங்கள் எழுத்தின் மூலம் எங்களையும் அழைத்து சென்றதற்கு நன்றி சகோ.
ReplyDeleteBro romba azhaga ezhudhirukinga..unga koodaiye travel panna mathiri irundhuchu.. Traveling gives us more knowledge about the society, different kind of people, religion, lifestyle, food, language, Bio diversity and ofcourse nature..I am positive, this practice reaches you to the greater heights.. Keep do this..God bless ❤️
ReplyDeleteNeenga Vera level
ReplyDeleteUngala patha possisve ah iruku 😂😂😂😂😂😂😂😂
Go ahead....
Tempt to have a trip one like this Anna.... Great keep going and also give tips and suggestions for girls too....it will be helpful to those who like to explore
ReplyDeleteSemma naa😉
ReplyDeleteVirtual ah experience pana mari iruku bro....go ahead anna😊
ReplyDeleteVirtual ah experience pana mari iruku bro....go ahead anna😊
ReplyDelete