இரவு எட்டு மணி இருக்கும்... இரண்டு கம்பளி போர்வை போர்த்தி படுத்துட்டு இருக்கேன்... உடம்பு பூரா நெருப்பா கொதிக்குது... கடும் குளிர்ல... உடம்பு ஜூரம் வந்து நடுங்குது. நண்பர்கள் கொடுத்த மாத்திரையும்... சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டு... தூங்க ட்ரை பண்றேன்... ஆனா என்னால முடியல.
என்ன ஆச்சு எனக்கு? யார் காரணம்? எல்லாத்துக்கும் காரணம் அவ தான். முதல் தடவை அவள நான் பார்த்த அப்பவே... என் மனச அவக்கிட்ட பறிகொடுத்துட்டேன். அவள பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். அவள பார்க்கணும் னு மனசுல ரொம்ப ஆசை. எப்படியோ என் கல்லூரி சீனியர் அக்கா... அவள எனக்கு முதல் தடவ இன்ரோ குடுத்தாங்க. அப்போ அவ கொடுத்த வசீகரம் தா... என்ன மறுபடியும் அவள பார்க்கணும் னு தூண்டி... அவக்கிட்ட என்ன கொண்டு போச்சி. அவள பார்க்கணும் அப்படிங்குற காரணத்த வச்சிக்கிட்டு... அவள பார்க்க சென்னையில இருந்து ப்ரெண்ட்ஸ் கூட போனேன். அவ கேரளத்து பேரழகி. அவ அழகுல மதி மயங்காத ஆளே இல்ல.
போன வேளை முடிஞ்சி... அவளோட அழகுல நான் சொக்கி போய்... அவ எனக்கு கொடுத்த ஜிவ்வுனு ஏறுற ஈர முத்தத்துல தான்... நான் இப்போ ஜன்னி வந்தவன் மாறி... குளிர் ஜுரத்துல படுத்து இருக்கேன்.
அந்த அழகி பேரு...மூணாறு - கேரளா வுல இருக்க ஒரு மலைபிரதேசம். தேயிலை பயிர் சூழ்ந்த மலைகளும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூக்களும் இவளோட தனிச்சிறப்பு. ஆல்ரெடி இவள பத்தி நீங்க நிறைய கேள்விப்பட்டு இருப்பீங்க. சோ... நான் கதைக்குள்ள போயிடுறேன்.
பன்னிரெண்டு வருசத்துக்கு ஒருக்கா பூக்கும் குறிஞ்சிப்பூ வ பார்க்கணும் னு ரொம்ப நாள் ஆசை. எப்படி அந்த ஆசை வந்துச்சினா... நம்ப ஆர்யா மவுண்ட் அண்ட் டியூ விளம்பரத்துல... குறிஞ்ப்பூ பார்க்க மலை மேலே போவார்... அது மாறி இல்லனாலும் நம்ப மூணார் போய் பார்க்கலாம் னு... அந்த பூ பூக்குற அப்போ பார்க்கணும் னு இருந்தேன். குறிஞ்சிப்பூ 2018 ல மூணார் மலைகள் ல மறுபடியும் மலர போது அப்படினு... இன்டர்நெட் இன்ஃபோ மூலமா தெரிஞ்சிக்கிட்டு... எப்படியும் போய் பார்க்கணும் வழக்கம்போல முடிவு பண்ணேன். அப்போ தா கல்லூரி ஜூனியர் ஜாக்கின் அக்கா கல்யாணம்... அக்டோபர் மாசம் மூணார் ல நடக்குது னு வரச் சொல்லி இன்வைட் பண்ணான். குறிஞ்சிப்பூ ஜூலை மாச பூக்க ஸ்டாட் ஆகி... அக்டோபர் எண்ட் ல வாடிடும் னு இந்த இடைப்பட்ட காலத்துல பார்க்கணும் னு நினைக்க... அந்த கல்யாணமும் கரைக்ட்ட வர... மூணார் போற ப்ளான் முடிவு ஆச்சி. நான் கல்லூரி ஜூனியர்ஸ் கூட சென்னையில் இருந்து மூணார் க்கு தேனி வழியா கார்ல போனோம். கல்யாணம் ல நல்லபடியா முடிஞ்சதும்... நானும் ப்ரெண்ட்ஸ்ம் மூணார் ல இருக்க எனக்கு ரொம்பவும் பிடிச்ச டாப் ஸ்டேஷன் ரூட்ல ஒரு கார் டிரைவ் போய்... மூணார் அழக ரசிச்சிட்டு... நாங்க இருந்த ரூம் க்கு திரும்பும் போது தான்... எதிர்பாராத விதமா எனக்கு செம குளிர் ஜூரம் வந்துச்சி. ரூம்ல போய் மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டேன்.
மறுநாள் காலை 8 மணி. ஈவ்னிங் போடிநாயகனூர் ல நடக்குற ரிசப்ஷன் க்கு போகணும் அப்படிங்குறது மட்டும் தா ப்ளான். நம்மளால தான் வெளியூர்க்கு போன... சும்மா டைம் வேஸ்ட் பண்ண முடியாதே. சோ.... குறிஞ்சிப்பூ பாக்கலாம் னு அங்க இருந்தவங்க கிட்ட விசாரிக்கும் போது தான்... நமக்கு அந்த தகவல் சொன்னாங்க. கேரளா வ புரட்டிப்போட்ட கனமழையால மூணார் ல மலர்ந்த அத்தனை குறிஞ்சிப்பூவும் வாடி போய்ச்சிடுச்சி அப்படி னு சொன்னாங்க. ஆனா தமிழ்நாடு கேரளா பார்டர்ல இருக்க கொழுக்குமலையில மட்டும்... குறிஞ்சிப்பூ மலர்ந்து இருக்கு அப்படிங்குற விஷயத்த என்கிட்ட சொல்ல, இன்னும் 12 வருசம் வெயிட் பண்ணணுமே னு... அப்பவே குறிஞ்சிப்பூ பார்க்க முடிவு பண்ணேன். நம்ம நண்பர்கள் கிட்ட என்னோட ப்ளான் அ நான் சொல்ல... வழக்கம் போல நாங்க வரல... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் னு சொல்லிட்டாங்க. சரி போங்கடானு... நான் தனியா அந்த குறிஞ்சிப்பூ மலர்ந்து இருக்க மலையை பார்க்கலாம் னு கிளம்பிட்டேன் தன்னந்தனியாக.
கொழுக்குமலை டீ எஸ்டேட் - உலகத்திலேயே உயரமான இடத்துல அமைந்து இருக்க தேயிலை தோட்டம் இங்க தா. இங்க விளையுற தேயிலையின் டேஸ்ட் உலக அளவுல பேமஸ். இந்த எஸ்டேட் தமிழக அரசியலின் மிக பெரிய அரசியல் தலைவரின் மகளின் கணவருக்கு சொந்தமானது. இது தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
என் கூட இருந்த எல்லா தம்பிகளுக்கும் டாடா சொல்லிட்டு... மூணார் டவுன் நோக்கி நடந்து போனேன்... நாங்க தங்கி இருந்த மூணார் டவுன் ல இருந்து கொஞ்ச தொலைவில் இருக்க ஆனைச்சால் என்கிற ஊர்ல இருந்து... நான் போகணும் னு முடிவு பண்ண கொழுக்குமலைக்கு சூரியநெல்லி போய்... அங்க இருந்து ஜீப்ல தான் போக முடியும். நான் மூணார் போய் அங்க இருந்து பஸ் பிடிச்சி தேவிகுளம் வழியா சூரியநெல்லி போலாம் னு... நான் தங்கி இருந்த இடத்துல இருந்து கொஞ்ச தூரம் நடந்து, அப்புறம் ஆட்டோல, அப்புறம் லிப்ட் கேட்டு, அப்புறம் டவுன் பஸ் னு நமக்கு கிடைச்ச வாய்ப்ப எல்லாம் யூஸ் பண்ணி... ஒரு வழியா மூணார் டவுன் ல இருக்க பஸ் ஸ்டாண்ட் க்கு போய் சேர்ந்தேன்.
சூரியநெல்லிக்கு எப்போ அடுத்த பஸ் னு சேட்டன்கள் கிட்ட விசாரிச்சப்ப தா சொன்னாங்க... அந்த ஊருக்கு பஸ் ல இல்ல... ஏன்னா ரோடு சரி இல்லனு ரிப்ளை வந்துச்சி. என்னடா நமக்கு இப்படி ஆயிடுச்சே னு... என்ன பண்றதுனு யோசிச்சிட்டே எதாவது வண்டில லிப்ட் கேட்டு போலாம் னு நான் மூணார் டவுன் ல நடந்து போனேன். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை க்கு நடந்து அங்க போய் லிப்ட் கேட்டு நின்னுட்டு இருக்கும் போது... ஒரு குட்டி யானை வண்டில அந்த அண்ணாங்க வந்தாங்க. அவங்களோட குட்டி யானை ல எனக்கு லிப்ட் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. மூணார் சுற்றுவட்டாரத்துல இருக்க எல்லா ஊருக்கும் ஆச்சி மசாலா ப்ராடக்ட்ஸ் சப்ளை பண்ற வேளை பாக்குறவங்க அவுக. அவங்க கூட நான் ட்ராவல் நேரத்துல.. நான் போற ஊர பத்தி நல்லா விசாரிச்சிக்கிட்டு, தேவிகுளம் முன்னாடி என்ன இறக்கி விட்டாங்க. அவங்க சொன்ன ட்ராவல் டிப்ஸ் ல ஞாபகத்துல வெச்சிக்கிட்டு... அடுத்து யாரு நம்ம கூட்டிட்டு போறாங்க னு வெயிட் பண்ணும் போது அந்த ஆட்டோக்காரர் அண்ணா வந்தார்.
அவர் பக்கா தமிழ்க்காரர். மூணார் ல பல ஆண்டுகளுக்கு முன்னே திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பக்கம் இருந்து வந்து செட்டில் ஆனாவராம். மூணார் க்கு இவரோட மூதாதையர் தேயிலை தோட்ட வேளைக்கு வந்தவங்க. அவரோட வேளை... மூணார் டவுன் ல ஆட்டோ ஓட்டுறது... அப்புறம் டவுன்ல இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு காய்கறி மற்றும் பல சரக்குகள் டெலிவரி பண்றது . அப்படி அவர் மூணார் டூ சின்னக்கானல் பக்கம் டெலிவரிக்கு போறவர்... எனக்கு அவர் ஆட்டோ ல இடம் கொடுத்து கூட்டிட்டு போனார். அந்த ஆட்டோவின் முன் இருக்கையில அமர்ந்துகிட்டு...அவர் பொறுமையா அந்த தேயிலை தோட்டங்கள் ஊடே பொறுமையா வண்டி ஓட்டுறத பார்த்துக்கிட்டு... தேயிலை மலைகளையும், அதன் கொள்ளை அழகை ரசிச்சிட்டே... விரிவாக்க பணிகள் தீவிரமா நடக்குற அந்த தேசிய நெடுஞ்சாலையில நான் பயணப்பட்டு போறேன்.
திடீர் னு மிஸ்ட் இறங்கி எங்க பாதையை மறைக்க, அடுத்த கொஞ்ச நேரத்துல மழை கொட்டோ கொட்டுனு கொட்ட ஆரம்பிச்சிது. அப்போ நான் போன ஆட்டோ... நீர் பெருக்கெடுத்து வர பவர் ஹவுஸ் வாட்டர் ஃபால்ஸ் அ கடந்து போய்... பவர் ஹவுஸ் அப்படிங்குற இடத்துல அந்த அண்ணா என்ன இறக்கி விட்டார். அவருக்கு நன்றிகளையும் பணத்தையும் கொடுத்துட்டு... நான் மழையில இருந்து தப்பிக்க ஒரு பஸ் ஸ்டாப் பக்கம் ஒதுங்குனேன்.
அங்க இருந்து கொஞ்ச தொலைவில இருக்க சூரியநெல்லி க்கு இன்னொரு ஆட்டோ ல போனேன். அவர்கிட்ட நான் வந்த கதையைல சொல்லி பேசிட்டே போனஅப்போ தா... அவரும் தமிழ்க்காரர் னு சொன்னார். என்ன கொண்டு போய் கொழுக்குமலை க்கு போற ஜீப் பூக்கிங் ஆபீஸ் கிட்ட இறக்கி விட்டார். அவருக்கு காச கொடுத்துட்டு நான் கிளம்பும் போது... அவருக்கு என்ன தோனூச்சோ... திடீர்னு என்ன கூட்டிட்டு போயி அந்த ஜீப் ஸ்டாண்ட் ல இருக்க ஒருத்தர் கிட்ட... இந்த தம்பிய மட்டும் எதாவது ஜீப்ல ஏத்திக்க சொல்லி ரெக்கமண்ட் பண்ணார்... அவர் சொந்தக்கார பையன் அப்படி னு சொல்லி. அங்க இருந்து ஒன்லி ஜீப் ல தா போக முடியும் அந்த கொழுக்குமலைக்கு. ஒரு ஜீப் 2000 ரூபாய் அப் அண்ட் டவுன் ஜேர்னி. எப்படியோ நமக்கு ஒரு ஜீப் ல பின் சீட் ல இடம் கிடைக்க... கொலுக்குமலை நோக்கி பயணம் ஸ்டாட் ஆயிச்சி இனிமையா.
ஒரு குறிப்பிட்ட நேரம் நல்ல சமவெளியில் இருந்த ரோட்ல பயணப்பட்ட ஜீப்... அங்க ஒரு சின்ன கிராமத்தையும் அப்புறம் அங்க இருந்த டீ ஃபேக்டரிய கடந்து போச்சி. அப்புறம் கொஞ்ச நேரத்துல ஒரு ஒடைய கடந்து தன்னோட ரண கொடுரமான கரடுமுரடான பாதையில ஜீப் பயணத்தை தொடங்கிச்சி. பாதை எல்லாமே பாறைகளால் அமைக்கப்பட்டு... அப்போ தா மழை பெய்து சகதி சூழ்ந்து இருந்துச்சி. மலை மேல் மேடான பாதையில் ஜீப் குலுங்கி குலுங்கி ஏற கண்டிப்பா முதுகு வலி கேரண்டி. பத்து கி.மீ பயணம்... அதுவும் தேயிலை தோட்டங்கள் வழியா அந்த ஜீப்ல பயணப்பட்டு போற அனுபவம் தனித்துவமானது. உயர உயர ஜீப் போக போக... நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருக்க அந்த தேயிலை மலைகளின் அழகு நம்மை திகைப்படைய செய்யும்.
ஒரு வழியா அந்த மலை மீது போய்... குறிஞ்சிப்பூ பூத்து குலுங்கும் பகுதிய தேடி நான் ஓடி போகும் போது... அந்த பாறையை பார்த்தேன். மார்வல் சீரியஸ் ல ப்ளாக் பேந்தர் ல வர வக்காண்டா பாறை மாறியே... அந்த புலி பாறை இருந்துச்சி. அந்த பாறை பக்கத்துல இருந்த மலை பகுதியில குறிஞ்சிப்பூ பூத்து குலுங்க... அதன் அருகில் செல்ல சரிவான அந்த மலைத்தொடர்ல இறங்கி... அந்த பூ வ தொட்டு பார்த்து பல நாள் பார்க்கணும் னு நினைச்ச பூ வ பார்த்த மகிழ்ச்சி மனசுக்குள்ள. எப்பவும் நமக்கு ஆசைப்பட்ட விஷயம் நடந்த அந்த சந்தோஷம் ஆனந்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அந்த இடத்தில் நின்னுட்டு பார்க்கும் போது... மிஸ்ட் இறங்காத வேளையில் பல மலைகிராமங்களின் ஏரியல் வியூ நம்மால் காண முடியும். மைனா படத்துல காட்டுற மலை கிராமங்கள் இங்க தா இருக்கு. ட்ரெக்கிங் இந்த பகுதி ரொம்ப பேமஸ்.
நான் திரும்பி வரும் போது தூறல் மழை பொழிய... மிஸ்ட் விலக அந்த காட்சி கண் முன்னே தொலைவில் இருந்த மலையில்... ஊதா கலரில் மலைத்தொடர் முழுவதும் பரவி கிடந்து இருந்தது குறிஞ்சிப்பூக்கள். அந்த கண்கொள்ள காட்சியை பார்த்துட்டு... அந்த மலை மேலே தான் கொலுக்குமலை தேயிலை பேக்டரி இருக்குனு சொன்னாங்ஙங...அங்க மாறிட்டே இருந்த வெதர் கண்டிஷனால... இருள் சூழ்வதற்கு முன்பு கீழே இறங்கனும் னு... அப்படியே அங்க இருந்து மனசு நிறைவோட அந்த ஜீப்ல... மழையை விட்டு கீழே இறங்கினேன். மலையில அந்த ஜீப் இறங்குற பாதையே ரொம்ப த்ரிலிங்கா இருந்துச்சி. வாய்ப்பு கிடைச்சா ஒரு வாட்டி ஆச்சி கொழுக்குமலை போயிட்டு வாங்க.
சடர்ன் ப்ளான் எனக்கு மறக்கமுடியாத மற்றுமொரு சிறந்த அனுபவத்தை கொடுத்துச்சி. விரைவில் போடி பக்கம் இருக்க குரங்கணி ல இருந்து கொழுக்குமலை க்கு ட்ரெக்கிங் போகணும் னு அடுத்த ஆசை பேண்டிங்ல இருக்கு.
அங்க இருந்து சூரியநெல்லி வந்து போடி போக ஜீப்ல காட்டுவழி குறுக்கு பாதையில ஜீப் ல நின்னுகிட்டே தொங்கி கொண்டே புது விதமா பயணப்பட்டு வந்தேன். அங்க இருந்து உத்தமபாளையம் சென்று பின்பு அங்க இருந்து தென்காசி, குற்றாலம், பாபநாசம் போய் கடைசியா நெல்லையில இருந்து சென்னைக்கு நான் பயணப்பட்டு போய் என் பயணத்தை நிறைவு செஞ்சேன்.
பயணங்கள் தொடரும்...!
Kekkave kaadhuku kulirchiyaa iruku thambi !!! ❤❤
ReplyDeleteSuper anna👌👌ungalalathan naanga ivloa azhagana views lam Pathu rasika mudiyuthu... Keep going anna🙂
ReplyDeleteமூனாறுக்கும் குறிஞ்சிப்பூக்களுக்கும் தாங்கள் தந்த அறிமுகம் - அருமை அருமை...!! மேலும் பல பதிப்புகள் வெளியிட என் வாழ்த்துகள்!!
ReplyDeleteAnna mass naaa♥️🔥..........
ReplyDeleteNeenga innum idhu pola neraiyaa travel blogs eludhanum
Arumaiyana eluthukal👌🏻
ReplyDelete