Thursday, 19 March 2020

அந்த 48 மணி நேரம் - திருக்குறள் எக்ஸ்பிரஸ்

“Traveling alone will be the scariest, most liberating, life changing experience of your life. Try it at least once!”

ரயில் பயணங்கள் ரம்மியமானது. அதுவும் தொலைத்தூர ரயில் பயணங்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே தேவை இல்லை. தனிமையில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டு... இந்த உலகத்தின் உண்மை முகங்களையும் பற்றியும்... பல விதமான வாழ்க்கையையும் பற்றியும் நமக்கு கண் முன் திரையிட்டு காட்டுவதில்... ரயில் பயணங்களுக்கு நிகர் அதுவே. சடக் சடக் சடக் சடக் ... என்று டீசல் இன்ஜினில் இருந்து கரும்புகை கக்க... இந்தியாவின் தென்கோடியில் இருந்து வடக்கு திசையில் உள்ள தலைநகர் நோக்கி... தமிழின் பெருமை அய்யன் வள்ளுவனின் பெயரை தாங்கி கொண்டு செல்லும் ஒரு அதிவிரைவு ரயிலில் எனக்கு நடந்த... நான் பார்த்து, உணர்ந்து, வாழ்ந்த கதையே இந்த பயணக்கட்டுரை. 

கன்னியாகுமரியில் அந்த ரயில் வழக்கமான நேரத்திற்கு வரவில்லை. எப்படா ! ரயில் வரும் ஸ்டேஷனுக்கு அப்படி னு ரயிலுக்கு காத்துட்டு 
இருந்தேன். என்னை போலவே குறிப்பாக வடநாட்டை சேர்ந்த பலர் அந்த ரயிலுக்காக காத்துட்டு இருந்தாங்க. காலதாமதமாக வந்த ரயிலில் எனக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகாத காரணத்தால் எனக்கு னு படுத்துக்க பெர்த் இல்லை. இருந்தாலும் நான் எனக்கு னு ஒரு சீட் தேடி போய் உட்கார்ந்தேன். ரயில் கிளம்பி டெல்லி நோக்கி வேகமா போய்ட்டு இருந்துச்சி. அந்த பெட்டில இருந்த எல்லாரும் தூங்கிட்டு இருந்தாங்க. அப்போ மனசுக்குள்ள யோசனை... நாம எப்படி இங்க வந்தோம் னு ? ஏன் இந்த தனிமையான பயணம்? இந்த முறை இந்த பயணம் நமக்கு எந்த மாதிரியான அனுபவத்த கொடுக்க போகுது னு மனசுக்குள்ள ஒரு எதிர்ப்பார்ப்பு. 

ஜனவரி 1, 2019.

பாண்டிச்சேரி போய் நியூ இயர் கொண்டாடிட்டு வந்து... வீட்ல கொஞ்ச ரிலாக்ஸா மொபைல் நோண்டிட்டு இருக்கும் போது தான் வாட்சாப்ல ஒரு ஸ்டேடஸ் வச்சேன். எல்லாரையும் போல புது வருட ரிசல்யூசன் மாறி... கொஞ்சம் வித்தியாசமா இந்த 2019 ல இந்த இந்த ஊர்களுக்கு ல டிரிப் போய்ட்டு வந்துடனும் மனசுல ஆசை. ஆசைப்பட்ட மாறியே எல்லா ஊர்களுக்கும் போய்ட்டு வந்து... டிரிப் லிஸ்ட்ல இருந்தத கம்ப்ளிட் பண்ண திருப்தி... ஒரே ஒரு ஆசை தவிர. சரி அதையும் போய்ட்டு வந்து பார்த்துடலாம் னு... டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் லீவ்ல அந்த ஆசையை நிறைவேற்ற ப்ளான் போட்டேன். சரி எப்பவுமே தனியா போறோம். இந்த தடவை யாரையாவது கூட்டிட்டு போலாம் னு... வழக்கம் போல ஒருத்தன நம்பி ப்ளான் பண்ணி... வழக்கம் போல அது கேன்சல் ஆயிடுச்சி. ஆனா ஆசை மட்டும் அப்படியே இருந்துச்சி. அப்படி என்னடா ஆசை னு நீங்க கேக்கறது புரியுது... பெருசா ஒன்னும் இல்ல.  திரைப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் ல மட்டுமே பார்த்து ரசித்த... பனிப்பொழிவு அல்லது பனிக்கட்டிகள் சூழ்ந்த ஊருக்கு போகணும் னு மனசுல கொள்ளை ஆசை. அதுவும் இன்ஸ்டக்ராமில் போஸ்ட்ல அடிக்கடி வரும் வட இந்தியாவில் உள்ள சில ஊர்களில் பனி பொழியும் காட்சிகள் அங்க போக ரொம்பவே தூண்டுச்சி என்னை. 

Some journeys can be only traveled alone!” – Ken Poirot“

டிசம்பர் 24, 2019.
சென்னையில இருந்து மதுரை வழியா தூத்துக்குடி போக ப்ளான் பண்ணி கிளம்பி போனேன். மதுரையில இருக்க டிக்கெட் கவுண்டர் ல கன்னியாகுமரி டூ டெல்லி க்கு டிக்கெட் புக் பண்ணேன். அப்படியே அங்க இருந்து தூத்துக்குடி போய்... கிறிஸ்துமஸ் முன்னாடி நாள்  தூத்துக்குடில நடக்குற பேமஸ்... கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பார்த்துட்டு... நான் மறுநாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை க்கு போய்... என் ஜூனியர் தம்பிய மீட் பண்ணிட்டு... அந்த தம்பி என்னை கொண்டு போய் கன்னியாகுமரி ரயில் ஸ்டேஷன் ல என்னை வழி அனுப்பி வெச்சான். 
எனக்கு னு இருக்க சீட்ல உட்கார்ந்துட்டு... தனிமையில நான் பார்க்க போற பனிப்பொழிவ பற்றி நினைச்சிட்டே இருந்தேன். என்ன தவிர... அந்த ட்ரயின்ல என் கூட... அந்த கோச்ல பயணிச்ச மெஜாரிட்டி பீப்லுக்கு... இந்தி தெரிஞ்சி இருந்துச்சி நம்மள தவிர. அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே எப்படி டைம் ஓட்டலாம் னு யோசிக்கும் போது... சரி மொபைல் ல இருக்க படங்கள் பார்க்கலாம் னு நான் முதலா செலக்ட் பண்ண படம் ஹாலிவுட் மூவி Men in Black : International.
அந்த படத்துல வந்த ஒரு சீன் என்னோட பயணத்துக்கு ஏதோ மெசேஜ் சொன்ன ஃபீல் எனக்கு. அதுல வந்த அந்த லைன் A Journey of a Thousand Light years begins with a single step.
இந்த வரிய படத்து ல பார்த்ததும் மனசுல லைட்ட சந்தோஷம். அப்படியே படம் பார்த்து முடிச்சேன். அப்போதா அவங்க வந்தாங்க ட்ரயின்ல. வழக்கமா டிடிஆர் தான் டிக்கெட் செக் பண்ணுவார். ஆனா அன்னைக்கு... அந்த டிரயின்ல பறக்கும் படை டீம் செக்கிங் ல இருந்தாங்க. என்கிட்ட வந்து டிக்கெட் கேட்டப்ப... என் டிக்கெட் கன்பார்ம் ஆகாத ஸ்டோரியை சொன்னேன். அவங்க தம்பி அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. டெல்லி வரைக்கும் எல்லாமே புக் ஆகிருக்குனு சொன்னாங்க. அந்த டீம்ல இருந்த ஆபீஸர்ஸ்ட்ட பேசும் போது... பல விஷயங்கள அவங்க என்கிட்ட ஷேர் பண்ணாங்க. கொஞ்ச நேரத்துலயே அவங்க என் ப்ரெண்ட் ஆயிட்டாங்க. எங்களின் உரையாடல் எனக்கு டிடிஆர் வேலையை பற்றிய பல விஷயங்களையும்... சீக்ரெட்ஸ் யும் எனக்கு சொல்லி கொடுத்துச்சி. விருதுநகர் ரயில் நிலையத்தை ரயில் நெருங்கிட்டு இருக்கும் போது... நான் இருந்த பெட்டியில சில வடநாட்டு பயணிங்க லோக்கல் டிக்கெட் வெச்சிக்கிட்டு பெர்த் ல தூங்கிட்டு இருந்தாங்க. அவங்கள அந்த செக்கிங் டீம் நெக்ஸ்ட் ஸ்டேஷன் ல இறக்கி விட்டாங்க. அப்போ தான் அந்த அம்மா விருதுநகர் ஸ்டேஷன் ல நான் இருந்த பெட்டில ஏறுனாங்க.

பெயர் முத்துலட்சுமி. விருதுநகர் பக்கம் இருக்க மல்லாங்கிணறு தான் அவங்க ஊர். என் கல்லூரி நண்பர்களான ஆசிஷ் டேனியல் மற்றும் தடகள வீரர் மனோஜ் தம்பியோட ஊர். பல வருஷத்துக்கு முன்னாடியே பிழைப்பு தேடி டெல்லிக்கு போனாங்களாம். அங்க குடும்பத்தோட போய் டெல்லி பாலம் ஏரியால தோசை கடை நடத்திட்டு இருக்க... ஒரு டெல்லி வாழ் தமிழர் தான் அந்த அம்மாவும் அவங்க குடும்பமும். அவங்களுக்கு மூணு பசங்க. ஒரு பயணி ரயில்ல கொண்டு போற லக்கேஜ் அளவ விட எக்ஸ்ரா லக்கேஜ்... அவங்க ட்ரெயின்ல கொண்டு போக ட்ரெயின் ல ஏத்திட்டாங்க. அவங்க ஏத்துன அத்தனையுமே அரிசி மூட்டைங்க. இதை அந்த பெட்டில இருந்த செக்கிங் டீம் கண்டுபிடிச்சி... அவங்களுக்கு அபராதம் போட போறோம் னு சொன்ன போது... அந்த அம்மா சொன்னாங்க... நீங்க கேக்குற அவ்வளவு காசு என்கிட்ட இல்லனு... என் பையன் மதுரையில ஏறுவான்... அவன்ட்ட வாங்கி தரேன் னு சொன்னாங்க. மதுரையில ஏறுன அவங்க பையன் சந்திரன்... என்கிட்ட ல காசு இல்ல தாயே... வேணும் னா வைகை ஆத்து ல எல்லா மூட்டையையும் தள்ளி விட்றேன்... இந்த மூட்டைய கொடுத்து அனுப்புன... உன் பொண்ணு கிட்ட கேளு காசு னு சொல்லி கூகுள் பே ல அமௌண்ட் அனுப்ப சொன்னாங்க. ஆனா வழக்கம் போல சர்வர் மக்கர் பண்ண... அந்த செக்கிங் டீம் சீக்கிரம் ஃபைன் கட்டுங்க இல்லனா... திண்டுக்கல் ஸ்டேஷன்ல உங்க ள இறக்கி விடுவோம் னு சொன்னாங்க.  இதை எல்லாம் பார்த்துட்டு வந்த நான்... அப்போ என் கையில இருந்த ஆயிரம் ரூபாய் கொடுத்து இதை ஃபைன் கட்டிக்குங்க...டெல்லி போய்ட்டு பொறுமையா... எனக்கு நீங்க காசு தாங்க னு சொல்லி... ஃபைன் கட்டி அந்த பிரச்சினை ஒரு வழியா முடிச்சி பயண தொடர்ந்துச்சி.

திண்டுக்கல் வரை தான் அந்த செக்கிங் டீம் க்கு டியூட்டி. அவங்க இறங்குறதுக்கு முன்னாடி அந்த டீம்ல இருந்த ஒரு ஆபீசர்... என்னை மட்டும் தனியா கூட்டிட்டு போய்... ஒரு பெர்த் ல எனக்கு படுக்க சீட் அலார்ட் பண்ணி ஹெல்ப் பண்ணார். அப்போ தான் அந்த ஆபீசர் சொன்னார்... எல்லா டிரையின்ல இருக்க கோச்ல... எப்பவுமே சீட் நம்பர் 7 - டிடிஆர் க்கும் மற்றும் சீட் நம்பர் 63 - ரயில்வே போலீஸ் க்கு எப்பவுமே அலார்ட் ஆகிருக்கும்... ஆனா நிறைய டிரையின்ல இந்த பெர்த்ஸ் காலியா தான் இருக்கும் னு சொல்லி... அப்படி ஒரு பெர்த் ல என்னை படுக்க சொல்லிட்டு திண்டுக்கல் ல இறங்கிட்டாங்க. நானும் நல்லா நிம்மதியா நமக்கு னு ஒரு பெர்த் கிடைச்ச திருப்தில... நல்லா தூங்கிட்டேன் என் ரயில் பயணத்தின் தொடக்கத்தில கிடைச்ச ஜன்னலோர சீட்ட விட்டுட்டு. 

நல்ல தூக்கம் தூங்கிட்டு இருந்த என்னை... ஒரு போலீஸ் வந்து எழுப்பி விட்டு இந்த சீட் அவரோட சீட் னு சொல்லிட்டார். என்ன ஊர் அது னு பார்த்த திருச்சி.  திண்டுக்கல் டூ திருச்சி ஜஸ்ட் ஒன் அவர் தான் நிம்மதியான தூக்கம். என்னடா பண்றது னு தெரியாம... தூக்க கலக்கத்துல நான் உட்கார்ந்து இருந்த சீட் நோக்கி போனா... அந்த சீட் ட இன்னொருத்தர் ஆக்கிரமிப்பு பண்ணி... உட்கார்ந்த நிலையில் நல்ல உறக்கத்தில் இருந்தார். என்னடா பண்றது தூங்கறதுக்கு னு யோசிக்கும் போது... அந்த கோச்ல ஒரு பெர்த் ல சின்ன பையன் தூங்கிட்டு இருக்க... நான் அவன் பெர்த் ல ஏறி படுத்துகிட்டேன் அவன் கூட அட்ஜஸ்ட் பண்ணி.

டிசம்பர் 26, 2019. 

காலையில நான் தூங்கி எழுந்து பார்த்த இடம் தாம்பரம். எங்க ஊர். அப்படியே நம்ம ஊர் தாண்டி ரயில் போய்ட்டு இருக்கும் போது... இனிமே எப்படி இருக்க போதோ நம்ம பயணம் அப்படினு யோசனை. பல மாநிலங்கள் தாண்டி போக போறோம் னு யோசிச்சிட்டே இருக்கும் போது... என் அருகில் ஒரு பயணி வைத்து இருந்த அந்த கட்டப்பையில் அந்த வசனத்தை பார்த்தேன். " For he shall give his angels charge over you. To keep you in all your aways " - Psalm 91:11.
இந்த வசனம் எனக்குள் ஒரு நம்பிக்கை யை விதைத்தது... அப்படியே ரயில் சென்னை எக்மோர் போய் நின்னுச்சி. அப்போ டைம் மணி 9:15.
சரி ! மார்னிங் புட் சாப்பிடலாம் னு... பொங்கல் வித் வடை வாங்கி சாப்பிட்டேன். ரயில் அப்படியே சென்னையில் இருந்து வடக்கே நோக்கி வேகமா போக ஸ்டாட் ஆச்சி. சீட்லயே உட்கார்ந்துட்டு வந்து லைட்ட போர் அடிச்சிது. சரி.. கொஞ்ச நேரம் படிக்கட்டுல உட்காரலாம் னு போய் கிழக்கே பார்த்து உட்கார்ந்தேன். மிக தொலைவில் கடலின் அழகும்... அருகில் எண்ணூர் துறைமுகம்... பழவேற்காடு ஏரி... ஷீரீஹரிகோட்டா ராக்கேட் ஏவுதளம் னு... என் கண் முன்னே காட்சிகள் ஓட... அந்த ரயில் ஆந்திரா மாநிலத்துக்குள்ள என்டர் ஆச்சி. நான் படிக்கட்டில் உட்கார்ந்து இருக்க... எனக்கு அருகில் அவர் உட்கார்ந்து இருந்தார் தரையில். அப்போ தான் அந்த அண்ணா மீட் பண்ணேன். 

“You never really travel alone. The world is full of friends waiting to get to know you!”
அந்த நண்பர் பெயர் ராஜேஷ். வயசு சுமார் 42 இருக்கும் அவருக்கு. அந்த அண்ணா ஒரு பிச்சைக்காரர். எங்க அண்ணா போறீங்க னு கேட்டேன்... அதுக்கு அவர் கூடூர் போறேன் னு சொன்னார். எதுக்கு னு மறு கேள்வி நான் கேட்க... கஞ்சா வாங்க னு பதில் சொன்னார். நம்ம ஊர்ல அது கிடைக்காத னு கேட்க... அதுக்கு அவர் சொன்னார் கிடைக்கும்... ஆனா விலை கூட னு சொன்னார். ஆந்திரா ல இருக்க கூடூர்ல சென்னை ரேட் க்கு ஐந்து மடங்கு கம்மி ரேட்... அதான் அங்க போறேன் னு சொன்னார். நான் கேட்டேன்... ஏன் அண்ணா இத யூஸ் பண்றீங்க னு தப்பு இல்லையா அப்படி னு .  அப்போதா அந்த அண்ணா அவரோட ஃப்ளஷ் பேக் ஸ்டோரி சொன்னார். அவருக்கு சொந்த ஊர் திருச்செந்தூர் பக்கம் இருக்க தீதத்தாபுரம் குலசேகரப்பட்டிணம் பக்கத்துல இருக்க கிராமம். சின்ன வயசுல கம்பெனி வேலைக்காக... பெங்களுரூக்கு பிழைப்பு தேடி போயிருக்கார். வாழ்க்கை அப்படியே நகர.. அப்போ தா அவர் வேலை பார்த்த கம்பெனி முன்னாடி இருந்த வீட்டு பொண்ணு 17 வயசு கௌரி மேலே 24 வயசு ராஜேஷ் க்கு லவ். ஏழு வருசமா காதல் பண்ணிருக்கார் மனுசன். பொண்ணு கேட்டு கௌரி அக்கா வீட்டுக்கு போன அப்போ... உனக்கு என்ன தகுதி இருக்கு என் பொண்ண கட்டிக்க னு வழக்கம் போல பொண்ணோட அப்பா காதல் கதையில சதி பண்ண ... கௌரி அக்கா வ சென்னையில இருக்க ஒருத்தருக்கு கட்டி கொடுத்துட்டாங்க. இந்த காதல் தோல்வியில் குடி பழக்கத்துக்கு ஆளாகிட்டார் ராஜேஷ் அண்ணா. அப்படியே கல்யாணம் பண்ணிக்காமலே நகர்ந்த அவர் வாழ்க்கையில் அந்த விபத்து. சில வருஷக்கு முன்னாடி ஒரு மிட்டாய் கம்பெனில வேலை பார்க்கும் போது... கொதிக்க வெச்ச சர்க்கரை பாகு அவர் கால் ல தவறுதலா கீழ ஊத்திக்கிச்சி. அதுல ஏற்பட்ட புண் ஆறாம... அதுவே நரக வேதனை தர வலியை அவருக்கு தந்துருக்கு. அதுல இருந்து மீள வழி தெரியாம... கஞ்சா பழக்கத்துக்கு தன்னை ஈடுபடுத்திக்கிட்டார். அப்புறம் அப்படியே திருவண்ணாமலை, திருப்பதி, பெங்களூரூ,  ஹூப்ளி னு அலைஞ்சு திரிஞ்சி... பிச்சை எடுத்து லைப் வாழ்றார் ராஜேஷ் அண்ணா. கிறிஸ்மஸ் அன்று பெங்களூரூ ல இருந்த அவருக்கு ஒருத்தர்... சலூன் கடைக்கு கூட்டிட்டு போய் முடி வெட்டி, சேவ் பண்ணி விட்டு, சாப்பாடு வாங்கி கொடுத்து காசு கொடுத்துருக்கார். கிடைச்ச காசு க்கு நல்ல சரக்கு அடிச்சிட்டு... ஏதோ ரயில் ல ஏறி இருக்கார். போதை தெளிஞ்சு கண் முழிச்ச இடம் சென்னை. இப்போ கூடூர் போறார் அவர் கஞ்சா பர்சேஸ் க்கு. டிக்கெட் எடுக்கலயா னு கேட்டா...  எந்த டிடிஆர் ம் என்ன மாறி ஆள் கிட்ட டிக்கெட் கேக்க மாட்டாங்க னு சொன்னார். அப்போ தான் சொன்னேன் அவர்க்கிட்ட... அண்ணா இந்த ரயில் விஜயவாடா ல தான் நெக்ஸ்ட் நிக்கும் அப்படினு ... அதுக்கு அவர் சொன்னார்... கூடூர் ல நிக்கும் அப்படி னு... அவர் சொன்ன மாறியே ட்ரையின் கூடூர்ல நின்னுச்சி சில நொடிகள். அனுபவம் போல மனுஷன். அவர் என்கிட்ட இருந்து விடை பெற்று கொண்டார். ஒரு காதல் ஒருத்தரோட வாழ்க்கையை எப்படி மாற்றும் னு அவரோட வாழ்க்கையில இருந்து தெரிஞ்சிகிட்டேன். 

நான் இரவில் தூங்க பெர்த் ஷேரிங் பண்ண சின்ன பையன் பேரு யாஸ்மின். திருநெல்வேலி குறிச்சிக்குளம் தான் அவன் சொந்த ஊர். ஆனா இப்போ இருக்கறது தெலுங்கானா ல இருக்க பாலாவஞ்ச் அப்படிங்குற ஊர். நெல்லையில நடந்த திருவிழா முடிஞ்சி... விஜயவாடா வழியா ஊருக்கு குடும்பத்தோட போயிட்டு இருக்க பையன். அவனுக்கு ஒரு அண்ணா ஒரு தங்கச்சி. யாஸ்மின் செம சுட்டி பையன். அவன் என் கூட நல்ல பிரண்டா ஆயிட்டான் அந்த பயணத்துல. அவனோட செயல் எல்லாமே மெச்சுர்ட் பையன் மாறி இருந்துச்சி. அவனும் நானும் போய் பேன்ட்ரி க்கு போய் சாப்பாடு வாங்கிட்டு வந்து ஷேர் பண்ணி சாப்பிட்டோம். அவன் கூட இருந்தா... நேரம் போகுறதே தெரியாம இருந்துச்சி. அவன் துறுதுறு னு விளையாடிட்டே இருந்தான். அவன் அண்ணன் அஸ்லாம் அப்படியே ஆப்போஸிட்.  அமைதியின் உருவம். நானும் அந்த கோச் ல இருந்த மத்தவங்க கிட்ட பேசும் போது... தனியா போற ஃபீல்ல எனக்கு குறைய ஆரம்பிச்சிது. எப்பவுமே ரயில் பயணங்கள் ல மற்ற பயணிங்க கிட்ட பேச நான் கூச்சப்பட்டதே இல்லை. அப்படி அந்த கோச் ல இருந்த நான் பலர் கிட்ட நான் பேசும் போது பலரை பற்றிய கதைகள் எனக்கு தெரிஞ்சுது. 

நான் பயணித்த கோச் ல இன்னொரு அக்கா ப்ரெண்ட் ஆனாங்க. எப்படி னா ? அவங்க மொபைல் ல கால் ரிங் போல னு என்னோட மொபைல் யூஸ் பண்ணும் போது. அவங்க பேரு விஜயலட்சுமி. ஊரு மதுரை பக்கம் இருக்க உசிலம்பட்டி. இவங்களும் பிழைப்பு தேடி விஜயவாடா போய் செட்டில் ஆனாவங்க. இவங்க ஆந்திரா ல பண்ணுற பிசினஸ் மிக்சர் மேக்கிங். இது மாறி பலர் கதை கேட்கும் போது தான் பிழைப்பு தேடி நம்ம ஊருக்கு வர வட மாநிலத்தவர்கள பார்க்கும் போது... நம்ம ஊரு ஆளுங்க பிற மாநிலத்துக்கு பிழைப்பு தேடி போய் இருக்காங்க அப்படிங்குற உண்மை தெரிஞ்சிது...எல்லாருக்கும் அவங்க வாழ்க்கை பல மாநிலங்கள் ல ஏதோ எதிர்ப்பாராத சூழ்நிலையில அமையுது னு மனசுல தோனூச்சி. 
ஒரு வழியா ரயில் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதி கரையில இருக்க விஜயவாடா போய் ரீச் ஆச்சி. அப்போ டைம் ஈவ்னிங் 4 ஓ க்ளக். தம்பி யாஸ்மின் என்கிட்ட இருந்து விடை பெற்று கொண்டான். 

அந்த தம்பி இருந்த பெர்த் க்கு இன்னொரு பாய் வந்தார். ஆனா அவர் அந்த சீட் ல உட்காராம... அவங்க நண்பர்கள் இருக்க பக்கத்து கோச் க்கு போய்ட்டார்.  அவர் இருக்கையில் நான் அமர்ந்துட்டு... பயணம் பண்ணிட்டு இருந்தேன். அப்போ முத்துலட்சுமி அம்மா அவங்க பேக்ல இருந்து... லெமன் ரைஸ் பார்சல் எடுத்து எனக்கு ஒன்னு கொடுத்து சாப்பிட சொன்னாங்க. நான் வேணாம் னு மறுக்க... அவங்க சாப்புடு டா அப்படி சொல்ல... நானும் ஒத்துக்கிட்டு சாப்பிட்டேன்.
சாப்பாட்டுக்கு தொட்டுக்க புதினா துவையல் அண்ட் தக்காளி தொக்கு. நல்ல டேஸ்ட். வீட்டு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி. அப்போ அவங்க சொன்னாங்க. டெல்லி ல குளிர் உயிர கொல்ற அளவுக்கு இருக்கும். இந்த ரயில் நாக்பூர் தாண்டுன வே... வட இந்தியா வோட குளிர நம்மலால உணர முடியும் னு நமக்கு ஒரு திகில கிளப்புனாங்க. அவங்க சொன்ன மாறியே ரயில் ஆந்திரா ல இருந்து தெலுங்கனாவ தாண்டி மகாராஷ்ரா ல எண்டர் ஆகும் போதே குளிர் ஸ்டாட் ஆச்சி. சரி நாம இன்னொரு படம் பார்ப்போம் னு The Lion King படம் அன்னைக்கு நைட் பார்த்தேன்.
இரவு நேரத்துல நான் போன ரயில் கோதாவரி நதிய கடந்து போச்சு.  படம் பார்த்து முடிக்கும் போது லைட்ட தூக்கம் வர... நான் எனக்கு னு ஒதுக்கப்படாத பெர்த் ல படுத்துக்கிட்டேன். 
டிசம்பர் 27, 2019.

நான் எழுந்து கண் விழித்து பார்த்த போது நான் இருந்த ஊர் மத்திய பிரதேச மாநிலம் உள்ள இட்டார்சி. 2000+ கி.மீ பயணிச்சி வந்த பயணம் அது. சுட சுட டீ ஒன்று வாங்கி பருகினேன். குளிர் 9 டிகிரி ல வாட்டுச்சி. வட இந்தியா குளிர் நமக்கு புதுசு அப்படிங்குறதால...லைட்டா உடம்பு பூரா நடுக்கத்துல இருந்துச்சி. சரி மறுபடியும் ஒரு படம் பார்ப்போம் னு... இந்தியில பேமஸ் ஆனா Andhadhun படம் பார்த்தேன்.
அப்போ மறுபடியும் ரயில் மற்றுமொரு நதியை கடந்து போச்சி அந்த நதி நர்மதை. படம் பார்த்துட்டு இருக்கும் போதே அந்த ரயில் நிலையம் வந்துச்சி. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபால். இந்தியாவில் நடந்த மோசமான தொழிற்சாலை விபத்து நடந்த ஊர்.  அந்த விபத்து நடந்த அன்னைக்கு இந்த ரயில்வே ஸ்டேஷன் க்கு வந்த ஒரு ரயில் இங்க நிற்காம போனதால எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுச்சி னு கதை படிச்ச ஞாபகம். சரி... மார்னிங் ப்ரெக் பாஸ்ட் சாப்பிடலாம் னு போபால் ரயில் நிலையத்துல...
வட இந்தியா ஸ்டைல் ப்ரெட் ஆம்ப்லெட் வாங்கி சாப்பிட்டேன். குளிர் வாட்ட... ரயில் ல ஜன்னலோர இருக்கையில் முத்துலட்சுமி அம்மா கொடுத்த போர்வையை போர்த்திக்கிட்டு... அந்த ஜன்னலோர காட்சிகள் ல ரசிச்சிட்டு வந்தேன். மதியம் ரயில் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி க்கு போய் சேர்ந்துச்சி. சரி... மதிய சாப்பாடு சாப்பிடுவோம் னு... ரயில் ல வித்துட்டு இருந்த வெஜ் ரைஸ் வாங்கி சாப்பிட்டா... கண்ணுல தண்ணி ஊத்தற அளவுக்கு ஊருப்பட்ட காரம்.
சரி சாப்பிடுவோம் னு சாப்பிட்டு அப்படியே ரயில் ல ஒரு வாக் போய்ட்டு வந்தேன். அப்போ தான் அந்த குரூப் பசங்க ல மீட் பண்ணேன். 
நாகர்கோவில் பக்கத்துல இருக்க செயின்ட் சேவியர் இன்ஜினியரிங் காலேஜ் ல மெக்கானிக்கல் படிக்குற பசங்க. ஆக்ரா, மணாலி, கோவா டூர் போயிட்டு இருந்த பைனல் இயர் பசங்க. வழக்கமா ட்ரயின்ல டிரிப் போற காலேஜ் பசங்க... விளையாடுற கார்டுஸ் கேம் விளையாடிட்டு இருந்தாங்க. அப்படியே அவங்க கூட பேச ஆரம்பிச்சி... நேரம் போறதே தெரியாம எல்லா கதையும் பேசுனோம். என்னோட பயண அனுபவங்களை அவங்கிட்ட ஷேர் பண்ணி... என்னோட ப்ளாக் ஸ்டோரிஸ் அவங்களுக்கு படிச்சி காமிச்சேன். எனக்கு கதை சொல்றது ரொம்பவே பிடிக்கும். அதுல சில பசங்க சொன்னாங்க என்ன பார்த்து...  நீங்க முதலயே இங்க வந்துருக்கலாம் ப்ரோ செமயா கதை சொல்றிங்க னு சொன்னான். அவங்களுக்கு கதை சொன்ன அனுபவம் மறக்க முடியாதது. அவங்க கூட செலவு பண்ண நேரம் ரொம்பவே கம்மி. அதுல சிலர் என்னோட கதைக்கு பேன்ஸ் ஆனாது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். அவங்களுக்கு டூர் டிப்ஸ் கொஞ்ச சொல்லி கொடுத்தேன். அவங்க நெக்ஸ்ட் வந்த ஆக்ரா ல இறங்கிட்டாங்க.
இவங்களுக்கு கதை சொல்லும் போது சங்கரன்கோவில் பக்கம் இருக்க ஒரு ஊர சேர்ந்த கோபி அண்ணா வும் என் ப்ரெண்ட் ஆனார். அவர் ஒரு மிலிட்டரி மென். லீவு முடிஞ்சு டியுட்டில ஜாயின் பண்ண போய்ட்டு இருந்த வழியில... அவர் எனக்கு அவரோட வாழ்க்கை அனுபவங்கள பகிர்ந்து கிட்டார். வட மாநில பனி பொழிவு பத்தி எனக்கு இருந்த சந்தேகங்களுக்கு அவர் கிளியர பதில் சொன்னார். அவர் தான் டெல்லி வரைக்கும் எனக்கு கம்பெனி கொடுத்தார். அவர் என்னோட ப்ளான் ல கேட்டு கொஞ்ச எனக்கு நிறைய டிராவல் டிப்ஸ் கொடுத்தார். டெல்லி ய நெருங்கிட்டு இருக்கும் போது அவர் சொன்னார்... என் கூடவே வேணும் னா வாடா... ஜம்மு வரைக்கும் நான் போவேன்... அங்க பனிப்பொழிவு இருக்கும் னு சொன்னார். ஆனா ஏனோ நான் போகலா அவர் கூட. ஏன்னா... அதுக்கு முழுசா தயார் ஆகால நான் அதான் காரணம். அவர் கூட பழகுன பேசிய பிறகு தான் காஷ்மீர் ல பாதுகாப்பு க்கு போற ராணுவ வீரர்கள் பத்தியும்... அவங்க மனநிலை பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டேன்.


ஆக்ரா ல இருந்து டெல்லி நோக்கி போற ரயில் தடத்தோட இருப்புறமும் கடுகு வயல்... மஞ்சப்போர்வை போர்த்துன மாறி தந்த காட்சி... கொள்ளை அழகு அந்த பனிப்படர்ந்த ரம்மியமான குளிர்ல.

இந்த பயணத்துல இன்னொரு குடும்பமும் என்னோட நண்பர்கள் ஆனாங்க. அது நாகர்கோவில் கோட்டார் சேர்ந்த முகமது ஹசன் பேமிலி. அவங்க பேமிலியா டெல்லி ல இருக்க அவங்க சொந்தகாரங்க வீட்டுக்கும், அஜ்மீர் தர்கா க்கு போக டிரிப் வந்த பேமிலி. அவங்க பையன் இமான் எனக்கு டிராவல் ப்ரெண்ட் ஆனான்... அவனும் நல்ல கதை கேட்டுட்டு வந்தான். என்னை மாறியே அவங்களுக்கும் டெல்லி புதுசு. ஆனா அவங்களுக்கு அங்க ஆள் தெரியும்... அத விட இந்தி தெரியும். ஆனா நம்மளுக்கு இந்தி மாலும் நகி. 

தலைநகர ரயில் நெருங்கும் போது முத்துலட்சுமி அம்மா கேட்டாங்க... டெல்லி ல எங்க தங்குவ னு... தெரியல னு சொன்னேன். இந்தி தெரியுமா னு கேட்டாங்க ...தெரியாது னு சொன்னேன். அவங்களுக்கு என்ன தோனூச்சி னு தெரியல... அப்போ சொன்னாங்க இந்த ஊர் ரொம்ப மோசம் டா. கொலை பண்ண கூட தயங்க மாட்டாங்க . என் கூடவே வந்து எங்க வீட்ல இருந்துட்டு... அப்புறம் எங்க போகணுமோ தோனூதோ போ னு... யார்னே தெரியாத என் மேலே அக்கறையா... அவங்க கூட கூட்டிட்டு போக முடிவு பண்ணாங்க. அந்த மனசு இருக்கே அதான் கடவுள். அன்பே சிவம் டைலாக் தான் ஞாபகம் வந்துச்சி. 

ஒரு வழியா 48 மணி நேர தொடர் பயணத்துல... டெல்லி ல இருக்க ஹஸ்ரத் நிஜாமூதின் ரயில் நிலையத்துல... நாங்க போன திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஒன் அண்ட் ஆப் ஹவர் லேட்டா போய் சேர்ந்துச்சி. அது தான் கன்னியாகுமரி ல தொடங்குன திருக்குறள் அதிவிரைவு வண்டியோட கடைசி நிறுத்தம். அங்க இருந்து முத்துலட்சுமி அம்மா கூட... அவங்க வீடு இருக்க பாலம் ஏரியா வுக்கு கால் டாக்சில போனேன்.

இந்த பயணத்து ல இன்னொரு சிறப்பும் இருக்கு. கன்னியாகுமரி ல ஸ்டாட் ஆனா இந்த பயணத்துல நான் திருநெல்வேலி லல இருக்க தாமிரபரணி, மதுரையில் வைகை , திருச்சில காவேரி, அப்புறம் தென்பபெண்ணை,  சென்னையில் அடையாறு, கூவம், கொசஸ்தலை, ஆந்திரால கிருஷ்ணா,  கோதாவரி, மகாராஷ்ட்ரா ல நர்மதை இப்படி இந்தியாவின் பிரதான நதிகளை கடந்து போய் யமுனை நதிக்கரையில் அமைந்த தலைநகர் டெல்லியை போய் சேர்ந்தேன். 
எத்தனையோ ரயில் பயணங்கள் போய் இருக்கேன்,  ஆனா இந்த 48 மணி நேர ரயில் பயணம் எனக்கு ரொம்பவே ஸ்பேஷல். எப்படி 2500+ கி.மீ தன்னந்தனியே யார்னே தெரியாத மனிதர்கள் கூட... மொழி தெரியாத ஊருக்கு போனேன் னு நினைச்சி பார்க்கும் போது... கொஞ்சம் ஆச்சரியாம இருந்தாலும்... இந்த பயணங்கள் இதோடு நிற்காது அது மட்டும் உறுதி. அடுத்து கன்னியாகுமரி ல இருந்து ஜம்மூ ல வைஷ்ணவ தேவி கோவில் போற ரயில் மற்றும் கன்னியாகுமரி ல இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் போற இந்தியாவின் மிக நீண்ட தொலைவு போற ரயில்ல ஒரு பயணம் போகணும் னு சின்ன ஆசை. ஆனா பயணங்கள் நாம டிசைட் பண்ணி போறது இல்ல, அது நம்மல செலக்ட் பண்ணி அதோடு போக நம்மல தூண்டனும்... அப்போ தான் அந்த பயணம் நமக்கு சிறந்த பயணமா அமையும்.

“If you have to wait for someone to travel with you, you may end up waiting a life time!”

- பயணம் தொடரும்.

பல நாட்களா எழுதணும் நினைச்ச இந்த கதையை என் கல்லூரியில நடக்க போற மாணவர் சங்க தேர்தல் காரணத்தால் என்னால எழுதவே டைம் கிடைக்கலை. ஏதோ கொரானோ க்கு அரசு கொடுத்த லீவ் ல ஒரு வழியா இந்த ஸ்டோரியை எழுதி முடிச்சிட்டேன். 
பல நாட்களா ப்ளாக் ரிலீஸ் பண்ணமா இருந்ததுத்துக்கு மன்னிச்சிடுங்க ப்ரெண்ட்ஸ். இருந்தாலும் முடிஞ்ச வரைக்கும் இந்த லீவ் ல இன்னும் பல பயண அனுபவங்களை எழுதணும் ஆசை. பொறுத்து இருந்து பார்போம் என்ன நடக்குது னு. இந்த ப்ளாக் ஸ்டோரி அனுபவத்தை கீழே மறக்கமா கமெண்ட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணி  தொடர்ந்து ஆதரவு தாங்க மக்களே. என்னுடைய மற்ற பயண கதைகளை Home Button Click பண்ணி படிச்சிக்கோங்க இதற்கு முன் என் பயணக்கட்டுரையை படிக்காதவங்க. 







8 comments:

  1. Annaathaaa....eppavum pola intha blog um super uh....keep going nahh

    ReplyDelete
  2. Next trip Nanum Join pannikuren. �� Fun panlam

    ReplyDelete
  3. Really vera level Anna.. this is the first story of urs I am reading.. it was Soo curiosity and eager.. keep it up and waiting for many more stories

    ReplyDelete
  4. As usual, was able to read the SDK style of describing the travel story in this blog... Keep it up!

    ReplyDelete
  5. Awsm anna all the best for your future trips.....

    ReplyDelete
  6. Keep going Anna.... Koodave girls Ku suggestions sollunga bro...it will be helpful for girls who wish to go....

    ReplyDelete
  7. I went on a trip to Delhi recently and I wish I had met you there!

    ReplyDelete

ஆகபெரும் அதிசயம் அருவி

“Waterfalls are exciting because they have power, they have rainbows, they have songs, and they have boldness and craziness!” - Unknown ...