ஆடியோ வடிவில் இந்த கதையை கேட்க கீழே இருக்க லிங்க் க்ளிக் பண்ணுங்க
https://anchor.fm/dineshsdkkumar/episodes/-------httpdineshsdkkumar-blogspot-com202006blog-post-html-eg30rl
வாழ்க்கையில் அவன் போன முதல் சோலோ டிரிப் அது தான். கையில வீட்டுல கொடுத்த வெறும் 900 ரூபாய் எடுத்துகிட்டு, எந்த ப்ளானும் இல்லாம, ஐந்து நாள் கோவை, வால்பாறை, சோலையார், அத்திரப்பள்ளி னு அவன் தமிழ்நாட்ல இருந்து கேரளா போய்ட்டு, வீட்டுக்கு வரும் போது மிச்சம் கையில 80 ரூபாய் இருந்தது. அந்த டிரிப் ல அவன் சந்திச்சி மனிதர்கள் மற்றும் அவன் போன இடங்கள் இப்படி அவனோட முதன் முதலா போன சோலோ டிராவல் கதை தான் இது.
ஸ்கூல் ப்ரெண்ட் கார்த்திக் வீட்டுக்கு போய்ட்டு... ஒரு கி.மீ. தூரம் இருக்க எங்க வீட்டுக்கு நடந்து வந்துட்டு இருக்கும் போதே முடிவு பண்ணிட்டேன்... கண்டிப்பா தனியா டிரிப் கிளம்பணும் உடனே அப்படி னு. வீட்டுக்கு வந்து தூங்கிட்டு இருந்த அம்மாகிட்ட டிரிப் போக காசு வேணும் கொடுங்கனு கேட்டதுக்கு... டேய் !காலையில போடா ! இப்போ இருட்டுச்சி ! அப்படி சொல்ல, நான் விடாபிடியா இப்போ தான் போவேன் னு அடம்பிடிக்க... கையில வெறும் 400 ரூபாய் தான் இருக்குடா ! ஏ டி எம் ல போய் இப்போ எடுக்க கூட முடியாது னு ... நைட் ஷிப்ட் வேலையில் இருந்த எங்க அண்ணா க்கு போன் பண்ணி அவன் நண்பன் கிட்ட 500 வாங்கிக்க சொன்னான் னு அம்மா சொன்னாங்க. என் அண்ணாவோட நண்பன் வீட்டுக்கு போய் காசு வாங்கிட்டு... அம்மா க்கு டாடா சொல்லிட்டு... அந்த இரவில் கொஞ்சம் துணிய பேக் ல எடுத்துக்கிட்டு கிளம்பிட்டேன் டிரிப்க்கு கையில வெறும் 900 வெச்சிக்கிட்டு.
திடீர் னு இப்படி பயணம் கிளம்ப என்ன காரணமா இருக்கும் ? னு நீங்க கேட்கறது எனக்கு புரியுது.
என்னுடைய யூ ஜி கோர்ஸ் ஃபைனல் செமஸ்டர் முடிஞ்சதும், வழக்கம் போல கோடை கால விடுமுறை. என் கூட படிச்ச நண்பர்கள் கூட ஒரு டிரிப் போக ப்ளான் பண்ணி இருந்தோம். ஆனா எங்க கூட டிரிப் ப்ளான் பண்ண சிலர், தனியா பொய் சொல்லிட்டு டிரிப் போனது தான் நான் தனியா டிரிப் போலாம் னு முடிவு பண்ண காரணம். அவங்க டிரிப் போக ப்ளான் பண்ணது கோயம்புதூர் ல இருக்க என் நண்பன் வீடு. நானும் அங்க போய் அவங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்டு, நான் மட்டும் தனியா ஒரு இடத்துக்கு போக ப்ளான் பண்ணேன்.
பள்ளி நாட்களில் என்னுடன் படிச்ச க்ளாஸ்மேட் நிவேதா என்னோட க்ளோஸ் ப்ரெண்ட். அவங்க அப்பா ராஜா அங்கிள் ரொம்ப ஜாலி டைப். அவரோட இளமை பருவம் எல்லாமே... மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்க வால்பாறை டீ எஸ்டேட் ல தான் வாழ்ந்து இருக்கார் மனுசன். அடிக்கடி நாங்க கதை பேசும் போது... என்னையும் கூப்டுவார் வாடா வால்பாறை ஒருதடவை போலாம் னு... அப்படிதான் என்னையும் அந்த சம்மர் ல ஒரு நிகழ்ச்சிக்கு வால்பாறை போக போறேன் வரதுனா கூட வாடா னு கூப்பிட்டார்.
அந்த இரவில் திடீர் னு நான் கிளம்பி போகணும் முடிவு பண்ணது வால்பாறை தான். கோயம்புத்தூர் போய், என் நண்பர்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணிட்டு... அப்படியே பொள்ளாச்சி வழியா வால்பாறை போகணும் இதன் என் ப்ளான். ஆனா நான் வால்பாறை வர விஷயம் ஒருநாள் முன்னாடியே அந்த ஊருக்கு கிளம்பி போன ராஜா அங்கிள் க்கே தெரியாது. வால்பாறை போய் பார்த்துக்கலாம் னு ஏதோ நம்பிக்கையில் கிளம்பிட்டேன். வீட்டில் இருந்து ஒரு கி.மீ தூரம் நடந்து வந்து ஒரு ஷேர் ஆட்டோல ஏறி தாம்பரம் வந்தேன். அங்க இருந்து சென்னை பார்க் ஸ்டேஷன் போய் சென்னை சென்ட்ரல் ல கோவை போற டிரையின் ல போக முடிவு பண்ணேன். தாம்பரத்துலயே கோவைக்கு டிக்கெட் எடுத்துகிட்டேன். நான் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்... அதாங்க இன்றைய புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் ல என்னுடைய டிரையின் க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
சன்டே, நள்ளிரவு 12.30 மணி.
நான் கோவை போக எந்த டிரையின் ல இருக்குனு ரயில்வே டிஜிட்டல் போர்ட்ல பார்த்தேன். கோவை போற ட்ரையின்கள் ல ஆலப்புழா போற டிரையின் தான் முதல போகுதுனு அந்த ட்ரையின்க்கு வெயிட் பண்ணேன். ட்ரையின் வர காலதாமதம் னு அறிவிப்பு வர நான் ஒரு காபி குடிக்க கடை தேடி போனேன். ரயில் பயணங்கள் ல அந்த பத்து ரூபாய் ரயில் டீ காபி தவிர்க்க முடியாதது. எப்பவும் போல படிக்க ஆனந்த விகடன் வாங்கி வெச்சிக்கிட்டேன். டிரையின் வரத்துக்குள்ள மொபைல் சார்ஜ் போடலாம் னு ப்ளக் பாயிண்ட் தேடி போய் சார்ஜ் போட்டுட்டு வெயிட் பண்ணேன். நேரம் ஆக ஆக கோவை போற ட்ரையின் எல்லாம் தாமதம் னு அறிவிப்பு வர கொஞ்சம் கடுப்பாகி நெக்ஸ்ட் என்ன ட்ரையின் கிளம்புதே, அதுல கிளம்பலாம் னு மதுரை போற டேக்ரடூன் மதுரை எக்ஸ்பிரஸ் ல ஏறிட்டேன். மணி சரியா அதிகாலை மூணு இருக்கும்.
ட்ரையின்ல லைட் அ தூங்கிட்டேன். காலையில நான் முழிச்சி பார்த்த அப்போ ஈரோடு வந்து இருந்துச்சி அந்த ரயில். அந்த ஸ்டேஷன் ல இறங்கிட்டேன். ஏன்னா ! நான் போக வேண்டியது கோவை. நான் வந்த அந்த ரயில் ஈரோடு ல இருந்து, வேற வழியா திரும்பி மதுரை போற ட்ரையின். சரி ! நெக்ஸ்ட் ட்ரையின் கோயம்புத்தூர் க்கு எப்போ னு ஸ்டேஷன் ல கேட்டுட்டு நான் அந்த ஸ்டேஷன் லயே இருந்த பார்த்ரூம் போய் கொஞ்சம் ரிப்ஃரெஷ் ஆயிட்டு... ஸ்டேஷன் வெளியே இருக்க ஹோட்டல் ல காலை டிபன் சாப்பிட்டு முடிஞ்சேன்.
சன்டே, காலை பத்து மணி.
ஈரோடு ரயில் நிலையத்தில் வந்த ஆலப்புழா விரைவு வண்டியில் ஏறி கோயம்புத்தூர் செல்ல அன்ரிசர்வ்டு கோச்ல ஏறினேன். பெரும்பாலும் எனக்கு பகல் ஏற பயணங்களில் படிக்கட்டு பயணம் தான் இஷ்டம். நான் படிக்கட்டில் உட்கார்ந்து வருகையில் அந்த அண்ணாவிடம் பேச்சு கொடுத்து பேசி கொண்டே வந்தேன். அவர் பெயர் ஜெயசுந்தரம். கோவைக்காரர். என் பயணத்திட்டத்தை கேட்டவர்... அவரின் அனுபவங்கள் மூலம் எனக்கு பல தகவல்களை பகிர்ந்து ... அவை எனக்கு பயணத்தில் பயன்படும் என சொல்லி கொண்டே வந்தார். அவருடன் பேசிக்கொண்டே கோவை வந்து சேர்ந்தேன்.
கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து பஸ் பிடிச்சி உக்கடம் பஸ் ஸ்டான்ட் போய், அங்க இருந்து பொள்ளாச்சி போற பஸ் ல ஏறி என் நண்பன் வீடு இருக்கும் மலுமிச்சம்பட்டியை அடுத்த ஒத்தகல் மண்டபம் போய் என் நண்பன் வீட்டுக்கு போனேன். அங்க போய் என் ப்ரெண்ட்ஸ்க்கு சர்ப்ரைஸ் தந்துட்டு நாம வால்பாறை கிளம்பலாம் னு பார்த்த எனக்கு ஷாக்கிங் சர்பிரைஸ்.
என் நண்பனுக்கு சிக்கன் ஃபக்ஸ் வந்து இருந்ததால அவங்க ப்ளான் ல சேஞ்ச் ஆயிடுச்சி. சரி அவங்க வீட்ல லஞ்ச் சாப்பிட்டு... கொஞ்ச நேர அவங்க வீட்ல இருந்தவங்க கூட பேசிட்டு... வால்பாறை கிளம்ப தயார் ஆனேன். ஏன்னா ! இருட்டறதுக்குள்ள நான் வால்பாறை போகணும். அங்க போய் ராஜா அங்கிள் எங்க இருக்கார் னு தேடணும்... அதனால அங்க இருந்து சீக்கிரம் கிளம்பிட்டேன். என் நண்பனின் தந்தை என்னை பஸ் ஸ்டான்ட் வரை பைக் ல கூட்டிட்டு வந்து இறக்கி விட்டு வழி அனுப்பி வைத்தார். நான் கிணத்துகடவு ல இருந்து பழனி போற பஸ் ல ஏறி பொள்ளாச்சி போனேன்.
தமிழ்நாட்ல அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்டிரைக் பற்றி பலர் செய்திகள்ல மூலமா கேள்விப்பட்டு இருப்பிங்க. சன்டே நடக்குற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிஞ்சா, மன்டே ல இருந்து ஸ்டிரைக் னு நியூஸ் ல படிச்சேன். நான் வால்பாறை போக என் ப்ரெண்ட் வீட்ல இருந்து கிளம்புனது சன்டே ஈவ்னிங். அதுக்குள்ள பேச்சுவார்த்தை தோல்வி னு நியூஸ் ஸ்பிரேட் ஆக... ஒருநாள் முன்னாடியே கோவை சுற்றுவட்டாரத்துல பஸ் லா ஸ்டாப் பண்ண ஆரம்பிச்சாங்க. எப்படியாவது வால்பாறை போய் ஆகணும் னு பொள்ளாச்சி பஸ் ஸ்டான்ட் ல... வால்பாறை பஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஏன்னா வால்பாறைக்கு தனியார் பேருந்துகள் இல்ல. ஒன்லி கவர்மெண்ட் பஸ் தான். ஏன்னா அந்த மலை பாதை அப்படிப்பட்டது னு சொன்னாங்க.
மதுரையில் இருந்து வால்பாறை நோக்கி போற பஸ் பொள்ளாச்சி பஸ் ஸ்டான்ட் உள்ள என்டர் ஆனதும் பெருங்கூட்டம் பஸ்ல ஏற முண்டியடிச்சாங்க. நானும் எப்படியே பஸ் ல ஏறி முன் சீட்ல உட்கார போனா, அங்க உட்கார்ந்து இருந்தவர் பெண்களுக்கு சீட் கொடுப்பா, நீ உட்காராதனு ! சொல்ல கடுப்பாகி டிரைவர் பக்கத்துலயே நின்னுகிட்டேன். என்னை உட்கார விடாதவர் சொன்னார் நெக்ஸ்ட் பஸ் ல ஏறிக்கே டா ! எதுக்கு நின்னுகிட்டு வரனு ! நா அவர் பேச்ச கேட்கமா நின்னுட்டே வந்தேன். அந்த பஸ் வேகமா ஸ்டாட் ஆகி வால்பாறை நோக்கி போக என் பயணம் ஜம்முனு ஸ்டாட் ஆச்சு.
வால்பாறை - தமிழ்நாட்லயே அதிக அளவு மழை பொழிவு இருக்க மலை பிரதேசம். எப்பவுமே குளு குளு னு இருக்க ஹில் ஸ்டேஷன். ஏன்னா எப்பவுமே இங்க மழை பொழிஞ்சிட்டே இருக்கும்... அதனால தான் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி னு இந்த ஊருக்கு நிக் நேம். சிறுத்தைகள் நடமாட்டம் இங்க சர்வசாதாரணம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை டீ எஸ்டேட்கள் சூழப்பட்ட ஏரியா. இந்தியாவிலேயே சாலை பயணங்களுக்கு மிகவும் சிறந்த சாலைகள் பட்டியலில் பொள்ளாச்சி - வால்பாறை ரோடு ரூட் தான் டாப். 40 கொண்டை ஊசி வளைவு கடந்து தான் மலை ஏறி போக முடியும்.
நான் போன பேருந்தில் என்னுடைய ஆல்டைம் பேவரைட் சீட் ஆன... டிரைவருக்கு பக்கத்து ல இருக்க சிங்கிள் சீட் ல உட்கார்ந்து இருந்த நபர்... வால்பாறை மலை மேலே ஏற ஸ்டாட் ஆகுறதுக்கு முன்னாடி இருக்க ஆழியார் டேம் ல இறங்கிட்டு... அந்த சீட்ட எனக்கு தந்துட்டு போனார். பஸ் மலை ஏறுறதுக்கு முன்னாடி டேம் முன்னாடி இருக்க, ஹோட்டல் ல ஸ்மால் டீ ப்ரேக்.
நானும் நல்ல ஒரு டீ யும் பஜ்ஜியும் சாப்பிட்டு என் சீட்ல போய் உட்கார்ந்துட்டேன். சிறிது நேரத்துல பஸ் கிளம்பி மலை பாதையை அடைந்துச்சி. ஒவ்வொரு குண்டூசி வளைவுகள் ல பேருந்து திரும்பும் போதும் பக்கு பக்கு னு திரில்லிங் அனுபவமா இருந்துச்சி... என்னா என் சீட் இருந்த இடம் அப்படி. மலை பாதையில் இருந்து பார்க்கையில் தொலைவில் ஆழியார் அணையின் காட்சியும், சூரியன் மறையும் காட்சியும் என்னை ஆச்சரியப்படுத்தியது. பல பைக் ரைடர்ஸ் ஒண்ணு சேர்ந்து கும்பலாக எங்கள் பஸ்ஸை டியூக் & ராயல் என்ஃபீல்ட் பைக்ல முந்தி போன காட்சியை பார்த்து அடுத்த தடவை இந்த ரூட்ல பைக் ல நாம வரணும் னு ஆசை வந்துச்சி.
நானும் நல்ல ஒரு டீ யும் பஜ்ஜியும் சாப்பிட்டு என் சீட்ல போய் உட்கார்ந்துட்டேன். சிறிது நேரத்துல பஸ் கிளம்பி மலை பாதையை அடைந்துச்சி. ஒவ்வொரு குண்டூசி வளைவுகள் ல பேருந்து திரும்பும் போதும் பக்கு பக்கு னு திரில்லிங் அனுபவமா இருந்துச்சி... என்னா என் சீட் இருந்த இடம் அப்படி. மலை பாதையில் இருந்து பார்க்கையில் தொலைவில் ஆழியார் அணையின் காட்சியும், சூரியன் மறையும் காட்சியும் என்னை ஆச்சரியப்படுத்தியது. பல பைக் ரைடர்ஸ் ஒண்ணு சேர்ந்து கும்பலாக எங்கள் பஸ்ஸை டியூக் & ராயல் என்ஃபீல்ட் பைக்ல முந்தி போன காட்சியை பார்த்து அடுத்த தடவை இந்த ரூட்ல பைக் ல நாம வரணும் னு ஆசை வந்துச்சி.
அரசு பேருந்து ஓட்டுனருக்கு இந்த மலை பாதையில பஸ் ஓட்டுறது அனுபவத்துல அசால்ட்டா இருக்கு. ஆனா முதல் டைம் இந்த சாலையில் வாகனம் ஒட்டுறவங்களுக்கு ரொம்ப கஷ்டம். அப்போ தான் அந்த பாதையிலயே படுபயங்கரமான கொண்டை ஊசி வளைவுல பஸ் அ பொறுமையா திருப்பி ஓட்டிட்டே டிரைவர் சொன்னார்... பல வருஷத்துக்கு இந்த டார்னிங் பாயிண்ட் ல அப்படியே ஒரு பஸ் தலைகுப்புற விழுந்துச்சி னு சொல்லி பயத்த கொடுத்தார். எப்படியே பஸ் 40 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து இருள் சூழ தொடங்குற வேளையில் வேகமா போய்ட்டு இருந்துச்சி. என் கண் முன்னே பனி படர்ந்து சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் நிறைந்து இருந்துச்சி. சரியா இரவு 7 மணிக்கு வால்பாறை பஸ் ஸ்டான்ட் ல நான் இறங்கினேன்.
பஸ் ல வரும் போது தான் தெரியும் பொள்ளாச்சி டூ வால்பாறை க்கு நான் வந்த பஸ் தான் லாஸ்ட் பஸ். திங்கட்கிழமை ஸ்டிரைக் தொடங்குதுனு எல்லாம் பஸ் ஸும் அந்தந்த டிப்போல ஆல்ட். எப்படியோ வால்பாறை வந்தாச்சி. இப்போ ராஜா அங்கிள் அ தேடணும். அவர் என்கூட பேசும் போது அவர் தங்கி இருந்த எஸ்டேட் முடீஸ் அப்படிங்குற ஊர்ல இருக்குனு சொன்னது நியாபகத்துல... அந்த ஊர் போற பஸ் ல ஏறிட்டேன். எப்படியும் அங்க தான இருக்க போறார் அப்படிங்குற நம்பிக்கையில. பஸ் ல ஏறி டிக்கெட் எடுக்க ஊர் பேர் சொன்னதும் ரெண்டு பேர் சொல்லி அதுல எதுனு கேட்க... குழப்பத்துல ராஜா அங்கிள் க்கு கால் பண்ணி கேட்டேன். அவர் அடேய் ! நான் வால்பாறையில் தான் இருக்கேன் கல்யாணத்துல னு சொல்ல... நான் உடனே பஸ் ல இருந்து இறங்கி அவர் சொன்ன சர்ச் தேடி போனேன். அந்த சர்ச் நான் முதல வந்து இறங்குன பஸ் ஸ்டான்ட் ஆப்போஸிட் ல இருந்துச்சி. ஒரு வழியா அவர கண்டுபிடிச்சி அந்த கல்யாண நடக்குற இடத்துக்கு போனேன். என்னடா எதுவுமே சொல்லாம வந்துட்ட னு கேட்டு... சரி கல்யாணத்துல சாப்பிட்டு வெயிட் பண்ணுடா... நாம கொஞ்ச நேரம் கழிச்சி இங்க இருந்து நைட் ஸ்டே பண்ண மூடிஸ் எஸ்டேட் போலாம் னு சொன்னதால, நான் சாப்பிட்டுட்டு அவருக்காக வெயிட் பண்ணேன். ஒரு வழியா அவர் அவரோட சொந்தகாரங்க மற்றும் நண்பர்கள் கூட பேசிட்டு நாங்க எஸ்டேட் போக கார்ல கிளம்பினோம். இரவு 10 மணி க்கு எஸ்டேட்கக்கு போய் அங்க இருக்க எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு ல இருக்க ஒரு வீட்டுல நைட் ஸ்டே பண்ணோம்.
திங்கட்கிழமை காலை 7 மணி.
காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு... நாங்க இருந்த டீ எஸ்டேட் ல இருக்க தேயிலை மலைகள் ல ஒரு சின்ன விசிட் போய்ட்டு... அங்க பல கோணங்கள் ல நின்னு போட்டோஸ் வீடியோஸ் எடுத்துட்டு மீண்டும் நாங்க தங்கி இருந்த குடியிருப்புக்கு வந்தோம். அங்க இருந்து மீண்டும் வால்பாறை நோக்கி ஆல்ரெடி அரெஞ்ச் பண்ணி இருந்த வேன் ல கல்யாணத்துக்கு போனோம். அங்க போய் காலை டிபன் முடிச்சிட்டு என்ன பண்ணலாம் இன்னைக்கு னு யோசிக்கும் போது... தான் நான் இருந்த இடத்துல இருந்து எங்கேயும் போக முடியாது னு தெரிஞ்சிது ஏன்னா பஸ் ஸ்டிரைக். அப்போ ராஜா அங்கிள் சொன்னார்... சும்மா அப்படியே எங்கயாவது போய் சுத்தி பார்த்துட்டு மதியத்துக்குள்ள இங்க வாடா சாப்பிட னு சொல்ல... நான் எங்க போறது னு யோசிட்டே வால்பாறை பக்கத்துல இருக்க சோலையார் ல இருக்க என் ஜூனியர் மற்றும் சேலையூரியன் ஷேரன் சன்னி தாமஸ் க்கு கால் பண்ணேன். அவன் சில இடங்களை எனக்கு ஷஜஸ்ட் பண்ணான். சரி அதுல எது கிட்ட இருக்கு னு பார்த்து... அங்க நான் பொடி நடையா நடந்தே அங்க போலாம் னு கூகுள் மேப் நம்பி நடந்தே போனேன்.
சிறுகுன்றா கூழாங்கல் ஆறு. வால்பாறை ல இருந்து சின்னக்கல்லாறு போற வழியில 3 கி.மீ தொலைவுல இருக்க இடம். என் ஜூனியர் சொன்னான் னு இந்த இடத்துக்கு நான் நடந்தே போய்ட்டு இருந்தேன். இருபுறமும் தேயிலை தோட்டம் அதற்கு நடுவே ஆள் நடமாட்டமில்லாத சாலை னு நான் போன பாதை அப்படி ஒரு கொள்ளை அழகோடு இருந்துச்சி. சிறுத்தைகள் நடமாட்ட பீதி ஒரு பக்கம் இருக்க ... எல்லாத்தையும் தாண்டி நான் எதை பற்றியும் கவலை இல்லாமல் கூழாங்கல் ஆற்றை நோக்கி போய்டே இருந்தேன். அப்போ ரோட்ல ஒரு அண்ணா பைக்ல வர... வழக்கம் போல லிப்ட் கேட்டேன். உடனே அந்த அண்ணா லிப்ட் கொடுத்து என்னை கூழாங்கல் ஆற்றுக்கிட்ட கொண்டு போய் இறக்க விட்டார். இடப்புற தேயிலை தோட்டத்துல இருந்து வலதுப்புறமா ஒரு ஆற்றுபாலம் வழியா ஆற்றுல தண்ணி ஆர்ப்பரிச்சு ஓட வலதுப்புறமா இறங்கி ஆற்றுல கொஞ்ச நேரம் கால் நனைச்சிட்டு ரிலாக்ஸ் பண்ணேன். அந்த ரிவர் ஃபுல்லா கூழாங்கல் நிரம்பி இருந்துச்சி... அதோட பெயருக்கு ஏற்றார் போல . அங்கேயே ஒரு குளியல் போட ஆசை , ஆனா மாற்றிக்க துணி இல்லனு அந்த ஆசையை தள்ளி வெச்சிட்டு கொஞ்ச நேரத்துல அங்க இருந்து கிளம்பலாம் னு யோசிக்கும் போது... அந்த ஆற்றுபாலத்து க்கு எதிர் திசையில் ஆற்றுநீர் வெள்ளி அருவி போல பாறைகள் ல வழிந்து வர காட்சி என்னை அங்க போக வெச்சிது னு சொல்லலாம். அங்க போய் போட்டோ எடுத்துட்டு இருக்கும் போது... அந்த ஆற்றோர ரோட்ல போன ஒரு குட்டியானை வண்டி டிரைவர்... தம்பி !அங்க இருந்து வந்துட்டுங்க. அங்க ஆற்றுல சுழல் இருக்கும். அது ரொம்ப ஆபத்து னு சொல்ல நான் அங்க இருந்து உடனே கிளம்பிட்டேன். அந்த பிரிட்ஜ் கிட்ட வேர்க்கடலையை தள்ளு வண்டில வெச்சி வித்துட்டு இருந்த அண்ணா கிட்ட வேர்கடலை வாங்கி சாப்பிடும் போது அவர்ட்ட நான் கேட்டேன். இங்க சிறுத்தை ல இருக்கா அண்ணா னு ? அதுக்கு அவர் எங்க வீடு டவுன்க்குள்ள தான் இருக்கு டா தம்பி ! எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்க பள்ளத்தாக்குல, காலையில நாலு சிறுத்தைக்குட்டி விளையாடிட்டு இருந்துச்சி னு... அசால்ட்டா ஏதோ நாய் பூனை குட்டி விளையாடிட்டு இருந்த மாறி சொன்னத கேட்கும் போது அந்த ஊர்க்காரங்களுக்கு சிறுத்தையை பார்க்கறது எவ்வளவு சாதாரண விஷயம் னு புரிஞ்சிது.
அப்புறம் அங்க இருந்து கிளம்பி மறுபடியும் நடந்தே வால்பாறை டவுன் நோக்கி போனேன். சிறிது நேரம் அந்த தேயிலை காடுகளுக்கு உள்ளே போய் புது ரூட்ல போலாம் னு போய்ட்டே இருந்தேன். ஒரு வேளை யாராவது நம்மல யார்டா நீ ? இங்க என்ன பண்ற னு கேட்டா ? வழி தவறி வந்துட்டேன் னு சொல்லிகலாம் னு நான் தனியே வழி தெரியாம அந்த தேயிலை மலைகள் ல நடந்து போனேன். தொலைவில் சாலை தெரிய, அங்க போய் மறுபடியும் லிப்ட் கேட்டு வால்பாறை ல நான் போக வேண்டிய கல்யாணம் நடக்குற சர்ச்க்கு ஒருவழியா போய் சேர்ந்தேன். அங்க போய் மதிய சாப்பாடு சாப்பிட்டு, சிறிது நேரம் அங்கேயே தனியே டைம்பாஸ் பண்ணிட்டு இருந்தேன்.
என் ஜூனியர் ஷேரன் சன்னி தாமஸ் என்ன பார்க்க வால்பாறை வரேன் னு சொன்னதால... நான் வால்பாறை லயே இருக்க முடிவு பண்ணேன் அவன் வர வரைக்கும். அப்போ ராஜா அங்கிள் நான் மூடிஸ் எஸ்டேட் கிளம்புறேன் னு சொல்ல... நான் நண்பர் வர சேதியை சொல்லி நான் அவன பார்த்துட்டு வரேன் னு சொன்னதால... அவர் நண்பர்களோடு கிளம்பி எஸ்டேட் க்கு போய்ட்டார். மதியம் லைட்டா வெயில் வாட்ட நான் ஜூனியர் வர வரைக்கும் எங்கேயாவது போலாம் னு வால்பாறை டவுன்ல இருந்து பச்சை மலை எஸ்டேட் போற பாதையில ரெண்டு கி.மீ நடந்து போய் உயர்ந்த தேயிலை மலைகளை ஆச்சரியமா பார்த்துட்டு இருக்கும் போது... ஒரு மலையின் உச்சியில் ஒரு ஷேட் தெரிய அங்க இருந்து ஒரு சின்ன பொண்ணு கீழே இறங்கி வந்தா, அவக்கிட்ட மேலே என்ன ஷேட் அது ? னு கேட்க அந்த பொண்ணு ஏதோ சொல்ல... அது எனக்கு புரியாம நான் அங்க என்ன இருக்குனு பார்ப்போம் னு அந்த மலை மேலே ஏறி போனேன்.
எப்பவுமே ஒரு ஆர்வம் ! ஆவல் ! ஒரு விஷயத்துல நமக்கு இருந்தா, எப்படி அதை அடைந்தோம் னு யோசிக்கவே டைம் இல்லாத அளவுக்கு ஒரு ஊந்து சக்தி, நம்மல ரொம்ப சீக்கிரம் அந்த இலக்குல நம்மல கொண்டு போய்ட்டும். அது போல தான் நான் அந்த தேயிலை மலை உச்சிக்கு போய்... அந்த மலை க்கு அந்த பக்கம் என்ன இருக்குனு பார்த்தா ... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை மலைகளும் அதுல தேயிலை பறிக்குற தொழிலாளிகளும் இருந்தாங்க. அவங்க கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, அவங்கள பத்தியும் அவங்க வாழ்க்கை பற்றியும் கேட்டுட்டு, அந்த மலைகள் ஓட அழகை முழுசா இல்லனாலும் என்னால முடிஞ்ச அளவு மொபைல் ல கேப்சர் பண்ணிட்டு... மலையில இருந்து இறங்கி நான் வால்பாறை டவுன் நோக்கி நடந்து போனேன். மாலை நெருங்கிட்டு இருக்கும் போது என் ஜூனியர் ஷேரன் சன்னி தாமஸ் அங்க வந்தான். அவன் கூட பல கதைகள் பேசிட்டு வால்பாறை பற்றியும், அவன் ஊர் சோலையார் பற்றியும் கேட்டுட்டு இருக்கும் போது அவன் கேட்டான். நெக்ஸ்ட் என்ன ப்ளான் னு ? அதுக்கு நான் சொன்னேன்... உண்மையா ஒரு ப்ளான் னும் இல்ல. இப்போ இங்க இருந்து கீழே பொள்ளாச்சி போக பஸ்ஸூம் இல்ல ஸ்டிரைக் காரணத்தால னு சொன்னதும் அவன் சொன்னான்.... அப்போ எங்க வீட்டுக்கு வாங்க அண்ணா னுசொன்னான். நானும் சிறிதும் நேர யோசனைக்கு பிறகு வர ஓகே சொல்லிட்டேன். எங்க ஏரியா ல இன்னைக்கு பவர் கட்... டிரன்ஸ்பர்மர் ஒண்ணு எரிஞ்சிடுச்சி. அதனால நாளைக்கு வாங்க னு சொன்னான் தம்பி. நானும் அவனும் கொஞ்ச நேரம் அந்த டவுன்ல பேசிட்டே நடந்து போய் பஸ் ஸ்டான்ட்க்கு போனோம். மாலை நெருங்க இருட்றத்துக்குள்ள சோலையார் போகணும் னு ஜூனியர் தம்பி அவன் ஊருக்கு போற பஸ்ல கிளம்பி போக நானும் ராஜா அங்கிள் இருக்க எஸ்டேட் க்கு பஸ் பிடிச்சு போனேன்.
திங்கட்கிழமை இரவு 7 மணி.
மறுநாள் சோலையார் போறதா சடர்ன் ப்ளான். அதனால நைட் சாப்பிட்டு தூங்கலாம் னு யோசிக்கும் போது... ராஜா அங்கிள் அவரோட எஸ்டேட் ப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்குறதுல ரொம்ப பிசியா இருந்தார். வால்பாறை வந்ததுல இருந்து அந்த கல்யாணத்துலயே எல்லா வேளையும் சாப்பிட்டுடேன். நைட் புட் எஸ்டேட் ல அங்கிள் அரெஞ்ச் பண்ணுவார் னு பார்த்தா... அப்படி பண்றத்துக்கான அறிகுறியே இல்லை. ஏன்னா ! அங்கிள் அவ்வளவு பிசியா இருந்தார். அவர எதுவும் சொல்லவே முடியாது னு , சரி நாம கையில இருக்க காசுல பிஸ்கேட் வாங்கி சாப்பிடலாம் னு... நாங்க தங்கி இருந்த லைன் வீட்டுக்கு எதிரில் இருந்த கடைக்கு போய் பிஸ்கேட் கேட்டேன். அதுக்கு அந்த கடைக்காரர்... அந்த பெட்டிக்குள்ள இருக்கும் பாருப்பா எடுத்துக்கோ னு சொன்னார். எவ்வளவு னு ? கேட்க இருக்கறத கொடுப்பா னு சொன்னது... எனக்கு கொஞ்சம் ஆச்சரியம். அப்போ தான் புரிஞ்சிது... ஏன் ! வால்பாறைல அவ்வளவு மழை பெய்யுது னு. நல்ல மனசு இருக்க ஆளுங்க இருக்க ஊர்ல நல்லா மழை பெய்யும் னு கேள்விப்பட்டு இருக்கோம் ல அதான் போல னு நினைச்சிட்டு... அந்த பிஸ்கேட் வாங்கிட்டு போய் சாப்பிட்டு... என் டின்னர் முடிச்சிட்டு தூங்க போனேன் நைட் 10.30 மணிக்கு. அப்போ ராஜா அங்கிள் சாப்பிடலயானு கேட்டு சோறு வடிச்சாங்க. நான் சாப்பிட்டேன் சொல்லிட்டு தூங்கிட்டேன்... தூக்க கலக்கத்துல அன்னைக்கு நைட் எனக்கு னு ஒதுக்குன பெட்ல அந்த டீ எஸ்டேட் லைன் வீட்ல.
செவ்வாய்கிழமை காலை.
ராஜா அங்கிள் கிட்ட நான் சோலையார் போற விஷயத்த சொல்லிட்டு... அங்க இருந்து கிளம்பிட்டேன் காலையிலயே... மூடிஸ் எஸ்டேட் ல இருந்து. நான் கிளம்பி போனது மூடிஸ் பஸ் ஸ்டாப். அப்போ தான் அங்க போலீஸ் ஸ்டேஷன் ஒன்னு பார்த்தேன். நான் தங்கி இருந்த லைன் வீடுகள் ல இருந்த சிலர் சொன்னது அப்போ எனக்கு ஞாபகம் வந்துச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இங்க இருக்க போலீஸ் ஸ்டேஷன் மேல சிறுத்தை ஒன்னு இருந்தத பார்த்தாங்களாம். அது ரோட்ல போன ஒரு சின்ன பையன் மேலே பாய்ந்து... அவன் கழுத்த பிடிச்சி எஸ்டேட்க்குள்ள அந்த சின்ன பையன் அப்பா கண்ணு முன்னாடியே தூக்கிட்டு போய்ட்டுச்சி னு சொன்னாங்க. அந்த இடத்த கடந்து போனேன் மிரட்சியோடு பார்த்துட்டே. நான் மார்னிங் ப்ரேக் ஃபார்ஸ்ட் க்கு, அங்க இருக்க ஒரு சின்ன ஹோட்டல் ல கேரளா ஸ்பெஷல் புட்டு சாப்பிட்டேன். அப்போ தான் ஷேரன் கிட்ட இருந்து போன் கால் வந்துச்சி. அண்ணா நானும் அப்பாவும் மதியம் வால்பாறை வரோம்... அப்படியே உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன் சொன்னான் தம்பி. என்னடா ! ப்ளான் ல இப்படி ஆயிடுச்சே அப்படி னு... தம்பி வால்பாறை வரத்துக்குள்ள பக்கத்துல இருக்க எதாவது இடத்த பார்க்கலாம் னு முடிவு பண்ணி... ஆல்ரெடி நான் வால்பாறை பத்தி பண்ணி வெச்ச டூரிஸ்ட் ப்ளேஸ் ரிசர்ச்ல... நான் இருந்த இடத்துல இருந்து பக்கத்துல, அதாவது ஷாட் டிஸ்ட்டன்ஸ் ல இருக்க ஒரு இடத்துக்கு போலாம் னு அந்த இடம் இருக்க திசை நோக்கி, மூடிஸ் ல இருந்து நடந்தே போனேன் தனியே.
தனியே நடந்து போய்ட்டு இருக்கும் போது, ஒரு டிரவலர் வேன் வந்துச்சி. அதுல லிப்ட் கேட்டு போய் ஒரு ஜங்க்ஷன் ல இறங்கி, மறுபடியும் நான் போக வேண்டிய இடத்துக்கு நடந்து போனேன். கொஞ்ச நேரத்துல மறுபடியும் ஒருத்தர் எனக்கு லிப்ட் கொடுத்து என்னை கூட்டிட்டு போய் நான் போக வேண்டிய இடத்துல இறக்கி விட்டார். அவர் கூட பயணித்து போன சிறிது நேரத்துல... என்னை பற்றியும் என் டிரிப் பத்தியும் அவர்க்கிட்ட டீடயிலா சொல்லிட்டே போனேன் அவர்கூட பைக்ல. நான் போய் சேர்ந்த இடம் நல்லமுடி பூஞ்சோலை.
வால்பாறை ல இருந்து 11 கி.மீ தொலைவில் இருக்க ஒரு அமைதியான காட்சிமுனை தான் இந்த நல்லமுடி பூஞ்சோலை. இங்க போகுற வழியெங்கும் தேயிலை தோட்டங்களும், அதன் பேரழகான காட்சி அமைப்பும் வேற லெவல் லுக்ல இருக்கும். இந்த காட்சி முனையில நின்னு நாம கண் முன்னே இருக்க அகன்ற பள்ளத்தாக்கு அழகையும், ஆபத்தையும் ஒரு சேர பார்க்குற தருணம் அவ்வளவு ரம்மியமா இருக்கும். தூரத்துல தெரியுற அருவியும், அதன் அருகில் இருக்க ஆதிவாசிகள் கிராமம்... அந்த வீயூ பாயிண்ட் ல இருந்து பார்க்குறது மட்டும் இல்லமா... தொலைவில் தெரியுற தென்னியாந்தியாவின் உயர்ந்த சிகரம்... கேரளாவின் மூணாறு பக்கம் இருக்க ஆனைமுடி சிகரத்தின் காட்சி அந்த இடத்தின் சிறப்பு அம்சம். அந்த இடத்துல இன்னொரு ஸ்பெஷல் விஷயம் இருக்கு. அவர் தான் கண்டேன் கடவுள் ஆங்கிலத்தில் அவர Seen God னு சொல்றாங்க. அந்த நல்லமுடி பூஞ்சோலை ல இறைவன் இங்க இருக்க ஒரு பெரியவருக்கு காட்சி தந்தார் னும் அவர் தினமும் அங்க பூஜை பண்ண வரார் னு என்கிட்ட சொன்னாங்க. அங்க இருக்க ஒரு கோயில் அந்த இடத்தின் இன்னொரு சிறப்பு.
நான் அந்த இடத்துக்கு போன டைம் ல யாரையும் அந்த வீயூ பாயிண்ட்க்கு உள்ளே அனுமதிக்கவே இல்லை. கொஞ்ச நேரம் ஆகும் னு சொல்லிட்டாங்க. ஆனா என்னை பைக் ல கூட்டிட்டு போனவர், அங்க இருந்த ஒரு அண்ணா கிட்ட என்னை இன்ரோ பண்ணி நான் சென்னை ல இருந்து வந்த விஷயத்த சொல்லி உள்ளே கூட்டிட்டு போக சொன்னார். அந்த அண்ணா வும் அங்க இருந்த வனக்காவல்ர் கிட்ட ஏதோ சொல்லிட்டு என்னை மட்டும் உள்ளே கூட்டிட்டு போனார். அந்த செக்போஸ்ட் ல இருந்து தேயிலை பயிர்கள் ஊடே நடந்து போன கொஞ்ச தொலைவில் அந்த வீயூ பாயிண்ட். அங்க இருந்து அனைத்து அழகையும் கொஞ்ச நேரம் தனியே இருந்து ரசிச்சிட்டே... அங்க இருக்க கோயில்க்கு போய் ஒரு தரிசனம் பண்ணிட்டு... நானும் அந்த அண்ணா வும் ரிடர்ன் கிளம்பும் போது சொன்னார்... இங்க யானைகள் நடமாட்டம் பல நேரங்கள்ல இருக்கும் னு யானைகள் அங்க வந்து போன அடையாளங்கள் ல எனக்கு காட்டிட்டு... அந்த தேயிலை தோட்டத்துக்கு அந்த பக்கம் காட்டு எருமை ஒண்ணு நிக்குது நாம இங்க தனியா இருக்கறது ரிஸ்க் னு என்னை வெளியே கூட்டிட்டு போனார். நாங்க பாதி தூரம் வந்த அப்போ பலர் உள்ளே நடந்து வந்துட்டு இருந்தாங்க. அவங்களை உள்ளே கூட்டிட்டு போக அந்த அண்ணா அவங்க கூட போனார். நான் தனிமையில் திரும்பி வர வழியில் தான் அந்த பெரியவர மீட் பண்ணேன். முன்னரே சொன்ன மாறி அந்த இடத்துல இறைவனை பார்த்தார் னு அங்க இருக்க மக்கள் நம்புற அந்த வயதான பெரியவர். அவர்கிட்ட பேசலாம் னு போன அப்போ... இன்னொரு ஓல்டு பாய்ஸ் கேங் அங்க வர அவங்களும் அந்த பெரியவர்கிட்ட ஆசீர்வாத வாங்கிட்டு பேச்சை கொடுத்தாங்க அவர்கிட்ட. அப்போ தான் அந்த பெரியவர் எங்க கிட்ட எப்படி எப்போ இறைவன் அவருக்கு காட்சி அளித்தார் னு எக்ஸ்ப்ளைன் பண்ணி காட்டி... டீடாயிலா எங்க கிட்ட சொல்லி எல்லாரையும் ப்ளாசிங் பண்ணார். அவர் அந்த காலத்துலயே எம்.ஏ. படிச்சவர் னு சொன்னார். அவர் பேசின ஆங்கில உச்சரிப்பு எங்களுக்கு எல்லாம் ஆச்சாரியம். அங்க இருந்த சிலர் அவருக்கு காணிக்கையை காசு கொடுத்தாங்க... அப்புறம் அந்த பெரியவர் கோயிலுக்கு பூஜை பண்ண எங்க கிட்ட இருந்து விடை பெற்று சென்றார்.
நான் அங்கு இருந்து கிளம்பும் முன் அங்கே என்னுடன் அந்த பெரியவரிடம் பேசிய ஓல்டு பாய்ஸ் டீம் ல இருக்கவங்க... என்னிடம் தனியாவ தம்பி வந்தீங்க ? னு கேட்க நான் நடந்த முழு கதையும் சொல்லிட்டு, அங்க இருந்து வால்பாறை போற விஷயத்த சொன்னேன். அப்போ அவர்களில் ஒருவர் என்னிடம் அவர்களும் நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து அடுத்து தொங்கு பாலம் ஒன்றை பார்த்து விட்டு வால்பாறை செல்வதாக கூறினார். எனக்கு வால்பாறை செல்ல பேருந்து வசதி எதுவும் இல்லாத காரணத்தால், அவர்களில் ஒருவர் என்னிடம் அவர்களுடன் டிராவலர் வேனில் வர அழைத்தார். நானும் சரி என அவர்களுடன் ஜாயின் பண்ணிக்கிட்டேன். நாங்க அந்த இடத்தில் இருந்து கிளம்பும் முன் அவர்களில் ஒருவர் எனக்கு லெமன் டீ ஒன்று வாங்கி கொடுத்து குடிக்க சொன்னார். நான் மறுக்க... அவர் குடிடா என கட்டாப்படுத்தி குடிக்க சொன்னாங்க. சரி னு அந்த அருமையான ப்ரெஷ் லெமன் டீ யை குடிச்சிட்டு நாங்க வால்பாறை நோக்கி புறப்பட்டோம். போற வழியில அவங்க தூக்கு பாலம் போறத சொல்லி என்னையும் கூட்டிட்டு போனாங்க. ஜூனியர் தம்பி வால்பாறை வர லேட் ஆகும் என்பதால் நானும் அவர்களுடனே சென்றேன். அந்த ஓல்டூ பாய்ஸ் டீம் கோயம்புதூர் பக்கம் இருக்க ஒரு கிராமத்தை சேர்ந்தவங்க. வருஷ வருஷம் இது மாறி ஒரு வேன் புக் பண்ணிட்டு ஊர் சுற்ற கிளம்பிடுவாங்க னு சொன்னாங்க. அவங்க வேன் ல எல்லாரும் துண்டை விரிச்சி ரம்மி ஆடிட்டு வந்தாங்க.
அவங்க போலாம் னு ப்ளான் பண்ண தூக்கு பாலத்துக்கு போக அன்னைக்கு ஏதோ காரணத்தால் அனுமதி இல்லனு சொல்லவே, அவங்க வழியில இருக்க ஒரு அணை யை நோக்கி போனாங்க. அந்த அணையின் பெயர் நீரார் டேம். அங்க போய் கொஞ்ச நேரம் சுற்றி பார்த்துட்டு அங்க இருந்து எங்க பயணம் வால்பாறை நோக்கி போனோம்.
அவங்க போலாம் னு ப்ளான் பண்ண தூக்கு பாலத்துக்கு போக அன்னைக்கு ஏதோ காரணத்தால் அனுமதி இல்லனு சொல்லவே, அவங்க வழியில இருக்க ஒரு அணை யை நோக்கி போனாங்க. அந்த அணையின் பெயர் நீரார் டேம். அங்க போய் கொஞ்ச நேரம் சுற்றி பார்த்துட்டு அங்க இருந்து எங்க பயணம் வால்பாறை நோக்கி போனோம்.
செவ்வாய்கிழமை மதியம் 2.30 மணி
நான் என்னை ஃப்ரீ லிப்ட் கொடுத்து அழைத்து வந்த ஓல்டூ பாய்ஸ் க்கு த்ங்க்ஸ் சொல்லிட்டு, அவங்க வேன்ல இருந்து வால்பாறை ல இறங்கிட்டேன். நான் என் ஜூனியர் ஷேரன் சன்னி தாமஸ் க்கு வெயிட் பண்ணிட்டு இருந்த சிறிது நேரத்தில் அவன் அப்பா கூட நான் இருந்த இடத்துக்கு வந்தான். அவன் அப்பா க்கு வால்பாறை ல சில வேலைகளை முடிக்கணும் னு அதை முடிச்சிட்டு வர போனார். அப்புறம் கொஞ்ச நேரத்துல நாங்க மூணு பேரும் வால்பாறையில இருந்து சோலையார் நோக்கி பைக்ல புறப்பட்டோம்.
சோலையார் - தமிழக கேரள எல்லை அமைந்துள்ள ஒரு சின்ன மலை கிராமம். இங்க தான் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணை இருக்கு. வால்பாறை ல இருந்து 25 கி.மீ. தொலைவில். நாங்க வால்பாறையில இருந்து சோலையார் வந்த பாதி தூரத்துக்கும் அதிகமான சாலை சோலையார் அணையை ஒட்டியே அமைந்து இருந்துச்சி. அரை மணி நேர பயணத்துல நாங்க சோலையார் வந்தடைந்தோம். அன்னைக்கு நைட் என் ஜூனியரோட காட்டேஜ் ல தான். நாங்க அங்க போய் என் பேக் வெச்சிட்டு, அந்த ஊர்லயே உயரமான ஒரு மலை மேலே இருக்க என் ஜூனியர் ஷேரன் வீட்டுக்கு போய் சின்ன விசிட் அடிச்சோம். அந்த வீடு அமைந்து இருந்த இடமும், அதை சுற்றி இருந்த மரங்கள் அப்படி னு வேற லெவல் வீயூ. அவங்க வீட்டுல விதவிதமான பழ மரங்கள், மிளகு செடி னு ஒரு ஹில் ஸ்டேஷன் ல இருக்க மாறி எல்லாமே இருந்துச்சி. அந்த ஊரும் ஒரு சின்ன ஹில் ஸ்டேஷன் தான். நான் ஜூனியர் கிட்ட இங்க அனிமல்ஸ் ப்ராப்ளம் இருக்க னு கேட்டத்துக்கு, அப்பப்போ வரும் னா யானை, கரடி, சிறுத்தை னு வீட்டுக்கு எதிரே இருக்க சரிவான பள்ளத்தாக்கு ல வரும். ஒரு முறை வீட்டுக்கு உள்ள இருந்த பூனையை புலியா இல்ல சிறுத்தையா னு தெரியல ஒன்னு வந்து தூக்கி போய்ட்ச்சி... அத பார்த்த என் தங்கச்சி க்கு ஒரு மாசம் பூர ஜூரம் னு சொல்ல இத நம்பலமா வேணாம னு அப்படியே நான் கேட்டுக்கிடேன். கொஞ்ச நேரத்துல நானும் அவனும் அவங்க வீட்டுக்கு எதிரில இருக்க டேம் க்கு ஒரு வாக் போலாம் னு போனோம். புதர் மண்டிய பாதையில அவன் என்னை கூட்டிட்டு போய்... இது கரடி வர வழி னு அசால்ட்டா சொன்னான். நானும் எப்படியோ அந்த இடத்துல இருந்து டேம் க்கு போய் நல்ல சைட் சீயிங் பார்த்துட்டு... அணையில இறங்கி போட்டோஸ் வீடியோஸ் க்ளிக் பண்ணிட்டு... அங்க இருந்து கிளம்பி அந்த டேம் ல இருக்க பயன்பாடு அற்ற ஒரு பார்க் க்கு போய் அந்த டேம் முழுசா சுற்றி பார்த்தோம். நாங்க போன டைம் ரிப்பேர் வொர்க்ஸ் கொஞ்சம் நடந்துட்டு இருந்துச்சி. அங்க சிலர் டேம்ல குளிச்சிட்டு இருந்தாங்க . அப்போ தான் ஷேரன் சொன்னான் இங்க குளிக்கறது ரொம்ப ரிஸ்க். ஹைட்ரோ பவர் ஸ்டேஷன் ல பவர் ப்ரொடியூஸ் பண்ணும் போது இந்த டேம்ல குளிச்ச பல பேர் தண்ணில முழ்கி செத்து போயிருங்காங்க னு சொன்னான். இங்க டேம் உள்ள இருக்க டானல் ல தண்ணி வேகமா இழுக்கும் போது அந்த கோர சம்பவம் நடக்கும் னு சொன்னான். அதுக்கப்புறம் நாங்க அப்படியே அங்க இருந்து நடந்தே அந்த ஊர சுத்தி பார்த்தோம்.
ஒரு கடையில சுடச்சுட காபி குடிச்சுட்டு, கூடவே பஜ்ஜி சாப்டுட்டு, அந்த ஊர்ல ஒரு இடத்துக்கு ஜூனியர் என்னை கூட்டிட்டு போனான். எங்கடா கூட்டிட்டு போறான் னு பார்த்த... தமிழ்நாடு கேரளா செக்போஸ்ட்.
அங்க இருந்த ஒரு கடையில என்ன சிகரேட் வாங்க சொன்னான். எதுக்குனா ! அந்த கடைக்காரர் அவங்க அப்பா கிட்ட சொல்லிட கூடாது னு தான். நானும் அவனுக்கு வாங்கி கொடுத்துட்டு நாங்க செக்போஸ்ட்ட தாண்டி போய் மறைவா இருக்க ஒரு மலை பாறைக்கு பின்னாடி போய் திருட்டு தம் அடிச்சான் ஜூனியர் ஷேரன். நமக்கு அது மாறியான பழக்கம்ல இல்லை. அங்க கொஞ்ச நேரம் டைம் ஸ்பேன்ட் பண்ணிட்டு நாங்க காட்டேஜ் க்கு போனோம். சூரியன் தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த மலையில மறையிற காட்சியை... நல்லா செம வீயூ ல பார்த்துட்டு கொஞ்சம் இருட்டு ன நேரத்துல நைட் டின்னர்க்கு சாப்பாத்தியும் சிக்கன் க்ரேவியூம் வர, நல்லா சாப்பிட்டு மறுநாள் ஒரு இடத்துக்கு போகலாம் னு ப்ளான் பண்ணிட்டு தூங்கிட்டேன்.
புதன்கிழமை காலை 7 மணி.
சோலையார் ல ஜூனியரின் அப்பாவோட காட்டேஜ்ல நைட் ஸ்டே பண்ணிட்டு மறுநாள் காலையில எழுந்தேன். நானும் ஜூனியர் ஷேரனும் ஆல்ரெடி ப்ளான் பண்ணி வெச்ச மாறி... மார்னிங் அந்த ஊர்ல இருந்து பஸ் ல அந்த இடத்துக்கு போலாம் னு ப்ளான். அந்த ஊர்ல இருந்து ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி தான் நாங்க போலாம் னு முடிவு பண்ண இடத்துக்கு பஸ். ஆனா நாங்க அந்த பஸ் ல போலாம் னு இருந்த அப்போ சின்ன சேஞ்ச் ப்ளான் ல . ஷேரனோட அப்பா எங்கள ஒரு கார்ல நாங்க போற இடத்துக்கு கூட்டிட்டு போக ஒருத்தர் கிட்ட சொல்லிருக்கார். அவர் கேரளாவில் இருக்க அங்கமாலி க்கு ஒரு வேளையா போறவர். அவர்கூட கார்ல நாங்க போக வேண்டிய இடத்துக்கு ஜூனியரோட அப்பா அனுப்பி வெச்சார். ஏன்னா ! நாங்க போகுற இடம் அந்த கார்க்காரர் போற வழியில இருக்கறதால. மார்னிங் ப்ரேக்பாஸ்ட் முடிச்சிட்டு நானும் ஜூனியரும் நானோ கார்ல ஏறி நாங்க முடிவு பண்ணி வெச்ச ஊருக்கு கிளம்பினோம்.
அத்திரப்பள்ளி நீர்வீழ்ச்சி. தமிழக கேரள எல்லைக்கு அருகே திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வாட்டர் ஃபால்ஸ். தென் இந்தியாவின் நயாகரா அப்படி னு இதுக்கு ஒரு நிக் நேம் கூட இருக்கு. பல திரைப்படங்கள் இந்த அருவியில் ஷூட் பண்ணிருப்பாங்க. பாகுபலி ல ப்ரபாஸ் லிங்கத்த தூக்கிட்டு வரது, வேட்டைக்காரன் ல விஜய் என்னகவுன்டர்ல தப்பிக்க குதிச்சிது, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ னு சூர்யவம்சம் ல வந்தது, பையா அடடா மழைடா அடை மழைடா சாங் னு பல திரைப்படங்கள் இங்க ஷூட் பண்ணிருக்காங்க. ஆனாலும் கமல்ஹாசன் நடிச்ச புன்னகை மன்னன் படத்தின் நிறைய காட்சிகள் இங்க காட்சிப்படுத்தப்பட்ட காரணத்தால் இதை புன்னகை மன்னன் ஃபால்ஸ் னு கூட சொல்லுவாங்க. இந்த அருவிக்கு போக தமிழ்நாடு கேரளா செக்போஸ்ட்ட தாண்டி அடர்ந்த காட்டுல வேகமா கார்ல பயணிச்சி போனோம். நாங்க இருந்த சோலையார்ல இருந்து 55 கி.மீ. ஆனா அந்த தூரத்த கடக்க இரண்டு மணி நேர சாலை பயணம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காடுகளும்... சாலையை ஒட்டியே பெரிய நீர்தேக்கம் னு அந்த கேரளத்து வனச்சாலை செம ரம்மியமானது. நாங்க போற வழியில நடுக்காட்டுள்ள அந்த கார் டிரைவர் சாலை ஓரமா காரை நிறுத்தி சிறிது நேரம் சாலைஓரம் இருந்த அட்டைப்பூச்சிகளை பிடிச்சி வெச்சிக்கிட்டார்.
ஏதோ தெரிஞ்ச ஒருத்தர்க்கு அதை வெச்சு கால்ல ஏதோ டிரிட்மென்ட் பண்ணனும். சில நிமிடங்கள் காரை விட்டு இறங்கி சாலை ஓரம் நடந்து சென்ற சில வினாடிகளில்... காலில் ஏதோ கடிக்க செருப்பை எடுத்துட்டு பார்த்தால் அட்டைப்பூச்சிகள். லைட்டா ரத்தம் குடிக்க ஸ்டாட் பண்ணிட்டு இருந்துருக்கு. அப்புறம் அதை எடுத்து தூக்கி போட்டுட்டு எங்களோட கார் பயணம் கன்டினியூ ஆச்சு. நாங்க போற இடத்த நெருங்குற வேளையில ஒரு ரம்மியமான ஆற்றுப்பாலத்தை கடந்து அத்திரப்பள்ளி போய் ரீச் ஆனோம். நாங்க அத்திரப்பள்ளி போகுறத்துக்கு சில கி.மீ முன்னாடி இருந்த நீர் அற்ற வாளச்சல் நீர்வீழ்ச்சிய கடந்து போனோம்.
புதன்கிழமை மதியம் 12 மணி
நாங்க போன கார் டிரைவர்க்கு அங்கமாலி ல அவசர வேளை இருக்குறதால, எங்கள இறக்கி விட்டுட்டு உடனே கிளம்பிட்டார். இன்னொரு தகவல்... என் மொபைல் நெட்வொர்க் ஏர்டெல். நான் இருந்த சோலையார் ல வொர்க் ஆகமா இருந்துச்சி. மலை பிரதேசங்கள்ல பெரும்பாலும் பிஎஸ்என்எல் தான். நான் அத்திரப்பள்ளிய நெருங்கும் போது எனக்கு ராஜா அங்கிள் கிட்ட இருந்து போன் கால் வந்துச்சி. அவர் என்கிட்ட நலம் விசாரிச்சிட்டு, நான் அவர்கிட்ட பேசிட்டு இருக்கும் போது நாங்க அத்திரப்பள்ளி ரீச் ஆனோம். நான் அவர்கூட பேசிட்டே கார்ல இருந்து இறங்கிட்டேன். காரும் வேகமா அங்கமாலி நோக்கி போய்ட்டுச்சி. நான் போன் கால் பேசிட்டு ஜூனியர் ஷேரன் கிட்ட எங்க என்னோட பேக் னு கேட்கும் போது தான் என்னோட பேக் க அந்த கார்லயே மிஸ் பண்ணது தெரிஞ்சுது. லைட்டா மைன்ட் ஃபக் ஆயிடுச்சி ரெண்டு பேருக்கும். சரி போனது போகட்டும், அப்புறம் அவருக்கு கால் பண்ணி பேக் வாங்கிங்கலாம் னு வந்த இடத்த பார்க்க போனோம்.
சாலக்குடி ஆறு... மலைகள் ல பாய்ந்து வந்து நாங்க இருக்க அந்த இடத்துல 80 அடி உயரத்துல... அமெரிக்கா கனடா எல்லையில் இருக்க நயகரா நீர்வீழ்ச்சி போல பரந்து விரிந்து மேலே இருந்து கீழே ஆர்ப்பரிக்குற அந்த அழகு காட்சி தான் அத்திரப்பள்ளி அருவியோட சிறப்பு. நாங்க நுழைவாயில கடந்து மேலே இருக்க ஆற்றுக்கிட்ட போய் பார்த்தோம். அந்த ஆறு நீர்வீழ்ச்சியா விழறத்துக்கு முன்னாடி... பலர் மேலே இருக்க ஆற்றங்கரை ஓரமா குளிச்சிட்டு இருந்தாங்க. ஆபத்தான ஆழமான பகுதிக்கு போக கூடாது னு கயிறு ல தடுப்பும் போட்டு வெச்சி இருந்தாங்க. வேட்டைக்காரன் படத்துல விஜய்ய என்கவுன்டர் பண்ண ட்ரை பண்ற அப்போ, ஒரு அருவியில் குதிப்பார். அந்த சீன் இங்க தான் ஷூட் பண்ணியிருப்பாங்க. நாங்க சிறிது நேரம், அங்க அந்த கரையோரம் ஆற்றின் அழகை ரசிச்சிட்டு... அருவியின் அழகை ரசிக்க அந்த மலையில சில மீட்டர் தூரம் கீழே இறங்கி போனோம். அங்க போய் பால் போல கொட்டுற அருவிக்கு முன்னாடி நின்னு அந்த இயற்கையின் பேரழகை முழுமையா ரசிச்சோம். தென்மேற்கு பருவகாலங்களில் கேரளா ல பொழியிற மழை அப்போ இந்த அருவியில் நீர்வரத்து ஆக்ரோஷமா இருக்குற டைம்ல... கீழே அருவிக்கு சில மீட்டர் தொலைவில் நின்று பார்க்க சான்ஸ் ரொம்பவே கம்மி தான். அந்த அருவியில் நாங்க போன மே மாசம் கூட அவ்வளவு சீற்றத்தோடு தண்ணி கொட்டிச்சு. நானும் தம்பியும் எவ்வளவு போட்டோஸ் விடியோஸ் எடுக்க முடியுமோ அங்க அருவிக்கு பக்கத்துல இருந்து எடுத்துட்டு... கிளம்பும் போது அருவியில குளிக்காமலே அந்த சாரலில் முழுசா நனைந்து ஈரத்தோடு மலைக்கு மேலே வந்தோம். மதிய சாப்பாடு ஜூனியரும் நானும் அங்கேயே ஒரு ஹோட்டல் ல சாப்பிட்டு சிறிது நேரத்துல கிளம்ப ரெடி ஆனோம்.
கையில இருந்த பேக் கார்லயே போய்டுச்சி. கையில கொண்டு வந்த காசுல 150 ரூபாய் தான் இருந்துச்சி. அந்த கார் அங்கமாலி போய்ட்டு எப்போ சோலையார் வருதோ அப்போ அந்த பேக்க எடுத்து பார்சல் அனுப்புறேன் னு ஜூனியர் சொன்னதால, நான் அங்க இருந்து ஜுனியர் தம்பி கொடுத்த ஐம்பது ரூபாய் எக்ஸ்ட்ராவா வெச்சிக்கிட்டு சாலக்குடி கிளம்பினேன். அங்க இருந்த பஸ்ல என்னை ஷேரன் ஏத்திவிட்டுட்டு அவன் சோலையார் போற பஸ்ல அவன் ஊருக்கு கிளம்பினான். அத்திரப்பள்ளில இருந்து சோலையார் போய் அங்க இருந்து வால்பாறை போய் அப்புறம் பொள்ளாச்சி வழியா கோயம்புத்தூர் போய் ரயில் ஏறி சென்னை போறது ரொம்ப நேரம் அன்ட் தூரம் அதிகம் ஆகும் னு நான் சாலக்குடி ல இருந்து சென்னை போற ரயில் ஏறலாம் னு ஐடியால தான் இங்க வந்தேன். நான் ஏறுன பஸ் ஒரு மணி நேர பயணத்துல சாலக்குடி பஸ் ஸ்டான்ட் போய் சேர்ந்தது. ரொம்ப ரம்மியமான மலைபிரதேச பஸ் பயணம். 25 ரூபாய் பஸ் டிக்கெட். நல்ல வேகம். பஸ்ல ஸ்பீக்கர்ல ஓடின பாட்டு எல்லாம் தமிழ் பாட்டு தான். நான் பஸ் ஸ்டான்ட் ல இருந்து எனக்கு தெரிஞ்ச அரைகுறை மலையாளத்துல அங்கு இருக்கவங்க கிட்ட கேட்டு ரயில்வே ஸ்டேஷன் போற பஸ்ல ஏறி சாலக்குடி ரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கினேன்.
புதன்கிழமை மாலை 4 மணி.
ஆழப்புழா ல இருந்து சென்னை போற சூப்பர் பார்ஸ்டு எக்ஸ்பிரஸ் டிரைன்ல சென்னை போறதா ஐடியா. ஆனா கையில அன்ரிசர்வ்ட் ல போற அளவுக்கு கூட காசு இல்ல. மொழி தெரியாத ஊர்ல என்ன பண்றது னு யோசிச்சிட்டே... அந்த டிரயின்ல டிக்கெட் எடுக்கமா வித்தவுட்ல போக ப்ளான் போட்டேன். கேரளா ல டிக்கெட் இல்லாம போறது ரொம்பவே ரிஸ்க். நான் போன ரயில் பயணங்களிலயே கேரளால தான் அன்ரிசர்வ்டு ல கூட செக் பண்ணுவாங்க. ஆனா டிக்கெட் எடுக்க காசு இல்லாத சூழ்நிலை என்னை வித்தவுட் ட்ராவல் பண்ண வெச்சிது. நானும் சரி டிக்கெட் எடுக்காம தானே போறோம். இருக்க காசு க்கு நல்ல சாப்பிடுவோம் னு, ஸ்டேஷன் முன்னாடி இருக்க பேக்கரில காபி அப்புறம் பப்ஸ் னு நல்லா சாப்பிட்டேன். அந்த பேக்கரில இருந்த சேட்டா நான் போட்டு இருந்த எம் சி சி பெயர் போட்ட டிசார்ட் வெறிச்சி பார்த்துட்டு இருந்தார். யாரோ அவருக்கு தெரிஞ்சவங்க அங்க படிச்சிருப்பாங்க னு நானும் நினைச்சிக்கிட்டேன். குடிக்க ஒரு தண்ணி பாட்டில் வாங்கிட்டு ஸ்டேஷன்ல டிரையின்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். சென்னை போற ரயில் இரண்டு மணி நேரம் லேட்ட சாலக்குடி ஸ்டேஷன் வர நான் அன்ரிசர்வ்ட் கோச்ல லக்கேஜ் வெக்கிற மேல் சீட்ல ஏறி இடத்த பிடிச்சி வாட்டர் கேன்ன தலையனை ய வெச்சி படுத்துகிட்டேன். உடனே நல்ல உடல் அசதில தூங்கிட்டேன்.
வியாழக்கிழமை காலை 8 மணி.
நான் போற ரயில் காலையில அரக்கோணம் ஸ்டேஷன் வந்த அப்போ முழிப்பு வந்து எழுந்து படிக்கட்டுல உட்கார்ந்துட்டே வந்தேன். கையில டிக்கெட் இல்லை. சென்ட்ரல் ஸ்டேஷன்ல மாட்டிக்க கூடாது னு நினைச்சிட்டு இருக்கும் போது, நான் போன ரயில் பெரம்பூர் ஸ்டேஷன்ல ப்ளாட்பாரம் விட்டு கொஞ்சம் தாண்டி போய் நின்னுச்சி. நான் உடனே ரயில்ல இருந்து இறங்கிட்டேன். அங்க இருந்து நேரா டிக்கெட் கவுண்டர் போய், தாம்பரம் போக 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு... சென்ட்ரல் போற ட்ரையின்ல ஏறி போனேன். அப்புறம் அங்க இருந்து தாம்பரத்துக்கு பார்க் ஸ்டேஷன் போய் மின்சார ரயில் ஏறி ஒருவழியா வீடு போய் சேர்ந்தேன். கையில வீட்டுக்கு போன அப்போ இருந்த காசு 80 ரூபாய் மிச்சம். அஞ்சு நாளைக்கு முன்னாடி எந்த ப்ளான் இல்லாம திடீர் னு கிளம்பி வீட்டுல கொடுத்த 900 ரூபாய் வெச்சிக்கிட்டு... தனியா ஃபர்ஸ்ட் டைம் நான் ஊரு சுத்திட்டு மறக்க முடியாத அனுபவங்களோட... நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்தது எப்பவுமே மறக்க முடியாத டிரிப். இந்த டிரிப் க்கு பிறகு தான் ஊர் சுற்றனும் னு தனியாக, நண்பர்கள் கூட அப்படி னு தமிழ்நாடுல பெரும்பாலன இடங்களுக்கும், இந்தியாவில் சில இடங்களுக்கும் டிரிப் போய்ட்டு வந்துட்டு இருக்கேன். ஆனா எல்லாத்துக்கும் இந்த டிரிப் கற்று கொடுத்த தைரியமும் ஆச்சரியமும் தான் முக்கிய காரணம்.
- பயணங்கள் தொடரும்.
பல நாட்கள்ல எழுதணும் னு நினைச்சி இப்போ இந்த லாக்டவுன்ல இந்த பயண அனுபவங்கள் ல எழுதி முடிச்சிருக்கேன். இன்னும் சில பயண அனுபவங்களையும் முடிந்த அளவு இந்த லாக்டவுன் காலத்துல சீக்கிரம் எழுதி முடிக்கணும் னு திட்டமிட்டு இருக்கேன். அடுத்த பயண கட்டுரையில் சந்திப்போம்.
Nice one!!
ReplyDeleteஅருமையான பதிவ��
ReplyDeleteNicee!!!
ReplyDeleteInspiring one Anna 🤩
ReplyDeleteSammaya iruthuchu bro
ReplyDeleteYou deserve to be a writer Annaa... amazing flow of words😎🔥keep going annaa
ReplyDeleteVery nice bruh!! I could see a very good experienced writer's flow in yours. Keep going!
ReplyDelete