31.12.2019 காலை 6 மணி.
பேருந்தில் இருந்து தூக்க கலக்கத்தில் இறங்கி பஸ் ஸ்டான்டில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன். குளிரில் உடல் நடுங்கிய படியே இருக்க , கண்ணை திறந்து நான் பார்த்த காட்சி , எனக்குள் அந்த நொடியில் ஏற்படுத்திய பேரானந்தத்தை வார்த்தைகளில் என்னால் விவரிக்கவே முடியாது. 2019 ஆம் ஆண்டின் முதல் நாளில், நான் வாட்ஸ்சப் ஸ்டேடஸில் சில இடங்களை பட்டியலிட்டு, அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று வர வேண்டும் என நினைத்தவற்றில், கடைசியாக மிச்சம் இருந்த ஒன்றே ஒன்று, அந்த ஆண்டின் கடைசி நாளில் வெற்றிகரமாக நிறைவேற உள்ள சந்தோஷம். நான் பார்த்த காட்சியின் சந்தோஷத்தை உடனே என் நண்பர்களில் யாருக்காவது தெரியப்படுத்த வேண்டும் என, நான் என்னை இந்த நீண்ட பயணத்துக்கு வழி அனுப்பி வைத்த தம்பி ஹரிஷ்க்கு வீடியோ கால் செய்து என் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன். அப்படி என்னத்த தான்டா பார்த்த நீ? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியுது. இந்தியாவின் வடக்கே இமயமலை தொடர்கள் சூழ்ந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில், இந்தியாவின் தலைசிறந்த மலை வாசஸ்தலங்களில் ஒன்றான மணாலியில் தான் அந்த கண்கொள்ளா காட்சியை அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் இருந்து அந்த காலை வேளையில் கண்டேன். பனி சிகரங்களால் சூழப்பட்ட ஊர் மணாலி. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை நீண்ட பனி மலைகளாக காட்சி தருகிறது. திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்த பனிமலைகளை கண்முன்னே காணும் மகிழ்ச்சி. பனி மலைகளை தூரத்தில் இருந்து காணும் ஆனந்தம். என்னை அந்த காட்சி கையில் பனியை எப்பொழுது எடுத்து விளையாடுவோம் என தூண்டியது. ஆனால் அங்கு நிலவிய உறை நிலைக்கும் கீழான குளிர் என்னை நடுநடுங்க வைத்தது. சரி ! நான் எப்படி மணாலிக்கு தன்னந்தனியே வந்து சேர்ந்த கதைய பார்ப்போம்.
2019ஆம் ஆண்டின் டிசம்பர் 23 ஆம் தேதி தென் தமிழகம் நோக்கி பயணப்பட்ட நான் அங்கு தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பார்த்துட்டு டிசம்பர் 25ஆம் தேதி கன்னியாகுமரி ல டெல்லி போற ரயில் ஏறி அப்புறம் டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ், பாகிஸ்தான் எல்லையான அடாரி வாகா பார்டர், சண்டிகர் என அலைந்து திரிந்து டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் அரியானா - ஹிமாச்சல் பிரதேச எல்லையில் உள்ள கல்கா என்னும் கிராமத்திற்கு சென்று அடைந்தேன். இந்த இடத்தில் இருந்து தான் சிம்லா விற்கு செல்ல ரயில் உள்ளது.
இந்தியாவில் ரயில் பயணங்கள் செய்ய சிறந்த ரயில் வழித்தடங்களில் கல்கா - சிம்லா இடையே இயக்கப்படும் இமாலயன் ரயிலுக்கும் இடம் உண்டு. இந்த ரயிலில் செல்லுவதற்காகவே நான் கல்கா வுக்கு வந்து சேர்ந்தேன். இமயமலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2152 அடி உயரத்தில் உள்ள கல்கா வில் இருந்து 95 கி.மீ க்கு பல மலைகளை 20 ரயில் நிலையங்கள் , 103 குகைகள், 912 வளைவுகள், 969 பாலங்களில் பயணித்து கடந்து சென்றால் கடல் மட்டத்தில் இருந்து 6808 அடி உயரத்தில் உள்ள சிம்லா வை அடையலாம். இந்த ரயில் பயணம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் போலவே உலகப்புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்தது. யுனெஸ்கோ வால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒன்று.
கல்கா வில் இருந்து சிம்லா செல்ல சில ரயில்களே உள்ள நிலையில் , அனைத்து ரயில்களிலும் டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்றால் , விடுமுறை காலம் என்பதால் ஏற்கனவே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டது . ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் நான் கல்கா வில் உள்ள டிக்கெட் கவுண்டரில் விசாரித்த போது ஒரு முன்பதிவில்லாத ரயில் சிம்லா வுக்கு கிளம்ப தயார் நிலையில் இருப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது. உடனே அந்த ரயிலுக்கான டிக்கெட் எவ்வளவு என கேட்டு ஒரு டிக்கெட் எடுத்து கொண்டு அந்த ரயில் இருக்கும் ப்ளாட்பாரத்திற்கு ஓடினேன். அந்த உலகப்புகழ் பெற்ற ரயில் பயணத்திற்கான கட்டணம் வெறும் ரூபாய் 25 தான். பல மலைகளைக் கடந்து சிம்லா செல்வதற்காக தயார் நிலையில் இருந்த ரயிலில் எனக்கான இருக்கை தேடி நான் அலைந்த போதுதான் தெரிந்தது அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டது என்று. ரயிலின் வலதுப்புறமாக நாம் அமர்ந்து இருந்தால் மட்டுமே இயற்கை காட்சிகள் தெளிவாக தெரியும் என்பதால் நான் கடைசி பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ய முடிவு செய்தேன். காலை சரியாக 8 மணிக்கு டீசல் என்ஜின் பொருத்திய மலை ரயில் கல்காவில் இருந்து தன் பயணத்தை தொடங்கியது.
நான் கடைசி பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த போது, என்னுடன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் மகனும் படிக்கட்டு பயணம் செய்தனர். சிறிது நேர அவர்களுடன் உரையாடி விட்டு மலை மேல் பாம்பு போல ஊர்ந்து செல்லும் ரயிலில் இருந்து கீழே பள்ளதாக்கில் தெரியும் கிராமங்களை கண்டு ரசித்தேன். அங்கு நிலவிய குளிர் 7° டிகிரி. மலை மேல் ஏற ஏற குளிரும் கூடியது. அன்ரிசர்வ்டு ரயில் என்பதால் ரயிலில் அளவு அதிகமான கூட்டம். சில பயணிகள் ரயில் என்ஜின் பின்புறம் இணைக்கப்பட்டு இருந்த மேற்கூரை இல்லாத ஒரு பெட்டியில் ஏறி பயணம் செய்ய தொடங்கினர். மலையில் உள்ள சில ரயில் நிலையங்களுக்கு இந்த ரயிலில் பெரிய தொட்டியில் நீர் நிரப்பி கொண்டு செல்ல அந்த பெட்டி பயன்படுத்தப்பட்டது. பலர் அந்த பெட்டியில் ஏறி பயணம் செய்ய விரும்பி அதில் ஏறினார்கள். ஒரு ரயில் நிலையத்தில் அந்த பெட்டியில் இருந்த நபர்களை காவலர் ஒருவர் கீழே இறக்க முயற்சிக்க அது தோல்வியில் முடிந்தது. பின்பு நானும் அந்த கும்பலில் ஐக்கியமாகி டாப்லேஸ் கோச் டிரையின் டிராவல் செய்தேன்.
மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் வரும் "தைய தைய தையா தையா" பாடலை பார்த்தவர்களுக்கு தெரியும், ஷாரூக்கான் மலை ரயிலில் மேற்கூரை இல்லாத ஒரு பெட்டியில் நடனமாடி கொண்டே செல்லும் காட்சி. அது போலவே என்னுடன் அந்த பெட்டியில் இருந்தவர்கள் ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாடல்களை போட்டு கொண்டு நடனமாடி வந்தார்கள். நானும் அதில் இணைந்து சிறிது நேரம் நடனமாடி மகிழ்ந்து இருந்தேன். பல குகைகளையும், பல உயரமான பாலங்களை கடந்து சென்ற என் பயணம் அந்த வழித்தடத்திலேயே நீளமான போராக் குகையான ஒரு கிமீ க்கு அதிகமான நீளம் கொண்ட குகையை கடந்து சென்றது. இந்த குகைக்கு பின்னால் ஒரு சோக கதை உள்ளதாம். இங்கு குகையை குடைய போரக் என்னும் ஆங்கில பொறியாளர் நியமிக்கப்பட்டார். அவர் மலையின் இரு முனைகளில் இருந்து குடைய தொடங்கி இந்த குகையை உருவாக்க திட்டமிட்டார். ஆனால் இருமுனையில் இருந்து குடைந்த முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே ஆங்கிலேயே அரசு , அவர் அரசின் நிதியை வீணடித்த காரணத்தால் இவருக்கு அபராதம் விதித்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தன் நாயுடன் முடிவு பெறாத குகையில் நடைபயணம் சென்ற போது தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் நினைவாக பின்பு வேறு ஒரு பொறியாளர் வெற்றிகரமாக முடித்த குகைக்கும், அந்த குகையின் முடிவில் வரும் ரயில் நிலையத்திற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது.
இவ்வாறாக பல மலைகளை கடந்து மதியம் 2.45 மணிக்கு நான் சென்ற மலை ரயில் சிம்லா நகரை சென்று அடைந்தது. நான் சிம்லா வுக்கு சென்றதற்கான முக்கிய காரணம் பனிப்பொழிவு அல்லது பனி பரவிய இடத்தை காண வேண்டும் என்பதால் தான். ஆனால் நான் சிம்லா சென்ற காலமானது குளிர் காலத்தின் தொடக்கம் என்பதால் என் மனம் ஆனந்தப்படும் அளவு பனியை பார்க்க முடியவில்லை. நான் ஊருக்கு வெளியே இருந்த சிம்லா ரயில் நிலையத்தில் இருந்து ஊரின் மையப்பகுதிக்கு செல்லலாம் என முடிவு செய்தேன். ஆனால் சிறிது நேரம் மொபைல் சார்ஜ் செய்யலாம் என அந்த ரயில் நிலையத்திலேயே இருந்து விட்டு சிம்லா நகரின் மையப்பகுதிக்கு நடந்தே சென்றேன்.
இரண்டு கிமீ க்கும் அதிகமான தொலைவுக்கு பொறுமையாக அந்த ஊரின் அழகை ரசித்து கொண்டே நடந்து சென்றேன். பல கட்டிடங்களை காணும் போது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களாக இருந்தது. ஒரு கடையில் பர்கர் வாங்கி சாப்பிட்டு என் பசியை போக்கி கொண்டேன். முதலில் அந்த ஊரின் மைய பகுதியான மால் ரோடுக்கு நடந்து சென்றேன். மாலை வேளையில் சூரியன் முன்னதாக மறைய தொடங்க குளிரின் தாக்கம் கூட தொடங்கியது. நான் சென்ற இடமான அந்த பகுதியில் தான் முக்கியமான கொண்டட்டங்களுக்கு மக்கள் ஒன்று கூடுவார்கள். நான் அங்கு மரத்தால் கட்டப்பட்டு இருந்த பழமையான கட்டிடங்களையும் அதன் கலைத்திறனை கண்டு ரசித்து விட்டு அங்கே இருந்த ஒரு பழமையான சர்ச் ஒன்றை காண சென்றேன். தனிமையில் நான் அந்த இடத்தில் சுற்றி திரிந்த போது அங்கே தமிழ் பேசும் ஒரு குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். குடும்பமாக சுற்றுலா வந்து இருந்த அவர்களிடம் என் பனிப்பொழிவு அல்லது பனியால் சூழப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை சொல்லி விசாரித்து சில ஐடியா களை பெற்று கொண்டேன். எனக்கு சிம்லா வில் ஏமாற்றமே மிஞ்சியது, ஏனெனில் நான் ஆசைப்பட்டதை என்னால் பார்க்க முடியாத வருத்தம். ஆனால் கண்டிப்பாக நான் ஆசைப்பட்டதை பார்க்காமல் ஊர் திரும்ப கூடாது என்ற எண்ணம். அப்பொழுது தான் அங்கே பனி போர்த்திய மைதானத்தில் பனியில் ஸ்கேட்டிங் செய்யும் சிறுவர்களை பார்த்து அங்கே சென்று அந்த விளையாட்டை சிறிது நேரம் ரசித்து கொண்டு இருந்தேன்.
சிம்லா வில் பனியை பார்த்து பரவசப்படும் அளவு எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படவில்லை என தோன்றிய போதே "திரிஷா இல்லனா நயன்தாரா" கதையாக நான் மணாலி செல்ல முடிவெடுத்தேன். நான் இணையத்தில் சிம்லா வில் பனிப்பொழிவை பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போல் ஏன் நான் சென்ற போது சிம்லா இல்லை என விசாரித்த போது தான் தெரிந்தது , நான் சிம்லா சென்ற நேரம் தான் பனிப்பொழிவின் தொடக்க காலம். இன்னும் இரண்டு வாரம் கழித்து அதாவது நம்ம ஊரு பொங்கல் டைம்ல தான் இங்க பனிப்பொழிவு வேற லெவல்ல இருக்கும் னு அங்கு இருந்தவங்க சொன்னாங்க. மணாலி என்னை ஏமாற்றாது என்னும் நம்பிக்கையில் சிம்லா டூ மணாலி செல்ல இமாச்சல் ரோடுவேஸ் அரசு பஸ்ஸில் இரவு பயணம் செய்ய டிக்கெட் புக் பண்ணேன். நான் மணாலி செல்ல பஸ் ஏற சிம்லா நகரின் வெளியே உள்ள இண்டர் ஸ்டேட் பஸ் ஸ்டான்ட் க்கு நடந்தே சென்றேன். ஒரு மணி நேர நடைபயணத்தில் மூன்று கிமீ தொலைவில் இருந்த பஸ் ஸ்டாப் க்கு நான் மணாலி போக இருக்கும் பஸ் பிடிக்க வந்து சேர்ந்தேன். மொபைலில் சார்ஜ் குறைந்து கொண்டே இருக்க, மொபைல் சார்ஜ் போடுவதற்காகவே நான் என் டின்னரை சார்ஜ் போட வசதி உள்ள ஹோட்டல் தேடி அலைந்தேன். எப்படியோ ஒரு ஹோட்டலில் ப்ளக் பாயிண்ட் க்கு பக்கத்து மேசையில் இடம் கிடைக்க ஒரு வெஜ் ரைஸ் ஆர்டர் செய்து மெதுவாக சாப்பிட்டு கொண்டே மொபைல் சார்ஜ்ம் ஏற்றி கொண்டேன். பவர் பேங்க் கொண்டு போகாத என் தவறை அப்பொழுது உணர்ந்து கொண்டேன். சிறிது கழித்து இரவு 8 மணிக்கு மேல் மணாலி செல்லும் அந்த பஸ்ஸை தேடி கண்டுபிடித்து என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அப்பொழுது குளிர் -2° டிகிரி செல்சியஸ். ஆத்தி ! இங்கவே இவ்வளவு குளிரா இருக்கே ! மணாலி ல எப்படி இருக்குமோ னு அந்த இரவை அந்த பஸ்ஸிலேயே கழிக்க முடிவு செய்தேன். அந்த பேருந்து முழுவதும் பயணிகள் நிரம்பிய பின்னர் என் ஆசையை நான் நிறைவேற்றி கொள்வதற்கான இடத்திற்கு செல்வதற்கான பயணம் அந்த முன்னிரவில் தொடங்கியது.
2019ஆம் ஆண்டின் கடைசி நாள் காலையில் மணாலி பஸ் ஸ்டான்டில் தனியாக நான் நின்று கொண்டிருந்தேன். எனக்குள் ஒரே மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓட, அந்த நாளில் என்ன செய்யலாம் என்று திட்டம் போட்டேன். முதலில் மொபைல் சார்ஜ் போட ப்ளக் பாயின்ட் தேடி அந்த பேருந்து நிலையத்தில் அலைந்தேன். என் லக், எப்படியோ எனக்கு ப்ளக் பாயின்ட் கிடைக்க நான் மொபைல் சார்ஜ் செய்து கொண்டேன். பயணங்களில் பவர் பேங்கின் அருமை இந்த பயணத்தில் உணர்ந்தேன். நான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கொட்டி கிடக்கும் பனியை பார்க்க மணாலியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ள சோலாங் வெலி என்னும் இடத்திற்கு செல்ல முடிவு செய்தேன். மணாலி சென்றால் அனைவரும் கண்டிப்பாக செல்லும் இடங்களில் முக்கியமான இடம் இந்த சோலாங் வெலி. பேருந்தில் கிளம்புவதற்கு முன்பு ஒரு டீ குடிக்கலாம் என ஒரு கடைக்கு சென்றது தவறாக போய் விட்டது. அந்த டீக்கடைக்கார பெண் எனக்கு அவர் பேசும் மொழி தெரியாத காரணத்தினால் பத்து ரூபாய் டீக்கு கூடுதல் விலை கேட்டு மிரட்டி வாங்கி கொண்டார். நானும் குடிப்பதற்கு முன்பே கொஞ்சம் யோசித்து இருக்கலாம் என என் தவறை உணர்ந்து கொண்டே, எப்படி சோலாங் வெலி செல்வது என யோசனையில் இருந்தேன். நான் சிக்கனமாக பயணம் செய்யும் பயணி என்பதால் தனியே கார், வேன் புக் செய்து போகும் அளவிற்கு பணத்தை வீணடிக்க கூடாது என நினைத்து வேறு வழியை யோசித்து கொண்டே அந்த பேருந்து நிலையத்தில் திரிந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் அந்த பேருந்து பட்டியல் என் கண்ணில் பட்டது. சோலாங் நல்லா என்னும் இடத்திற்கு அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும் என எழுதி இருந்தது. நான் செல்ல நினைத்த சோலாங் வெலியும் இந்த சோலாங் நல்லா வும் ஒன்றா அல்லது வெவ்வேறு இடங்களா என நான் கூகுள் செய்து பார்த்ததில் இரண்டும் அருகருகே இருக்கும் இடங்கள் என இருந்தது , எனக்குள் ஒரு புது ஐடியா வை கொடுத்தது. நான் ஹிமச்சல் பிரதேஷ் ரோட்வேஸின் பேருந்தில் சோலாங் நல்லா சென்று அங்கு இருந்து நடந்தே சோலாங் வெலியில் உள்ள அந்த பிரபலமான பனி விளையாட்டு மைதானத்திற்கு செல்ல முடிவு செய்தேன்.
சரியாக காலை பத்து மணிக்கு சோலாங் நல்லா செல்லும் எலக்ட்ரானிக் பஸ் நான் இருந்த பஸ் ஸ்டான்டிற்கு வந்து சேர்ந்தது. பெரும் போராட்டத்திற்கு பிறகு எப்படியோ பேருந்தில் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் ஏறி நான் எனக்காக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்தேன். பேருந்து முழுவதும் பயணிகளால் நிரம்பி வழிந்தது. நான் ஜன்னலோரமாக அமர்ந்து என் இடதுபுறமாக சாலை ஓரம் இருந்த மணாலியின் இயற்கை அழகை ரசித்து கொண்டே பேருந்தில் பயணம் செய்தேன். பீஸ் ரிவர் என அழைக்கப்படும் நதியின் கரையோரத்திலேயே நாங்கள் சென்ற சாலை அமைக்கப்பட்டு இருந்தது. பனிக்கட்டிகளுடன் பாதி உறைந்த நிலையில் அந்த நதி சலசலத்து ஓடி கொண்டு இருந்தது. பின்பு நான் பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது என் காதில் யாரோ தமிழில் பேசும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். நான்கு தமிழ் பேசும் சென்னை பசங்க அந்த பேருந்தில் நான் செல்ல இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து நமக்கு ஒரு கம்பெனி கிடைத்த மகிழ்ச்சியில் நான் அவர்களுடன் உரையாட தொடங்கினேன். அருட்கனி, விக்கி, லவனேஷ், பவுல் - இவர்கள் நால்வரும் தான் அந்த சென்னை பசங்க. வருடத்தின் கடைசி நாள் மற்றும் நியூ இயர் விடுமுறை என்பதால் நாங்கள் சென்ற மலை சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல கூடிய அளவில் அந்த மலை பாதை இருந்தது. ஏனெனில் சாலையின் இருபுறமும் பனி கொட்டி இருந்ததால் அதில் வாகனங்கள் வழுக்கி கொண்டு சென்றது வாகனம் ஓட்டுவோருக்கு மிகவும் சிரமம். போக்குவரத்து நெரிசல் காரணமாக நாங்கள் சென்ற பேருந்து ஒரு இடத்திலேயே நின்று விட்டது. நானும் சென்னை நண்பர்களும் பேருந்தில் இருந்து இறங்கி நாங்கள் செல்ல இருந்த அந்த பனி விளையாட்டு மைதானத்திற்கு நடந்து செல்ல முடிவெடுத்து நடந்தே சென்றோம். எங்களுடன் பேருந்தில் வந்த ஒருவர் அருகில் இருக்கும் ஒரு மலைகிராமத்திற்கு செல்லும் வழியில் எங்களை அந்த மைதானத்திற்கு வழிக்காட்டியாக இருந்து அழைத்து சென்றார்.
நாங்கள் ஐந்து பேரும் நடுங்கும் குளிரில் நடந்து போய் கொண்டு இருந்த போது, சாலையின் இருபுறமும் நம்மை குளிரில் இருந்தும் மற்றும் நாங்கள் செல்கிற பனி விளையாட்டு மைதானத்தில் எங்களை பாதுகாத்து கொள்ள ஸ்னோ ஷூட் மற்றும் பூட்ஸ் வாடகைக்கு விடும் நபர்கள் கடை விரித்து பிசினஸ் செய்து கொண்டு இருந்தார்கள். மணாலியில் இருந்து நான் இங்கு வந்து சேரும் வரை இது போன்ற பல கடைகளை என்னால் சாலையின் இருபுறமும் காண முடிந்தது. என்னுடன் வந்த நண்பர்கள் ஒரு சாலை ஓர கடையை தேர்ந்தெடுத்து அங்கு எங்களுக்கான பாதுகாப்பு ஸ்னோ ஷூட்களை 250 ரூபாய் வாடகைக்கு வாங்கி கொண்டு நாங்கள் கொண்டு வந்த உடைமைகளை அங்கே வைத்து விட்டு, எங்களுக்கான ஸ்னோ ஷூட்களை நாங்கள் ஏற்கனவே அணிந்து இருந்த ஆடைகள் மேலேயே அணிந்து கொண்டு, அந்த சோலாங் வெலியில் உள்ள பனி விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம்.
சோலாங் வெலி - மணாலியில் இருந்து லடாக் செல்லும் சாலையில் 13 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமம். இங்கு உள்ள பரந்து விரிந்த ஒரு மைதானத்தில் குளிர் காலத்தில் பனி படர்ந்து காணப்படும். இந்த இடத்தில் கொட்டி கிடக்கும் பனியில் ஸ்கேட்டிங், மோட்டர் பைக் ரைடு, சிறு குன்றின் மீது இருந்து ரப்பர் டியூப்பில் சறுக்கி கொண்டு வருவது, யாக் எனப்படும் காட்டெருமையில் சவாரி, பாராகிளைடிங், ரிவர் கிராசிங் என பல பனி சார்ந்த விளையாட்டுகள் விளையாடி மகிழ சிறந்த இடம். எனவே சுற்றுலா பயணிகளின் தவிர்க்க முடியாத சாய்ஸ் இந்த இடம். இங்கு நாங்கள் சென்று சேர்ந்த உடன் முதலில் அனைத்து விளையாட்டுகளுக்கான கட்டணத்தை அறிந்து கொள்ள முயன்றோம். அப்பொழுது இந்த விளையாட்டுகளை பேக்கேஜ் அடிப்படையிலான கட்டணம் என எங்களுக்கு அங்கு இருந்த ஒரு ஏஜேன்ட் தெரிவித்தார். நான் கையில் காசு குறைவாக வைத்து இருந்த காரணத்தால் ப்ராகிளைடிங் மட்டும் செல்ல தீர்மானித்து மற்ற விளையாட்டுகளில் பங்கு கொள்ள வில்லை. ஆனால் என்னுடன் வந்த நண்பர்கள் மற்ற விளையாட்டுகளை விளையாட முடிவு செய்து அதில் விளையாட ஒரு ஏஜென்டிடம் பேரம் பேசினார்கள். எப்படியோ ஒரு ஏஜென்டை கரெக்ட் செய்து அவர்கள் நான்கு பேரும் அனைத்து விளையாட்டு சாகசங்களையும் செய்தார்கள். எனக்கு அவற்றை செய்யும் ஆசையே இல்லை. ஏனெனில் என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது எல்லாம் எப்பொழுது பாராசூட்டில் வானில் இருந்து பறந்து வந்து பாராகிளைடிங் செய்வோம் என்று தான். என்னுடன் வந்த நண்பர்கள் அவர்களின் சாகசங்களை விளையாடி மகிழ்ந்த நேரத்தில் நான் அங்கு தனியாக ஸ்பீக்கரில் பாடல்களை போட்டு நடனம் ஆடி கொண்டு இருந்த ஒரு வட மாநில இளைஞர்கள் குழு உடன் இணைந்து ஒரு நடனம் ஆடி மகிழ்ந்தேன். அங்கு இருந்த மைதானம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்து இருந்தது.
என் நண்பர்கள் அடுத்ததாக பாராகிளைடிங் செய்ய தயார் ஆன போது நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். நாங்கள் சோலாங் வெலி சென்றது ஆன் சீசன் என்பதால் அனைத்து விளையாட்டுகளும் கூடுதல் கட்டணம். எப்படியோ நாங்கள் ஐந்து பேரும் பாராகிளைடிங் செய்ய அங்கு இருந்த டிக்கெட் கவுண்டரில் பணத்தை கட்டி புக் செய்தோம். இரண்டு விதமான கட்டணங்கள் அங்கு வசூலிக்கப்பட்டது. குறைவான உயரத்தில் இருந்து குதிக்க ரூ.1000/- இதில் நாம் பைலட் உடன் ஒரு குறிப்பிட்ட உயரம் மலை மீது ஏறி அங்கு இருந்து பாராசூட்டில் பறந்து வர வேண்டும். மற்றொன்றில் ரூ.3300/- இதில் ரோப் கார் உதவியுடன் மலையின் உச்சிக்கு சென்று அங்கு இருந்து பாராசூட்டில் பறந்து வர வேண்டும். நாங்கள் குறைந்த உயர கட்டணத்தை தேர்வு செய்து , அங்கு இருந்த ஒரு படிவத்தில் நாங்கள் சுயவிருப்பத்துடன் இந்த விளையாட்டில் ஈடுபடுகிறோம் என கையொப்பமிட்டு விட்டு எங்களுக்கான பைலட் உடன் மலை ஏற தொடங்கினோம். நாங்கள் பறந்து வரவுள்ள பாராசூட்டை மேலே தூக்கி செல்ல இதற்கு என்றே சுமை தூக்கும் தோழர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். நானும் பைலட் மற்றும் அந்த சுமை தூக்கும் தோழர், கடினமான அந்த பனிக்கட்டிகள் சூழ்ந்த பாதையில் மலை மேலே ஏறினோம். சிறிது தவறினால் கூட பலத்த காயங்கள் ஏற்படும் அளவு கடினமான வழுக்கும் பனிக்கட்டிகளில் நிதானமாக கால் வைத்து எப்படியோ அந்த ஜீரோ டிகிரி செல்சியஸ்க்கு கீழ் உள்ள குளிரில் தட்டுதடுமாறி மலை ஏறி நாங்கள் குதிக்க தயாராகும் பாயிண்ட்டை அடைந்தோம். எனக்கு முன்பு குதிக்க சிலர் அங்கு தயார் நிலையில் இருக்க, அதில் ஒருவர் பைலட் உடன் குதிக்கலாம் என பாராசூட்டை விரித்து பறக்க தயாராக இருந்த சில வினாடிகளில் அங்கு திடீர் என மாறிய காற்றின் போக்கு காரணமாக அவர்கள் பறக்க தொடங்காமல் காற்றின் போக்கு சரியாகும் வரை காத்து இருந்தார்கள். எப்படியோ சிறிது நேரத்தில் அவர்கள் பறந்து சென்ற உடன் நான் அடுத்து பறக்க தலையில் ஹெல்மெட் அணிந்து பாராசூட்டில் என் உடலை மாட்டி கொண்டு என் பைலட் உடன் பறக்க தயாராக இருந்தேன். மனதில் பெரும் மகிழ்ச்சி பொங்கி வர , கையில் மொபைலில் நான் பறக்கும் காட்சியை வீடியோ எடுக்க ஆன் செய்து நான் பறக்க தொடங்கினேன். என் வாழ்க்கையில் நான் வானில் பறந்த முதல் அனுபவம். சுமார் 2 நிமிடங்கள் வானில் சுற்றி சுழன்று பனிப்போர்த்திய மலையின் அழகை ரசித்து கொண்டே பறந்து வந்தேன். கையில் இருக்கும் மொபைல் கீழே விழ கூடாது என நான் இறுக்கமாக பிடித்து கொண்டேன். ஆனால் என் கை உறைந்து போய் ரத்தம் ஓட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிற்க தொடங்கியது. எப்படியோ நான் மொபைலை கிழே விடாமல் சீக்கிரமாக தரையில் லேன்ட் ஆனேன்.
நான் வானில் பறந்து வந்து தரை இறங்கிய பின்பு, நான் வானில் பறந்து வந்த புகைப்படங்களை எடுத்த ஒரு போட்டோக்கிராப்பர் என்னிடம் அதை பகிர ஒரு ரேட் பேச, அவரிடம் பேரம் பேசி எப்படியோ என் புகைப்படங்களை வாங்கி கொண்டேன். நாங்கள் அனைவரும் களைப்பு மிகுதியால் அங்கு இருந்து கிளம்பும் முன்பு அந்த குளிரில் உடலை கதகதப்பாக வைக்க ஒரு டீ குடித்தோம். நான் குடித்த ஆக சிறந்த டீ என சோலாங் வெலியில் குடித்த டீயை சொல்லலாம். ஏற்கனவே வால்பாறையில் குடித்த டீயே சிறந்த டீ என நினைத்து இருந்த நான் அதற்கு ஈடாக ஒரு சுவையான டீயை அங்கு பருகினேன். அப்புறம் பசியாற ஒரு மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டு நாங்கள் அடுத்த சாகச விளையாட்டு விளையாட பீஸ் ரிவர் நோக்கி சென்றோம். அங்கு ஓடும் பீஸ் ரிவரில் ரிவர் கிராசிங் தான் அந்த விளையாட்டு. ஒரு நபருக்கு ரூ.500 என சொல்ல நான் அவர்களிடம் பேரம் பேசி ரூ.200 க்கு , அந்த பாதி பனி உருகிய நிலையிலும், மீதி உறைந்த நிலையில் ஓடும் பீஸ் நதியை கடக்க தயார் ஆனேன். ஒரு கயிற்றில் நமது உடல் பெல்ட்டால் இணைக்கப்பட பின்பு அந்த நதியை தொங்கி கொண்டே கடந்து மறுமுனைக்கு சென்று பின்பு மீண்டும் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வர 10 நிமிடங்கள் எடுத்து கொண்டது.
கயிற்றில் தொங்கி கொண்டே சென்ற போது தூரத்தில் தெரிந்த பனி போர்த்திய மலையின் பின்னே மறையும் சூரியனின் காட்சி வேற லெவல். எப்படியோ எங்களின் சாகச விளையாட்டுகளை முடித்து கொண்டு மணாலி நகர் நோக்கி புறப்பட தயார் ஆனோம். நாங்கள் அணிந்து இருந்த பனி பாதுகாப்பு உடைகளை வாங்கிய இடத்தில் கொடுத்து விட்டு எங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு நாங்கள் கிளம்பி சிறிது தூரம் வந்த பிறகே அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
சூரியன் மறைய தொடங்கிய பின் நாங்கள் பஸ் பிடிக்க ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்த போது தான் தெரிந்தது 13 கிமீ தொலைவில் உள்ள மணாலி நகருக்கு செல்லும் கடைசி பேருந்து ஏற்கனவே புறப்பட்டு சென்று விட்டது என. இரவு நெருங்க நெருங்க குளிரின் தாக்கம் கூட ஆரம்பித்தது. முதுகில் பெரிய சுமையாக ரக் சக்கை மாட்டி கொண்டு என்ன செய்யலாம் என யோசனை செய்தோம். குளிர் நன்றாக அதிகரிப்பதற்கு முன்பாக நடந்தே மணாலி செல்வது என முடிவு செய்து நடக்க ஆரம்பித்தோம். சாலை ஓரங்களில் குளிரில் இருந்து தப்பிக்க உள்ளூர்வாசிகள் மூட்டி இருந்த தீயில் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் உடலை சூடாக்கி கொண்டே எங்களின் மணாலி நோக்கிய பயணம் தொடர்ந்தது.
மின் விளக்கு வெளிச்சம் இல்லாத மணாலி - லடாக் தேசிய நெடுஞ்சாலையில் நாங்கள் நடந்தே பாதி தூரம் வந்த பிறகு என்னுடன் வந்தவர்கள் வேகமாக முன்னே செல்ல, நான் லிப்ட் கேட்டு செல்ல முடிவெடுத்து பல வாகனங்களில் கை போட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. மீண்டும் பயணத்தை நடந்தே சிறிது நேரம் தொடர்ந்த பின்பு மீண்டும் லிப்ட் கேட்டு முயற்சி செய்த போது ஒரு மகா பிரபு எனக்கு லிப்ட் கொடுத்து மணாலி நகரில் என்னை இறக்கி விட்டார். அங்கு இருந்து நான் இரவு தங்க பழைய மணாலியில் உள்ள ஏற்கனவே நான் புக் செய்து இருந்த ஹாஸ்டலுக்கு ஒரு கிமீ தூரம் நடந்தே சென்று சேர்ந்தேன். அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முதல் வேளையாக உறைந்து போய் ரத்தம் கட்டி இருந்த என் கால்களை வெந்நீரில் கழுவி என் கால் பனியின் தாக்கத்தால் செயல் இழந்து விடாமல் பாதுகாத்து கொள்ள முடிவு செய்தேன். சிறிது ஓய்வுக்கு பிறகு அந்த ஹாஸ்டலின் மாடியில் புது வருடத்தை கொண்டாட சிறு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் அங்கு சென்று சிறிது நேரம் அங்கு இருந்த போது தான் தெரிந்தது அந்த சூழல் நமக்கு ஒத்து வராது என அங்கு இருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும் மணாலியின் மெயின் ஜாங்ஷன் சென்று தனிமையில் புத்தாண்டை அங்கு கூடி இருந்த கூட்டத்துடன் கொண்டாடி விட்டு ஹாஸ்டலுக்கு ஓய்வு எடுக்க திரும்பினேன். நான் மறுநாள் மணாலியில் இருந்து பேருந்து மூலம் டெல்லி செல்ல தயார் ஆனேன்.
மின் விளக்கு வெளிச்சம் இல்லாத மணாலி - லடாக் தேசிய நெடுஞ்சாலையில் நாங்கள் நடந்தே பாதி தூரம் வந்த பிறகு என்னுடன் வந்தவர்கள் வேகமாக முன்னே செல்ல, நான் லிப்ட் கேட்டு செல்ல முடிவெடுத்து பல வாகனங்களில் கை போட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. மீண்டும் பயணத்தை நடந்தே சிறிது நேரம் தொடர்ந்த பின்பு மீண்டும் லிப்ட் கேட்டு முயற்சி செய்த போது ஒரு மகா பிரபு எனக்கு லிப்ட் கொடுத்து மணாலி நகரில் என்னை இறக்கி விட்டார். அங்கு இருந்து நான் இரவு தங்க பழைய மணாலியில் உள்ள ஏற்கனவே நான் புக் செய்து இருந்த ஹாஸ்டலுக்கு ஒரு கிமீ தூரம் நடந்தே சென்று சேர்ந்தேன். அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் முதல் வேளையாக உறைந்து போய் ரத்தம் கட்டி இருந்த என் கால்களை வெந்நீரில் கழுவி என் கால் பனியின் தாக்கத்தால் செயல் இழந்து விடாமல் பாதுகாத்து கொள்ள முடிவு செய்தேன். சிறிது ஓய்வுக்கு பிறகு அந்த ஹாஸ்டலின் மாடியில் புது வருடத்தை கொண்டாட சிறு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் அங்கு சென்று சிறிது நேரம் அங்கு இருந்த போது தான் தெரிந்தது அந்த சூழல் நமக்கு ஒத்து வராது என அங்கு இருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும் மணாலியின் மெயின் ஜாங்ஷன் சென்று தனிமையில் புத்தாண்டை அங்கு கூடி இருந்த கூட்டத்துடன் கொண்டாடி விட்டு ஹாஸ்டலுக்கு ஓய்வு எடுக்க திரும்பினேன். நான் மறுநாள் மணாலியில் இருந்து பேருந்து மூலம் டெல்லி செல்ல தயார் ஆனேன்.
- பயணங்கள் தொடரும்.
Wonderful journey bro.. eat.sleep..travel..
ReplyDelete❤️😍
ReplyDeleteWow super
ReplyDelete❤️✌🏻✨Awesome 👍
ReplyDeleteNice na
ReplyDeleteவிரைக்கும் பனியில் தொடங்கி...வண்ணமயமான வான வேடிக்கையுடன்...செலவின்றி மனாலி பயன அனுபவம் அழைத்தமைக்கு நன்றி அண்ணா...உங்கள் பயனம் இனிதே தொடரட்டும்.😊✌
ReplyDeleteWow, that's really amazing experience
Delete😋❤you're literally tempting us anna
ReplyDeleteSuper na 😍😍😍
ReplyDeleteGood
ReplyDeleteThe way u described ur journey is simply awesome anna...read panrapaye Manali la irukura mari feel... thanks bro ❤️
ReplyDeleteமிக அருமை அண்ணா
ReplyDeleteVera level journey bro 🔥💯 Nanum antha place la irukkira feel 💕🤝Tqsm bro 😍😊
ReplyDeleteVera level thambi ���� fun and enjoyed lot by reading your article. wonderful journey. traval a lot and learn more
ReplyDelete❣️ enjoyed reading
ReplyDeleteவாழ்க்கை வாழத்தானே
ReplyDeleteWell proved Anna 👍❤️
Arumai
ReplyDeleteOne of the Best ever seen❣️
ReplyDeleteஉங்களின் இந்த பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களையும் அந்த இடத்திற்கு கொண்டு செல்வது போல் இருந்தது உங்களுடைய இந்த கதை தொகுப்பு. என்னை இந்த கதை மிகவும் கவர்ந்தது.. I really love it💞❤...
ReplyDeleteWonderful experience. Incidentally, we group of 7 members were there in solang valley on 28 and 29 Dec 2019. Keep travelling
ReplyDelete